http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



புதிய சிறகுகள்

9

... தொடர்ச்சி ...

     "லிவர் கெட்டிருக்காம்..."

     "கெடாம என்ன செய்யும்...?" என்று முணு முணுத்துக் கொண்டு போனாள் அவள்.

     அபிராமி திகைத்தாள்.

     மகனைச் சுற்றி, மாலையில் யாரெல்லாமோ சிநேகிதர்கள் அலுவலகத்து 'ரிசப்ஷனிஸ்ட்' என்று ஒரு பெண் சுவாதீனமாகப் படுக்கையில் வந்து உட்கார்ந்து தொட்டுத் தொட்டுப் பேசுகிறாள்.

     சிரிப்பு, பேச்சு... இரவு ஒன்பது மணி வரையிலும்.

     பத்தியச் சாப்பாட்டைக் கண்டால் வெறுக்கிறான்.

     "என்னம்மா இது? வறுகலா, முறுகலா எதானும் கொண்டு வாயேன். அந்த டாக்டர் தான் சொல்றான்னா நீ வேற அறுக்கறே?"

     "டேய், பத்தாயிரம் செலவழிஞ்சாச்சு. உன் ஆபீசில குடுப்பாங்களா என்னன்னு தெரியல... உனக்கு எதானும் கவலை இருக்கா? டாக்டரானால், முழு நீளம் மருந்து மாத்திரைன்னு எழுதறார். நீயானால் வறுகல் முறுகல்ங்கற... உடம்பு எழுந்திருக்க முடியாம தள்ளாடுறது..."

     "நீ என்னம்மா, பணம் பணம்னு? இதிலியே பாதி என் உயிரை எடுத்துடறே. கொஞ்ச நேரம் சிரிச்சுக் கவலையில்லாம பேசறதில்ல, நீ வரவேணாம் போம்மா!"

     டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொன்ன பொருளை வாங்கிச் சாப்பிட்டு விடுவானோ என்பதற்காக அபிராமி கண்ணுங்கருத்துமாக அவன் வெடுவெடுப்பை மீறித் தவம் கிடக்கிறாள்.

     புழுங்கலரிசிக் கஞ்சி, இட்டிலி, காய்கள் வேகவைத்து தயாரித்த ரசம், என்று அவன் எளிதில் சீரணித்து, உடல் தேறி வருவதற்காக குருதி கசியும் முள்ளில் பயணம் செய்வது போல் நாட்களை நகர்த்துகிறாள்.

     இடையில் சுஜா ஒரு நாள் எதிர்வீட்டுத் தொலைபேசியில் அவளுடன் பேசுகிறாள்.

     "ஜி.எச்சுக்குப் போகவில்லையா? ஏன்...?"

     இவளால் பதில் சொல்ல முடியவில்லை. அதை யாரிடம் சொல்வது, எப்படிச் சேர்ப்பது! தனபாக்கியத்திடம் சாடையாகத் தெரிவித்த போது, "ஜி.எச்சில் பார்ப்பாங்களா? அநாத மாதிரி இழுத்துப் போடுவான். பச்சத் தண்ணி கூடக் குடுக்க மாட்டான். உங்களுக்கு ஒரு புள்ள, என்னம்மா செலவு? பணம் இன்னி வரும், நாளைப் போகும்" என்று சொன்னாள். இதையெல்லாம் எப்படி அவளிடம் தெரிவிக்க?

     அவளுக்கும் கெடுபிடியாம். அவர்கள் வீடு பத்திரம் எழுதி கிரயம் ஆகிவிட்டதாம். அங்கேயே ஹவுஸிங் போர்ட் வீடொன்று வாடகைக்கு எடுத்து முதல் தேதி அம்மாவுடன் போகிறாளாம்... செய்தி சொல்லத்தான் அந்தப் பேச்சு. அவள் வந்து இந்த வீட்டில் இருக்கப் போவதில்லை.

     வீடு விற்ற பணத்தில் ஒரு பங்கு கையில் வந்திருக்கும். புருஷனின் மருத்துவச் செலவுக்கு...

     கல்லானாலும் கணவன் மரபில் மலர்ந்த அவளுக்கு, மனசின் ஊடே இத்தகைய வரிகள் மின்னுகின்றன.

     பட்டென்று அவளே வெட்டிக் கொள்கிறாள்.

     "அம்மா, டாக்டர் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாம்னு சொல்லிட்டார்..."

     "அப்பாடா..."

     ஆனால் இன்னும் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?

     வீட்டுக்கு வந்த பின் மருந்து ஊட்டத்துக்கான சத்துகள்...

     இன்னமும் நாலாயிரத்துச் சொச்சம் பில் கொடுக்கிறார்கள்...

     அபிராமி அலையக்குலைய வீடு வருகிறாள்.

     தணிகாசலம் வெளியே 'வாக்கிங்' கிளம்பிக் கொண்டிருக்கிறார்.

     "வாங்க டீச்சர், சீனி எப்படி இருக்கிறான்? வீட்டுக்கு எப்ப அனுப்புறாங்க?"

     "அதான்... உள்ள வாங்க சொல்றேன்... வீட்டுக்கு அழைச்சிட்டுப் போன்னு சொல்லிட்டாங்க..."

     உள்ளே வந்து அவர் உட்காருகிறார். தனபாக்கியம் அருகில் நிற்கிறாள்.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/ps9a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs