துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நால்வர் நான்மணி மாலை நால்வர் நான்மணி மாலை சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆகிய நால்வரைப் பாராட்டி பாடிய நூலாகும். நான்மணி மாலை தமிழில் வழங்கும் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகும். முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகை மணிகளைக் கொண்டு கோக்கப் பட்ட மாலை போல், இந்நூலும், வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்னும் நால்வகைப் பாக்களை, அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்ட நாற்பது செய்யுள்களைக் கொண்டதாகும். இந் நூலில் திருஞானசம்பந்தர் 10 வெண்பாக்களாலும், திருநாவுக்கரசர் 10 கட்டளைக் கலித்துறைகளாலும், சுந்தரர் 10 ஆசிரிய விருத்தங்களாலும், மாணிக்கவாசகர் 10 ஆசிரியப்பாக்களாலும் புகழ்ந்து பாராட்டப்பட்டுள்ளனர். காப்பு
குறள் வெண்பா
எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை கைப்போ தகத்தின் கழல். 1. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)
பூவால் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையினியற் பாவால் மொழிஞானப் பாலுண்டு - நாவால் மறித்தெஞ் செவிஅமுதாய் வார்த்தபிரான் தண்டை வெறித்தண் கமலமே வீடு. 2. திருநாவுக்கரசர்
(கட்டளைக் கலித்துறை)
வீட்டிற்குவாயில் எனுந்தொடை சாத்துசொல் வேந்தபோது ஆட்டிற்கு வல்லன் ஒருவற்கு ஞான அமுதுதவி நாட்டிற் கிலாத குடர்நோய் நினக்குமுன் நல்கினுமென் பாட்டிற்கு நீயும் அவனுமொப் பீரெப் படியினுமே. 3. சுந்தரர்
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)
படியிலா நின்பாட்டில் ஆரூரா! நனிவிருப்பன் பரமன் என்பது அடியனேன் அறிந்தனன்வான்தொழும்ஈசன்நினைத்தடுத்தாட்கொண்டுமன்றித் தொடியுலா மென்கைமட மாந்தர்பால் நினக்காகத் தூது சென்றும் மிடியிலா மனைகள்தொறும் இரந்திட்டும் உழன்றமையால் விளங்கு மாறே. 4. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)
விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரணன் உரையெனும் ஆரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோ சிறந்த தென்குவீ ராயின் 5 வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம் திருவா சகமிங் கொருகால் ஓதிற் கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய 10 மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்பர் ஆகுநர் அன்றி மன்பதை உலகில் மற்றையர் இலரே. 5. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)
இலைபடர்ந்த பொய்கை இடத்தழுதல் கண்டு முலைசுரந்த அன்னையோ முன்நின்-நிலைவிளம்பக் கொங்கை சுரந்தஅருட் கோமகளோ சம்பந்தா இங்குயர்ந்தா ளார்சொல் லெனக்கு. 6. திருநாவுக்கரசர்
(கட்டளைக் கலித்துறை)
எனக்கன்பு நின்பொருட் டெய்தாத தென்கொல்வெள் ளேறுடையான் தனக்கன்பு செய்திருத் தாண்டக வேந்தஇத் தாரணியில் நினக்கன்பு செய்கின்ற அப்பூதி யைச்சிவ நேசமுறும் இனர்க்கன்பு செய்நம்பி ஆருரன் ஏத்தும் இயல்பறிந்தே. |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |