http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


புதிய சிறகுகள்

முன்னுரை

... தொடர்ச்சி ...

     அறம் சார்ந்த நெறிகள் அவனால் மதிக்கப் பெறுவதில்லை. சொல்லப் போனால், அவற்றைக் காலின் கீழ் தள்ளி மிதிக்கக் கூட அவன் கூசுவதில்லை. தகப்பன் - மகன் உறவு, தாய் மகன் உறவு போல் குருட்டுத்தனமாக அமைவதில்லை. இதனாலேயே, மகனின் கட்டுப்பாடற்ற போக்குக்கு, தாய்-தகப்பன் இருவர் கண்காணிப்பில் இருக்கும் போது, ஒரு அழுத்தம் தடையாக உதவுகிறது. தகப்பன் மகனை விமரிசனக் கண்கொண்டு பார்க்கிறான். கண்டிப்பு, கடுமை என்றால் அப்பாவிடம் தான் முத்திரை பெற்றதாக மகன் நினைக்கிறான்.

     முறைகேடாக மகன் செல்கையில் தகப்பன் கடுமை காட்டும் போது, தாய் பாசச் சிறகால் அவனை அணைக்கிறாள். தாயின் சலுகை இருக்கும் வரையிலும் எப்படியும் நடக்கலாம் என்று தவறான வழிகளில் செல்லும் மகன் துணிவு பெறுகிறான். இந்தத் துர்ப்பாக்கியம், ஒரு பெண் எப்போதும் ஆணைச் சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற குறியுடன் பரம்பரை பரம்பரையாகப் பெண் பதப்படுத்தப்பட்டு வந்திருப்பதாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெண்ணின் மூடப்பாசத்துக்கு அறிவார்ந்த ரீதியில் விளக்கம் தேடக் கூட யாரும் முனைவதில்லை. மாறாக, அது நியாயப்படுத்தப்பட்டு, சமூக ஒப்புதலுக்கும் தடம் வகுக்கப்பட்டிருக்கிறது.

     கணவனில்லாமல் ஒரு தாய் வளர்க்கும் மகன், நல்ல பிரஜையாக, வளரமாட்டான் என்பதும், உலக முழுவதும் வழக்கில் இருந்து வரும் ஒரு கருத்தாகவும் இருக்கிறது. ஓர் ஆணை ஏசிப் பேசுவதற்கும் கூட இத்தகைய தொடரைப் பயன்படுத்துகிறார்கள்... இந்தக் கருத்தில் சமூகப் பிரஜையாக, கௌரவப்பட்டவனாக ஒருவன் உருப்பெறாத வருத்தத்தை விட, இந்தத் தாயே குற்றவாளியாகக் குறிக்கப்படுவது முதன்மை பெறுகிறது.

     அபரிமிதமான சலுகைகளைப் பெற்ற பின் பிள்ளைகள், தாயை மதிப்பதில்லை என்பது மட்டும் இல்லை; அவர்கள் தங்கள் கட்டுப்பாடற்ற ஒழுங்கீனங்களுக்குத் தாயைக் கருவியாக்குகின்றனர்.

     ஓர் ஆணைச் சார்ந்து பற்றிக் கொள்ளும் இந்த மனப்பாங்கு, பெண்களிடையே எஞ்ஞான்றும் ஒற்றுமையே வர இயலாத வகையில் அவர்களைப் பிளவுபடுத்துகிறது. கணவனின் குற்றம், முதியவளான தாயின் நிலை இரண்டையும் படித்த மருமகளும் சீர் தூக்கிப் பார்க்க மாட்டாள். எது எப்படியானாலும் முதிய மாமியார், தனக்கு எதிரி என்ற கண்ணோடு, கணவனின் பக்கம் சேருவதோ, அல்லது, தாய் மருமகளை எதிரியாகக் கருதி மகன் பக்கம் நின்று கொள்வதோ மிகச் சாதாரணமாகக் குடும்பங்களில் நிகழும் பிளவுக்குக் காரணிகளாக அமைகின்றன.

     ஆணாதிக்கம் நிலைத்து வலுப்பெற, இந்தப் பிளவு ஒரு வலுவான சாதனமாகவும் இருக்கிறது.

     இந்தச் சார்பு நிலை உறவின் அடித்தளமில்லாமல், ஒரு பெண் இன்னொரு ஆணுடன், நட்புறவு கொண்டு பழகலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவள் தாயாக, மனைவியாக, சகோதரியாக இருக்கலாமே ஒழிய, ஓர் ஆணுக்கு இருக்கும் தனித்தன்மையுடன் கூடிய சமூக மதிப்பு அவளுக்கு இல்லை.

     இத்தகைய தனி மதிப்பைப் பெற்று, குடும்ப உறவுகளில் சமமான பொறுப்பும், உரிமையும், பங்கும் உடையவர்களாய்ப் பெண்கள் ஏற்றம் காணும்போதுதான், அவர்கள் பெற்ற கல்வி, பொருளாதார சுதந்திரம் ஆகிய சலுகைகள், உண்மையிலேயே பயனுடைய உரிமைகளாக அவர்கள் சமுதாய மதிப்பை உயர்த்த முடியும்.

     இந்நாள், மலிந்துள்ள பல்வேறு சமுதாயம் சார்ந்த பிரச்னைகள், குறிப்பாகப் பெண்ணைத் தொடர்பாக்கியே உருவாகின்றன. பெண் விடுதலை அல்லது பெண் உரிமை சமுதாயத்தில் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அது மொத்த சமுதாய அமைப்பிலும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. குடும்ப அமைப்புக்களை உடைத்து, தனித்தனி நபர்களாக ஒரு கட்டுக்கோப்பான சமத்துவ சமுதாயம் அமைக்க முடியும் என்பதும் சரியில்லாத, நடைமுறைக்கு வர இயலாத கருத்து.

     இன்றையக் குடும்பங்களில் சக்திகள் ஆணிடமே குவிக்கப்பட்டு, அவனை ஆதிக்கம் மிகுந்தவனாக நெறிப்படுத்தியிருக்கிறது. பெண் கல்வியில்லாத அடிமை உழைப்பாளியாக அடுக்களையோடு இருந்த நாட்களை விட, இந்நாள் மறுமலர்ச்சி பெற்ற தன் ஆற்றல் திறமையனைத்தையும் ஓர் ஆணுக்கு உரிமையாக்கி, அவன் சக்தியைப் பெருக்கியிருக்கிறாள். இதன் காரணமாக இரட்டைச் சுமை சுமக்கிறாள். குவிந்து கிடக்கும், குவிக்கப் பெற்றிருக்கும் சக்திகளை, சமமாக்குவதுதான் இதற்கு மாற்றாக இருக்க முடியும். ஆண்-பெண் உறவுகளில் ஆதிக்கமற்ற, ஒருவரை மற்றவர் மதித்து அன்பு செலுத்தும் பாங்கு அப்போதுதான் காணமுடியும்.

     ஆணும் பெண்ணும், குடும்பமாகிய அமைப்பில், சமமாக உழைத்து, சமமான உரிமை பாராட்டி, நடக்கும் போது, ஆதிக்கக் கோட்டைகள் தகர்க்கப்படும். இந்த மாற்றம், பெண்ணின் சார்பு நிலையை ஒழிப்பதனால் தான் சாத்தியமாகும். குடும்ப உற்பத்தி-பொருளாதாரம் சார்ந்தும், உழைப்பைச் சார்ந்தும், சக்தியாக ஆணிடம் குவிக்கப் பெறுவதைப் பெண், இன்னும் குருட்டுத்தனமாகப் பற்றியிராமல், தன்னுணர்வும், நம்பிக்கையும் பெறவேண்டும்.



புதிய சிறகுகள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/pudhiyasiragukal/psa.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs