பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 12 ...
1101 வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத் தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி ஒளிப்படு வித்துஎன்னை உய்ய்க்கொண்டாளே. 27
1102 கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள் கண்டனள் எண்ணென் கலையின் கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே. 28
1103 தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவம்இனி மேவகி லாவே. 29
1104 வேயன தோளி விரையுறு மென்மலர் ஏய குழலி இளம்பிறை ஏந்திழை தூய கடைமுடிச் சூலினி சுந்தரி ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே. 30
1105 இனியதென் மூலை இருக்குங் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனள் சார்வு படுத்து நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே. 31
1106 * நாடிகள் மூன்று நடுவெழு ஞானத்துக் கூடி யிருந்த குமரி குலக்கன்னி பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி ஊடக மேவி உறங்குகின் றாளே. 32 * நாடிய கண் மூன்று நடுவெழு ஞானத்துக்
1107 உறங்கும் அளவின் மனோன்மணி வந்து கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப் பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு உறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே. 33
1108 உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச் சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே. 34
1109 அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 35
1110 ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை காரியல் கோதையுள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே. 36
1111 குலாவிய கோலக் குமரியென் னுள்ளம் நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே கலாவி இருந்த கலைத்தலை யாளே. 37
1112 கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள் முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும் சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே. 38
1113 இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப் * பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித் திருந்திய தாணுவில் சேர்த்துடன் ஒன்றி அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே. 39 * பொருந்திரு
1114 ஆதி அனாதி அகாரணி காரணி சோதிய சோதி சுகபர சுந்தரி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே. 40
1115 இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் அயன்தனை ஓரும் பதமது பற்றும் பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே. 41
1116 பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முற்றி அருளும் முதல்வி கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய் முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே. 42
1117 உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள் பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது * வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே. 43 * வள்ளத் திருவினை
1118 கன்னியுங் கன்னி அழிந்திலள் காதலி துன்னியங கைவரைப் பெற்றனள் தூய்மொழி பன்னிய நன்னூற் பகவரும் அங்குள என்னேஇம் மாயை இருளது தானே. 44
1119 இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல் பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில் அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே. 45
1120 ஆதி அனாதியும் ஆய பராசக்தி பாதிபராபரை மேலுறை பைந்தொடி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே. 46
1121 ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர் சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பள் ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே. 47
1122 ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும் தேவின் கிழத்தி திருவாம் * சிவமங்கை மேவும் கிழத்தி வினைகடிந் தாளே. 48 * சியமங்கை
1123 வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித் தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள் எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியும் ஆமே. 49
1124 ஆதி அனாதி அகாரணி காரணி வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும் பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே. 50 7. பூரண சக்தி
1125 அளந்தேன் அகலிடத்து அந்தமும் * ஈறும் அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும் அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே. 1 * ஆதியும்
1126 * உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சக்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே. 2 * உணர்ந்தில தீசனை
1127 கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும் இன்பக் கலவி இனிதுறை தையலும் அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே. 3
1128 இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர் அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள் என்பிற் பாரசக்தி என்னம்மை தானே. 4
1129 என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன் மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும் பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே. 5
1130 தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன் பார்மேல் இருப்பதொரு நூறு தானுள பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள் நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே. 6
1131 ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர் மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின் பாணைய மாய பரத்தை அறிந்தபின் * தாணைய மாய தானதனன் தானே. 7 * தாணையு
1132 தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானேர் எழுந்து மதியை விளக்கினள் தேனேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே. 8
1133 அறிவான * மாயையும் ஐம்புலக் கூட்டத்து அறிவான மங்கை அருளது சேரில் பிறியா அறிவறி வார்உளம் பேணும் நெறியாய சித்த நிறைந்திருந் தாளே. 9 * மாயை ஐம்புலக்
1134 இரவும் பகலும் இலாத இடத்தே குரவம் செய்கின்ற குழலியை நாடி அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப் பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே. 10 (இப்பாடல் 1528-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1135 பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச் சாலவு மாய்நின்ற தற்பரத் தானே. 11
1136 நின்ற பராசத்தி நீள்பரன் தன்னோடு நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும் நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே மற்றன வற்றுள் மருவிடுந் தானே. 12
1137 மருவொத்த மங்கையும் தானும் உடனே உருவொத்துநின்றமை ஒன்றும் * உணரார் கருவொத்து நின்று # கலக்கின போது திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே. 13 * உணராக் # கலக்கின்ற
1138 சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள் * சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே. 14 * சந்திரப் பூவி
1139 ஆறி யிருந்த அமுத பயோதரி மாறி யிருந்த வழியறி வாரில்லை தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன் ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே. 15
1140 உடையவன் அங்கி உருத்திர சோதி விடையவன் ஏறி விளங்கி இருக்கும் கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து அடையது வாகிய சாதகர் தாமே. 16
1141 தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுள பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே. 17
1142 பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத் திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம் விண்கொடி யாகி விளங்கி வருதலால் பெண்கொடி யாக நடந்தது உலகே. 18
1143 நடந்தது வம்மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப் படர்ந்தது * தன்வழி பங்கயத் துள்ளே தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே. 19 * தண்வழிப்
1144 அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம் எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது மடுக்கும் தாமரை மத்தகச் தேசெல முடுக்கும் தாமரை முச்சது ரத்தே. 20
1145 முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர் எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக் கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற எச்சது ரத்தும் இருந்தனள் தானே. 21
1146 இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப் பரந்தன வாயு திசை தோறும் குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி நடந்தது தேறல் அதோமுகம் அம்பே. 22
1147 அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும் நம்பனை நோக்கி நவிலுகின் றாளே. 23
1148 நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி துகிலுடை யாடை நிலம்பொதி பாதம் அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும் புகலும்முச் சோதி புனையநிற் பாளே. 24
1149 புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள் வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே புனையவல் லாள்மண் டலத்தொளி தன்னைப் புனையவல் லாளையும் போற்றியென் பேனே. 25
1150 போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென் ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே. 26
1151 தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென் அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே. 27
1152 மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே. 28
1153 தாவித் தவப்பொருள் தான்அவன் எம்இறை பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து ஆவிக்கும் அப்பொருள் தானது தானே. 29
1154 அதுஇது என்பர் அவனை அறியார் கதிவர நின்றதோர் காரணம் காணார் மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே. 30 8. ஆதாரவாதேயம்
1155 நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு தானித ழானவை நாற்பத்து நாலுள பாலித * ழானவள் பங்கய மூலமாய்த் தானிதழ் ஆகித் தரித்திருந் தாளே. 1 * ழான அப்
1156 தரித்திருந் தாள்அவள் தண்ணொளி நோக்கி விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளைக் குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்து மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே. 2
1157 மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப் பாதிநல் லாளும் * பகவனும் ஆனது சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல் வேதனை தீர்தரும் வௌளடை யாமே. 3 * பகவரு
1158 வௌளடை யான்இரு மாமிகு மாமலர்க் கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம் மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற பெண்ணொரு பாகம் பிறவிப் பெண் ஆமே. 4
1159 பெண்ணொரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது பெண்ணுடை ஆண்என் பிறப்பறிந்து ஈர்க்கின்ற பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே. 5
1160 பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை மாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங் காச்சற்ற * சோதி கடவு ளுடன்புணர்ந்து # தாச்சற்றெ னுள்புகுந் தாலிக்கும் தானே. 6 * சோதிக் கடவு # தாச்சென்றனுட்
1161 ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மணி பாலித்து உலகில் * பரந்துபெண் ஆகும் வேலைத் தலைவியை வேத # முதல்வியை ஆலித் தொருவன் உகந்துநின் றானே. 7 * பரந்து பெண் ணாணாகும் # முதல்வியைப் பாவித்
1162 உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடு உகந்துநின் றான்நம் உழைபுக நோக்கி உகந்துநின் றான்இவ் வுலகங்கள் எல்லாம் உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே. 8
1163 குத்து முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி புத்தகச் சீறடிப் பாவை * புணர்வினைத் தொத்த # கருத்துச் சொல்லகில் லேனே. 9 * யுணர்வினைத் # கருத்தது
1164 சொல்லஒண்ணாத அழற்பொதி மண்டலம் சொல்லஒண் னாது திகைத்தங்கு இருப்பர்கள் வெல்லஒண் ணாத வினைத்தனி நாயகி மல்லஒண் ணாத மனோன்மணி தானே. 10
1165 தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் தானே வடவரைத் தண்கடற் கண்ணே. 11 (இப்பாடல் 10-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1166 கண்ணுடை யாளைக் கலந்தங்கு இருந்தவர் மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணப் பண்ணுடை யார்கள் பதைப்பற்று இருந்தவர் விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே. 12
1167 கண்டுஎன் திசையும் கலந்து வருங்கன்னி பண்டுஎன் திசையும் பராசக்தி யாய்நிற்கும் விண்டுஎன் திசையும் விரைமலர் கைக்கொண்டு தொண்டுஎன் திசையும் தொழநின்ற கன்னியே. 13
1168 கன்னி ஒளியென நின்றஇச் சந்திரன் மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம் சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன் பன்னி யிருப்பப் பராசக்தி யாமே. 14
1169 பராசத்தி என்றென்று பல்வகை யாலும் தராசத்தி யான தலைப்பிர மாணி இராசத்தி யாமள ஆகமத் தாளாகும் குராசத்தி கோலலம் பலவுணர்ந் தேனே. 15
1170 உணர்ந்த உலகு ஏழையும் யோகினி சத்தி உணர்ந்துஉயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன் புணர்ந்தொரு காலத்துப் * போகம தாதி இணைந்து பரமென்று இசைந்துஇது தானே. 16 * போதம தாகி
1171 இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும் பொதுஅக் * கல்வியும் # போகமும் ஆகி மது அக் குழலி மனோன்மணி மங்கை அதுஅக் $ கல்வியுள் ஆயுழி யோகமே. 17 * கலவியும் # போதமு $ கலவியுள்
1172 யோகநற் சத்தி ஒளிபீடம் தானாகும் யோகநற் சத்தி ஒளிமுகம் தெற்காகும் யோகநற் சத்தி உதர நடுவாகும் யோகநற் சத்திதான் உத்தரந் தேரே. 18
1173 தேர்ந்தெழு மேலாம் சிவன்அங்கி யோடுற வார்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும் ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிட கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே. 19
1174 தானான ஆறுஎட்ட தாம்பரைக் குண்மிசை தானான ஆறும்ஈ ரேழும் * சமகலை தானான விந்து சகமே பரமெனும் தானாம் பரவா தனையெனத் தக்கதே. 20 * சமைகலை
1175 தக்க பராவித்தை தானிரு பானேழில் தக்கெழும் ஓர்உத் திரம்சொல்லச் சொல்லவே மிக்கிடும் எண்சக்தி வெண்ணிற முக்கண்ணி * தொக்க கதையோடு # தொன்முத் திரையாளே. 21 * தொக்கத்தையோடு # தோள்முத்திரை
1176 முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தன் * தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள் வைத்த பராபர னாய பராபரை சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே. 22 * அத்துவ
1177 * கொங்கின்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி பொங்கிய குங்குமத் * தொளி பொருந்தினள் அங்குச பாசம் எனும்அகி லம் கனி தங்கும் அவள்மனை தான்அறி வாயே. 23 * கொங்கீன்ற # தோளிபுரந்தனள்
1178 வாயு மனமும் கடந்த மனோன்மணி பேயும் கணமும் * பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் # அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமும் ஆமே. 24 * பிறந்திட்ட # அறிவைக்
1179 தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள் காரண காரிய மாகும் கலப்பினள் பூரண விந்து பொதிந்த புராதனி பாரள வாந்திசை பத்துடை யாளே. 25
1180 பத்துமுக முடை யாள்நம் பராசத்தி வைத்தனள் ஆறங்க நாலுடன் தான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாள்எம் நேரிழை கூறே. 26
1181 * கூறிய கன்னி குலாய புருவத்தள் # சீறிய ளாய்உல கேழும் திகழ்ந்தவள் ஆரிய நங்கை அமுத பயோதரி பேருயி ராளி பிறிவறுத் தாளே. 27 * கூறியல் கன்னி # சீரிய
1182 பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே. 28
1183 உள்ளத்தின் உள்ளே உடனிருந்து ஐவர்தம் கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக் கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே. 29
1184 புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார் பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து இருந்த இலக்கில் இனிதிருந் தாளே. 30
1185 இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவித் திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந்து உன்னி நிரந்தர மாகிய நிரதி சயமொடு பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே. 31
1186 அதுஇது என்னும் அவாவினை நீக்கித் துதியது செய்து சுழியுற நோக்கில் விதியது தன்னையும் வென்றிட லாகும் மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே. 32
1187 மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம் ஏன்றுள ஈராறு எழுகலை உச்சியில் தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை ஏன்றனள் ஏழிரண்டு இந்துவோடு ஈறே. 33
1188 இந்துவின் நின்றொழு நாதம் இரவிபோல் வந்துபின் நாக்கின் மதித்தெழு கண்டத்தில் உந்திய சோதி இதயத்து எழும்ஒலி இந்துவின் மேலுற்ற ஈறது தானே. 34
1189 ஈறது தான்முதல் எண்ணிரண்டு ஆயிரம் மாறுதல் இன்றி மனோவச மாய் எழில் தூறது செய்யும் சுகந்தச் சுழியது பேறது செய்து பிறந்திருந் தாளே. 35
1190 இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத் திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப் பொருந்து புவனங்கள் போற்றிசெய்து ஏத்தி வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே. 36
1191 மங்கையும் மாரனும் தம்மொடு கூடிநின்று அங்குலி * கூட்டி அகம்புறம் பார்த்தனர் கொங்கைநல் லாளும் குமாரர்கள் ஐவரும் தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே. 37 * கூடி யகப்புறம்
1192 சடங்கது செய்து தவம்புரி வார்கள் கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில் தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே. 38
1193 பாலித் திருக்கும் பனிமலர் ஆறினும் ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி சீலத்தை * நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம் மூலத்து மேலது முத்தது வாமே. 39 * நோக்கித்
1194 முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி சத்தி சதிரி சகளி சடாதரி பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி வித்தகி என்னுளம் மேவிநின் றாளே. 40
1195 மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி தாவிய நற்பதத் தள்மதி யங்கதிர் மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார் ஓவினும் மேலிடும் உள்ளொளி யாமே. 41
1196 உள்ளொளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள் வெள்ளொளி அங்கியின் மேவி அவரொடும் கள்ளவிழ் * கோதை கலந்துடனே நிற்கும் கொள்ள விசுத்திக் கொடியமு தாமே. 42 * கோனைக்
1197 கொடியதுஇ ரேகை குருவுள் இருப்பப் படியது வாருனைப் பைங்கழல் ஈசன் வடிவது ஆனந்தம் வந்து முறையே இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே. 43
1198 ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும் காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும் ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும் சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே. 44
1199 சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை முத்திக்கு நாயகி என்பது அறிகிலர் பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள் கத்திய நாய்போல் கதறுகின் றாரே. 45
1200 ஆரே * திருவின் திருவடி காண்பார்கள் நேரே நின்றுஓதி * நினையவும் வல்லார்க்குக் காரேர் குழலி கமல மலரன்ன சீரேயும் சேவடி சிந்தைவைத் தாளே. 46 * குருவின் # நினைப |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2011 பக்கங்கள்: 268 எடை: 300 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-8322-232-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒருநாளில் உள்ள 24 மணிநேரத்தை, ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது: 1.சாதிக்க முடிகிற இலக்குகளை நிர்ணயித்தல் 2.உன்னதத்தை அடையவும், நாணயத்தோடு விளங்கவும் பாடுபடுதல் 3.நகைச்சுவை உணர்வையும், உற்சாகத்தையும் வளர்த்தெடுத்தல் 4.தீய பழக்கங்களை வேரோடு பிடுங்கியெறிதல் 5.நேரத்தையும், பணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல் 6.புத்துணர்வு ஊட்டுவதற்குத் தினசரி நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|