http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



புதிய சிறகுகள்

6

... தொடர்ச்சி ...

     மணி ஆறடித்து, ஆறரை, ஏழும் ஆகிவிட்டது.

     சுஜாவைக் காணவில்லை.

     குழந்தையுடன் ஆறரைக்கே வந்து விடுவாளே?...

     ஏழுக்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை. படலைக்கு வெளியே இருட்டில் கண்களைப் பதித்துக் கொண்டு நிற்கிறாள்.

     அக்கம் பக்கம் எல்லாம் தொலைக்காட்சியோடு ஒன்றிக் கிடக்கிறது. தெருவில் வீடுகளில் வெளிச்சம் தரும் ஒளிதான் வருபவர்களை, வண்டிகளை இனம் காட்ட வேண்டும். ஏனெனில் இந்தத் தெருவில் உள்ள இரண்டு விளக்குகளும் எரியவில்லை.

     ஏன் வரவில்லை? பஸ், ஸ்கூட்டர் விபத்தா?

     அலை பாய்கிறது. இந்நேரம் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் கூடத் தொடர்பு கொள்ள யாருமே இருக்க மாட்டார்களே?

     தவித்து உருகிய பிறகு எட்டரை மணிக்கு அவள் மட்டும் வருகிறாள். அதாவது குழந்தை இல்லை. கூட ஓர் இளம்பிள்ளை துணையாக வந்திருக்கிறான்.

     "குழந்தைக்கு திடீர்னு ஜுரம், ஃபிட்ஸ் மாதிரி வந்துட்டுதம்மா, பிரேமுக்கு ஃபோன் பண்ணி அவர் வந்து, சில்ட்ரன் ட்ரஸ்ட் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கச் சொல்லிட்டார். உங்ககிட்ட வந்து சொல்லிட்டு வேணுங்கற சாமானை எடுத்திட்டுப் போகணும்னுதான் வந்தேன்..."

     "உள்ள வாங்க வின்சென்ட் இப்படி உட்காருங்க. நான் வந்திடறேன்..." கல்லூரி மாணவன் போல் காட்சியளிக்கும் அந்தப் பையன் அவள் காட்டிய இருக்கையில் அமருகிறான்.

     "எங்க ஆஃபிஸ் அகௌன்டன்ட் பையன். அவர் தான் ரொம்ப உதவியாகக் கூட வந்தார். குழந்தையை அட்மிட் பண்ண, அவர் பையனை நான் தனியாகப் போக வேண்டாம்னு துணைக்கு அனுப்பினார்..."

     அபிராமிக்கு நா எழவில்லை. அவசரமாக அவளுக்குச் சாப்பாடு போடுகிறாள். பிறகு ஃபிளாஸ்க்கில் வெந்நீர், பால் மாவு என்று பையில் எடுத்து வைக்கிறாள். குழந்தைத் துணிகள், இவளுக்கு மாற்றுச்சேலை, எல்லாம் சிறு பெட்டியில் அடுக்கி மூடிக் கொள்கிறாள். "வரேம்மா..."

     அபிராமி குரல் தழுதழுக்க வாயிற்படியில் நின்றவாறே, "அந்த ஆஸ்பத்திரி எங்க இருக்கம்மா? காலம நான் உனக்கு காபி, புதுப்பால் எல்லாம் கொண்டு வரேன்" என்று கேட்கிறாள்.

     "வரீங்களா? உங்களுக்குக் கஷ்டமா யிருக்காதா? இவங்க வீடு பக்கத்தில இருக்கு... அதனாலதான் சொல்லல. லாயிட்ஸ்ரோட் தெரியுமில்ல...? அந்தப் பக்கம் வரணும்..."

     "வரேம்மா, நிச்சயமா வரேன்... இங்க வீட்டில யாருமில்ல. சீனியும் டூர் போயிட்டான்..."

     "அப்ப ஒரு ஒம்பது மணிக்கு சாப்பாட்டையே முடிஞ்சா எடுத்திட்டு பத்து மணிக்குள்ள வாங்கம்மா... வரேன்!"

     பறந்து கொண்டு போகிறாள்.

     குழந்தைக்கு வந்திருக்கும் நோய் சாதாரணக் காய்ச்சல் அல்ல மூளைக்காய்ச்சல். அன்று முழுவதும் குழந்தை மருத்துவர்கள் வந்து வந்து குழந்தையைக் கவனிக்கிறார்கள். தட்டு நிறைய ஊசிகளை வைத்துக் கொண்டு அந்தப்பூ உடலில் மருந்தைச் செலுத்துகிறார்கள்.

     தலையைப் போட்டு உருட்டி முனகும் குழந்தையைக் காண அபிராமிக்குச் சங்கடம் தாளவில்லை. ஆனால், சுஜா, அலுவலகம் போகாமல் குழந்தைக்குத் தாயாக, அதன் துயரை, நோவைத் தான் ஏற்க முடியவில்லையே என்று துடிப்புடன் அமர்ந்து அதற்கு ஆறுதல் தர முனைகிறாள்.

     இரவும் பகலுமாக ஆஸ்பத்திரியும் வீடுமாக ஒரு வாரம் சோதனையாக நீள்கிறது. ஒரு நாளிரவில் பிரேம் இரவு மூன்று மணி வரையிலும் இருந்து கண்காணிக்கிறான். கவலை கனக்கும் சுஜாவின் முகம். ஏதேதோ திகிலுணர்வுகளை அபிராமிக்குத் தோற்றுவிக்கின்றன. பெண் குழந்தை உறுப்புகள் ஊனமாகிவிடுமோ? கண், செவி... கை கால் அறிவு... உணர்வு...

     நினைவில் வரும் தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்கிறாள். தன் பதற்றத்தை அவளால் அந்த இளந்தலைமுறைக்காரி போல் அடக்கிக் கொள்ள முடியவில்லை.

     ஒரு வாரத்தில் குழந்தை கண் விழிக்கிறது. "கண்ணம்மா உஷாம்மா...! உஷா...!" என்று கூப்பிட்டால் தாயின் முகம் பார்க்கிறது.

     பத்தாம் நாள் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். அடுத்த நாள் சுஜா அலுவலகம் செல்கிறாள்.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps6a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs