http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


புதிய சிறகுகள்

9

     "ஆண்! ஆண் குழந்தை! பிள்ளையாப் பிறந்திருக்குடீ..."

     அபிராமிக்குப் பிரசவ அறையில் கேட்ட தாயின் ஆர்ப்பரிப்பு, நேற்றுக் கேட்டார் போல் பசுமையாக ஒலிக்கிறது. அவளுடைய சிறுமை வாழ்வில், இருட்டாகப் படுதா விழுந்து விட்ட மணவாழ்வின் பின்னணியில் ஒரு நட்சத்திரமாக மின்னியது அந்தச் சொல். "அடீ, செக்கச் சிவக்க, சுருட்டை முடி வழிய... கண்பட்டுடும்..." இது ஒரு கிழத்தின் குரல்.

     கறுப்பு அபிராமிக்கு, எந்த வகையிலும் உயர்வு இல்லாத அபிராமிக்கு, அப்படி ஒரு மாப்பிள்ளை வாய்த்தான். திருஷ்டி பட்டுவிட்டது!

     அது போல் இந்தப் பிள்ளை... இவளுக்கு ஒட்டுமோ என்று அப்போது யாரும் பிரலாபிக்கவில்லை. முழுக்க முழுக்க இவளுக்குப் பெருமை சேர்க்க, தாயின் குடல் விளக்கம் செய்து கொண்டு வந்த தெய்வப் பிள்ளை போல் புகழேற்றான்.

     அப்போது அவள் வாழ்வின் உச்ச நிலையாகிய தாய்மைப் பேற்றின் சுவர்க்கத்தில், வேறு எந்தக் குறையும் தெரியாதவளாக அவளை அவன் ஏற்றி வைத்தான்.

     அந்த நிமிடத்துக்கான சுவர்க்கானுபவத்துக்குக் கைம்மாறு போல், இப்போது தண்ணீர், பத்திய உணவு, பார்லி, ஆரஞ்சு என்று எடுத்துக் கொண்டு, பஸ்ஸை விட்டிறங்கி லொங்கு லொங்கென்று நடக்கிறாள்.

     'இன்றோடு முப்பத்தெட்டு நாட்களாகி விட்டன, அவனை மருத்துவமனையில் சேர்த்து குடல் அரிப்பு, புண், நரம்புத் தளர்ச்சி எல்லாம் முத்திரண்டு வயசான அவனில் மேவியிருக்கின்றன.

     பெரிய பெரிய டாக்டர்கள், நிபுணர்கள் என்று வந்து, பணம் பறிக்கும் பல வழிகளையும் நோயாளிகளிடம் கையாளும் மருத்துவமனை அது.

     இவனுடைய கம்பெனி இந்தச் செலவுகளுக்குப் பணம் கொடுக்குமா என்று அவள் அறியாள். ஆனால் அலுவலகத்தில் வாந்தி எடுத்து விழுந்தவுடன் அலுவலகத்திலிருந்தவர்கள் சேர்த்திருக்கிறார்கள்.

     தனி அறை இல்லை என்று அவன் குறைப்படுகிறான். இது பெரிய அறைக்குள் அட்டைத் தடுப்புப் போட்டு, கட்டில் கொள்ள இடம் விட்ட புறாக் கூண்டு என்றால் தப்பில்லை. இதற்கே ஒரு நளைக்கு ஐம்பது ரூபாய் வாடகை.

     ஆயா, வார்ட் பாய், நர்ஸ், மருந்து என்று அவ்வப் போது நூறு நூறாகச் செலவாகிறது. அபிராமி அந்தச் சங்கிலியைச் சுந்தராம்மாளிடம் கிரயம் போட்டுக் கொடுத்துப் பெற்ற பணம் துப்புரவாகத் தீர்ந்துவிட்டது.

     இன்னும் டாக்டர் பில். மருத்துவமனைக்கு அவ்வப்போது ஆயிரம் ஆயிரம் முன்பணம் கட்டியது போக வரவிருக்கும் பில் எவ்வளவோ?

     பையனின் நோய்க் கவலையை விட, தங்கள் சக்திக்கு எட்டாத வைத்தியம், எத்தகைய பணச்செலவில் கொண்டு விடுமோ என்ற கவலை பெரிதாக இருக்கிறது.

     அவன் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு இரண்டு வாரங்கள் பொறுத்து, சுஜிக்கு அவள் நேராகச் சென்றே விவரம் தெரிவித்தாள்.

     நோயைப் பற்றிய விவரத்தை விரித்துச் சொல்லவில்லை.

     அமிதமான குடியினால் ஏற்பட்ட கோளாறு என்பதுதான் வெளிச்சமாயிற்றே?

     "ஆயிரம் ஆயிரமாச் செலவழியிது. அவன் கம்பெனியில குடுப்பாங்களோ, மாட்டாங்களோ தெரியல..."

     சுஜா எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

     "மாட்டாங்க..." என்றாள் வெடுக்கென்று.

     "அவங்கதானே அங்க கொண்டு போய் சேர்த்தது?"

     "அது பக்கத்தில எவனானும் அவசரத்துக்குச் சேர்த்திருப்பான். இவரு வெறும் ஸேல்ஸ் ஆளு. அதுவும் வருஷம் வருஷம் கான்ட்ராக்ட். கமிஷன் சம்பளம்னு தரான். இன்னும் பர்மனன்டாக் கூட ஆக்கல. இந்தப் பணம் புடுங்கி நர்ஸிங் ஹோம் செலவு அவங்க ஏத்துப்பாங்களா?"

     "பத்தாயிரம் இழுத்திடும் போல இருக்கும்மா!" என்றாள் அபிராமி கலவரத்துடன்.

     "நான் சொல்றதக் கேளுங்க. அந்த நர்ஸிங்ஹோமிலேந்து பேசாம கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு மாத்துங்க. இவங்க இல்லாத பொல்லாத டெஸ்ட்னும், ட்ரீட்மென்ட்டுன்னும் உரிச்சு எடுத்திடுவாங்க... நா வேணா, பிரேமைப் பார்த்து, ஹெல்ப் பண்ணச் சொல்றேன். கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில் யார் டாக்டரோ ஸ்பெஷலிஸ்டோ, கவனிக்கச் சொல்வாரு..."



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps9.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs