http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


பாதையில் பதிந்த அடிகள்

14

     திருவாரூரில் வக்கீல் குமாஸ்தா சீனிவாசனுடன் பேசிவிட்டு மணி ரயிலேறுகிறாள். சித்திரை வெய்யில் உக்கிரமாகக் காய்ந்து இறங்கும் மாலை நேரம். பாசஞசர் வண்டி. அவள் அவ்வாறு ஏறுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அன்று காலையில் இருந்து அந்த மனிதர் அவளைப் பின் தொடருகிறாரா, இல்லையேல் இவள் தான் அவரைக் கண்காணிக்கிறாளா என்று புரியாத வகையில், கமலாலயக் குளக்கரையில், கோவில் முன், கடைவீதியில், வலிவலம் பாதையில், அவரைக் கடந்த இரண்டு நாட்களாகத் திருவாரூர் வட்டகையில் பார்க்கிறாள். பார்க்க ஏதோ க்ஷேத்திராடனம் வந்த வெளியூர்க்காரரைப் போல் இருக்கிறார். நல்ல உயரம், கிராப்பு, ஒல்லி, நெற்றியில் சந்தனக் குறுக்கு; காதில் ஒரு பூ வைத்த கோலம். மூலைக்கச்ச வேஷ்டி. மேலே மூடிய உத்தரீயம்... வண்டியில் கூட்டமே இல்லை. இவள் நாகப்பட்டினம் செல்லும் திசையில் இப்போது எதற்குச் செல்கிறாள்?

     ...நாட்டில், அரசியல் நிலைமையில் ஓர் உள்ளோட்டமான உயிர்ப்பு இயங்கத் தொடங்கியிருக்கிறது. புதிய புத்தகங்களும், கருத்துக்களும் செயலூக்கத்தைத் தூண்டி விட்டிருக்கின்றன. தீவிரவாதிகள் என்று முத்திரை இடப்பெற்று, பல போராளிகள் மீது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்ட காலம் இது. சிறையில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்... சிலர்... சிறைக்குச் செல்லாமல்...

     மணி தொண்டையைக் கனைத்துக் கொள்கிறாள்... "உங்களுக்கு..." என்று இழுத்து நிறுத்துகிறாள்.

     "சிதம்பரம்" என்று பட்டென்று பதில் வருகிறது.

     "ஓ, சிதம்பரத்திலேந்து வருகிறீர்களா?... ஊரே சிதம்பரமோ?..."

     "...ஆமாம்... சிதம்பரம், கும்பகோணம் போயிட்டு இப்ப வரேன். மதுரை மீனாட்சி கோவில் பார்த்தேன்..."

     பேச்சில் மலையாள வாடை விசுகிறது.

     "ஓ க்ஷேத்திராடனமா? இப்ப சிக்கல் போறாப்லியா?... சிங்கார வேலன் தரிசனம் அவசியம் பண்ணணும்..."

     "...ஆ... சிக்கல். அங்கு தான் போகணும்..."

     "இந்தத் தஞ்சாவூர் ஜில்லாவில் எங்கு திரும்பினாலும் தெய்வக் கோவில்கள்தான். அவர்களையே ஆள்பவர்கள் இந்த மிட்டா மிராசுகள்..."

     "ஓ, அப்படியா?... உங்களுக்கு... நீங்களும் க்ஷேத்திராடனமா வந்தவர்தானே?"

     "...இல்லை, எனக்கு ஊர், இப்ப போச்சே அடியக்கமங்கல கிராமம், அங்கிருந்து அஞ்சாறு மைல் நடக்கணும். மணலூர்..."

     "ஓ...கோ..."

     அவர் கண்களில் ஒளி மின்னுகிறது.

     "நான் உங்களை... உங்களை எங்கள் நாட்டுக்காரர்னு சம்சயிச்சேன்..."

     சிரிக்கிறார்.

     மணியம் புரிந்து கொண்டு சிரிக்கிறாள்.

     சிக்கலில் இருளில் வண்டி நிற்கிறது. மணி ஒரு பக்கம் செல்கிறாள். அவரும் செல்கிறார்.

     இரவு நேரத்தில், தோப்பின் நடுவேயுள்ள சிறு கூரைக் கட்டடத்தில், கூட்டம் நடக்கிறது.

     நில உடைமைகளை எதிர்த்து, சம உரிமைக்கு வழி அமைக்க, இவர்கள் செயல்முறைகள், திட்டங்கள் குறித்து ஒன்று கூடிப் பேசுகிறார்கள். பிரபுத்துவ, முதலாளித்துவ, உறிஞ்சிக் குடிக்கும் அமைப்பின் கூறுகள் எல்லாத் திசைகளிலும் பிரதிபலிக்கின்றன. அப்படி இல்லாத, மனிதரை மனிதரே ஆளும், சமத்துவ சமுதாயம் ஒன்றைச் சாதிக்க முடியும்.



பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/paathaiyilpathinthaadigal/ppa14.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs