http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஆப்பிள் பசி

29

     சிங்காரப் பொட்டு உள்ளே ஒரு வேகத்தில் பாய்ந்து விரைந்த போது யாரோ, "அடடே! சிங்காரம்!" என்று கூறியது கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சேட்ஜி நின்று கொண்டிருந்தார்.

     "வாங்க! எப்ப வந்தீங்க?" என்று விசாரித்த சேட்ஜி அவனை சாமண்ணா இருந்த அறைக்குக் கூட்டிச் சென்று காட்டினார். சாமண்ணா நினைவு தப்பிய நிலையில் படுத்திருந்தான். சுற்றிலும் ஒரு சிறு கூட்டம்.

     சிங்காரத்துக்கு உடம்பு பதறியது. 'அண்ணே' என்று கத்தி விடலாம் போல இருந்தது. கண்களில் நீர் தளும்பியது.

     அவன் சங்கடத்தை உணர்ந்த சேட்ஜி அவனுடைய கைகளைப் பிடித்து இழுத்து, "வாங்க போகலாம்" என்று வெளியே அழைத்துச் சென்றார்.

     "இன்னும் அஞ்சு நிமிஷத்திலே சாமண்ணாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப் போறாங்க. காலில் பலத்த அடி. இங்கேயே இப்படியே நில்லுங்க. அதோ டாக்டர் வரார். அவரைப் பார்த்துட்டு வந்துடறேன்" என்று ஓடினார்.

     சேட்ஜி திரும்பி வந்த போது அவர் முகத்தில் கவலை கவ்விக் கொண்டிருந்தது.

     "டாக்டர் என்ன சொல்கிறார்?" என்று பதறினான் சிங்காரம்.

     "ஆஸ்பத்திரிக்குப் போனப்புறம் தான் எதுவும் தெரியுமாம். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணுமாம். காலை எடுத்துடுவாங்களோ, என்னவோ?" என்று கவலைப்பட்டார் சேட்.

     "ஐயோ! எங்க அண்ணனுக்கு அப்படியெல்லாம் ஆயிடக் கூடாது" என்று தலையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.

     அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே சுபத்ரா முகர்ஜி வந்து சேர்ந்தாள். வாசலில் பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது.

     "தள்ளுங்க! தள்ளுங்க!" என்று சில குரல்கள்.

     சுபத்ராவுக்கு வழி ஏற்படுத்தி அவளை உள்ளே அழைத்துச் சென்றார் சேட். சாமண்ணாவின் கால்களைப் போர்த்தியிருந்தார்கள். சாமண்ணா அறைக்குச் சென்ற சுபத்ரா அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. உடனே ஹாலுக்குத் திரும்பி விட்டாள். அவள் முகம் கரைந்து போயிருந்தது. சேட் துயரம் தோய்ந்த முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு அவள் அருகில் போய் நின்றார். "வீட்டுக்கு வாங்க சேட்! விவரமாப் பேசணும்!" என்று கூறிவிட்டுக் கார் ஏறிப் போய் விட்டாள்.

     இதற்குள் ஆஸ்பத்திரிச் சிப்பந்திகள் வந்து சாமண்ணாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்து ஆம்புலன்சில் ஏற்ற, அது பெரிய ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது.

     சிங்காரத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. சாமண்ணாவுக்கு ஏற்பட்ட விபத்து அவனைக் கலக்கிவிட்டிருந்தது. ஆஸ்பத்திரி இருக்குமிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு தனியாகச் சாலை ஓரமாக நடக்க முற்பட்டான்.

     அப்போது யாரோ கையைத் தட்டி அழைப்பது தெரிந்தது. திரும்பினால் சேட்!

     "இந்தாங்க சிங்காரம்! இப்போ எங்கே தங்கியிருக்கீங்க?" என்று கேட்டார்.

     "கோமள விலாஸ்லே."

     "சௌகரியமா இருக்கா?"

     "அண்ணன் தான் ஏற்பாடு பண்ணியிருக்கு! ஆனா அண்ணனுக்கு இப்படி ஆயிடுச்சே!" என்று புலம்பினான்.

     "நீங்க கவலைப்படாதீங்க. தெய்வம் துணை புரியும். இப்ப நீங்க ஓட்டலுக்குத்தான் போயிட்டிருக்கீங்களா?"

     "அண்ணனை இந்த நிலையில் விட்டுட்டு எப்படிங்க போக முடியும்? ஆஸ்பத்திரிக்குப் போயிட்டிருக்கேன்."



ஆப்பிள் பசி : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13   14   15   16   17   18
19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/saavi/applepasi/applepasi29.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs