http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



வேருக்கு நீர்

19

     பொழுது புலரும் நேரத்தில் அவளுடைய உள்ளத்தில் அந்த எண்ணம் உறுதியாகிறது. அன்று மாதாஜியின் இல்லத்துக்குச் செல்ல வேண்டும். துரையிடம் சொல்ல வேண்டுமா, வேண்டாமா? லட்சியங்களோடு முரண்பட்ட வாழ்க்கையின் முட்போர்வையிலே அவள் உறக்கம் கொள்ளாமலிருந்தாளே ஒழிய, அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான். ஆழ்ந்த உறக்கம். புதிய வாழ்க்கையின் வண்ண கோலாகலங்கள் அவனைத் தழுவிக் கொள்கையில், அவள் லட்சியங்கள் என்று நம்பியிருந்த தோற்றங்களெல்லாம் கலங்கிய நீரில் கரையும் நிழல்களாய் மறைந்து போய் விட்டன. அந்தச் சிதைவுகளுக்காக அவன் துயரப்படவில்லை!

     அவள் இன்னும் அவன் கையைக் கோத்துக் கொண்டு ஒரே திசையை நோக்கி நிற்பதில் பயனில்லை. சோதனைக் களமாகத்தான் வேண்டும். வாழ்க்கைப் போர்வையை உதறிக் கொண்டு எழுந்திருக்கிறாள் யமுனா.

     அதுல் முதல் நாளே பால் குப்பிகளைக் கொண்டு போயிருக்கிறான். என்றாலும் அதிகாலையில் தானே வெளியேறி நடக்கிறாள். கையில் வேறொரு பால் செம்புடன், பனிப்படலத்தில், வெதுவெதுப்புச் சுகங்களில் ஒரு சாரார் சுவர்க்காநுபவத்தில் மூழ்கிக் கிடக்க, வயிற்றுப்பாட்டுக்கு அல்லலுறும் எளியவர்கள் எழுந்து பொழுதைத் துவங்கும் காட்சிகள் வரிசையின் வீடுகளுக்கப்பால் கங்கையின் செழிப்பைப் புகழ்ந்துரைக்கும் மாந்தோப்புக்கள் விரிந்திருக்கின்றன. அவை கிராமங்களில் காலூன்றிப் பிழைக்க வழியின்றி நகரத்து மக்களிடம் அண்டி வயிறு பிழைக்க வந்த எளியவருக்கெல்லாம் ஆயிரங்கால் மாளிகையைப் போல் நிழலளிக்கின்றன. அந்த நிழலிலேயே முட்டு முட்டாய் மழைக்கொதுங்கக் குடிசைகள் போட்டுக் கொண்டிருக்கின்றனர். மூலைத் தேநீர்க் கடைக்காரன் போர்த்து முடங்கிக் கொண்டு, அடுப்பில் கல்கரியை நிரப்பிக் கொண்டிருக்கிறான். முதல் தெருவில் கம்பீரமான முகப்புக்களுடன் நிமிர்ந்தெழும்பி இருக்கும் பல அழகிய வீடுகள்; வாயிலில் காணும் அலுவலகப் பலகைகளும் ஜீப் வண்டிகளும் அந்த வீடுகளில் விளக்கேற்றி வாழும் குடும்பங்களில்லை என்று அறிவிக்கின்றன.

     'கங்கைப் பாலப் பிரிவின் அலுவலகம்' என்று அறிவிக்கும் ஒரு பெரிய மாளிகையின் முன், விளக்குக் கம்பத்தில் பகாதூர் பசுவைக் கட்டி இருக்கிறான்.

     பகாதூரின் குடும்பமும் மாந்தோப்பில் தான் வசிக்கிறது, என்றாலும் பகாதூர் நகரச் சந்தைகளில் பிழைக்கக்கூடிய கபடமும் தந்திரமும் கைகூடியவன். அவனுடைய மூன்று மனைவியரும் குடிசைப்பக்கம் எப்போதுமே கலகலப்பாக வைக்கும் குரல்வளம் உடையவர்கள். மாளிகையை அடுத்து சேற்றுக் குட்டையாக இருக்கும் கொசுப்பண்ணைகளெல்லாம் மழைக்காலத்தில் நீர் வழியும் குளங்களாகி விடும். இப்போது சுற்றுவட்டம் பங்களாக்களின் கழிவுகளெல்லாம் நாணமற்ற இரகசியங்களை எல்லாம் அம்பலமாக்கிக் கொண்டு அங்கே சங்கமமாகின்றன. பகாதூரின் மனைவியர் அந்தக் கரைகளில் எரிமுட்டைகள் காயவைத்திருக்கின்றனர். பகாதூர் பசுவின்மேல் ஒரு சாக்கைப் போட்டுவிட்டு மடியைக் கழுவிக் கொண்டிருக்கிறான்.

     பின்பங்களாவில் சமையல் வேலை செய்யும் வங்காளிக் கிழவி லோட்டாவுடன் குந்தி உட்கார்ந்திருக்கிறாள்.

     அதுல் பால்குப்பியுடன் குளிரில் விரைத்துக் கொண்டு வருகிறான். யமுனாவைக் கண்டதும் ஓட்டமாக வருகிறான்.

     "மாஜி? நீங்க வீட்டுக்குப் போங்க மாஜி. சாப் ஸ்டீமருக்குப் போகிறாரா மாஜி?..."

     "இல்லை, அதுல். என்னிடம் பாட்டிலைக் கொடுத்துவிட்டு நீ போ; ஆமாம், நான் வரக்கூடாதா?... நீ வீட்டுக்குப் போ!"

     அதுலுக்கு முகம் தொங்கிப் போகிறது. ஏதேனும் ஒரு வேலையைச் செய்துவிட்டுத்தான் இவர்களிடம் பயன் பெற வேண்டும் என்று இயல்பாகவே நினைக்கும் சிறுவன்! அவனைச் சமாதானப்படுத்துவதுபோல் புன்னகை செய்கிறாள்.

     பாலை வாங்கிக் கொண்டு இருவருமாக நடந்து வருகின்றனர்.

     "மாஜி! அங்கே ஒரு குளத்தில் அழகான தாமரைப் பூக்கள் இருக்கு மாஜி! உங்களுக்கு கொண்டு வரட்டுமா?"

     "இப்போதா?"

     "ஆமாம்; ஒரு நொடியில் கொண்டு வரேன்."

     "அந்தக் குளத்தை நானும் பார்க்க வருவேன்!"



வேருக்கு நீர் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10
11  12  13  14   15  16  17  18  19  20  21  22  23  24   25



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/verukkuneer/verukkuneer19.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs