http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



காக்கும் இமை நானுனக்கு

17

     இந்தப் பொல்லாத அரக்கர்களிடம் புவனேந்திரன் மாட்டிக் கொண்டு விட்டான் என்பது ஒன்று தவிர, நளினிக்கு வேறு எதுவுமே கண்ணிலோ கருத்திலோ படுவதாகவே இல்லை.

     அவளை அணைத்துப் புவனேந்திரன் ஏதோ சொல்ல முயன்றதையும் கூட, அவளால் கவனிக்க முடியவில்லை.

     அறைக்குள் இருந்த நால்வரும், எந்த வினாடியில் புவனேந்திரன் மீது பாய்வார்களோ என்ற ஒரே பயத்தில் அவர்கள் மீதே பார்வையைப் பதித்தபடி, "நீங்கள் ஓடிப் போய்விடுங்கள். உங்களைக் கொல்வதுதான் இவர்களது முக்கியத் திட்டம். நான் இவர்களைச் சில நிமிஷங்கள், எப்படியாவது தடுத்து நிறுத்துகிறேன். அதற்குள், நீங்கள் தப்பி ஓடி விடுங்கள். புவன்! ப்ளீஸ். எனக்காகப் பாராதீர்கள். போங்கள்! போங்கள்! தயவு பண்ணிப் போங்களேன்!" என்று, அவனது பிடியிலிருந்து விடுபடத் துடித்ததோடு, அவனைப் பின்புறமாகத் தள்ளவும் முயற்சித்தாள்.

     "ஷ்! ஷ், நளினிமா, கண்மணி! கொஞ்சம் அமைதிப் படுத்திக் கொள். இனி ஒன்றும் பயமில்லை," என்று புவனேந்திரன் சொன்னது, அவள் காதுகளில் விழவே இல்லை.

     ஆனால், அறையின் உள்ளே இருந்தவர்கள், கையில் அகப்பட்ட ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, அவனைத் தாக்குவதற்காக இன்னும் ஏன் ஓடி வரவில்லை?

     மாறாக எல்லோரும், தடிக்கம்பை வைத்துக் கொண்டு இருந்தவன் கூட, அதையும் கீழே போட்டு விட்டு, ஏன் கைகளை உயர்த்திக் கொண்டு நிற்க வேண்டும்?

     ஏன்?

     ஒன்றும் புரியாமல் அவள் திகைப்புடன் விழித்த போது, அவளைத் தன்புறம் திருப்பி, லேசாக அணைத்தவாறு, வாயில் வழியிலிருந்து, ஒரு புறமாக ஒதுங்கி நின்றான் புவனேந்திரன்.

     வழி கிடைத்ததும், போலீஸ் உடையில் நிறையப் பேர், அந்தக் குடிசைக்குள் செல்வதையும், வன்முறைக் கும்பலுக்கு விலங்கு மாட்டுவதையும், விழி விரியப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கண் சிமிட்டக் கூடத் தோன்றவில்லை.

     அவ்வளவு பிரமிப்பு!

     இதெல்லாம் எப்படி நடந்தது?

     இன்ன இடத்துக்கு, இப்படி வா என்று புவனனிடம், அந்தக் கொலைகாரன் சொல்லவே இல்லையே.

     புவனேந்திரனுடன், அவன் பேசிச் சில வினாடிகளுக்குள், இவன் இங்கே வந்தது எப்படிச் சாத்தியப்பட்டது? எப்படி முடிந்தது?

     அத்தோடு, இத்தனை போலீஸ்காரர்கள் ஓசைப்படாமல் இங்கே எப்படி வந்தார்கள்?

     நளினிக்கு எத்தனையோ கேள்விகள்.

     ஆனால், புவனனுக்கு ஆபத்தில்லை என்பதே எல்லையற்ற ஆறுதலைத் தர, சூழ இருப்போரைப் பற்றிய நினைவே இல்லாமல், அவன் தோள் வளைவில் சாய்ந்தபடி நின்றாள்.

     கடத்தல் கும்பல் நால்வரையும் கைது செய்து வெளியே கொண்டு வருகையில், போலீஸ் ஜீப் ஒன்று, உறுமிக் கொண்டு வந்து நின்றது.

     ஜீப்பைத் தூர நிறுத்திவிட்டு, காவலர்கள் எல்லோரும் சத்தமின்றி வந்து, அந்தப் பாழடைந்த வீட்டைச் சூழ்ந்திருக்கிறார்கள்! கண்டபடி வளர்ந்திருந்த காட்டுச் செடி கொடிகளும், மரங்களும், அவர்கள் ஒளிந்து மறைந்து வர வழி வகுத்திருக்கின்றன.

     ஆக, ஒரு விஷயம் - போலீஸ்காரர்கள் எப்படி வந்தார்கள் என்பது தெளிவாயிற்று.

     ஆனால், மற்றது?

     அவளைக் கூட, எச்சரிக்கையோடு கைப்பற்றியதாக, அந்தக் கடத்தல் குழுத் தலைவன் சொன்னானே! சக்திவேல், கண்ணன் போல யாரும் தன்னைப் பின் தொடர்ந்து, அவளும் பார்க்கவில்லையே!

     பின்னே எப்படி?



காக்கும் இமை நானுனக்கு :  1  2  3  4  5  6  7  8  9  10
11  12  13  14  15  16  17



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ramanichandran/kakkumimai/kin17.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs