http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


புதிய சிறகுகள்

4

     சுஜா கருவுற்று, மூன்றாம் மாதத்தில் தாய் வீடு சென்றிருந்த நாட்களில் தான் அபிராமி ஓய்வு பெற்றாள். தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்கி வைத்தாள்.

     சுஜாவுக்கென்று, மூன்று சவரனில் அழகிய நெக்லேசும், இனிப்பு கார வகைகளும், பழங்களும் வாங்கிக் கொண்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை சென்றாள்.

     வாயிலில் கார் ஒன்று நின்றது.

     கூடத்து நாற்காலியில் சிறிது முன் வழுக்கை தெரிய கண்ணியமும் அறிவின் மலர்ச்சியும் பணிவும் ஒருங்கே தெரிய, உட்கார்ந்திருந்தான் ஒரு இளைஞன். சுஜா சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். கை நிறைய வளையல்களும் பட்டுச் சேலையும் அணிந்து பொலிவுடன் திகழ்ந்தாள்.

     "வாங்க, வாங்கம்மா! இப்பத்தான் பேசிட்டிருந்தோம்..." என்று அப்பா வரவேற்றார்.

     "டாக்டர் பிரேம் குமார், எம்.டி.,... நியூராலஜிஸ்ட்டா ஏழு வருஷம் அமெரிக்காவில இருந்திட்டு இப்ப இங்கேயே வந்திடனும்னு வந்திருக்காரு... இவங்கதா, சுஜா மாமியார். டீச்சரா இருக்காங்க..."

     அபிராமி கைகுவிக்கு முன் அவனே எழுந்து மரியாதையாக 'வணக்கம்' என்றான்.

     "சின்ன வயசில இங்கதா எதிர் வீட்டில இருந்தாங்க. எந்நேரமும் இங்க தான் கிடக்கும். எங்க வெங்கியும் இவனும் ஒரே வயது..." என்று மங்களம் தெரிவித்தாள்.

     அபிராமி ஒரு தட்டுக் கொண்டு வரச் சொல்லி இனிப்பு பழங்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். பிறகு அட்டைப் பெட்டியைத் திறந்து நகையைக் காட்டினாள்.

     "பிடிச்சிருக்கம்மா?..."

     "ஓ, நல்லாயிருக்கு... என்ன ஆச்சரியம்? பிரேம், உங்க பிரேஸ்லெட் மாதிரியே பாட்டான்... பாருங்க?..."

     பிரேம்குமார், அவளுக்குத் திருமணப் பரிசாக வாங்கித் தந்திருக்கும் அந்தக் கையணியை அவள் ஒன்றாக வைத்துக் காட்டினாள்.

     "லவ்லி..."

     மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டு எல்லோரையும் வணங்கினாள்.

     "சுஜா, உன் ஹஸ்ஸியிடம் கேட்டு, எப்ப சௌகரியப்படும்னு ஃபோன் பண்ணு. விருந்துக்கு...!" என்று எழுந்திருக்கிறான் பிரேம்.

     "வரேம்மா?"

     சுஜா வாசலில் நின்று கார் மறையும் வரை வழியனுப்பினாள்.

     "கொஞ்சம் கூடக் கருவமில்லாத பிள்ளை. ஞாபகம் வச்சிட்டு வந்திருக்கு பாரு... இங்கதா கிடக்கும். அம்மா கிடையாது. ஒரே ஒரு தங்கச்சி இருந்திச்சி. அது நெருப்புப் பிடிச்சி எறந்து போயிட்டுது. பாவம். ரொம்ப கெட்டிக்காரன். ஏழு வருஷம் அமெரிக்காவுக்குப் போயி மாறவே இல்ல. அப்படியே இருக்கு?"

     அவன் புகழையே அன்று மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அபிராமிக்குத் தான் நகை வாங்கிச் சென்றது கூட எடுபடாமல் போயிற்றே என்றிருந்தது.

     அடுத்த நாள், வழக்கத்திற்கு மாறாக, சீனி மாலை ஐந்து மணிக்கே வீடு திரும்பி விட்டான். முகம் கலவரமடைந்திருப்பதைக் காட்டியது.

     "அம்மா, நீ எனக்கொரு உதவி செய்யணும். மாட்டேன்னு சொல்லக் கூடாது."

     அபிராமி அவன் முகத்தை உறுத்துப் பார்த்தாள்.

     "ஒரு அவசரம்னு ஆபீஸ் பணம் அஞ்சாயிரம் எடுத்துட்டேம்மா. இன்னிக்குக் கணக்கு ஒப்பிக்கணும். குடு... திங்கக்கிழமை திருப்பிடறேன்..."

     "ஆபீஸ் பணத்தை என்ன அவசரம்னு எடுத்தே?"

     "ஃபிஷர்மென்கோவில் அவசரமா ஒரு பார்ட்டி அரேஞ்ஜ் பண்ண வேண்டி இருந்தது. பணம் பத்தல. மானேஜர் ஊரில இல்ல. எடுத்தேன். இன்னிக்குக் கணக்கு உதைக்கும்..."

     "சீனி! நீ எங்கே கொண்டு போறேன்னு புரியலடா! நீ என்னை ஏமாத்தறே, அவளையும் ஏமாத்தறே!"

     "இதென்னம்மா, உன்னோட ரோதனையாப் போச்சு? மூணு லட்சத்துக்கு ஒரே சமயம் ஆர்டர் புடிச்சிருக்கிறேன். அதுக்கு இது சின்ன மீன். பணம் மெள்ள சாங்ஷன் ஆகிவிடும். நான் முந்திக்கலன்னா, வேற ஒருத்தன் தட்டிட்டுப் போயிடுவான். போட்டிம்மா...!"



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps4.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs