http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



புதிய சிறகுகள்

8

... தொடர்ச்சி ...

     அவள் மரணச் சடங்குகள் முடிந்து, மங்கள நாள் நிறைவேறிய பின்னரும் வரவில்லை. சீனி வீட்டில் மிக நல்ல பிள்ளையாக இருக்கிறான். காலையில் 'அம்மா' என்று கூப்பிட்டுக் கொண்டு எழுந்து அவள் இட்ட உணவை உட்கொண்டு அலுவலகம் செல்கிறான். மாலையில் ஆறு, அல்லது ஏழு மணிக்குத் திரும்பி வருகிறான். தொலைக்காட்சி சிறிது நேரம் பார்க்கிறான்; அல்லது தணிகாசலத்துடன் அரட்டை பேசுகிறான். படுக்கிறான்.

     ஞாயிற்றுக்கிழமையில் எங்கோ வெளியில் சென்றான். அவள் கேட்கவில்லை. பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. குடிக்காமலிருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அன்றிரவு அவன் வீடு வரும் போது ஒன்பதரை மணி. வாயிலில் வரும் போதே வாடை வீசுகிறது.

     முகம் சுளித்துக் கொண்டு உள்ளே வருகிறாள். அவன் சட்டையைக் கழற்றிவிட்டு, லுங்கி அணிந்து கொண்டு, தட்டைப் போட்டுக் கொள்கிறான்.

     தேங்காய்த் துவையல் அவனுக்குப் பிடிக்கும் என்று காரசாரமாக அரைத்து வைத்திருக்கிறாள்.

     "ஏண்டா, இப்படிக் குடிச்சுப் பாழாப் போற? இத்தனை நாள் இல்லன்னு நினைச்சேனே?..."

     அவன் பேசவில்லை. துவையல் சோற்றைப் பிடித்துப் போட்டுக் கொண்டு தண்ணீரைக் குடிக்கிறான்.

     "நீ அங்க போனியாடா?"

     அவன் கண்களில் நீர் வருகிறது.

     "அம்மா, அவ என்னை எல்லாரையும் வச்சிட்டு அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசினா... புருஷங்கறவன், உன்னை விட்டுட்டு, வேற ஒருத்தியக் கல்யாணம் பண்ணிட்டே வாழ்ந்தான். உன் பிள்ளைக்கு ஒரு பைசா குடுக்கல. நீ கோர்ட்டுக்குப் போனியா, இல்ல. அவன் செத்த பிறகு தாலியைக் கழட்டின. குங்குமத்தை அழிச்சே. இப்பவும் அவன் இவன்னு சொல்றதில்ல. ஆனா இவ, உன் கண் முன்ன தாலியக் கழட்டிப் போட்டுட்டா. எல்லாத்துக்கும் மேல, என்ன... எல்லார் முன்னிலயிலும் அவமானம் செய்யறாப்பல, மூஞ்சியத் திருப்பிட்டுப் போனா..."

     கண்ணீர் விட்டு அழும் போது, அபிராமிக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவனிடம் நியாயம் கிடையாது என்ற உணர்வு கூர்மை மழுங்கவில்லை. "தான் சம்பாதிக்கிற தைரியத்தில அவள் யாரையும் மதிக்கிறதில்ல. உன்னை நிச்சயமா மதிக்கிறதில்ல. அம்மா, அம்மான்னு ஒரு பாசாங்கு. குழந்தையை உன்னிடம் அவள் விடுவதில்லை. யாரையும் மதிக்கிறதில்ல. என்னைத் திட்டமிட்டு அவமானம் பண்றா. 'நீ என்னத்துக்கு இங்க சும்மா வர? நா உங்கூட வரப்போறதில்ல. பேசவும் ஒண்ணில்லன்னு' அவ அக்கா புருஷன் குழந்தைகள் எல்லாரையும் வச்சிட்டுச் சொன்னாம்மா...! எனக்குத் தற்கொலை செஞ்சுக்கலாம்னு கூடத் தோணிப்போச்சி..." பிழியப் ப்ழிய அழுகிறான், தட்டில் சோற்றை வைத்துக் கொண்டு.

     'கைம்பெண் வளர்த்த பிள்ளை...' என்று அவள் மனத்தட்டில் சுறுக்சுறுக்கென்று ஊசி குத்துகிறது.

     "எனக்கு நினைவு தெரிஞ்சு, முதமுதலா, இப்படி கட்டின பெண்டாட்டிதா அவமானம் செய்ய, துச்சமாப் பேசறா. படிக்கிறபோதும் சரி, அப்புறமும், இப்பவும் தா, 'சீனி'ன்னா லீடர்போல. இன்னிக்கும் எங்க சேர்மன் வந்தாக் கூட, என்னை மரியாதைக் குறைவா ஒரு பேச்சுச் சொன்னதில்ல. அதனாலதா நான் குடிக்கிறேன். நான் ஒப்புத்துக்கறேன். ஏம்மா, இந்த உலகத்தில தப்பு செய்யாதவன் யார் இருக்கிறான்?...இவ இப்படிப் பார்த்தால், நான் எத்தனை தப்பு இவ நடத்தையில் கண்டு பிடிக்கலாம்? இவள் இருபத்தெட்டு வயசு வரை, எப்படியெல்லாம் இருந்திருப்பான்னு துருவமாட்டேனா? டாக்டர் பிரேம் குமாருடன் இன்றைக்கும் பகிரங்கமாக நடக்கிறாள். ஒரு கன்ஸல்டிங்னா, எழுபது எண்பது வாங்கக் கூடிய பெரிய ந்யூரோ ஸ்பெஷலிஸ்ட் அதுவும் குழந்தை டாக்டர். இவ குழந்தையை வந்து வந்து பார்க்க என்ன அக்கறை? அவன் இவ குழந்தைக்கு பிரஸன்ட் தரான்! இவளுக்கு பிரஸன்ட் தரான். அவன் ஏன் கல்யாணம் பண்ணிக்கல?... எனக்குத் தெரியாதா, கல்யாணம் பண்ணிக்கட்டும், பண்ணிக்காமலும் ஆபீசில வேலை செய்யிற பத்தினிகளைப் பத்தி? உன் காலமா இப்ப...?"

     அபிராமிக்கு உண்மை யில்லாமலில்லை என்று உள்ளம் ஒத்துப் பாடுகிறது.

     "வீட்டை விற்கக் கூடாதென்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறாள். பெரியவர் பிதுரார்ஜித சொத்தாகையால், எதுவும் எழுதி வைத்திருக்கவில்லை. லட்சத்துக்கு மேல் கிரயம் வரும், அதை அவள் பேரில் வங்கியில் போட்டு விட்டு, அவளைக் கூட்டிப் போகிறோம் என்று அந்தப் பிள்ளையும் பெண்ணும் சொன்னார்கள். இவள் அதற்கும் விடவில்லை. இவள் அம்மாவைக் காவலாக வச்சிக்கிட்டு, அங்கே தனிக்குடித்தனம் நடத்துவாளாம். அவன் இவன் எல்லாரும் ஃப்ரீயாக வரலாம் இதுதான் பிளான். இதை நான் அனுமதிக்கப் போவதில்லை. அவளை இங்கே கூட்டி வர வேணும்..."

     அபிராமியினால் இந்தக் குற்றச் சாட்டைச் சீரணிக்க முடியவில்லை.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps8a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs