http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



புதிய சிறகுகள்

7

... தொடர்ச்சி ...

     "அம்மா! நீங்களும் புதிய சேலை உடுத்தணும் வாங்க?"

     குழந்தை போல் மத்தாப்பு, வெடிகள் விடுகிறாள்.

     "என்ன அபிராமி அம்மா? தீவாளிக்குக் கூட மகனுக்கு லீவு கிடைக்கலியா என்ன?"

     "ஏன் மாமா? அதில உங்களுக்குத்தான் அதிக வருத்தம் போல இருக்கு? கங்காஸ்நானம் ஆச்சான்னு விசாரிக்காம, இப்படி விசாரிக்கிறீங்க!" என்று அதிரடியாக சுஜி பதில் கொடுக்கிறாள்.

     "அதென்னம்மா, அப்படிச் சொல்லிட்ட? ஒரு நல்ல நாள் திருநாள், புருஷன் கூட இல்லையேன்னு உனக்கு இல்லையா என்ன? காட்டிக்க மாட்டே!"

     "எனக்கு இல்ல மாமா."

     "உனக்கு இல்லையா? ஆனா, உங்க மாமியார், பாவம், ராத்திரி எந்நேரம் ஆனாலும் கண் முழிச்சிக் கதவைத் திறப்பாங்க. சாப்பிடாம பட்டினி கிடப்பாங்க. எனக்கு இன்னி நேத்திப் பழக்கமா?"

     "இருக்கலாம். அது அவங்க நேச்சர். நான் வர நேரமானாலும் பால் கூட காச்சாம வாசல்ல பாத்திட்டே நிப்பாங்க. இப்ப உங்க வீட்டுல ஆயிரம் விஷயம் இருக்கும், நாங்க கேக்கிறமா?... ஏன் தூண்டித் துளைக்கிறீங்க?"

     தணிகாசலத்துக்கு முகம் சுண்டிப் போகிறது.

     "நாடறிஞ்ச..." என்று ஒரு கீழ்த்தரச் சொல்லை முணமுணத்துக் கொண்டு போகிறார்.

     இவர் அத்துடன் விடுவாரா? "இவ சங்கதி தெரியாதா? அந்த டாக்டர் கூடத் தொடிசு இருக்கு. அதான் அந்தப்பய, மானம் தாங்காம பிரிஞ்சு போயிட்டான்" என்று சொல்வது போல் அபிராமிக்குச் செவிகளில் ஒலிக்கின்றன.

     அக்கம் பக்கம், ஒரு சுகத் துக்கங்களில் ஒதுங்கி விட முடியாத, ஒதுக்க முடியாத அக்கம் - பக்கம். மனிதர் தீவுகள் அல்லவே?

     "ஏம்மா இப்படி வாயடி அடிச்சி அனுப்பிட்டியே? அக்கம் பக்கம் பகைச்சிட்டா எப்படி?"

     சுஜா பொருட்படுத்தாமல் ஒரு சரம் பட்டாசைக் கொளுத்தித் தெருவில் போடுகிறாள்.

     உஷா பயப்படவேயில்லை. கைகொட்டிச் சிரிக்கிறது.

     "பயப்படவே இல்லை பாரம்மா இது?" என்று குழந்தையை முத்தமிட்டுக் கொள்கிறாள். அபிராமியின் முகம் மலரவில்லை.

     "அம்மா, யாரோ ஏதோ கேட்கிறாங்கன்னு, நாம் நம்மையே வருத்திக்கறது முட்டாள்தனம்... நீங்க ஒரு பட்டாசு விடுங்க... பாருங்க, விடுவிடுங்கறா உஷா..."

     "நீ இருந்தாலும் அப்படிச் சொல்லி அனுப்பிச்சியே, அவுரு வீணா இல்லாத கதை எல்லாம் கட்டினா..."

     "கட்டட்டும். இந்தச் சமூகம் நன்மை செய்யப் போறதுன்னு நான் நம்பவில்லை. அதனால, அவங்களைத் திருப்திப்படுத்த, நம்மை நாம ஏமாற்றிக்க வேண்டாம். ப்ளீஸ், சந்தோஷமாக இருங்கம்மா?"

     சொல்லி வைத்தாற் போல், டாக்டரின் வெள்ளை நிற வண்டி ஓசைப்படாமல் வந்து முன் வாசலில் நிற்கிறது. கையில் சில பரிசுப் பெட்டிகளுடன் இறங்கி வருகிறார். "ஹாய், பேபி...!" என்றவர் படியேறிக் குழந்தையைத் தூக்கிக் கொள்கிறார். மேலே பொம்மை ரயில் படம் போட்ட அட்டைப் பெட்டி. மற்றது, வழுக்கி விழும் அழகிய ஃப்ராக்.

     "வாங்க... வாங்க, கங்கா ஸ்நானம் ஆச்சா?"

     "கங்கா ஸ்நானம் ஆச்சாம்மா?..."

     அவர் உள்ளே வருகிறார். அபிராமி ஃபிராக்கையும் பொம்மைப் பெட்டியையும் திறந்து பார்க்கையில், சுஜி விரைந்து உள்ளே செல்கிறாள். ஒரு தட்டில் ஜாங்கிரி, மிக்ஸ்சர், ஸ்ரீகண்ட் வைத்து எடுத்துக் கொண்டு வருகிறாள்.

     "சுஜி, இவ்வளவும் காலையில் நான் சாப்பிடணுமா?..." என்று சிரித்தவாறு தட்டை வாங்குகிறார். பிறகு உடனே குரலை இறக்கித் தீவிரமானார்.

     "...இங்கே இவ்வளவு காலையில் கங்காஸ்நானம் விசாரிக்க வரல சுஜி. உங்கப்பா... நிலைமை கிரிட்டிக்கலா இருக்கு. திடீர்னு விக்கல் கண்டு நேத்துலேந்து, சரியில்ல. உன் கஸின் எனக்கு ஃபோன் பண்ணினான். உன்னை காண்டாக்ட் பண்ண முடியலியாம். நான் போய்ப் பார்த்தேன். ஆஸ்பத்திரி, நர்ஸிங்ஹோமில அவரை அட்மிட் பண்ணலான்னா உங்கம்மா, வேணாங்கறா. அவங்களுக்கு என்ன பயம்? எதுக்கும் உன்னிடம் சொல்லிட்டுப் போகலாம், நீ தைரியம் சொல்லுவேன்னு வந்தேன். உங்கக்கா, அண்ணன் எல்லாருக்கும் தந்தி குடுத்திருக்காங்க..."



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps7a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs