http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



புதிய சிறகுகள்

2

... தொடர்ச்சி ...

     சீரான அவன் வளர்ச்சி... எத்துணை மகிழ்ச்சிகரமான நாட்கள்! தாய் சொல்லை மீறிய பையனாக அவன் ஒரு போதும் இருந்ததில்லை. அவனிடம் கைச் செலவுக்கு பஸ்ஸுக்குக் காசு கொடுத்தால் அவளறியாமல் ஒரு பைசா செலவு பண்ண மாட்டான். "அம்மா, ஐஸ்கிரீம் வாங்கிக்கட்டுமா? இன்னிக்கி?" என்று கேட்காமல் அவன் வாங்கித் தின்றதில்லை.

     இந்த அடித்தளம் அவளுள் பையனின் மீது எத்தகைய நம்பிக்கையை வளர்த்து விட்டது!

     அவனுடைய மாற்றம் எவ்வாறு நேர்ந்ததென்பதையே அவளால் நிர்ணயிக்க இயலவில்லை. அன்றாடம் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறாள். பன்னிரண்டு வயசுப் பருவத்துக்கும் இப்போதைய தோற்றத்துக்கும் மாறுதலை அன்றாடமா கண்டு கொள்ள முடிகிறது? அப்படித்தான் மைந்தனின் வளர்ச்சியும் அவளுக்கு எந்தப் பிரிசலையும் கற்பிக்கவில்லை.

     குளியலறையில் அவன் விசிறிவிட்ட லுங்கி, ஜட்டி, துண்டு, பனியன் மூலைக் கொன்றாகக் கிடக்கும். காலையில் பள்ளிக்குச் செல்லு முன், வாசலில் சைக்கிள் மணிகள் ஒலிக்கும். "சீனி... சீனி இருக்கிறானா டீச்சர்?" என்று வீச்சும் விறைப்புமாக மீசை அரும்பி வரும் பருவத்து உடையும் கட்டைக் குரல்களின் (ஆண்) மலர்ச்சிகள், தன் இல்லத்துக்கே ஒரு முக்கியத்துவத்தைக் கூட்டி விட்டதாக நெஞ்சின் ஓரங்களில் உவகையை மலர்வித்தன. பந்து மட்டைகள், சளசளவென்று கிரிக்கெட் அளப்பு, கிண்டல், கேலி, எல்லாம் அவளைப் புதிய ராச்சியத்தின் எல்லையில் மகிழ்வித்தன.

     அவன் என்ன படிக்கிறான், வகுப்பில் எப்படி நடக்கிறான், என்று கணிக்கவே தேவையில்லை என்ற வகையில், அவனுடைய பேச்சு அரட்டல், நண்பர்கள் சூழ எப்போதும் நாயகனாக விளங்கும் தோற்றப் பொலிவு எல்லாம் அவனை விட உயர்ந்த வகையில் பிள்ளைகள் விளங்க முடியாது என்று நம்பிக்கை கொள்ளச் செய்து விட்டன... சீனி... அவளைப் போல் கறுப்பு அல்ல; குட்டை அல்ல. சிவந்த மேனியும் சுருள் முடியும், வாளிப்பாக வளர்ந்த வளர்ச்சியும், கனவாகி மறந்து போன அவன் தந்தையைத் தான் நினைவூட்டின.

     "அம்மா, கிரிக்கெட் மாட்ச் டிக்கெட் வாங்கணும், பணம் வெட்டு" என்பான்.

     பொங்கல் நாளாக இருக்கும். அதிகாலையில் எழுந்து இவனுக்கும் இவன் படைக்கும் பொங்கல் புளிச்சோறு வடை என்று கட்டிக் கொடுப்பாள். ஆரவாரமாகக் கலகலத்த பள்ளிப்பருவம், சுமாரான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முற்றுப் பெற்றது.

     இவள் இடைநிலை ஆசிரியையாகச் சேர்ந்து, பட்டம் பெற்று இறுதிக் காலத்தில் தான் உயர்மட்டத்துக்கு ஊன்ற வந்தாள். இவள் பாடமும் புதிய கணக்கு, விஞ்ஞானம் என்ற பிரிவில் இல்லை. தமிழ், வரலாறு... என்று ஒட்டிக் கொள்ளும் ஆசிரியைதான். எனவே, சீனியாகத் தாயிடம் வந்து, பாடங்களுக்கு உதவி கேட்டதேயில்லை. அவனாக எந்த உதவியும் தள்ளளும் இல்லாமல் தான் தேர்ச்சி பெற்றிருந்தான்.

     "எங்க சீனி புத்தகம் எடுத்துப் படிச்சே பார்த்ததில்ல. கொஞ்சம் படிச்சிருந்தான்னா, ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்திருப்பான். அததுவா மலரணும். சுகுணா சின்ன வயசிலியே அவனுக்கு ஒரு தரம் கேட்டாப் போதும் ஒப்பிச்சுடுவான். சீனியப்பத்தி எனக்குக் கவலை இல்லை. எனக்கு எந்த சிபாரிசும் நீ பண்ண வாணாம்மான்னுட்டான்..." என்று தன் சக ஆசிரியைகளிடம் பெருமைப்பட்டுக் கொண்டாள்.

     அப்படியே தான் அவனாகக் கல்லூரியில் சேர்ந்தான். என்ன பாடம் படிக்க வேண்டும் என்பதற்கும் அவளிடம் யோசனை கேட்கவில்லை. கணக்கு பி.எஸ்.ஸி. என்று படித்தான்.

     கல்லூரி என்றானதும், அவன் முற்றிலும் அவளால் ஊகிக்க முடியாத எல்லைக்குள் சென்றதை அவள் உணரவே இல்லை.

     பள்ளி நாட்கள் வரையிலும் காலையில் அவள் சமைத்துத் தனக்கும் அவனுக்கும் மதிய உண்டியும் கட்டி வைப்பாள். அவன் சாப்பிட்டுப் பள்ளி சென்ற பின் அவள் தன் பள்ளிக்கு நடந்தே செல்வாள்.

     கல்லூரி நியமத்தில், இரவு வீடு வரவே நேரமாகிறது. வந்த பின்னரும் வாயிலில் நின்று நண்பர்களுடன் பேச்சு.

     பத்து மணியானால் இவளுக்கும் சோர்வாக உறக்கம் வந்து விடும். "மம்மி டியர்! அதுக்குள்ள தூங்கிட்ட?"

     விளையாட்டுப் போல் முகத்தில் தண்ணீர் கூட அடிப்பான்.

     "சீ, என்னடா சீனி..."



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps2a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs