http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



புதிய சிறகுகள்

3

... தொடர்ச்சி ...

     "இப்படி எல்லாம் பேசாதே சுஜா, என் மனசு எவ்வளவு வேதனைப் படுகிறதுன்னு உனக்குச் சொல்ல முடியல..."

     "நீங்க தான் வேதனைப் படுறீங்க. எனக்கு குளுகுளுன்னு சந்தோஷமா இருக்கு, இல்ல?... ஆபீசில கூட தலைதூக்க முடியாதபடி அவமானமா இருக்கு. அங்க வந்து நாலு பேர் முன்னே வாடி போடின்னு பேசறான். என் கண் முன்ன, வேணுன்னு, எவ தோளிலோ கையப் போட்டுப் போறான்..."

     "ஆ...? யாரம்மா?"

     "யாரு? அவன் தான்? அவன் இவன் தான்னு சொல்லுவேன். தினமும் குடிச்சிட்டுக் கண்ட நேரத்துக்கு வந்தா நீங்க கதவத் திறந்து விடுறீங்க. நான் சொல்றேன் நீங்க குடுக்கிற இடம் தான் இவ்வளவுக்கு வந்தது. அப்படி என்ன பிள்ளை?..."

     "சரி, இன்னிக்குக் கதவு திறக்கல..."

     கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள்.

     அபிராமிக்குத் தாலி கட்டியவன், இந்தப் பையனைத் தவிர அவள் நினைவில் நிற்க எந்த ஒரு நலமும் இன்பமும் கொடுக்கவில்லை. என்றாலும் இன்று வரை அவனை ஏக வசனத்தில் அவன் இவன் என்று குறிப்பிட்டதில்லை.

     இதுவேறு தலைமுறை; நியாயம் கேட்கிறாள். நியாயம்; நியாயம்.

     "எங்கிட்டக் கேக்காம எதுக்குக் கோயிலுக்குப் போகணும்? ஆறு வாரத்துக்குள்ள தாலி ஏறிடும்... தாலி! பிள்ளைக்கு இன்னும் எவளானும் ஏமாந்த சோணகிரி மஞ்சக் கயிறுக்கு ஏங்கி நின்னிட்டிருப்பா, கட்டி வக்கலாம்னு நினைச்சிருப்பிங்க!... அப்படித்தானே! ஆறுவாரம் இப்ப நீங்க போயி வரத்துக்குள்ள ஏறின இது எறங்கிடும்னு நினைச்சிக்குங்க! இந்த மஞ்சக் கயிறு மகத்துவம், எல்லாம் கூடி இருந்தாத்தான். இல்லேன்னா வெறும், வெறும் கயிறு! இது கழுத்தை - இல்ல - வாழ்க்கையை அறுக்கிற கயிறு!"

     கழுத்திலிருக்கும் அந்தக் கயிறை வெறுப்புடன் கையில் சுற்றி முறுக்குகிறாள். பிறகு கையில் கழற்றி வைத்துக் கொள்கிறாள்.

     அபிராமி இடித்த புளிபோல் நிற்கிறாள்.

     "நீங்க வாழ்க்கையில் பட்டவங்கதானே? நீங்களே சொல்லுங்கம்மா! உங்களுக்கு, புருசன்ங்கறவன் இந்தப் புள்ளயைக் குடுத்ததைத் தவிர ஒண்ணும் நல்லதச் செய்யல, அந்தப் பெண்சாதிக்கும் மூணுநாலு பந்தம். நாளெல்லாம் ரேசு, குடின்னு ஆடிட்டு ஒருநா கண்ணை மூடிட்டான். எம்புள்ளக்கி அப்பா முகம் கூட நினைப்பிருக்காதுன்னு சொன்னீங்க. அப்படி இருந்தும், புள்ள மேல கேட்ட போதெல்லாம் பணம் குடுக்கும் பாசம் எப்படிம்மா வந்தது உங்களுக்கு?"

     நியாயம்... நியாயம்...

     "ஹனிமூன்லயே இவன் சாயம் வெளுத்துப் போச்சி. 'தபாரு சுஜி, அதோ அந்தப் பொண்ணுகள்ளாம் என்னயே வச்சகண் வாங்காம பாக்குறாங்க. நா என்ன செய்ய, நா அவ்வளவு அழகா இருக்கிறேன்... இல்ல'ன்னு கண் சிமிட்டினான். எனக்கு எப்படி இருந்திருக்கும், நினைச்சிப்பாருங்க..."

     "சுஜிம்மா, இப்ப அதெல்லாம் என்னத்துக்கு... நா தப்புதா பண்ணிட்டேன். நிமிர்த்த முடியாம ஒரு வளைசல்ல நெருக்க வச்சிட்டேன். என்ன மன்னிச்சிடும்மா..."

     "அம்மாக்கு, சுஜி, பிரதர்ஸ்னா ஒரு வீக்னஸ். டெல்லில இருக்கிற மாமா ஸர்வோதய காலனில ஃப்ளாட் வாங்கினாரா - ஒரு ஃப்யூ தௌஸன்ட்ஸ் குறையிதுன்னு கேட்டாரு. நாங்க வேற இங்க வீடு கட்டிருக்கமா? அதனால ஹெவி ஸ்ட்ரெயின். என் சம்பளம் அப்படியே அம்மாவிடம் தான் கொடுத்திடுவேன். இப்ப அம்மாட்ட அன்னன்னிக்குச் செலவுக்கு வாங்க வேண்டி இருக்கு. இப்பப்பாரு, உனக்கு - இஷ்டப்பட்ட ஸாரி வாங்கிக் குடுக்கணும், ஸ்டார் ஓட்டலுக்குக் கூட்டிப் போகணும்னெல்லாம் ஆசையாக இருக்கு. இந்த இளம் வயசில அநுபவிக்காம எப்ப அநுபவிக்கிறது? ஆனா... அம்மா... அம்மாட்ட நீ கேக்காதே. அவங்க ரொம்ப கன்ஸர்வேடிவ் ஓல்ட் ஃபாஷன்ட் வியூஸ் உள்ளவங்க. இதெல்லாம் அநாவசியம்னு நினைப்பா. 'இப்ப எதுக்குடா அவளுக்குப் புடவை? அம்பது புடவை வச்சிட்டிருக்கா. ஹாங்கரில் அடுக்கடுக்காத் தொங்குது'ம்பா... என் பாலிஸி அது இல்ல. என் சுஜிக்கு எப்படியெல்லாமோ அலங்காரம் பண்ணிப் பார்க்கணும்னு ஆசை. ஸல்வார் கமிஜ் போட்டுட்டா உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்..."

     அவன் நடிப்பை அவள் சொல்லிக் காட்டும் போது அபிராமியினால் குலுங்காமல் இருக்க முடியவில்லை.

     இவளிடம் என்ன சொன்னான்?



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps3a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs