http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


புதிய சிறகுகள்

6

     தன் மகன் கடல் தாண்டிப் போகப் போகிறான் என்று அபிராமி யாரிடமும் சொல்லவில்லை. ஒரே வாரத்தில் கைக்குப் பணம் கிடைத்து விடுகிறது.

     "இது நான் உனக்குக் கடைசியாகக் கடன் வாங்கித் தந்திருக்கிறேன். நீ முன்னுக்கு வரணும்னு நம்பிக்கையோடு தந்திருக்கிறேன்..."

     "அம்மா...! என் அம்மா" என்று கழுத்தைச் சுற்றிச் சிகரெட் வாயுடன் அவள் கன்னத்தில் முத்தம் வைக்கிறான்.

     "சீ!"

     அருவருப்புடன் கன்னத்தை அபிராமி துடைத்துக் கொள்கிறாள். கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு நாலரை மணி சுமாருக்கு அவன் எப்போதும் சுற்றுப்பயணம் கிளம்பிச் செல்வது போல் சென்றான். வாயிலில் நின்று அவள் அவன் தலை மறையும் வரையிலும் பார்த்துவிட்டு உள்ளே வருகிறாள்...

     அவன் காபி டிபன் சாப்பிட்ட தட்டு, டம்ளர் அப்படியே இருக்கிறது. குளித்துவிட்டுப் போட்ட ஈரத்துண்டை வழக்கம் போல் விசிறியிருக்கிறான். முன் அறையில் அவன் படுக்கை, சுவரிலேயே பதிக்கப்பெற்ற அலமாரி, அதில் அவன் துணிகள்... அவளுடைய சில உயர்ந்த உடமைகள், எல்லாம் கல்யாணத்துக்கு முன் இருந்த நிலையிலேயே பிரிவாக்கப் பட்டிருக்கின்றன. சுஜா திருமணமாய் வந்ததும், அவள் வீட்டில் இருந்து ஏற்கெனவே அவள் தனக்கு வாங்கிக் கொண்டிருந்த சிறிய இரும்பு அலமாரியைக் கொண்டு வந்தாள். அதை மட்டும் அவள் தன் அறைக்குள் வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த அறையில் சுவரிலேயே அலமாரி கிடையாது. ஏற்கெனவே ஓர் ஒற்றைக் கட்டில் உண்டு. திருமணம் முடிந்து வந்த பின் வேறு ஒரு கட்டில் வாங்கவில்லை. அந்த ஒற்றைக் கட்டிலில் இப்போது யாரும் படுப்பதில்லை. அதில் பெட்டிகள், படுக்கை ஆகிய சாமான்களை ஏற்றி வைத்திருக்கிறாள். ஸ்டான்ட் தொட்டில் அறையை அடைக்கிறது.

     ஏதோ ஒரு நிம்மதி பெற்றாற்போல் அபிராமி சாமான்களை ஒதுக்கி ஒழித்து வைத்துப் பெருக்குகிறாள். இரவுக்குச் சமையலை முடிக்கிறாள். அபூர்வமாகத் தொலைக்காட்சியைப் போட்டுக் கொண்டு உட்காருகிறாள். யாரோ ஒரு வயிரத் தோட்டுக் கிழவியை, ஒரு மூன்றாம் தலைமுறை பேட்டி காண்கிறது.

     கிழவி சமூக சேவகி போல் இருக்கிறது.

     "அந்தக் காலத்தில் சமூக சேவை செய்யணும்ங்கற எண்ணத்தை எனக்கு ஊட்டியவரே என் கணவர் தான். அவரோட உற்சாகத்தால்தான் மேலும் மேலும் நான் இதெல்லாம் செஞ்சிகிட்டு வரேன். 1956ல, நேரு கையால, பாராட்டு ஸம்மானம் கிடைச்சது..."

     "அப்புறம் அம்மா, இந்திரா அம்மையார் கூடப் பாராட்டியிருக்காப்பல இருக்கே..."

     "ஆமாம்... பத்மஸ்ரீ கிடைச்சது..."

     அந்தப் பத்திரத்தைப் பெரிதாகக் காட்டுகிறார்கள்.

     அபிராமி சமூக சேவை என்பது எப்படி, என்ன தொண்டு, என்று தெரிந்து கொள்வதற்காக முழு நேரமும் உன்னிப்பாகக் கவனிக்கிறாள். நரைத்த கூந்தலில் கொள்ளாத மல்லிகைப் பூ, பெரிய குங்குமப் பொட்டு, சுடர்தெறியும் மூக்குத்தி, தோடு வயிரங்கள், உள்ளங்கழுத்து அட்டிகை இவை எல்லாம் அந்தக் கிழட்டு உடலில் மின்னுவதைத்தான் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். திருப்பித்திருப்பி, அவள் மாமனார், கணவர் எல்லோரும் அவளை ஊக்கப்படுத்தியதையும், கூட்டங்களில் பேசச் செய்ததையும், தவிர ஒன்றும் வெளியாகவில்லை.

     கடைசியாக, "இப்ப இளந்தலைமுறையினருக்கு நீங்க என்னம்மா அறிவுரை சொல்றீங்க?" என்ற கேள்வியை இளையவள் போடுகிறாள்.

     "இளைய பெண்கள் எல்லாரும் இன்றைக்கு நம்ம கலாசாரம், பண்பாடுகளை விட்டுப் போயிட்டிருக்காங்க. அது ரொம்ப வேதனைக்குரியது. நம்ம நாட்டுக்குன்னு தனியா கலாசாரம், பண்பாடு இருக்கு. அதைப் பெண்கள் தான் காப்பாத்தனும். நாட்டைத் தாய்நாடுன்னும் ஆறுகளைப் பெண்கள் பெயராலும் அழைக்கிறோம். அதனால் ஒரு தேசம் தாழறதும் மேல ஏறறதும் பெண்களைச் சார்ந்து தான் இருக்கு. இதை அவங்க உறுதியாக் காக்கணும்..."

     உடனே இளைய தலைமுறை திரும்பி உட்கார்ந்து, "பழம் பெரும் சமூக சேவகியாகிய நீங்க இவ்வளவு நேரம் மிக அரிய, பல பயனுடைய கருத்துக்களை விளக்கமாகத் தந்தீர்கள். தொலைக்காட்சியின் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று முடிக்கிறாள்.

     அபிராமி விழிக்கிறாள். 'கலாச்சாரம் பண்பாடு என்றால் என்ன? அது பெண்களை மட்டும் எப்படிப் பொறுப்பாக்குகிறது!... என்ன கருத்தடீ, அது? சொல்லிவிட்டுப் போ!' என்று முந்தானையைப் பற்றி இழுத்து உலுக்க வேண்டும் போல் இருக்கிறது.

     பட்டென்று அதை மூடிவிட்டு வாசற்புறம் வந்து நிற்கிறாள்.

     தெருவில் செல்லும் மக்களை, வண்டிகளை, வேடிக்கை பார்த்துக் கொண்டு, சுஜாவை எதிர்பார்க்கிறாள்.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps6.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs