துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நால்வர் நான்மணி மாலை ... தொடர்ச்சி ... 7. சுந்தரர்
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)
அறிந்து செல்வம் உடையானாம் அளகைப் பதியாற் தோழமைகொண்டு உறழ்ந்த கல்வி உடையானும் ஒருவன் வேண்டுமென இருந்து துறந்த முனிவர் தொழும்பரவை துணைவா! நினைத்தோ ழமைகொண்டான் சிறந்த அறிவு வடிவமாய்த் திகழும் நுதற்கட் பெருமானே. 8. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)
பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே வாசகம் அதற்கு வாச்சியம் தூசகல் அல்குல் வேய்த் தோளிடத் தவனே. 9. திருஞானசம்பந்தர்
(நேரிசை வெண்பா)
இடுகாட்டுள் மாதர் எலும்பிற் புரண்மால் சுடுகாட்டுள் ஆடுவார் சுட்டின்-ஒடுகாட்டுஞ் சம்பந்தா என்புநின்பால் தந்தாக்கிக் கொண்டிலன்என் கும்பந்தாம் என்னுமுலைக் கொம்பு. 10. திருநாவுக்கரசர்
(கட்டளைக்கலித்துறை)
கொள்ளைக் கதிர்முத்தின் பந்தரும் சின்னமுங் கொள்ளுமொரு பிள்ளைக் கதுதகும் நாவர சாய பெருந்தகையோய்! கள்ளைக் குவளை உமிழ்வீ ழியிற்படிக் காசொன்றுநீ வள்ளைக் குழைஉமை பங்காளர் கையிலென் வாங்கினையே. 11. சுந்தரர்
(எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)
வாங்குசிலை புரையும்உடல் எனுங்குளத்தில் மூல மலமெனுமோர் வெங்கரவின் பகுவாயில்நின்றும் தீங்கிலுயிர் எனும்பவனக் குலமகனை ஆதி திரோதாயி என்னுமொரு வெந்திறற் கூற்றுவனால் ஓங்குறுநா தாந்தமெனப் பெயரியஅக் கரையில் உமிழ்வித்துச் சிவமெனுமோர் தந்தையொடுங் கூட்டாய் கோங்கமுகை கவற்றும்இள முலைப்பரவை மகிழக் குண்டையூர் நென்மலைமுற் கொண்டஅருட் கடலே. 12. மாணிக்கவாசகர்
(நேரிசையாசிரியப்பா)
கடல்நிற வண்ணன் கண்ணொன் றிடந்து மறைச்சிலம் பரற்றும் மலரடிக் கணியப் பரிதி கொடுத்த சுருதிநா யகற்கு முடிவிளக் கெரித்தும் கடிமலர்க் கோதையைச் சுரிகுழற் கருங்கண் துணைவியை அளித்தும் 5 அருமகள் நறும்பூங் கருமயிர் உதவியும் நென்முளை வாரி இன்னமு தருத்தியும் கோவண நேர்தனை நிறுத்துக் கொடுத்தும் அகப்படு மணிமீன் அரற்கென விடுத்தும் பூட்டி அரிவாள் ஊட்டி அரிந்தும் 10 தலையுடை ஒலிக்குஞ் சிலையிடை மோதியும் மொய்ம்மலர்க் கோதை கைம்மலர் துணித்தும் தந்தையைத் தடிந்தும் மைந்தனைக் கொன்றும் குற்றஞ் செய்த சுற்றங் களைந்தும் பூக்கொளு மாதின் மூக்கினை யரிந்து 15 மிளமுலை மாதர் வளமை துறந்தும் பண்டைநாள் ஒரு சிலர் தொண்டராயினர் செங்கண்மால் தடக்கையில் சங்கம் நாண முட்டாள் தாமரை முறுக்கவிழ் மலர்மேல் வலம்புரி கிடக்கும் வாதவூர் அன்ப 20 பாடும் பணிநீ கூடும் பொருட்டு மதுரைமா நகரிற் குதிரை மாறியும் விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும் நீற்றெழில் மேனியில் மாற்றடி பட்டும் நின்னைத் தொண்டன் என்னக் கொண்டனன் 25 இருக்கும் அடுக்கல் அரக்கன் எடுப்ப முலைபொர வரைபொரு மொய்ம்பின் மலைமகள் தழுவ மனமகிழ் வோனே. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |