http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


புதிய சிறகுகள்

3

     சுஜி வீடு வரும் போது மணி ஏழடிக்கும் தருவாயாகி விடுகிறது.

     குழந்தை, குழந்தைப் பை, இரண்டையும் சுமந்து கொண்டு வருகிறாள். வாசல் கேட் தாழ் திறக்கும் 'கிளிக்' ஓசை கேட்டதும், உள்ளே இருந்து அபிராமி விரைந்து வந்து குழந்தையைக் கையில் வாங்கிக் கொள்வாளே?

     இன்று அவள் நெஞ்சுள் குற்ற முள் உறுத்துகிறது.

     வாயில் விளக்கைப் போட்டு விட்டு நிற்கிறாள்.

     அக்கம் பக்கக் குழந்தைகள் சத்தம் கூடக் கேட்கவில்லை. தொலைக்காட்சி செய்திச் சுருக்கம் செவிகளில் விழுகிறது.

     சுஜி அறைக்குள் சென்று, குழந்தையைத் தொட்டிலில் விடுகிறாள், அது சிணுங்குகிறது.

     "இருடா கண்ணா, அம்மா, மூஞ்சியலம்பிட்டுப் பால் கொண்டு வருவேன். சமர்த்தில்ல?"

     முத்தமிட்டு விட்டுக் குளியலறைக்குச் செல்கிறாள்.

     பால் புட்டி டப்பா, கசங்கிய துணிகள் எல்லாவற்றையும் குழாயடியில் போட்டு விட்டு சொர்ரென்று கொட்டும் நீரில் முகம் கழுவிக் கொள்கிறாள். அபிராமி, உள்ளே சென்று காய்ச்சிய பாலை பதமான சூட்டில் ஆற்றிச் சர்க்கரை போட்டு, விட்டுச் சென்றிருக்கும் இன்னொரு புட்டியில் ஊற்றி ரப்பரைப் போடுகிறாள்.

     "நீ என்னம்மா சாப்பிடறே? காபி கலக்கட்டுமா?..."

     "குழந்தைக்கு உடம்பு சுடுவது போலிருந்தது. டாக்டர்ட்டப் போகலாம்னு நின்னேன். இந்தத் தாட்சாயணிக்கு எத்தனை கூட்டம்? சரின்னு பேசாமல் வந்தேன். ஞாயிற்றுக்கிழமை பிரேம் கிட்டக் கொண்டு போய்க் காட்டணும்... என்னமோ மனசே சரியில்ல. காப்பி தான் ஒருவாய் கலந்து குடுங்க போதும்..."

     அபிராமி காபியைக் கலந்து கொடுக்கிறாள். சுஜி காபியுடன் அறைக்கு வந்து, குழந்தைக்குப் பால் கொடுத்து விட்டு, அவளைத் தட்டி உறங்கச் செய்கிறாள்.

     பிறகு முன் அறைக்கு வந்து, டி.வி.யைப் போடுகிறாள். செவ்வாய்க்கிழமை நாடகம்...

     மேசை மீதிருக்கும் குங்குமம் திருநீற்றுப் பூப் பிரசாதம், எலுமிச்சம்பழம் சட்டென்று அவள் கண்களில் பட்டு விடுகிறது.

     சுஜாவின் முகம் இறுகிப் போகிறது.

     அடுத்தகணம் அந்த எலுமிச்சம் பழத்தைத் தூக்கி எறிகிறாள்.

     "ஆரம்பிச்சாச்சா இந்த பிஸினஸ்?"

     அபிராமி நடுங்கிப் போகிறாள். எலுமிச்சம்பழம் அவள் காலடியில் உருண்டோடுகிறது.

     "கோவிலுக்குப் போய்த்தான் இந்த கதிக்கு வந்திருக்கேன். நான் பாட்டில வேலை செஞ்சிட்டு ஏதோ சந்தோஷமாய் வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டு, உடுத்தி வாழ்ந்திருப்பேன். கல்யாணமாம், கல்யாணம். புடிச்சுக்கன்னு விலங்கைமாட்டி ஒரு பொறுப்பையும் கொடுத்திட்டு இன்னும் பத்தலியா?... இத பாருங்க? உங்கள் பிள்ளையோட நான் குடும்பம் பண்ண முடியும்னு எனக்குத் தோணல?"

     அபிராமி அவளருகில் சென்று அவள் கையை ஆதரவோடு பற்றுகிறாள்.

     "சுஜாம்மா, வருத்தப்படாதே. என்னமோ எனக்கு அஞ்ஞானம், கோயிலுக்குப் போகலாம், அவ கூட்டி வச்சது தானேன்னு தோணித்து போனேன். எலுமிச்சம் பழமெல்லாம் நான் வாங்கிட்டுப் போகல - அப்படியெல்லாம் ஒரு தீர்மானமும் இல்ல. ஏதோ மனசு ஆறுதல் - யாரிட்டயேனும் சொல்லி ஆறணும், எங்க போக?... சாந்தமடை சுஜா, உன் கஷ்டம் எனக்கும் தெரியிதம்மா. காபி ஆறிச் சில்னு போயிட்டுதே... ஓவல்டின் வாணா கரைச்சிட்டு வரேன். அலைஞ்சிட்டு வரே..."

     "எனக்கு ஒண்ணும் வேணாம்... உங்களை யாரு இப்ப கோவிலுக்குப் போகச் சொன்னது?"

     "தப்புத்தாம்மா..."

     "எப்படியானும் கழுத்தில தாலி விழணும். எவளானும் ஏமாந்தவளப் புடிச்சிக் கட்டணும். அத்தோட உங்க பிறவி மோட்சம் வந்துடும். அப்படித்தானே நினைக்கிறீங்க?"

     அபிராமிக்குத் துயரம் பொங்கி வருகிறது.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps3.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs