http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



பாதையில் பதிந்த அடிகள்

1

... தொடர்ச்சி ...

     பெண் என்பவள் ஓர் ஆணின் சொத்து சுகங்கள், பதவி, போகங்கள் ஆகிய செல்வாக்குகளில் அடங்கிய, அவனுடைய 'சுக ஜீவனத்'தை மேன்மைப்படுத்தும் ஒரு சின்னம். இப்போது கல்லும் முள்ளும் குத்தும் காய்ந்த வயலில் நடக்கையில் மணி நினைத்துப் பார்க்கிறாள். அவள் தந்தை என்ன செய்வார்? மூன்று மனைவிகளைக் கொண்டார். முதல் தாரம் இறந்து போனாள். இரண்டாம் மனைவியும் அவள் பெண் குழந்தையும் இருக்கையிலேயே இவள் தாயைக் கட்டினார். அம்மா... இவளுக்கு என்ன வாழ்க்கைச் சுகம் இருந்தது? மூன்று பிள்ளைகளையும் நான்கு பெண்களையும் பெற்றிருக்கிறாள். தலைப்பிள்ளை தங்கவில்லை. அடுத்தவள் குஞ்சம்மாள். மணி மூன்றாமவள். கிளி நான்காவது பெண். மதுரையில் பணக்காரக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். ஐந்தாவதுதான் தம்பி வெங்குசாமி. துரையப்பன் என்பது சொல்லிக் கூப்பிடும் பெயர். அவன் சென்னையில் வக்கீலாக இருக்கிறான். அடுத்த தம்பிதான் கல்யாணம் பண்ணிச் சில வருஷங்களில் அம்மை போட்டுக் குளிர்ந்து போனான். கடைக்குட்டி மோகம் சிமிளி கிராமத்தில் இருக்கிறாள். அந்த மாப்பிள்ளைக்கும் நிலம் நீச்சென்று கிராம வாழ்க்கைதான். இவர்களுக்குப் பூர்வீகம், அகரம் குளப்பாடு கிராமம். இவளைக் கல்யாணம் செய்து கொடுத்ததும், அந்தக் கிராமத்தை விட்டுப் பெயர்ந்து, மணலூருக்கு வந்தார் தந்தை. இங்கே கிராமம் முழுவதற்கும் உள்ளே ஒரே பிராமணக் குடும்பம் இவர்களுடையதுதான். குளப்பாட்டை விட்டு ஏன் பெயர்ந்து வந்தார்? அக்கிரகாரமாக வாழ்ந்த பின் இங்கே தனிமைப்பட்டு நிற்க வந்த காரணம் என்ன?

     'சுகஜீவனம்' என்ற பெருமைக்குள் மூழ்கி, திண்ணையில் சீட்டாடிக் கொண்டு வெற்றிலை புகையிலை, கும்பகோணம் சீவலுடன் தாசிகள் சமாசாரங்கள், அவர்களைச் சார்ந்த சங்கீத, நாட்டியப் பெருமைகள் என்று பேசிக் கொண்டு பொழுதைக் கழிக்கும் வாழ்க்கையில் குன்றான செல்வமும் குறையாமலிருக்குமா...? அங்கே இருக்கும் நிலங்களில் மண்ணடித்துப் போக, தரிசாகப் போட்டுவிட்டு, இந்தக் கால்வாய்ப் பாசன நில விளைவை நம்பிக் குடியேற வந்தார். இங்கும் பன்னிரண்டு வேலி நிலம் அதற்கு இதற்கு என்று பிய்ந்த பின், இப்போது பாதியாகக் குறுகியிருக்கிறது. அவரும் இறந்து பதினேழாண்டுகளாகிவிட்டன.

     அம்மாவுக்கு காலில் முள் குத்திவிட்டது போலும்!

     "மணி... இதைச் சித்த எடுத்துடும்மா?..."

     காய்ந்து கிடக்கும் வரப்பில் உட்கார வைத்து, மணி பக்குவமாக, தைத்திருக்கும் நெருஞ்சி முள்ளை எடுக்கிறாள்.

     "இதுக்குத்தான் அந்த ராமசாமிய சித்த வண்டியக் கட்டிண்டு வாடான்னேன். எதயோ சொல்லிட்டுப் போயிட்டான்."

     "இதோ எட்டிப் புடிக்கிறாப்பல இருக்கிற ஊருக்குச் சுத்தியடிச்சிண்டு வண்டிகட்டச் சோம்பல் அவனுக்கு!..."

     மணி நினைத்துக் கொள்கிறாள். சுபத்திரை தேர் ஓட்டினாளாம்; கைகேயி இதற்காகவே தசரதன் கிட்ட வரம் கேட்டாள்... ஏன், ராமசாமியையும் வீராசாமியையும் எதிர்பார்க்க வேண்டும்? பசுமாட்டைக் கட்டிக் கறக்கிறவளுக்குக் காளை மாடுகளை ஓட்ட முடியாதோ?

     ஆந்தக்குடி மணலூரைப் போன்ற ஊரில்லை. அக்கிரகாரம் முழுவதும் இவர்களுக்குத் தொட்டுத் தொட்டு உறவு முறைதான். மணியின் தந்தை வழித் தாயாதி பங்காளிகள், பெண்கள் பிள்ளைகள் என்று உறவுகள். கல்யாணம், கிரகப்பிரவேசம், வளைகாப்பு, சீமந்தம், ஆண்டு நிறைவு, முதியவர்கள் விரதங்கள், கோயில் உற்சவம், கதாகாலட்சேபம் என்று உறவு கூடி மகிழ்ந்து கொண்டாடப் பல சந்தர்ப்பங்கள். அப்படி ஒரு புதிய மருமகள் பிள்ளை பெற்று வந்திருப்பதைச் சாக்காகக் கொண்டு தாயும் மகளும் வருகிறார்கள். தெருக்கோடிக் கோயிலில் ஒரு புகழ் பெற்ற பாகவதர் சப்தாஹம் சொல்லுகிறாராம். துருவ சரித்திரம் அன்று சொல்லப் போகிறாராம்.

     அஞ்சலை கிராமத்தின் எல்லைக்குள் நுழைந்து அக்கிரகாரக் கோடியில் நிற்கிறாள். இங்கு மணி, கம்பளி சுற்றிய பூசைப் பெட்டியைப் பெற்றுக் கொள்கிறாள். பெட்டிக்குள் லிங்கங்கள், சாளக்கிராம வடிவங்கள் இருக்கின்றன. பிரம்புப் பெட்டிக்கு மேல் குடியானவப் பெண்ணின் சாதித் தீட்டுப் பற்றாமல் இருக்கக் கம்பளித் துண்டு சுற்றியிருக்கிறாள். இந்தத் தெய்வச் சின்னங்கள் வழிவழியாக மூதாதையர் காலத்திலிருந்து வரும் சொத்து. இவளுடைய தந்தை இறந்த பின்னர், யாருமே அவற்றைப் பூசை செய்வதற்கில்லாமல் பெட்டிக்குள் கிடந்தன. அம்மா, அலமாரியில் விளக்கேற்றி வைத்து, நிவேதனம் என்று அன்னமும், பருப்பும் வைத்துக் கைகாட்டிக் கொண்டிருந்தாள். மணி, கைம்மைக் கோலம் எய்தி, இந்த வீட்டுக்கு வந்ததும், இந்தப் பூசனையை மிகவும் சிரத்தை கொண்டு செய்யலானாள். சிவபூசை நியமம், ஒருநாள் கூடத் தவறாது. எனவே, இவள் இரண்டு நாட்கள் உறவினர் கலகலப்பில் இருந்து, சப்தாஹ உபன்யாசம் கேட்டு மகிழ வரும்போது, அந்தப் பெட்டியும் கூட வருகிறது.

     "நீ போம்மா, அஞ்சலை! ராத்திரி தோட்டத்துக் கதவைச் சாத்தி வை. மாட்டுக்கு வைக்கோல் போட மறக்காதே!"



பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14   15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/paathaiyilpathinthaadigal/ppa1a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs