http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



புதிய சிறகுகள்

1

... தொடர்ச்சி ...

     "துருக்கசாமந்தி வச்சிருக்காங்க இல்ல...? அதைச் சேர்க்கமாட்டாங்க?"

     "இத பாருங்க, கொத்தரளி, மாசிப்பச்சை, இதெல்லாம் வச்சுக் கட்டினாத்தான் விசேஷம். ஜவ்வந்தி ரொம்ப சிலாக்கியம்..."

     பல்வேறு கருத்துரைகளுடன் கூட்டம் நகருகிறது.

     அபிராமியின் கையில் நிராகரிக்கப்பட்ட மாலையும், நெஞ்சில் கவியும் கவலையும் கனக்கின்றன.

     "ம்... போங்க... போங்க? நின்னிட்டே இருந்தால் எப்படி...?"

     வில்லை அணிந்த, அரசு அத்தாட்சிப் பணியாளர் இருவர் கருவரைக்கு முன் நிற்கின்றனர்.

     அம்பாளின் கவசங்கள் - அலங்காரங்களை ஒரு குருக்கள் உள்ளே களைந்து கொண்டு இருக்கிறார்.

     முன்னே நிற்பவர், யந்திரமாக எலுமிச்சம்பழம் குங்குமப் பிரசாதம், என்று இயங்குகிறார். அபிராமி பார்க்கையில் தேவியின் கைப்பகுதி, மார்புப் பகுதி, என்று வெள்ளிக் கவசம், பகுதி பகுதியாக ஒரு அகலப் போணியில் நிறைகிறது.

     "எண்ணிக்கப்பா? இருபத்தொண்ணு? இருபத்திரண்டு..."

     குருக்கள், விலை உயர்ந்த கவசப்பகுதிகளள எண்ணுவதுதான் அருச்சனையாகப் படுகிறது.

     இடையே, "போங்க! போங்க! மணியாயிட்டுது! நிக்காதீங்க!" என்ற விரட்டல்கள் சாட்டையடி போல் உக்கிரமாகின்றன.

     அபிராமி நகர்ந்து மறுபக்கம் நின்று, தேவியின் திருமுகத்தையே பார்க்கிறாள். பிரார்த்தனைகள் நெஞ்சுக்குள் அமுங்கி விடுகின்றன.

     குருக்கள் கண் மலர்களை நீக்குகிறார்; கழுத்தில் தவழும் ஆபரணங்களைக் களைகிறார்; பவளம் கோத்த பொட்டுத் திருமாங்கல்யம்... அதையும் கழற்றித் தட்டில் போட்டு, "எண்ணிக்கப்பா?" என்று சொல்கிறார்.

     அபிராமிக்குக் கால்கள் தடுமாறுகின்றன.

     "போங்க... போங்கம்மா!..."

     கோயிலுக்கு அமைதி நாடி வருவதென்பது பொய்யா?

     மனம் குழம்பித் தவிக்கிறது.

     திருமாங்கல்யம் என்ற மங்கல சூத்திரத்துக்கு, எத்துணை மகத்துவம் கற்பிக்கப்பட்டு இருக்கிறது? கருவறைக்குள் நிகழும் புனிதமான செயல்களுக்கு எத்துணை மகத்துவம் உண்டு? தேவியின் திருவாபரணங்களை, திருமாங்கலியத்தையும், இப்படி எண்ணி எண்ணி வில்லைச் சேவகரிடம் ஒப்புவிக்கும் செயலுக்கு என்ன மகத்துவம்?

     இவர்கள் விரட்டப்படுகிறார்கள்.

     வெளியே தேவியின் அபிடேகக் காட்சி பார்க்கத் தனியாகப் பணம் கட்டிச் சிறப்பு உரிமை பெற்ற கூட்டம் குழுமியிருக்கிறது. மண்டபத்துள், ஆற அமர அபிராமி அந்தாதி படிப்பவர்கள், சௌந்தரிய லஹரி பாடுபவர்கள், என்று உட்கார்ந்து பக்தி செய்யும் பெண்கள் - ஆண்கள்.

     தம் நேர்ச்சைக் கடன் முடித்து, பால் நிவேதனம் செய்து, அதைச் சேவார்த்திகளுக்கு வழங்கி நிறைவேற்றும் மக்களும் ஆங்காங்கு பால் செம்புடன் நின்று, தமக்குத் தோன்றியவர்களை மட்டும் அழைத்துக் கொடுக்கின்றனர்.

     சுமையான மாலையை, அபிராமி கம்பத்தடியில் வைக்கிறாள்.

     "டீச்சர்...? அபிராமி டீச்சரில்ல?... வாங்க... பால் வாங்கிக்குங்க?" சிறு தம்ளரில் பாலை ஒரு கரண்டி ஊற்றி நீட்டும் அம்மாளைப் பார்த்ததாக நினைப்பே அவளுக்கு வரவில்லை. என்றாலும் அப்போதைய நேரத்துக்கு அந்தப் பால், குங்குமப்பூ ஏலக்காய் போட்டு சுண்டக் காய்ச்சிய பால், மிகச் சுவையாக, ஆறுதலாக இருக்கிறது.

     இவள் அருகில் பரட்டைத் தலையுடன் ஓர் ஏழை நின்று "எனக்கம்மா?" என்று கேட்கிறது. ஒரு சொட்டு கரண்டியில் எடுத்து ஏழையின் உள்ளங்கையில் விடும் அந்த அம்மாள், "ஏன் டீச்சர்? சீனிக்குக் கல்யாண மாயிட்டுதுன்னு சொன்னாங்க, சௌக்கியமா?" என்று விசாரிக்கிறாள்.

     "ஆயிட்டுதம்மா. ஒரு குழந்தை கூட இருக்கு... நீங்க..."



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps1a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs