http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


புதிய சிறகுகள்

2

     வீடு திரும்பி என்ன ஆக வேண்டும், இப்படியே இந்தச் சந்தடியைப் பார்த்துக் கொண்டு நிற்கலாமே என்று தோன்றுகிறது.

     சுஜி... கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொம்மை என்று சுமந்து கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பும் போது, இவள் முகத்தில் அடிப்பது போல் இருக்கிறது.

     "நீ உன் மகனை வளர்த்து ஆளாக்கியிருக்கும் விதம் போதும். என் குழந்தையை நீ குலவ வேண்டாம்..." என்பது போல், இவளை நிராகரித்து விட்டு, எங்கோ இருக்கும் குழந்தைக் காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகம் செல்கிறாள்.

     "அபிராமி, உன் பிரார்த்தனை பலிச்சாச்சு. ரிடயராகிப் போனா, வீட்டில பேரனோ பேத்தியோ இருக்கும்...பேச. நீயும்... அந்தக் காலத்தில் சீனியக் கையில புடிச்சிட்டு, சந்து வீட்டில குடித்தனம் பண்ண வந்தது இன்னிக்குப் போல இருக்கு. இருபத்தேழு வருஷம் ஓடிப்போச்சு!" என்று சுந்தரம்மா இவளுக்கு விடைகொடுத்தாள்.

     "ஏண்டி? குழந்தைய இடுக்கிட்டு ஆபீசுக்குப் போகணுமா? அந்தக் காப்பகத்தில், கூலி வேலை செய்யும் ஆயாவை விட நான் நம்பிக்கையில்லாதவளா? உனக்கே இது சரியாப்படுதா?" என்று நறுக்கென்று கேட்க, கடுமை பாராட்ட அபிராமிக்கு நா எழுவதில்லை. உள்ளூர வெம்பி நொந்து, கருகுகிறாள். நியாயம் இருக்கிறது...

     புருஷன் துணையில்லாமல், ஓர் ஆண் பிள்ளையை ஒழுங்காக வளர்க்க முடியாது என்றல்லவோ முடிந்திருக்கிறது.

     உச்சி வேளையின் கடுமையான வெயில். ஆடி மாதப் புழுக்கம். நுங்கு வெட்டிக் கொடுக்கிறான் ஒரு பக்கம். குஞ்சும் குழந்தைகளும் சூழக் கும்பல் விலை பேசி வாங்குகிறது. சீனிக்கு நுங்கென்றால் மிகவும் ஆசை. சந்து மூலை வீட்டில் இருந்த நாட்களில், தளதளவென்று சிவந்த மேனியும், சுருட்டை முடியுமாக, "அம்மா! நுங்கு வாங்கித்தாம்மா!" என்று அவள் பள்ளிவிட்டு வரும் போதே ஓடி வருவானே, அந்தக் காட்சி கண்களை மறைக்கிறது. சீனி... சீனி... நீ எப்படியடா ஆயிட்டே...?

     வக்கீல் நோட்டீஸ்... கோர்ட்டு... ஆயிரங்காலத்துப் பயிர் முளை விட்டதும், வேரோடு பெயர்க்க... இல்லை கூடாது. தேவி. நீ கூட்டி வைத்த குடும்பம்... நீயே துணை...

     பஸ்ஸில் பிரசாதப் பையுடன் கூட்டத்தில் நெறிபட ஏறுகிறாள். பழமும் பூவும் கசங்கும்படி நெருங்கி நிற்கிறாள். "முன்னபோ, அம்மா. பெரிம்மா! முன்னபோ!"

     அபிராமி திடுக்கிட்டாற் போல் தன்னைத் தான் சொல்கிறான் நடத்துனன் என்று முன்னே இன்னும் நெருங்குகிறாள்.

     வியர்வைக் கசகசப்புடன் பட்டப்பகலில் பஸ்ஸில் எவரிடமிருந்தோ சாராய நெடியும் மூக்கைப் பிணிக்கிறது.

     கிராமத்துக் கும்பல்...

     எல்லாம் மிகவும் சகஜமாகிப் போய்விட்டது. பஸ்ஸில், வழியில், ரயிலில், எங்கும் இந்த வாடை... எந்தப் பக்கம் பார்த்தாலும், சாராயக் கடை, கள்ளுக்கடை... யாரிடமேனும் வாய்விட்டுக் கத்த வேண்டும் போல் இருக்கிறது.

     ஓய்வு பெற்றதும், மூவாயிரம் கொடுத்துத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி வைத்திருக்கிறாள். நாடகம், சினிமா, ஒலியும் ஒளியும், எல்லாவற்றிலும் அநாச்சாரச் செயல்கள், பிஞ்சு மனங்களில் கூட வெறியேற்படுத்தும் வண்ணம் விரிக்கப் படுகின்றன...

     "முன்ன போம்மா! பெரியம்மா! பாட்டியம்மா! அங்கியே நிக்கறே..."

     "எங்கய்யா முன்ன போக? கால் வைக்க இடமில்ல! சாராய நாத்தம் வேற குமட்டுது. கோயிலில்லை, மடமில்லை, பள்ளிக்கூடமில்லைன்னு, எல்லா ரோட்டிலும் திறந்து தொலைச்சிருக்கே?..."

     பஸ்ஸை விட்டிறங்கிச் சிறிது தொலைவு அவளுடைய புதிய காலனி இல்லத்துக்கு நடக்க வேண்டும். பெரிய சாலையில் சினிமா கொட்டகை, பெட்ரோல் பங்க் கடந்து தெரு திரும்பும் முனையில் ஒரு பெண்கள் பள்ளி புதிதாக முளைத்திருக்கிறது. மதிய உணவு நேரம். ரோஜா வண்ணச் சட்டை சீருடை பச்சையில் சிறு கட்டம் போட்ட பாவாடை. ரோஜா வண்ணச் சட்டை தொங்கத் தொங்கப் பாவாடை சட்டைகளில், குழந்தைகள் ஒவ்வொருத்தியும் பூச்செண்டாகத் தெரிகிறாள். பள்ளிக்கூடச் சூழலே ரம்மியம். இந்த மணமே தனியான சுகம். வாழ்க்கை ஒன்றுமில்லை என்று ஒடிந்து போன பின், புதுச் சிறகுகளாய் அவளுக்கு ஒரு மேன்மையையும் மதிப்பையும் கவுரவத்தையும் அளித்த சூழல். "அபிராமி டீச்சர்" என்று யாரேனும் குரல் கொடுத்தாலே புல்லரிக்கும் தனிப் பூரிப்பு. இந்த வாழ்க்கைத் தடத்தில், சீனி சின்னஞ்சிறு பாலகனாய் அவள் ஒற்றை விரலைப் பற்றிக் கொண்டு தடம் மாறாமல் நடந்து வந்தான். அவனைத் தன்னுடனேயே தொடக்கப் பள்ளியில் சேர்த்துக் கொண்டாலும், மூன்றாம் வகுப்பிலேயே பையன்களுக்கான தனிப் பள்ளியில் மாற்றி விட்டாள். சிரமமே இல்லாமல் இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் இடம் கிடைத்தது.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps2.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs