http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



பாதையில் பதிந்த அடிகள்

14

... தொடர்ச்சி ...

     அத்தகைய சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்குரிய நீதி-நெறி முறைகளை வகுத்திருக்கும் அறிஞர் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் பற்றியும், அந்த நெறிகளை ஒரு விஞ்ஞான பூர்வ அணுகுமுறையில் செயலாக்கி வெற்றி கண்ட லெனின் பற்றியும், இவர்கள் பேசுகிறார்கள். இந்தியாவில், அத்தகையதோர் அரசியல் புரட்சியைத் தோற்றுவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்க்கிறார்கள். இவ்வாறு கூடும் கூட்டங்கள் அனைத்தும் அரசுக்கு எதிரானவை. இருட்டில் வந்து சேரும் ஆள்கள் யார் எவர் என்ற அடையாளங்கள் கூட வைத்துக் கொள்ள முடியாத நெருக்கடி. ஆனால், இந்தப் புதிய தத்துவத்தின் பக்கம் சார்ந்து, போராட்டத்துக்கான செயல் திட்ட இயக்கங்களில் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈடாக்க முனைந்தோரில் ஒருத்தியாக மணி தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கிறாள். இதனாலேயே கீவளூர், சிக்கல் என்று நள்ளிரவிலும் மனிதர் நடமாட்டம் இல்லாத தடங்களிலும் இவள் நடக்கிறாள். காலில் முரட்டுச் செருப்பும், கையில் இடுக்கிய குடையும் இவளுக்கு உடன் வரும் தோழர்கள். இடுக்கிய குடைக்குள், 'சூரி கத்தி' ஒன்று தற்காப்பு ஆயுதமாகப் பதுங்கி இருக்கிறது...

     மணிக்குத் தொல்லை கொடுப்பவர்கள் அனைவரும், மணலூர் பட்டாமணியத்தைப் போன்ற கயமைக் கும்பலும், உறிஞ்சிக் குடிக்கும் பிரபுத்துவ வர்க்கத்தினரும் தாம். காவல்துறையினர் என்ன காரணத்தினாலோ, இவளை இதுகாறும் வருமம் கொண்டு பார்த்திருக்கவில்லை. இவள் கூட்டங்களில் பேசும்போதும், தனிவழி நடந்து செல்லும் போதும் எந்த ஒரு காவலனும், மரியாதை மீறி நடந்திருக்கவில்லை. கொலைக்குற்றம் என்று பட்டாமணியம் இவளைக் கைது செய்து விலங்குபூட்டி அழைத்துச் செல்ல உத்தரவிட்ட போதும் கூட, இவள் தகாத செயல் செய்தாள் என்று வழக்குப் பதிவு செய்யவில்லை. இதெல்லாம், இவள் உள்ளொன்று புறமொன்று என்று கொண்டு நடக்காமல், சத்தியத்தின் உருவாய் இயங்குவதன் நம்பிக்கைகளாக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இவளுக்கு உறுதி கொடுக்கத் துணை நிற்கின்றன.

     1941-ம் ஆண்டின் மே மாதத்திலேயே, ஏகாதிபத்திய வெறியரின் தாக்கம், முசோலினியின் உருவிலும் ஐரோப்பாவைக் கைப்பற்றத் திட்டமிடுகிறது. ஃபிரான்ஸ் வீழ்கிறது. நேச நாடான ஃபிரான்சுக்கு உதவுவதற்காகச் சென்ற பிரிட்டிஷ் படைகளை 'டங்கர்க்' துறைமுகத்திலேயே பின்வாங்கித் திரும்பி அழைத்துக் கொள்ள வேண்டி வந்தது.

     எதிரியின் வலிமையும், பற்றிய பிடியின் உறுதியில்லாத நிலையும், உதவிக்கு என்று அனுப்பிய படையினரை இழந்துவிடும்படிச் செய்யக்கூடும் என்ற பலவீனத்தை உணர்த்திவிட்டன. எனவே போரைத் தீவிரமாக்குவதில் பயனில்லை என்று கண்டு, படையினரைப் பின்வாங்கும்படி ஆணையிட்ட இங்கிலாந்தின் பிரதம மந்திரி சர்ச்சிலைப் புகழ்ந்தார்கள். ஆனால், ஜூன் 22-ல் ஹிட்லரின் சர்வாதிகாரப் பசி, சோவியத் யூனியனைக் குறிபார்க்கிறது. மக்களனைவரும் சமமானவர்கள் என்று புதுமைத் தத்துவம் கொண்டு நிறுவப் பெற்ற அந்தப் பூமியை விழுங்க முன் பாய்ந்தது. 1939-ல் ஒருவரை ஒருவர் மோத அத்துமீற மாட்டோம் என்று அதே சோவியத் யூனியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மிதித்து நாசமாக்கிக் கொண்டு அந்தப் பொதுவுடைமை நாட்டின் மீது ஆக்கிரமிப்புச் செய்தது ஹிட்லரின் ஜெர்மானியப் படைகள்.

     போர்... ஐரோப்பாவெங்கும் மூண்டு விட்ட போர்... காங்கிரஸ் அரசமைப்புகள் இப்போது இல்லை. தனி நபர் சத்தியாக்கிரகம் என்ற ஓர் அலை இப்போது தோன்றுகிறது. காந்தி இந்தப் போரில் பங்கேற்பவர்களைப் பார்த்து அனுமதி வழங்குகிறார். தியாகராஜன், காக்கழனி முருகையா, வேப்பத்தாங்குடி பிள்ளை என்று பலரும் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்கின்றனர். ஆனால் 'கிசான் சங்க்' அமைப்பின் தலைவராக இருக்கும் மணி போகலாமா?... தொழிற்சங்க அமைப்பில் ஈடுபட்டுள்ள எவருக்கும், இந்த ஒப்புதல் அனுமதி வழங்கப் பெறவில்லை. மணி, காங்கிரஸின் இந்த வேறுபாடு உணர்ந்து திகைக்கிறாள். பட்டுக்கோட்டைக்கு இவள் சென்றிருக்கையில், அத்திம்பேரை வாதுக்கு இழுக்கிறாள்.

     "காங்கிரஸ், உண்மையான சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளவில்லை. உங்கள் ஹரிஜன அக்கறை எல்லாம் வெறும் மேலுக்கு வேஷம்...! தொழிற்சங்கங்கள், உழைப்பாளி மக்களின் ஒன்றிணைந்த ஈடுபாடு இல்லாமல் எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது."



பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14   15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/paathaiyilpathinthaadigal/ppa14a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs