பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 14 ...
1301 குறைவதும் இல்லை குரைகழற் கூடும் அறைவதும் ஆரணம் அவ்எழுத்து ஆகித் திறமது வாகத் தெளியவல் லார்க்கு இறவில்லை என்றென்று இயம்பினர் காணே. 5
1302 காணும் பொருளும் கருதிய தெய்வமும் பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும் ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக் காணும் கனகமும் காரிகை யாமே. 6
1303 ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேயாகப் போமே அதுதானும் போம்வழியே போனால் நாமே நினைத்தன செய்யலு மாகும் பார்மேல் ஒருவர் பகையில்லை தானே. 7
1304 பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால் நகையில்லை * நாணாளும் நன்மைகள் ஆகும் வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை தகையில்லை தானும் சலமது வாமே. 8 * நாளும்
1305 ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே யாரும் அறியாத ஆனந்த ரூபமாம் பாரும் விசும்பும் பகலும் மதியதி * ஊனும் உயிரும் உணர்வது வாமே. 9 * ஊரும்
1306 உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே அணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும் குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக் கணந்தெழும் காணும் அக் காமுகை யாலே. 10 12. புவனபதி சக்கரம்
1307 ககராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை அகராதி ஓராறு அரத்தமே போலும் சகராதி ஓர்நான்கும் தான்சுத்த வெண்மை ககராதி மூவித்தை காமிய முத்தியே. 1
1308 ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத் தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள் வாரித் திரிகோண மனம்இன்ப முத்தியும் தேரில் அறியும் சிவகாயம் தானே. 2
1309 ஏக பராசக்தி ஈசற்குஆம் அங்கமே யாகம் பராவித்தை யாமுத்தி சித்தியே ஏகம் பராசக்தி யாகச் சிவகுரு யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே. 3
1310 எட்டா கிய * சத்தி எட்டாகும் யோகத்துக் # கட்டாகு நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது ஒட்டாத விந்துவும் தானற்று ஒழிந்தது கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே. 4 * சித்தி # கட்டாதி
1311 ஏதும் பலமாம் இயந்திரா சன்அடி ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச் சாதங் கெடச்செம்பிற் சட்கோணம் தானிட்டே. 5
1312 சட்கோணம் தன்னில் ஸ்ரீம்ஹிரீம் தானிட்டு அக்கோணம் ஆறின் தலையில்ரீங் கராமிட்டு எக்கோண மும்சூழ எழில்வட்டம் இட்டுப்பின் மிக்கீர்எட்டு அக்கரம் அம்முதல் மேலிடே. 6
1313 இட்ட * இதழ்கள் இடைஅந் தரத்திலே அட்டஹவ் விட்டதின்மேலே உவ்விட்டுக் கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம் இட்டுவா மத்துஆங்கு கிரோங் கென்று மேவிடே. 7 * இதன்கண்
1314 மேவிய சக்கர மீது வலத்திலே கோவை அடையவே குரோங்கிரோங் கென்றிட்டுத் * தாவில் ரீங் காரத்தால் சக்கரம் சூழ்ந்து பூவைப் புவனா பதியைப் பின் பூசியே. 8 * தாவிலிறீங்
1315 பூசிக்கும் போது புவனா பதிதன்னை ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணிப் பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து தேசுற் றிடவே தியானம் அதுசெய்யே. 9
1316 செய்ய திருமேனி செம்பட்டு உடைதானும் கையிற் படைஅங் குசபாசத் தோடபய வெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே. 10
1317 தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப் பாற்பே னகமந் திரத்தால் பயின்றேத்தி நாற்பால நாரதா யாசுவா காஎன்று சீர்ப்பாகச் சேடத்தை * மாற்றிப் பின் சேவியே. 11 * மாற்றியபின்
1318 சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாகனத்தால் பாவித்து இதய கமலம் பதிவித்துஅங்கு யாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை நீவைத்துச் * சேமி நினைந்தது தருமே. 12 * சேவி 13. நவாக்கரி சக்கரம்
1319 நவாக்கரி சக்கரம் நானுரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக நவாக்கரி எண்பத் தொருவகை யாக நவாக்கரி அக்கிலீ சௌமுதல் ஈறே. 1
1320 சௌமுதல் அவ்வொரு ஜௌவுட னாங்கிரீம் கௌவுள் உடையுளும் கலந்திரீம் கிரீமென்று ஒவ்வில் எழுங்கிலி மந்திர பாதமாச் * செவ்வுள் எழுந்து சிவாய நமஎன்னே. 2 * செவ்வன்
1321 நவாக்கரி யாவது நானறி வித்தை நவாக்கரி உள்ளெழும் நன்மைகள் எல்லாம் நவாக்கரி மந்திர நாவுளே ஓத நவாக்கரி சத்தி நலந்தருந் தானே. 3
1322 நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம் உரந்தரு வல்வினை உம்மை விட் * டோடிச் சிரந்தரு தீவினை செய்வது அகற்றி வரந்தரு சோதியும் வாய்த்திடும் காணே . 4 * டோடுஞ்
1323 கண்டிடும் சக்கரம் வௌளிபொன் செம்பிடை கொண்டிடும் * உள்ளே குறித்த வினைகளை வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும் நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே. 5
1324 நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு நினைத்திடும் நெல்லொடு புல்லினை யுள்ளே நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே. 6
1325 நேர்தரும் அத்திரு நாயகி ஆனவள் யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை கார்தரு வண்ணம் கருதின கைவரும் நார்தரு வண்ணம் நடந்திடு நீயே. 7
1326 நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம் கடந்திடும் காலனும் எண்ணிய நாளும் * படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே. 8 * படைந்திடு
1327 அடைந்திடும் பொன்வௌளி கல்லுடன் எல்லாம் அடைந்திடும் ஆதி அருளும் திருவும் அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும் அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே. 9
1328 அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத் தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன் பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி முரிந்திடு வானை முயன்றடு வீரே. 10
1329 நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள் பாரணி யும் ஹிரீ முன்ஸ்ரீமீறாந் தாரணி யும் புகழ்த் தையல் நல் லாள்தன்னைக் காரணி யும்பொழில் கண்டுகொள் ளீரே. 11
1330 கண்டுகொள் ளும் தனி நாயகி தன்னையும் மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும் பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர் நின்றுகொ ளும்நிலை பேறுடை * யாளையே. 12 * யாளே
1331 பேறுடை யாள்தன் பெருமையை * எண்ணிடில் நாடுடை யார்களும் நம்வச மாகுவர் மாறுடை யார்களும் வாழ்வது தானிலை கூறுடை யாளையும் கூறுமின் நீரே. 13 * வேண்டிடில்
1332 கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வென மாறுமின் வையம் வரும்வழி தன்னையும் தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே. 14
1333 சேவடி சேரச் செறிய இருந்தவர் நாவடி யுள்ளே நவின்றுநின்று ஏத்துவர் பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர் மாவடி காணும் வகையறி வாரே. 15
1334 ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம் ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும் * அம்முத லாகி அவர்க்குஉடை யாள்தனை மைம்முத லாக வழுத்திடு நீயே. 16 * ஐம்முத
1335 * வழுத்திடு நாவுக் கரசிவள் தன்னைப் பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம் தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை முகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே. 17 * வகுத்திடு
1336 கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில் கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம் மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய் வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே. 18
1337 மெல்லியல் ஆகிய மெய்ப்பொரு ளாள்தன்னைச் சொல்லிய லாலே தொடர்ந்தங்கு இருந்திடும் பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல நல்லியல் * பாலே நடந்திடுந் தானே. 19 * பாக
1338 நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம் தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும் கடந்திடும் கல்விக் கரசிவ ளாகப் படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே. 20
1339 பகையில்லை கௌமுத லையது வீறா நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு மிகையில்லை சொல்லிய * பல்லுறு எல்லாம் வகையில்லை யாக வணங்கிடம் தானே. 21 * பல்லுயிரெல்லாம்
1340 வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை நலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம் கலங்கிடும் காம வெகுளி மயக்கந் துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே. 22
1341 தானே கழறித் தணியவும் வல்லனாய்த் தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த் தானே தனிநடங் கண்டவள் தன்னையும் தானே வணங்கித் தலைவனும் ஆமே. 23
1342 ஆமே அனைத்துயிராகிய அம்மையும் தாமே சகலமும் ஈன்றஅத் தையலும் ஆமே அவளடி போற்றி வணங்கிடிற் போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே. 24
1343 புண்ணிய னாகிப் பொருந்தி உலகெங்கும் கண்ணிய னாகிக் கலந்தங்கு இருந்திடும் தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும் * அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே. 25 * புண்ணிய
1344 தானது கம்மீறீம் கௌவது ஈறாம் நானது சக்கரம் நன்றறி வார்க்கெல்லாம் கானது கன்னி கலந்த பராசக்தி கேளது வையங் கிளரொளி யானதே. 26
1345 ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில் களிக்கும் இச் சிந்தையில் காரணம் காட்டித் தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும் அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே. 27
1346 அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே எறிந்திடும் வையத் * திடரவை காணின் மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும் பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே. 28 * திடர்வகை
1347 புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாம் குகையில்லை கொல்வது இலாமையி னாலே வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம் சிகையில்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே. 29
1348 சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர் காய்ந்தெழு மேல்வினை காண்கி லாதவர் பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது மாய்ந்தது காரிருள் மாறொளி தானே. 30
1349 ஒளியது ஹௌமுன் கிரீமது ஈறாம் களியது சக்கரம் கண்டறி வார்க்குத் தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப் * பணிவது பஞ்சாக் கரமது வாமே. 31 * பளியது
1350 ஆமே சதாசிவ நாயகி யானவள் ஆமே அதோமுகத்துள் அறி வானவள் ஆமே சுவைஒளி ஊறுஓசை * கண்டவள் ஆமே அனைத்துயிர் தன்னுளும் ஆமே. 32 * நாற்றம்
1351 தன்னுளும் ஆகித் தரணி முழுதுங்கொண்டு என்னுளும் ஆகி இடம்பெற நின்றவள் மண்ணுளும் நீர்அனல் காலுளும் வானுளும் கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே. 33
1352 காணலும் ஆகும் கலந்துயிர் செய்வன காணலும் ஆகும் கருத்துள் இருந்திடின் காணலும் ஆகும் கலந்து வழிசெயக் காணலும் ஆகும் கருத்துற நில்லே. 34
1353 நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக் கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக் கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும் விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே. 35
1354 மெய்ப் * பொரு ளெளமுதல் ஹௌவது ஈறாக் கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம் தற்பொரு ளாகச் சமைந்தமு தேஸ்வரி நற்பொரு ளாக நடுவிருந் தாளே. 36 * பொருள் வௌமுதல்
1355 தாளதின் உள்ளே சமைந்தமு தேஸ்வரி காலது கொண்டு கலந்துற வீசிடில் நாளது நாளும் புதுமைகள் கண்டபின் கேளது காயமும் கேடில்லை காணுமே. 37
1356 கேடில்லை காணும் கிளரொளி கண்டபின் நாடில்லை காணும் நாண்முதல் அற்றபின் மாடில்லை காணும் வரும்வழி கண்டபின் காடில்லை காணும் கருத்துற்று இடத்துக்கே. 38
1357 உற்றிடம் எல்லாம் உலப்பில்பா ழாக்கிக் கற்றிடம் எல்லாம் கடுவெளி யானது மற்றிடம் இல்லை வழியில்லை தானில்லைச் சற்றிடம் இல்லை சலிப்பற நின்றிடே. 39
1358 நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம் நின்றிடும் * உள்ளம் நினைத்தவை தானொக்கும் நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட நின்றிடும் மேலை விளக்கொளி தானே. 40 * முன்னம்
1359 விளக்கொளி ஸௌமுதல் ஒள்வது ஈறா விளக்கொளிச் சக்கரம் மெய்ப்பொரு ளாகும் விளக்கொளி யாகிய மின்கொடி யாளை விளக்கொளி யாக விளங்கிடு நீயே. 41
1360 விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின் விளங்கிடு மெல்லிய லானது வாகும் விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே. 42
1361 தானே வெளியென எங்கும் நிறைந்தவன் தானே பரம வெளியது வானவள் தானே சகலமும் ஆக்கி அழித்தவன் தானே அனைத்துள அண்ட சகலமே. 43
1362 அண்டத்தி னுள்ளே அளப்பரி யானவன் பிண்டத்தி னுள்ளே பெருபெளி கண்டவன் குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும் கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே. 44
1363 கலப்பறி யார்கடல் சூழ்உலகு எல்லாம் உலப்பறி யாருடல் ஓடுயிர் தன்னைச் சிலப்பறி யார்சில தேவரை நாடித் தலைப்பறி யாகச் சமைந்தவர் * தானே. 45 * தாமே
1364 தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின் மானே மதிவரை பத்திட்டு வைத்தபின் தேனே இரேகை திகைப்பற ஒன்பதில் தானே கலந்த வறை எண்பத் தொன்றுமே. 46
1365 ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம் கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில் என்றியல் அம்மை எழுத்தவை பச்சையே. 47
1366 ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின் காய்ந்தவி நெய்யுள் கலந்துடன் ஓமமு * மாந்தலத்து ஆமுயிர் ஆகுதி பண்ணுமே. 48 * மாய்ந்த வியாயிர மாகுதி பண்ணே
1367 பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின் துண்ணென நேயநற் நோக்கலும் ஆமே. 49
1368 ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி போகின்ற சாந்து சவாது புழுகுநெய் ஆகின்ற கற்பூரம் ஆகோ சனநீரும் சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே. 50
1369 வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில் கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத் தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம் அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே. 51
1370 சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய் எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு முந்தை கிலீம்எழ முன்னிருந் தாளே. 52
1371 இருந்தனர் சத்திகள் அறுபத்தி நால்வர் இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர் இருந்தனர் சூழ எதிர் * சக் கரத்தே இருந்த கரமிரு வில்லம்பு கொண்டே. 53 * சக்கரமாய்
1372 கொண்ட கனகம் குழைமுடி யாடையாய்க் கண்டஇம் முத்தம் கனல்திரு மேனியாய்ப் பண்டமர் சோதிப் படரிதழ் ஆனவள் உண்டு அங்கு ஒருத்தி உணரவல் லாருக்கே. 54
1373 உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கில் கலந்திருந்து எங்கும் கருணை பொழியும் மணந்தெழும் ஓசை ஒளியது காணும் தணந்தெழு சக்கரம் தான்தரு வாளே. 55
1374 தருவழி யாகிய தத்துவ ஞானம் குருவழி யாகும் குணங்களுள் நின்று கருவழி யாகும் கணக்கை அறுத்துப் பெருவழி யாக்கும் பேரொளி தானே. 56
1375 பேரொளி யாய பெரிய * பெருஞ்சுடர் சீரொளி யாகித் திகழ்தரு நாயகி காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம் பாரொளி யாகிப் பரந்துநின் றாளே. 57 * மலர்நடுச்
1376 பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக் குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி பரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம் இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே. 58
1377 மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை அணிபவள் அன்றி அருளில்லை யாகும் தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகிப் பணிபவர்க்கு அன்றோ பரிகதி யாமே. 59
1378 பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி கரந்தன கன்னிகள் அப்படிச் சூழ மலர்ந்திரு கையின் மலரவை * ஏந்தச் சிறந்தவர் ஏத்தும் சிறீம்தன மாமே. 60 * ஏந்திச்
1379 தனமது வாகிய தையலை நோக்கி மனமது ஓடி மரிக்கிலோர் ஆண்டில் கனமவை யற்றுக் கருதிய நெஞ்சம் தினகரன் ஆரிட செய்திய தாமே. 61
1380 ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர் போகின்ற பேரொளி யாய மலரதாய்ப் போகின்ற பூரண மாக நிறைந்தபின் சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே. 62
1381 ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள் ஆகின்ற ஐம்பத்து அறுவகை யானவள் ஆகின்ற ஐம்பத்து அறுசத்தி நேர்தரு ஆகின்ற ஐம்பத்து அறுவகை சூழவே. 63
1382 சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய் ஆங்கணி முத்தம் அழகிய மேனியும் தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய் * ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே. 64 * ஏந்துங்
1383 பாசம தாகிய வேரை யறுத்திட்டு நேசம தாக * நினைத்திரும் உள்முளே நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில் காசினி மேலமர் கண்ணுதல் ஆகுமே. 65
1384 கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி பண்ணுறு நாதம் பகையற நின்றிடில் விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்கார மண்ணுடை நாயகி மண்டல மாகுமே. 66
1385 மண்டலத்து உள்ளே மலர்ந்தெழு தீபத்தை கண்டகத்து உள்ளே கருதி யிருந்திடும் விண்டகத்து உள்ளே விளங்கி வருதலால் தண்டகத்து உள்ளவை தாங்கலும் ஆமே. 67
1386 தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து ஓங்கி எழுங்கலைக்கு உள்ளுணர் * வானவள் ஏங்க வரும்பிறப்பு எண்ணி அறுத்திட வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே. 68 * வானவன்
1387 நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம் பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம் பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள் ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே. 69
1388 அன்றிரு கையில் அளந்த பொருள்முறை இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை மன்றது காணும் வழியது வாகவே கண்டுஅங்கு இருந்தவர் காரணி காணுமே. 70
1389 காரணி சத்திகள் ஐம்பத் * திரண்டெனக் காரணி கன்னிகள் ஐம்பத்து இருவராய்க் காரணி சக்கரத்து உள்ளே கரந்தெங்கும் காரணி தன்னருள் ஆகிநின் றாளே. 71 * திரண்டுடன்
1390 நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில் கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில் கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின் மன்றினில் ஆடும் மணியது காணுமே. 72
1391 கண்ட இச்சத்தி இருதய பங்கயம் கொண்டஇத் தத்துவ நாயகி யானவள் பண்டையவ் வாயுப் பகையை அறுத்திட இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே. 73
1392 இருந்தவிச் சத்தி இருநாலு கையில் பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள் கரந்திடு கேடதும் வில்லம்பு கொண்டங் குரந்தங்கு இருந்தவள் கூத்துகந் தாளே. 74
1393 உகந்தனள் பொன்முடி முத்தார மாகப் பரந்த பவளமும் பட்டாடை சாத்தி மலர்ந்தெழு கொங்கை மணிக்கச்சு அணிந்து தழைந்தங்கு இருந்தவள் தான்பச்சை யாமே. 75
1394 பச்சை இவளுக்கு பாங்கிமார் * ஆறெட்டு கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால் கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய் எச்ச இடைச்சி இனிதிருந் தாளே. 76 * ஆறெட்டுக்
1395 தாளதின் உள்ளே * தாங்கிய சோதியைக் காலது வாகக் கலந்து கொள் என்று மாலது வாக வழிபாடு செய்துநீ பாலது போலப் பரந்தெழு விண்ணிலே. 77 * தயங்கிய
1396 விண்ணமர் நாபி இருதயம் ஆங்கிடைக் கண்ணமர் கூபம் கலந்து வருதலால் பண்ணமர்ந்து ஆதித்த மண்டல மானது தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே. 78
1397 கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள தாபத்துச் சத்தி தயங்கி வருதலால் ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து பாசம் அறுக்கப் பரந்தன சூலமே. 79
1398 சூலம்தண்டு ஓள்வாள் சுடர்பறை ஞானமாய் வேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு காலம்பூப் பாசம் மழுகத்தி * கைக்கொண்டு கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே. 80 * யைக் கொண்டு
1399 எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன் எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம் எண்ணிய பூவிதழ் உள்ளே இருந்தவள் எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே. 81
1400 கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு தொடர்ந்தணி முத்து பவளம்கச் சாகப் படர்ந்தல்குல்பட்டாடை பாதச் சிலம்பு மடந்தை சிறியவள் வந்துநின் றாளே. 82 |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
கனவு சினிமா மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 175 கிராம் வகைப்பாடு : சினிமா ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சினிமா ஒரு கடல் எனத் தெரிந்து ஒதுங்கிப் போறவர்களை விட அதில் குதித்து நீந்த முயற்ச்சி செய்து கொண்டிருப்பவர்களே அதிகம். முடிவு நீந்திக் கரையை அடைந்தவர்கள் ஒரு சிலரே. தாக்குதல் பிடிக்க முடியாமல் மூல்கியவர்களின் எண்ணிக்க்கையே அதிகம். என்னத்தான் சினிமா பலபேர் வாழ்க்கையை அழித்திருந்தாலும் நாமும் ஒரு இயக்குனராகவோ, நடிகராகவோ, ஒளிப்பதிவாளராகவோ, இசையமைப்பாளராகவோ இந்த துறையில் ஏதோ ஒன்றில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு , புகுந்த வீடு வரும் பெண்களை போல், மனம் முழுக்க எதிர்பார்ப்புடன் சென்னையில் வந்து இறங்குபவர்களின் எண்ணிக்கை குறைய வில்லை. அப்படி ஒரு கனவுகளோடு சென்னக்கு வந்து சினிமா என்ற கடலில் நீந்திக் கொண்டு இருப்பவரின் கதை இது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|