http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



புதிய சிறகுகள்

4

... தொடர்ச்சி ...

     "சீனி, எங்கையில இப்ப ஒரு சல்லிக்காசு கிடையாது..."

     "உன் பிள்ளையை போலீசில பிடிச்சிட்டுப் போணா பாத்திட்டிருப்பியா?"

     அபிராமி அதிர்ந்து போனாள்.

     "அடபாவி, கல்யாணம் பண்ணினா பொறுப்பு வரும்னு பார்த்தால், இப்படி பார்ட்டி பார்ட்டின்னு தண்ணி ஊத்துவதும் ஊத்திக்கிறதுமாச் சீரழியறியே...?" அவள் வாய்விட்டே அழுதாள் அன்று.

     "இந்தத் தடவை நீ காப்பாத்திடும்மா. இனிமே சத்தியமா இல்ல."

     "நீ எங்கிட்ட சத்தியம் பண்ணாதே. சத்தியம்ங்கற சொல்லை உச்சரிக்கக் கூட உனக்குத் தகுதியில்ல..."

     "அப்படிப் பார்த்தா யாருக்குமே தகுதியில்ல. நீ சொல்ற நீதியெல்லாம் இன்னிக்குச் செல்லாக்காசு அம்மா!... இன்னிக்கு இந்த கம்பெனி இவ்வளவு பெரிசா வந்திருக்குன்னா நீதி நேர்மையின்னு இல்ல புரிஞ்சுக்க. கறுப்புப் பணம், லஞ்சம், தண்ணி, பொண்ணு எல்லாந்தான் பின்னால..."

     "சீனி, நான் உனக்கு ஒரு பைசா குடுக்க மாட்டேன். போ இங்கேந்து?"

     ஆனால் அவன் என்ன தந்திரம் பேசியோ, சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அன்று வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வந்ததும், அபிராமி, "சுஜா, புதிதா வாங்கின ஸில்க் புடவைய உடுத்திட்டு, நெக்லசைப் போட்டுக்கோம்மா. பக்கத்து வீட்டு தனம்மா, பார்க்கணும் வரேன்னா" என்றாள். சுஜா ஒன்றும் புரியாமல் விழித்தாள். "ஏம்மா, உங்க பிள்ளை, அதில் இன்னொரு கண்ணி சேர்க்கணும், வாங்கி வரச் சொன்னீங்கன்னு அன்னைக்கே வந்து கேட்டாரே?..."

     "அட... பாவி?"

     அபிராமி இடிந்து போனாள்.

     "ஓ... மறந்தே போயிட்டம்மா! எனக்குத்தா என்ன நினைப்பு?" என்று மூடி மறைத்து மெழுகி, அடுத்த நாளே ஃபிக்ஸட் டெபாஸிட் என்று போட்டிருந்த பணத்தை முறித்துக் கடைக்குச் சென்று, ஒரு நெக்லஸ் வாங்கி வந்தாள். "இதோ பார் சுஜாம்மா, அவன் கேட்டால் என்னைக் கேக்காம ஒண்ணும், குடுக்காதே?" என்று சொல்லி வைத்தாள்.

     அவளுக்கு இதெல்லாம் புரிந்து கொள்ள வெகு நாட்களாகவில்லை!

     பிரசவித்து வந்த பிறகு, அவள் பழைய சுஜாவாக இல்லை. முன்பு அவளிடம் காட்டிய பணிவு, மென்மை எதுவுமே இல்லை. அவளை 'அம்மா' என்று கூடக் கூப்பிடுவதில்லை. "மாமி! குழந்தை துணிய அவன் துணியோடு வைக்காதிங்க!..." "குழந்தை உள்ளே தூங்கறா இவன் மூஞ்சியை அந்த பூகிட்டக் கொண்டு வச்சிட்டுக் கொஞ்சறேன்னு பேர் பண்ண வாணாம். கொஞ்சம் பாத்துக்குங்க. நான் குளிச்சிட்டு வந்திடறேன்..."

     என்ற மாதிரியான சொற்கள் அவள் நாவிலிருந்து தெறிக்கும் போது, இவள் துணுக்குற்றுப் போகிறாள்.

     ஆனால் சில சமயங்களில் இதுவும் நன்மைக்கே என்று தோன்றுகிறது.

     கடிகாரம் டிக்டிக்கென்று அடிப்பது நெஞ்சில் அடிப்பது போல் ஒலிக்கிறது.

     "சுஜிம்மா? குழந்தை தூங்கறப்பவே சாப்பிட்டு விடலாமே வா..."

     அவள் பேசாமல் எழுந்து வருகிறாள்.

     மௌனமாக, ஒரு சிரிப்பு, பேச்சு, சகஜம் இல்லாமல் சாப்பாடு. குழந்தைக்குப் பாலை ஊற்றிக் கொண்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொள்கிறாள்.

     அபிராமிக்கு மண்டையை முட்டிக் கொள்ளலாம் போல் இருக்கிறது.

     ஊர் உலகத்தில் எத்தனையோ பிள்ளைகள்... அவளுக்கு தெரிந்து யாருமே இப்படி அன்பென்னும் ஈரம் கசிவு இல்லாத சுயநலப் பிண்டமாக வளர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. உயர்ந்த படிப்புப் படிக்காத கீழ் மட்டத்தில், குடித்துவிட்டுப் புரளுபவன் கூட எப்போதேனும் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஏனெனில் அந்த மட்டத்தில் அது இயல்பாகப் படுகிறது.

     மணி பத்து நாற்பத்தைந்து.

     தெருவில் ஓசை அடங்கியாயிற்று. எதிர் வீட்டுத் தொலைக்காட்சி அரவம் கூட ஓய்ந்து, விளக்கணைத்து விட்டார்கள்.

     சுஜியின் அறையில் இருந்து விளக்கொளி வெளியில் விழுகிறது. அவள் புத்தகம் படிப்பாளோ?... உறுதியாக, மஞ்சட் கயிற்றைக் கழற்றிக் கையில் வைத்துச் சுருட்டினாள். இவள் செய்யத் துணியாத செயல்கள் - தகர்ப்புக்கள்.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps4a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs