http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



வேருக்கு நீர்

25

     பட்டை உரிக்கும் வெய்யில் புழுக்கி எடுக்கும் வெய்யிலாக மாறுகிறது. கங்கையம்மை அப்படியே வற்றி மெலிந்தால் எப்படி? வானவன் கண்ணாமூச்சியாடிக் களிக்கிறான். புழுக்கம் தாளாமல் வெட்ட வெளியை நாடி ஏழை மக்கள் உறங்கக் கண்ணயரும் நேரம் பார்த்து மேகங்களைப் பொழியச் செய்து சீரழிக்கிறான்.

     குடிசைக்குள் முடங்கலாமென்றாலோ, மாதக் கணக்காய் பகலெல்லாம் கொண்ட சூட்டுக்கு இது போதுமோ என்று பூமித்தாய் வெய்துயிர்க்கும் ஆவிப் புழுக்கம்.

     கதவுகளை அடைத்துக் கொண்டு கம்மென்று உட்கார இயலவில்லை. கதவுகளைத் திறந்தால் வெய்யோனின் கொடுங்கிரணங்கள். இந்த வெம்மையும் புழுக்கமுந்தான் இப்படி உடல் நிலையில் மாறுபட்ட சுகக்குறைவைத் தோற்றுவிக்கிறதோ? யமுனா, இப்படித் தன்னுணர்வே பாரமாகும் ஒரு சுகக் குறைவை அநுபவித்ததில்லை. எத்தனை மனக்கிலேசம் இருந்த போதிலும் சிட்டுக்குருவி போல் இயங்க உடல்நலம் இருந்திருக்கிறது.

     இப்போது காலையில் எழுந்திருக்கும் போதே ஓர் அயர்வு. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் வரவில்லை. உணவு செல்லவில்லை. உள்ளத்தின் உள்ளே இனம் புரியாத கிளர்ச்சியின் சுவடு தெரிகிறது. எனினும், காலையில் எழுந்து பம்பரம் போல் இயங்குகிறாள். உணவு தயாரித்துக் கொண்டு வெய்யில் உறைக்குமுன் ரிக்ஷாவைப் பிடித்து மருத்துவமனைக்கு விரைகிறாள்.

     மேலே பெரிய விசிறி சுழன்றாலும் மூச்சிரைக்கும் அயர்வுக்கு ஆறுதலாக இல்லை.

     துரை ஒருக்களித்துப் படுத்திருக்கிறான். போர்வையில் படிந்த அவனுடைய வடிவம் இடுப்புக்குக் கீழாகச் சீராக வந்து முடியும் இடத்தில் வலப்பக்கப் பாதம் குறையாக இருப்பது தெரியாமல் இல்லை. சாப்பாட்டுக் கூடையை அருகில் வைத்துவிட்டுக் கட்டிலில் அருகே அமர்ந்து கொள்கிறாள். முகம் தாழக் கவிழ்த்து கிடக்கும் நெற்றியில் அன்போடு கை வைத்து உலகத்து இனிமை எல்லாம் தேங்கப் புன்னகை புரிகிறாள்.

     அந்தப் புன்னகையில் அவனுடைய முகத்தில் ஒளி பரவவில்லையே? வெற்றிடத்தை நோக்குகின்றன விழிகள்.

     "ராத்திரி தூங்கினீர்களா?"

     புருவங்கள் நெரியும் முகம்; மலர்ச்சி பறிபோன முகம்.

     "உம்..."

     "காலையில் ரொட்டி பால் சாப்பிட்டீர்களா?"

     "இதெல்லாம் என்ன கேள்வி. சும்மா தொண தொணன்னு! நீ இப்ப புருஷனை நல்லாக் கவனிக்கிறேன்னு எல்லாருக்கும் தெரியணும். இல்லே?"

     "அப்படியெல்லாம் ஒண்ணும் நினைக்க வேணாம். நீங்கள் வீட்டுக்கு வந்தப்புறம் தான் தெரியப் போகுது யாரை யார் கவனிக்க வேணும்னு..."

     குரலில் கபடத்தைத் தேக்கி வைத்து அவள் மாயப் புன்னகை செய்கிறாள்.

     ஆனால் அந்தக் கபடத்தைப் புரிந்து கொள்ளவோ ரசிக்கவோ அவன் ஆர்வம் காட்டவில்லை.

     "இத பாருங்க. நான் உங்களுக்கு ஒரு சமாசாரம் சொல்லணும்..."

     சொல்ல வேண்டும் என்று விரும்புபவள், அவனை நேருக்கு நேர் பார்க்கத் துணிவின்றித் தலையைக் குனிந்து கொள்வானேன்? முகத்தில் செவ்வொளி பரவ நிலத்தை நோக்குவானேன்?

     "இதை எல்லாம் நான் ரசிக்கவில்லை, ரசிக்கவில்லை... தெரிந்ததா?" என்று பொங்கி விழுபவனாக அவன் மௌனமாக எங்கோ பார்வையைப் பதித்திருக்கிறான்.

     "நீங்க ஏன் மனசைச் சும்மா கஷ்டப்படுத்திக்கிறீங்க? நான் இருக்கும் போது நீங்க ஏன் வேதனைப்படணும்?"

     "....."

     "சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?"



வேருக்கு நீர் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10
11  12  13  14   15  16  17  18  19  20  21  22  23  24   25



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/verukkuneer/verukkuneer25.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs