பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 13 ...
1201 சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து முந்தையில் வைத்துத்தம் மூலத்திலே வைத்து நிந்தையில் வையா நினைவதிலே வைத்துச் சந்தையில் வைத்துச் சமாதி செய் வீரே. 47
1202 சமாதிசெய்வார்கட்குத் தான் முத லாகிச் சிவாதியி லாரும் சிலைநுத லாளை நவாதியி லாக நயந்தது ஓதில் உவாதி அவளுக்கு உறைவில தாமே. 48
1203 உறைபதி தோறும் முறைமுறை மேவி நறைகமழ் கோதையை நாடொறும் நண்ணி மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும் * இறைதினைப் போதினில் எய்திடலாமே. 49 * இறைதனைப் போற்றிடில்
1204 எய்திட லாகும் இருவினை யின்பயன் கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி மைதவழ் கண்ணிநன் * மாதுரி கையொடு கைதவம் இன்றி கருத்துறும் வாறே. 50 * மாரிதுர்க் கையொடு
1205 கருத்துறுங் காலம் கருது மனமும் திருத்தி இருந்தவை சேரு நிலத்து ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல் இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே. 51
1206 ஆமையொன்று ஏறி அகம்படி யான்என ஓம்என்று ஓதிஎம் உள்ளொளி யாய்நிற்கும் தாம நறுங்குழல் தையலைக் கண்டபின் சோம நறுமலர் சூழநின் றாளே. 52
1207 சூடிடும் அங்குச * பாசத் துளைவழி கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை நாடும் இருபத நன்னெடு ருத்திரம் ஆடிடும் சீர்புனை ஆடக மாமே. 53 * பாசந்துணைவழி
1208 ஆமயன் மால்அரன் ஈசன் சதாசிவன் தாமடி சூழநின்று எய்தினார் தம்பதம் காமனும் சாமன் இரவி கனலுடன் சோமனும் வந்தடி * சூடநின் றாளே. 54 * சூடிநின்
1209 சூடும் இளம்பிறை சூலி கபாலினி நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை நாடி நடுவிடை ஞானம் உருவநின்று ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே. 55
1210 அண்டமுதலாய் அவனிபரி யந்தம் கண்டதுஒன்று இல்லைக் கனங்குழை அல்லது கண்டதும் கண்டியும் ஆகிய காரணம் குண்டிகை கோளிகை கண்டத ளாலே. 56
1211 ஆலம்உண் டான்அமுது ஆங்கவர் தம்பதம் சாலவந்து எய்தும் தவத்துஇன்பம் தான்வரும் கோலிவந்து எய்தும் குவிந்த பதவையோடு ஏலவந்து ஈண்டி இருந்தனள் மேலே. 57
1212 மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக் காலால் வருந்திக் கழிவர் கணத்திடை நாலா நளினநின்று ஏத்திநட் டுச்சிதன் மேலாம் எழுத்தினள் ஆமத்தி னாளே. 58
1213 ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினள் ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள் நாம் நமசிவ என்றுஇருப்பார்க்கு நேமத் துணைவி நிலாவிநின் றாளே. 59
1214 நிலாமய மாகிய நீள்படி கத்தின் சிலாமய மாகும் செழுந்த ரளத்தின் சுலாமய மாகும் சுரிகுழற் கோதை கலாமய மாகக் கலந்துநின் றாளே. 60
1215 கலந்துநின் றாள்கன்னி காதல னோடும் கலந்துநின் றாள்உயிர் கற்பனை எல்லாம் கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம் கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே. 61
1216 காலவி எங்கும் கருத்தும் அருத்தியும் கூலவி ஒன்றாகும் * கூட இழைத்தனள் மாலின் மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம் தாமே. 62 * கூடல்
1217 பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம் மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும் நாகம் உரித்து நடஞ்செய்யும் * நாதர்க்கே. 63 * நாதற்கே
1218 நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடிநின்று ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உளஅவை வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்று ஆதியும் அந்தமும் ஆகிநின் றாளே. 64
1219 ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள் ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள் ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே. 65
1220 ஆயிழை யாளொடும் ஆதிப் பரமிடம் ஆயதொர் அண்டவை யாறும் இரண்டுள ஆய மனந்தொறு அறுமுகம் அவைதனில் ஏயவார் குழலி இனிதுநின் றாளே. 66
1221 நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட இன்றென் அகம்படி * ஏழு உயிர்ப்பெய்தும் துன்றிய ஓர்ஒன் பதின்மரும் சூழலுள் ஒன்றுயர் ஓதி உணர்ந்துநின் றாளே. 67 * ஏழும்
1222 உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே மணந்தெழும் ஆங்கதி யாகிய தாகும் குணந்தெழு சூதனும் சூதியும் கூடிக் கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே. 68 (இப்பாடல் 1306-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1223 ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும் மாமது மண்டல மாருதம் ஆதியும் ஏமது சீவன் சிகையங்கு இருண்டிடக் கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே. 69
1224 ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி ஆகிய ஐம்பத்துடனே அடங்கிடும் ஆகும் பராபரை யோடுஅப் பரையவள் ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே. 70
1225 * தானிகழ மோகினி சார்வன யோகினி போன மயமுடை யார்அடி போற்றுவர் ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம் தானாம் பரசிவம் மேலது தானே. 71 * தானிகன்
1226 தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன் ஆனந்த மோகினி யாம்பொன் * திருவொடு மோனையில் வைத்து மொழிதரு கூறது வானவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே. 72 * குருவொடு
1227 மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி யார்க்கும் அறிய அரியாள் அவளாகும் வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே. 73
1228 நுண்ணறி வாகும் * நுழைபுலன் மாந்தர்க்குப் பின்னறி வாகும் பிரான்அறிவு அத்தடம் செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத் தன்னெறி யாவது சன்மார்க்கம் ஆமே. 74 * நுழைபுழ
1229 சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும் துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும் நன்மார்க்க தேவரும் நன்னெறி யாவதும் சன்மார்க்க தேவியும் சத்தியென் பாளே. 75
1230 சத்தியம் நானும் சயம்புவம் அல்லது முத்தியை யாரும் முதல்அறி வாரில்லை அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால் மத்தியில் ஏற வழியது வாமே. 76
1231 அதுஇது என்றுஅவ மேகழி யாதே மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப் பதிமது மேவிப் பணியவல் லார்க்கு விதிவழி தன்னையும் வென்றிட லாமே. 77
1232 வென்றிட லாகும் விதிவழி தன்னையும் வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும் வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே. 78
1233 ஓர்ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது பாரம் பரியத்து வந்த பரமிது மாரன் குழலாளும் அப்பதி தானும்முன் சாரும் பதமிது சத்திய மாமே. 79
1234 சத்தியி னோடு சயம்புவம் நேர்படில் வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன அத்தகை யாகிய ஐம்பத்து ஒருவரும் சித்தது மேவித் திருந்திடு வாரே. 80
1235 திருந்துசிவனும் சிலைநுத லாளும் பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த அருந்திட அவ்விடம் ஆரமுது ஆக இருந்தனள் தான்அங்கு இளம்பிறை என்றே. 81
1236 என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார் அன்றது ஆகுவர் தார்குழ லாளொடு மன்றரு கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதிநின் றாளே. 82
1237 நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே. 83
1238 தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை மான்தரு கண்ணியும் மாரனும் வந்தெதிர் சான்றது வாகுவர் தாம்அவள் ஆயுமே. 84
1239 ஆயும் அறிவும் கடந்தணு ஆரணி மாயம தாகி மதோமதி ஆயிடும் சேய அரிவை சிவானந்த சுந்தரி நேயம தாநெறி யாகிநின் றாளே. 85
1240 நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப் பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும் குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும் அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே. 86
1241 ஆம்அயன்மால் அரன் ஈசன்மா லாங்கதி ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத் தேமயன் ஆளும் தெனாதென என்றிடும் மாமய மானது வந்தெய்த லாமே. 87
1242 வந்தடி போற்றுவர் வானவர் தானவர் இந்து முதலாக எண்டிசை யோர்களும் கொந்தணி யுங்குழ லாள்ஒரு கோனையும் வந்தனை செய்யும் வழி * நவில் வீரே. 88 * நவிலீரே
1243 நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம் கவற்றிய கந்தம் கவர்ந்துஎரி தீபம் பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே. 89
1244 தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பிலி பூங்கிளி தங்கும் புரிகுழ லாள்அன்று பாங்குடன் * ஏற்பப் பராசத்தி போற்றே. 90 * நேரப்
1245 பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர் அற்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள் நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை விற்கொடி மாதை விரும்பி விளங்கே. 91
1246 விளங்கொளி யாய விரிசுடர் மாலை துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக் களங்கொள் மணியுடன் காம வினோதம் உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே. 92
1247 தொடங்கி உலகினில் சோதி மணாளன் அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை ஒடுங்கி உமையொடும் ஓருரு வாமே. 93
1248 உருவம் பலஉயி ராய்வல்ல நந்தி தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில் புரிவளைக் கைச்சிஎம் * பொன்னணி மாதை மருவி இறைவன் மகிழ்வன மாயமே. 94 * பொன்னொளி
1249 மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித் தாயம் புணர்க்கும் சலநதி அமலனைக் காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி ஆயம் புணர்க்கும்அவ் வியோனியும் ஆமே. 95
1250 உணர்ந்துஒழிந் தேன்அவன் னாம் எங்கள் ஈசனை புணர்ந்துஒழிந் தேன்புவ னாபதி யாரை அணைந்துஒழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம் பிணைந்துஒழிந்த தேன்தன் அருள்பெற்ற வாறே. 96
1251 பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி நற்றாள் இறைவனே * நற்பயனே என்பர் கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப் பொற்றாள் உலகம் புகல்தனி யாமே. 97 * நற்பயன்
1252 * தனிநா யகன்த னோடுஎன்நெஞ்சம் நாடி இனியார் இருப்பிடம் ஏழுலகு என்பர் பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக் கனியாய் # நினைவதென் காரணம் அம்மையே. 98 * தனியா
# நினைந்தென்
1253 அம்மனை அம்மை அரிவை மனோன்மணி செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும் இம்மனை செய்த * இந்நில மங்கையும் அம்மனை யாகி அமர்ந்து நின்றாளே. 99 * இருநில
1254 அம்மையும் அத்தவனும் அன்புற்றது அல்லது அம்மையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை அம்மையொடு அத்தனும் யானும் உடனிருந்து அம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே. 100 9. ஏரொளிச் சக்கரம்
1255 ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னால்எழு நாதமாம் ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கர * மந்நடு வன்னியே. 1 * மன்னிடு
1256 வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன வன்னி எழுத்தவை வானுற ஓங்கின வன்னி எழுத்தவை மாபெரும் சக்கரம் வன்னி எழுத்திடு வாறுஅது சொல்லுமே. 2
1257 சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம் சொல்லிடும் அப்பதி அவ்எழுத் தாவன சொல்லிடும் நூறொடு நாற்பத்து நாலுரு சொல்லிரு சக்கர மாய்வரு மேலதே. 3
1258 மேல்வரும் விந்துவும் அவ்எழுத் தாய்விடும் மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல்வரும் அப்பதி அவ்எழுத் தேவரின் மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே. 4
1259 ஞாலம தாக விரிந்தது சக்கரம் ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம தாயிடும் அப்பதி யோசனை ஞாலம தாக விரிந்தது எழுத்தே. 5
1260 விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்தது சக்கர மாக விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே. 6
1261 அப்பஅது வாக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அவ்அனல் ஆயிடும் அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ அப்பினில அப்புறம் ஆகாச மாமே. 7
1262 ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில் ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்தவை ஆகாச அவ்எழுத்து ஆகிச் சிவானந்தம் ஆகாச அக்கரம் ஆவது அறிமினே. 8
1263 அறிந்திடும் சக்கரம் ஐ அஞ்சு விந்து அறிந்திடும் சக்கரம் நாத முதலா அறிந்திடும் அவ்எழுத்து அப்பதி யோர்க்கும் அறிந்திடும் அப்பக லோன்நிலை யாமே. 9
1264 அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும் அம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும் * இம்முதல் நாலும் # இருந்திடு வன்னியே இம்முதல் ஆகும் எழுத்தலை எல்லாம். 10 * அம்முதல் # இருநடு
1265 எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்தவை ஆறது அந்நடு வன்னி எழுத்தவை அந்நடு அச்சுட ராகி எழுத்தவை தான்முதல் அந்தமும் ஆமே. 11
1266 அந்தமும் ஈறு முதலா னவையற அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால் அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே. 12
1267 ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபதும் ஆவினம் அப்பதின் ஐந்தின மாயுறும் ஆவினம் அப்பதி னெட்டுடன் ஆயுறும் ஆவினம் அக்கதி ரோன்வர வந்தே. 13
1268 வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும் வந்திடு நாளது முந்நூற் றறுபதும் வந்திடு ஆண்டு வகுத்துறை அவ்வியே. 14
1269 அவ்வின மூன்றும்அவ் ஆடது வாய்வருங் * கெவ்வின மூன்றும் கிளர்தரு ஏறதாம் சவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம் இவ்வின மூன்றும் இராசிகள் எல்லாம். 15 * எவ்வின
1270 இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின் இராசியுள் சக்கரம் என்றறி விந்துவாம் இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின் இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே. 16
1271 நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம் நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன் நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில் நின்றிடும் அப்புறம் தாரகை யானதே. 17
1272 தாரகை யாகச் சமைந்தது சக்கரம் தாரகை மேலோர் தழைத்தது பேரொளி தாரகை சந்திரன் நற்பக லோன்வரத் தாரகை தாரகை * தாரகை கண்டதே. 18 * யானது காணுமே
1273 கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம் கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக் கண்டிடு வன்னிக் கொழுந்தன ஒத்தபின் கண்டிரும் அப்புறம் காரொளி யானதே. 19
1274 காரொளி ஆண்டம் பொதிந்துஉலகு எங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே. 20
1275 நின்றது அண்டமும் நீளும் புவியெலாம் நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட நின்றவிவ் வண்டமு மூல மலம்ஒக்கும் நின்றஇவ் வண்டம் பலமது விந்துவே. 21
1276 விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில் விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம் விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில் விந்துவை எண்மடி கொண்டது வீசமே. 22
1277 வீசம் இரண்டுள நாதத்து எழுவன வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின் வீசமும் விந்து விரிந்தது காணுமே. 23
1278 விரிந்தது விந்துவும் கெட்டது வீசம் விரிந்தது விந்துவும் நாதத்தும் அளவினில் விரிந்தது உட்கட்ட எட்டெட்டும் ஆகில் விரிந்தது விந்து விரையது வாமே. 24
1279 விரையது விந்து விளைந்தன எல்லாம் விரையது விந்து விளைந்த உயிரும் விரையது விந்து விளைந்தவிஞ் * ஞாலம் விரையது விந்து விளைந்தவன் # தானே. 25 * ஞானம் # தானே
1280 விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும் விளைந்த எழுத்தது சக்கர மாக விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும் விளைந்த எழுத்தவை மந்திர மாமே. 26
1281 மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில் தந்திரத்து உள்ளெழுத்து ஒன்றுஎரி வட்டமாம் தந்திரத் துள்ளும்இ ரேகையில ஒன்றில்லை பந்தமது ஆகும் பிரணவம் உன்னிடே. 27
1282 உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை தன்னிட்டுஎழுந்த தகைப்பறப் பின்னிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே. 28
1283 பார்க்கலும் ஆகும் பகையறு சக்கரம் காக்கலும் ஆகும் கருத்தில் தடமெங்கும் நோக்கலும் ஆகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்குலும் ஆகும் அறிந்துகொள் வார்க்கே. 29
1284 அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து விரிந்திடும் சக்கரம் மேலெழுத்து அம்மை பரிந்திடும் சக்கரம் பாராங்கி நாலும் குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே. 30
1285 கூறிய சக்கரத்து உள்ளெழு மந்திரம் மாறியல் பாக அமைந்து விரிந்திடும் தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே. 31
1286 மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும் மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும் மதித்தங்கு எழுந்தவை காரணம் ஆகில் கொதித்தங்கு எழுந்தவை கூடகி லாவே. 32
1287 கூடிய தம்பனம் மாரணம் வசியம் ஆடியல் பாக அமைந்து செறிந்திடும் பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார் தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே. 33
1288 தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே அளிந்த வ்காரத்தை அந்நாடு வாக்கிக் * குளிர்ந்த வரனைக் கூடியுள் வைத்து வளிந்தவை அங்கெழு நாடிய காலே. 34 * குளிர்ந்த வரவினைக்
1289 கால்அரை முக்கால் முழுதெனும் மந்திரம் ஆலித்து எழுந்துஅமைந்து ஊறி எழுந்தாய்ப் பாலித்து எழுந்து பகையற நின்றபின் மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே. 35
1290 கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப் பண்டையுள் நாவில் பகையற விண்டபின் * மன்றுள் நிறைந்த மணிவிளக் காயிடும் இன்றும் இதயத்து எழுந்து நமவெனே. 36 * மன்று 10. வயிரவச் சக்கரம்
1291 அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு அறிந்தஅச் சத்தமி மேல்இவை குற்றம் அறிந்துஅவை ஒன்றுவிட்டு ஒன்றுபத் தாக அறிந்து வலமது வாக நடவே. 1
1292 நடந்து வயிரவன் சூல கபாலி நடந்த பகைவனைக் கண்ணது போக்கித் தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே. 2
1293 ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன் ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு ஆமே தமருக பாசமும் கையது வாமே சிரத்தொடு வாளது கையே. 3
1294 கையவை யாறும் கருத்துற நோக்கிடும் மெய்யது செம்மை விளங்கு வயிரவன் துய்யரு ளத்தில் துளங்கு மெய் யுற்றதாய்ப் பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே. 4
1295 பூசனை செய்யப் பொருந்துஓர் ஆயிரம் பூசனை * செய்ய மதுவுடன் ஆடுமால் பூசனை சாந்து சவாது புழுகுநெய் பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே. 5 * செய்யு
1296 வேண்டிய வாறு கலகமும் ஆயிடும் வேண்டிய ஆறிணுண் மெய்யது பெற்றபின் வேண்டிய வாறு வரும்வழி நீநட வேண்டிய வாறது வாகும் கருத்தே. 6 11. சாம்பவி மண்டலச் சக்கரம்* (* இஃது ஒரு பிரதியில் சாம்பவி மண்டலம் என்று உள்ளது)
1297 சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேல்தரங் காண்பதம் தத்துவ நாலுள் நயனமும் நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே. 1
1298 * நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக் கோடறி வீதியும் கொடர்ந்துள் இரண்டழி பாடறி பத்துடன் ஆறு நடுவீதி ஏடற நால்ஐந்து இடவகை யாமே. 2 * நாடரி
1299 நால்ஐந்து இடவகை உள்ளதோர் மண்டலம் நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய் நாலுநற் கோணமும் நந்நால் இலிங்கமாய் நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே. 3
1300 ஆறிரு பத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும் வேறுரு வாக விளைந்து கிடந்தது தேறி நிருமல சிவாய நமவென்று கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே. 4 |
Curious Lives ஆசிரியர்: Richard Bachவகைப்பாடு : Self Improvement விலை: ரூ. 299.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
நியூட்டனின் மூன்றாம் விதி ஆசிரியர்: நா. முத்துக்குமார்வகைப்பாடு : கவிதை விலை: ரூ. 80.00 தள்ளுபடி விலை: ரூ. 75.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|