http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


பாதையில் பதிந்த அடிகள்

முன்னுரை

... தொடர்ச்சி ...

     பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த காலம் சென்ற திரு. காத்தமுத்து அவர்கள் பல செய்திகளைக் கூறி உதவினார்கள். தொழிற்சங்கத் தலைவர்கள், திரு. கோபு அவர்களும், திரு. கே.டி.கே. தங்கமணி அவர்களும், எனக்கு மணியம்மையுடன் அவர்கள் பழகிய நாட்களை அன்போடு நினைவு கூர்ந்து எனக்கு ஆதரவளித்தார்கள். முரசொலி திரு. தியாகராஜன் அவர்கள், அம்மையாரின் இறுதிக்கால நிகழ்ச்சிகளை, உளம் கனிய நினைவு கூர்ந்து விவரங்களைத் தந்து உதவினார்கள்.

     பல அரங்குகளிலும், போராட்ட வீராங்கனையாகவே திகழ்ந்து வாழ்ந்து முடிந்த ஒரு பெருமாட்டியைப் பற்றி மிகச் சரியான வரலாற்றுப் பின்னணியுடன் எழுதுவதென்பது, சிரம சாத்தியமான செயலே. சான்றுகளைத் தேடிச் செல்வது ஒரு புறமிருக்க, கிடைத்த சான்றுகளைத் தொடர்புபடுத்தித் தெளிவு காண்பது மிகக்கடினமான முயற்சியாக இருந்தது. அலிவலம் கு. பாப்பம்மாள், தம் வீட்டில் இருந்த பல புகைப்படங்களைத் தேடித் தந்து உதவினார். இவருடைய காலம் சென்ற கணவர் திரு. குமாரசாமி தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். மணியம்மை இவர்கள் வீட்டுக்குப் பலமுறைகள் வந்திருக்கிறார். அந்தப் படங்களில் பல நிகழ்ச்சிகளுக்கான சான்றுகள் இருந்தன. ஒரு நிழற்படத்தில், 1940ம் ஆண்டில், சனவரி, 26ம் நாள் முதலாவதாக நேருவின் தீர்மானத்துக்கிணங்க, சுதந்தர நாளை நிர்ணயித்துக் கொண்டாடிய விழா ஊர்வலக் காட்சி கண்டேன்.

     அம்மாளை, கிராப்பு - வேட்டி - கதர் ஜிப்பா - துண்டு அணிந்த கோலத்தில் கண்டு கொண்ட போது, எனது உணர்வுகளை விவரிக்க இயலாது. அந்தப் படத்தை எடுத்துக் கொண்டு, அவர்கள் நடமாடி வரலாறு கண்ட கிராம மக்களிடம் சென்று காட்டி, அவர்களுடைய உணர்ச்சிப் பெருக்கையும் மகிழ்ச்சியையும் கண்டு, 'அம்மையே தான்' என்று தெளிந்தேன். படங்கள், பல நண்பர்களைக் கண்டு கொள்ள உதவின. எடுத்துக்காட்டாக, அம்மையின் துவக்க கால, காங்கிரஸ் ஈடுபாட்டு நிகழ்ச்சிகளைக் கேட்டு அறிய வாய்ப்பாக, திரு. முருகையா என்ற நண்பரின் தொடர்பு கிடைத்தது. அவருடைய பம்பாய் முகவரி அறிந்து, தொடர்பு கொண்டதும், மிகவும் ஆர்வம் கொண்டு அனைத்து விவரங்களையும் உடனே தெரிவித்தார்கள். இவர்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி உரித்தாகிறது.

     மணியம்மாளோடு வேலூர்ச் சிறையில் இருந்த அநுபவங்களைத் தொகுத்து எனக்கு நேர்முகமாகத் தந்து சகோதரி ஷாஜாதி அவர்கள் உதவினார்கள். அந்தக் காலத்தில் செங்கொடி காத்த சிவப்பி என்று புரட்சிப் பெண்ணாகப் புகழ்பெற்ற திருமதி சிவப்பி அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எனக்கு மணியம்மை தொடர்பான தம் சிறை அநுபவங்களைக் கூறினார்கள்! காலத்தால் புதையுண்டு போன மணியம்மையின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தேடிக் கண்டுபிடித்து அறியும் முயற்சியில் நான் சந்தித்த ஆண்கள், பெண்கள், அரசியல் இயக்கத் தொடர்பாளர், குடும்பத்தினர் அனைவரையும் பட்டியல் போட்டால் விரியும். அதனாலேயே சுருக்கமாகத் தெரிவிக்கிறேன். திரு. இராம அரங்கண்ணல், நாகப்பட்டினம் திரு. வெங்கடாசலம், டாக்டர். திரு. சந்திரமோகன், காலம் சென்ற திருமதி வத்ஸலா நடேசன், மன்னை திரு. அமிர்தலிங்கம், திரு. நாகப்பன், ஆகியோர் எனது முயற்சி மேலும் மேலும் ஆர்வம் பெற, நுட்பமாக ஆய்வு செய்யத் தகுந்த பல இன்றியமையாத தகவல்களைத் தந்து உதவினார்கள். ஆந்தக்குடியில் நான் சந்தித்த உறவினர்களான மூத்த பெண்மணிகள் பலரும், அக்காலத்தில், மணியம்மை எடுத்த புரட்சிகரமான முடிவுகளைப் பற்றிய சநாதன எதிரொலியை நான் நன்கு உணர்ந்து கொள்ள உதவினார்கள். திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, தஞ்சை, கும்பகோணம் ஆகிய இடங்களில், நான் சான்றுகளைத் தேடிப் பெறவும், சென்னையில் இயக்கம் பற்றிய பல செய்திகளை அறியவும், பல நண்பர்கள் எனக்கு உதவினார்கள். குறிப்பாக, ஜனசக்தி அலுவலகத்தில் சென்று பழைய இதழ்களை நான் பார்ப்பதற்கு, ஜனசக்தி ஆசிரியக்குழுவும், நிர்வாகிகளும் எனக்குப் பேருதவி செய்தார்கள். தாம்பரம், வீணை வித்வான் திருமதி பாமா அவர்கள், எனக்கு மணியம்மையின் நாகபட்டிணத் தொடர்பு பற்றியும் சிநேகிதை குஞ்சம்மாள் பற்றியும் நேரில் கண்ட பல செய்திகளைக் கூறி உதவினார்கள்.

     மணியம்மையுடன் பழகி அநுபவம் பெற்ற, பழம் பெரும் தியாகிகளும் தொண்டர்களுமான ஜனநாயக மாதர் சங்கத்து ருக்மணி அம்மாள் தேசிய மாதர் சம்மேளனத்தைச் சார்ந்த திருமதி மீனாட்சி சுந்தரத்தம்மாள் ஆகியோர், மணியம்மையுடன் பழகிய அநுபவங்களை, பேரன்புடன் கூறி உதவினார்கள்.



பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13  14



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/paathaiyilpathinthaadigal/ppaa.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs