http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


புதிய சிறகுகள்

     கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
     கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
     வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
     வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.

*****

     ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
     அறிவிலோங்கியிவ் வையந் தழைக்குமாம்.

கவியரசர் பாரதியார்

1

     நீராடிய ஈரக் கூந்தல் முடிச்சுக்களில் மலர்ச்சரங்களும், உதடுகள் முணமுணக்கும் தோத்திரங்களும், பட்டுச் சேலை - வியர்வைக் கசகசப்புக்களும் முன் மண்டபத்தில் வரிசை பிதுங்க நெருங்குகின்றன. ஆடவர் பெண்டிர் என்று தனித்தனி வரிசையில்லை. சட்டைக்கு மேல் ஒட்டியாணங்களாய்ப் பதிந்த உத்தரீயக் கோலங்கள் அதிகம். இந்த வரிசை தரும தரிசனம்.

     தடுப்பின் இன்னொரு பக்கத்திலிருந்து, பணம் கட்டித் தரிசனம் செய்ய வந்த வரிசையும் இங்கே சங்கமமாகிறது. அருச்சனைத் தட்டுக்கள், பூமாலைகள், பால் செம்புகள் என்று முடிவேயில்லாமல் தொடர்கிறது.

     அபிராமி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து, நகர்ந்து, கருவறையில் நேராக தேவியின் திருக்கோலம் தெரியும் வாயிலுக்குள் வந்திருக்கிறாள். குருக்கள் தாம் மறைத்துக் கொண்டிருக்கிறார். திருக்கோலம் தெரியவில்லை.

     நடுவே தடுப்புக்குள், அழுக்கு வேட்டியும், கையில் மின்னும் மோதிரமுமாக ஒரு குருக்கள் இயந்திரம் போல் அருச்சனைத் தட்டுக்களை வாங்கி, தேங்காயை உடைத்துக் கீழே உள்ள அண்டாவில் ஊற்றுவதும், அருச்சனைச் சீட்டுக்களைப் பார்த்துக் கம்பியில் குத்துவதும், 'என்ன பேர்', அருச்சனை யாருக்கு, கோத்திரம், நட்சத்திரம் என்று கேட்பதும், அந்த முகவரிகளைச் சொல்லி, பிரார்த்தனையை முணமுணப்பதுமாக இயங்குகிறார்.

     இருண்ட கருவறையின் முன், வேண்டுவோர் தரும் காணிக்கைத் தட்டிலிருந்து, குங்குமம் பூவெடுத்து, அம்பாளை இனிய குரலில் கேட்பவர் மனம் ஒன்றி உருகத் தோத்திரம் செய்யும் ஒன்றைக் குருக்கள், இப்போது பலராகப் பங்கு போட்டுக் கொண்டு, குழுமும் பக்தர்களின் தேவைகளை நிரப்புகின்றனர். எனவே, முகவரியைச் சமர்ப்பித்துத் தேங்காய் உடைத்து, அருச்சனைச் சீட்டுக்களைப் பார்த்து, கண்காணித்து, கூட்டத்தை முன் நகர்த்துகிறார் ஒருவர்.

     அம்மனைப் பார்க்கக் கிடைக்கும் இடத்தில், தட்டிலுள்ள பூவையும் குங்குமத்தையும் எலுமிச்சம் பழங்களையும் எடுத்து அதற்கென்ற கூடைகளில் போட்டுவிட்டு, அங்கு இருக்கும் சமர்ப்பித்த பிரசாதங்களைத் தட்டுக்களில் மாற்றம் செய்கிறார் ஒரு குருக்கள். தேவியின் பக்கம் நின்று இன்னொருவர் மலர்களை அருச்சனை செய்ய அவ்வப்போது நெய்த்திரி தீபாராதனை காட்டுகிறார் மற்றொருவர்.

     "ஏம்மா? மாலைக்குச் சீட்டு வாங்கல...?"

     "வாங்கியிருக்கிறேனே...?"

     "இது அர்ச்சனைச் சீட்டில்ல? மாலைக்குத் தனியா சீட்டு வாங்கணும்?" வயதான் ஓர் அம்மாள்,

     "தனிச் சீட்டு வாங்கணும்னு தெரியாதய்யா..."

     இப்ப வரிசையில் இருந்து சீட்டு வாங்கப் போனால்...

     "சரி... நாலணா சில்லறையாக் குடுத்திட்டுப் போங்க..."

     அம்மாள் நாலணாச் சில்லறைக்குத் தேடுகிறாள்.

     அபிராமி சட்டென்று தன் பர்சைத் திறந்து சில்லறையை எடுத்து வைக்கிறாள். "வெளில வந்ததும் தாரேம்மா! சீட்டு வாங்கணும்னு தெரியாது..."

     "அதனால என்ன?..."

     "ஏம்மா, இந்த மாலை யாருடையது...?"

     அபிராமி சட்டென்று நிற்கிறாள். "ஏங்க, நாந்தான் கொண்டு வந்தேன்."

     "சீனிவாசன், மூல நட்சத்திரம்..."

     "இது உதவாது. இதில் ஏதேதோ பூவெல்லாம் வச்சுக் கட்டிருக்கு...?"

     அபிராமி திடுக்கிட்டாற் போல் நிற்கிறாள். மாலை இங்கே கோயிலின் முன் வாங்கவில்லை. அவள் குடியிருக்கும் ஆழ்வார் நகர்ப் பக்கமிருந்த பஸ் நிறுத்தக் கடைவீதியில் பூக்கடையில் வாங்கி வந்தாள்.

     மாலை நிராகரிக்கப்பட்டதும் துணுக்கென்றிருக்கிறது.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps1.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs