http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



முதல் திருமுறை
திருஞானசம்பந்தர்
அருளிய
தேவாரம்

1. திருப்பிரமபுரம்

பண் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

1    தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
     காடுடையசுட லைப்பொடிபூசி என்* உள்ளங்கவர் கள்வன்
     ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
     பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1

* பூசி எனது

2    முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு
     வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
     கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்
     பெற்றம் ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 2

3    நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
     ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
     ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்
     பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 3


4    விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
     உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
     மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
     பெண்மகிழ்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 4

5    ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன
     அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
     கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
     பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 5

6    மறைகலந்தஒலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
     இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்
     கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
     பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 6

7    சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
     உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
     கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம்
     பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 7

8    வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
     உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
     துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
     பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 8

9    தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
     நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
     வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
     பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 9

10  புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
     ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
     மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்இது வென்னப்
     பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 10

11  அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
     பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
     ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த
     திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல் எளிதாமே. 11

திருச்சிற்றம்பலம்

திருப்பிரமபுரம் என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமி - பிரமபுரீசர்
தேவி - திருநிலைநாயகி




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/saiva/thevaram/sambandar/thirumuraione.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs