http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


புதிய சிறகுகள்

8

     சுஜியின் இரண்டு தமக்கைகளும், அண்ணனும் மறுநாள் மாலையில் தான் வருகிறார்கள். பனிக்கட்டிகளை வைத்து உடலைக் கிடத்தியிருக்கிறார்கள். எறும்பு மொய்க்கிறது. வந்ததும் வராததுமாக அவர்கள் கூடிக் கூடி, அந்த வீட்டை விலையாக்குவது பற்றித்தான் பேசுகிறார்கள். அந்த வீடும் சேர்ந்தாற் போலிருந்த இன்னொரு வீடும், பிதுரார்ஜிதமாக வந்தவை. இன்னொரு வீடு சுஜியின் சிற்றப்பன் மகனுக்குப் பிரிவினையாகி, அவன் அதை இடித்து, முற்றிலும் பெரியதாக மாடி வைத்துக் கட்டிவிட்டான். அந்தப் பிரதேசத்தின் தொழில் வளர்ச்சி, பெருக்கம், பஸ் ஓடும் சாலையில் இருந்து பிரிந்து வரும் கிளைத்தெருவான இத்தெருவையும் சந்தடி மிகுந்ததாக ஆக்கிவிட்டிருக்கிறது. ஏறக்குறைய இதுவும் ஒரு கடை வீதியாகவே இருக்கிறது. சிற்றப்பன் மகன் தேங்காய் மண்டி வைத்துள்ளான். கீழ்ப்பகுதியை வாணிபத் தலமாகவும் மேலே குடியிருப்பாகவும் வைத்துக் கொண்டிருக்கிறான். இது தவிர, பெரிய சாலையில் 'ஹார்ட்வேர்' என்று சொல்லக் கூடிய அனைத்து சாதனங்களும் விற்பனை செய்யும் கடையும் வைத்திருக்கிறான்.

     இப்போது அவனுக்கு இந்த வீட்டின் மீது ஒரு கண். ஒரு லட்சம் கொடுத்து வாங்கிக் கொண்டால், இடித்துப் புதுமாதிரியாகக் கட்டி வாடகைக்கு விடலாம் என்று எண்ணம். எனவே அவர்கள் எல்லோரிடமும் வீட்டை விற்பதனால் பெரும் லாபம் என்பதைச் சொல்லி முன்பிருந்தே ஆசைகாட்டுபவன் அவன். வீடு விற்கலாம் என்பது முன்பே முடிவாகியிருந்தால் சுஜாவின் திருமணம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கும். ஆனால், வீட்டை விற்று விட்டால், தன் பெற்றோரின் நிலை என்னவாகும் என்பதை சுஜா இளம் வயதிலேயே உணர்ந்திருந்தாள். எதிர்த்துப் பேசத் தெரியாத தாய், மூத்தாள் மக்களின் சுயநலங்களுக்கு விட்டுக் கொடுத்திருப்பாள். தந்தையின் மீது அரணாகச் சாய்ந்து கொண்டு, "எனக்குக் கல்யாணம் அப்படி வேண்டாம்" என்று ஒரே பிடியாக நின்றவள் அவள். பிறகு வீட்டை விற்காமலே திருமணம் நடந்தேறியது.

     திருமணத்துக்கு இரண்டு தமக்கைகளும் தான் வந்திருந்தார்கள். அண்ணன் அப்போது வெளி நாட்டில் இருந்ததால் வரவில்லை. பிறிதொரு சமயம் வந்து பார்த்துவிட்டு, இவளுக்கு ஒரு ஜார்ஜெட் சேலையும், அவனுக்கு ஒரு பான்ட்பீஸும் கொடுத்து விட்டுப் போனான்.

     அந்த அண்ணன், தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வந்திருக்கிறான்.

     அபிராமி மூன்றாம் நாள் காலையில் உடலைத் தகனம் செய்ய எடுத்துச் செல்லுமுன் செல்கையில், சீனியும் உலகத்து மருமகன்களைப் போல் வேட்டியும் மல்ஜிப்பாவும் தரித்துக் கொண்டு தாயுடன் வருகிறான். அங்கே, சுஜா, தன் சகோதர சகோதரிகளைத் தவிர்த்துக் குழந்தையுடன் தனியே நிற்கையில், இவன் அவர்களிடம் மிகவும் நெருக்கமாக, மரியாதையாகப் பல நாட்கள் பழகிய மாதிரி பேசுகிறான்.

     "அபிராமி அம்மா, இப்படி விட்டுட்டுப் போயிட்டாரே? முதல்ல என்னைக் கூப்பிட்டுட்டுப் போயிருக்கக் கூடாதா யமன்!" என்று ஆத்மார்த்தமான சோகத்தை விண்டு அரற்றுகிறாள் தாய் மங்களம்.

     "துக்கந்தா. ஒரு பொம்பிளக்கு எந்தத் துக்கத்தையும் விடத் தாலித்துக்கம் பெரிசு. பாவம், பத்து வருஷம் அவுரு நடமாட்டம் ஓய்ந்த பிறகு, அப்படிக் கட்டிக் காத்தாங்க. கடிகாரம் தப்பும். இவங்க அவருக்கு அந்தந்த நேரத்துக்குச் செய்யிற தொண்ணும் தப்பாது..." என்று பங்காளி, தாயாதி வகைப் பெண்ணொருத்தி உரைக்கிறாள்.

     "புருசன்னு ஒருத்தன் எப்படி இருந்தாலும் இருக்கிறாங்கறது தானம்மா ஒரு பொம்பிளக்கி தயிரியம். அதும் இவுங்களுக்குன்னு ஆம்புளப்புள்ளயும் இல்ல. ஆயிரம்னாலும் அவங்கவுங்களுக்கு வேணுமில்ல?" என்று இன்னொருத்தி கூறுகிறாள்.

     அபிராமி உலகபரமான பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு, அதே மாதிரியில் துக்கம் விசாரிக்கத் தெரியாத ஜடமாக உட்கார்ந்திருக்கிறாள்.

     ஆனால் 'புருஷ'ப் பெருமைகள் அவள் உள்ளச் சுவர்களில் வந்து மோதி எதிரொலி எழுப்பாமல் இல்லை.

     அவள் உலகத்தார் போல் புருஷனுடன் வாழ்ந்திருந்தால் சீனி இப்படி உருவாகி இருக்க மாட்டானோ? அம்மா... மூடப்பாசம் வைப்பாள்; அப்பன் கண்டிப்பான். அதனால் தான் கைம்பெண் வளர்த்த பிள்ளை என்பது கேவலமாகச் சுட்டப்படுகிறதோ? அவன் சிகரெட் குடிக்கிறான் என்பது தெரிந்தவுடன் அதை மூடி மறைப்பதில் தான் சிரத்தை எடுத்துக் கொண்டாள். அவளுடைய உள்ளார்ந்த பலவீனம், மகனைக் கண்டித்து, அவனுக்குப் பணம் கொடுக்கும் செயலில் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தால், இவ்வளவுக்கு வருமா? அவன் எந்தக் கல்லூரியில் சேர வேண்டும், என்ன படிப்புப் படிக்க வேண்டும் என்று சிரத்தையை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை? முட்டாளான பாமரத் தாய்க்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்?

     உடலை எடுத்துச் சென்றதும் கிணற்றடியில் நீராடுகிறார்கள்.

     திரும்பும் போது அபிராமி சுஜியிடம் தயங்கி நிற்கிறாள்.

     "நான் அங்கே வரப்போகிறதில்லை, இப்ப. நீங்க போகலாம்..." அவள் சீனியை அருகில் நெருங்கவோ பேசவோ வெளிப்படையாக விடாமல் வெறுப்பைக் காட்டிக் கொள்கிறாள்.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps8.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs