http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



கூட்டுக் குஞ்சுகள்

2

... தொடர்ச்சி ...

     மம்முட்டியானும் அவனைச் சுற்றியும் முன்னும் பின்னுமாகக் காணப்படும் நிழலுருவங்களும் முன்னேறி வருகின்றனர். தூக்குப் பாத்திரங்களின் கிலுங்கொலிகள் கேட்கின்றன.

     “பேராச்சி! லச்சுமி! அழவாயி? பச்ச...” குரல்கள் பேரார்வமாக ஒலிக்கின்றன.

     “பஸ்ஸு கோயிலாண்ட வந்து நின்னு போச்சி... பெரிய வட்டி புள்ளங்களோட இதுங்களையும் எறக்கி விட்டு போட்டா... எல்லா அவியவிய பிள்ளியளப் பாத்துப் பத்திட்டுப் போங்க!”

     “இத பாரு! ஆருது சிட்டப் புத்தகம் கீளவுளுந்திருச்சி?” குடும்பன் எடுத்துக் கொடுக்கிறான்.

     “இத, இந்தக்களுததா. துப்பில்லாத புள்ள, ஒரு சாமானம் பத்திரம் கிடையாது? ந்தா, தூங்கி வளியிற? நட...” என்று இடுப்புப் பிள்ளைக்காரி ராமக்கா தன் எட்டு வயசுப் பேராச்சியை இழுத்துச் செல்கிறாள்.

     எல்லோரும் கலையும் அந்த நேரத்தில், சதுரக் கள்ளிப் புதருக்கப்பாலிருந்து ஒரு தனிக்குரல் ஒலிக்கிறது.

     “காத்தமுத்து...! காத்தமுத்து வரக் காணம்?”

     மம்முட்டியான் சிறிது திகைக்கிறான். “எங்க அந்தப்பய வண்டியில வரக் காணம்?”

     “காங்கல...? காலம உசிப்பிட்டுப் போனபய எங்கிட்டுப் போயிருப்பே? பஸ்ஸிலதான வருவா?”

     யாரும் அவள் கேள்விக்கு அங்கு பதில் கூறுவாரில்லை. பாதையிலே பார்த்துக் கொண்டு அந்தத் தாய் தீனமாக நிற்கிறாள். பாதையில் ஈ குஞ்சு கூடத் தெரியாமல் விறிச்சிட்டுக் கிடக்கிறது. சந்தனக் குடும்பனுக்கு வாய்த்திருக்கும் மனைவி கைப்பிள்ளையும் வயிற்றுப் பிள்ளையுமாகக் குடும்பத்து மக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்குச் சளைக்காதவள். அழவாயிதான் மூத்தவ. அவள் வயசுக்கு வந்து ஒரு வருசமாகிறது. தீப்பெட்டித் தொழிலகத்து வண்டி அங்கே வரத் தொடங்கிய நாட்களாக அவள் வேலைக்குச் செல்கிறாள். சட்டத்தில் வெற்றுக் குச்சியடுக்கிக் கொண்டிருந்தவள், இப்போது சில மாதங்களாகப் பெட்டிக்குள் மருந்து முக்கிய குச்சிகளை அடைத்து மூடும் பிரிவில் குரோசுக்கு இருபது பைசா என்று கூலி பெறுகிறாள். அழவாயிக்கு அடுத்த பையன் சுப்பிரமணி; உள்ளூர் பஞ்சாயத்துத் தொடக்கப் பள்ளியில் மூன்று வருடங்களாக இரண்டாவதில் படித்துக் கொண்டிருக்கிறான். சுப்பிரமணிக்குப் பிறகு ஒரு பிள்ளை இறந்து போய்விட்டது. அடுத்து லச்சுமி, தீப்பெட்டி 'ஆபீசில்' குச்சியடுக்கப் போகிறாள். ஒரு கட்டை (சட்டம்)க்குப் பதின்மூன்று பைசாக் கூலி. ஒரு நாளைக்கு பத்துக்கட்டைதான் அடுக்குவாள். லச்சுமிக்கு அடுத்தவன் முருகன், அவனும் பள்ளிக்கூடம் போக முரண்டு பிடிக்கிறான். தீப்பெட்டி அலுவலக பஸ்ஸில் போக ஆசைப்படுகிறான். முருகனுக்கு கீழ் கறுப்பி, ராமாயி, இருவர் இருக்கின்றனர். இப்போது நிறைமாதமாக இருக்கிறாள். அழகாயி உள்ளே வரும் போதே “காத்தமுத்துவ ஏசன்டு நல்லா அடிச்சிட்டா. பாலமணியல்ல, பெரியபட்டிப்புள்ள? அது லச்சுமிய ஏனத்தால மொத்திச்சு. தபாரு, மூக்குல...!” என்கிறாள்.

     முணுக்முணுக்கென்றெரியும் விளக்கொளியில் மூக்குத் தண்டில் சிவப்பும் கறுப்புமாக அடைத்திருக்கிறது.

     “காத்தமுத்து ரகள பண்ணினா, பாலமணி சடயத் தொட்டிளுத்தா. ஏசன்டு வந்து அடிக்கவும் எறங்கி ஓடிட்டா!”

     “அந்தப்பய ஓரிடத்தில் ஒளுங்கா வேலை செய்யிறதில்லை. மின்ன புதுநகரத்துக்கு ஓடிப்போயி ரங்கராஜி தீப்பெட்டி ஆபீசில் சேந்தா. அங்கிட்டிருந்து இங்ஙன ஓடி வந்தா. அடுவான்ஸ் வாங்கிட்டு மூணு மாசம் ஆவல, மறுக்க ஓடிட்டா, நாளாக்கி ஏசன்டு பைய வரலன்னா மென்னில கைய வய்ப்பா!” என்று மம்முட்டியான் தனது பிரச்னையை நினைத்து புலம்புகிறான்.



கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை  1  2



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/koottukkunjugal/kk2a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs