பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 15 ...
1401 நின்ற இச்சத்தி நிரந்தர மாகவே கண்டிடு மேரு அணிமாதி தானாகிப் பண்டைய ஆனின் பகட்டை அறுத்திட ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்குண் டாமே. 83
1402 * உண்டோர் அதோமுகம் உத்தம மானது கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி கொண்ட முகம்ஐந்து கூறும் கரங்களும் ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே. 84 * உண்டா மதோமுகம்
1403 நன்மணி சூலம் கபாலம் கிளியுடன் பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும் கன்மணி தாமரை கையில் தமருகம் பொன்மணி பூணாரம் பூசனை யானதே. 85
1404 பூசனைச் சத்திகள் எண்ஐவர் சூழவே நேசவன் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க் காசினைச் சக்கரத் துள்ளே கலந்தவள் மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே. 86
1405 தாரத்தின் உள்ளே தங்கிய சோதியைப் பாரத்தின் உள்ளே பரந்துள் எழுந்திட வேரது ஒன்றிநின்று எண்ணு மனோமயம் காரது போலக் கலந்தெழு மண்ணிலே. 87
1406 மண்ணில் எழுந்த * அகார உகாரங்கள் விண்ணில் எழுந்து சிவாய நமவென்று கண்ணில் எழுந்தது காண்பரிது அன்றுகொல் கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே. 88 * மகர வுகரங்கள்
1407 என்றுஅங்கு இருந்த அமுத கலையிடைச் சென்றுஅங்கு இருந்த அமுத பயோதரி கண்டம் கரம்இரு வெள்ளிபொன் மண்ணடை கொண்டங்கு இருந்தது வண்ணம் அமுதே. 89
1408 அமுதம தாக அழகிய மேனி படிகம தாகப் பரந்தெழும் உள்ளே குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக் கெழுதம தாகிய கேடிலி தானே. 90
1409 கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும் நாடிலி கன்னிகள் நால்ஒன் பதின்மரும் பூவிலி பூவிதழ் உள்ளே இருந்தவர் நாளிலி தன்னை நணுகிநின் றார்களே. 91
1410 நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் கண்டது சோதி கருத்துள் இருந்திடக் கொண்டது ஓராண்டு கூடி வருகைக்கு விண்டஒள் காரம் விளங்கின அன்றே. 92
1411 விளங்கிடு வானிடை நின்றவை எல்லாம் வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக நலங்கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச் சுணங்கிடை * நின்றிவை சொல்லலும் ஆமே. 93 * நின்றவை
1412 ஆமே அதோமுக மேலே அமுதமாய்த் தாமே உகாரம் தழைத்தெழும் சோமனும் காமேல் வருகின்ற கற்பக மானது பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே. 94
1413 பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட அக்களி யாகிய ஆங்காரம் * போயிடும் மற்கட மாகிய மண்டலம் தன்னுள்ளே பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே. 95 * போய்விடும்
1414 பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும் தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும் மானத அவளுக்கு மண்ணும் திலகமாய் கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே. 96
1415 குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர் நடந்தனர் * கன்னிகள் நாலெண்மர் சூழப் பரந்திதழ் ஆகிய பங்கயத் துள்ளே இருந்தனள் காணும் இடம்பல கொண்டே. 97 * சத்திகள்
1416 கொண்டங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக் கண்டங்கு இருந்தனர் காரணத்து உள்ளது பண்டை மறைகள் பரந்தெங்கும் தேடுமால் இன்றுஎன் மனத்துள்ளே இல்லடைந்து ஆளுமே. 98
1417 இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை இல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லை இல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வர் இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே. 99
1418 ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே. 100 நான்காம் தந்திரம் முற்றிற்று ஐந்தாம் தந்திரம் * (* இது வாதுளாகமத்தின் சாரம் என்பர்) 1. சுத்த சைவம்
1419 ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற பேரறி வாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூவுல காளி யிலங்கெழுந் தாரணி நால்வகைச் சைவமு மாமே. 1
1420 சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்று நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே. 2
1421 கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம் முற்பத ஞான முறைமுறை நண்ணியே * சொற்பத மேவித் துரிசற்று மேலான தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே. 3 * தொல்பத
1422 வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர் புதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே. 4 2. அசுத்த சைவம்
1423 இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத் தினையார் இணைக்குழை யீரணை முத்திரை குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே. 1
1424 காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த் தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன் சோதனை செய்து துவாதெச மார்க்கராய் ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே. 2
1425 கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள் கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங் கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே. 3
1426 ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன் மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும் ஏனை நிலமும் எழுதா மறையீறுங் கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே. 4 3. மார்க்க சைவம்
1427 பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம் நன்மார்க்க சாதனம் * மாஞான சாதனந் துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ் சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே. 1 * நல்ஞான
1428 கேடறு ஞானி கிளர்ஞான பூபதி பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின் ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன் பாடுறு சுத்தசை வப்பத்த நித்தனே. 2
1429 ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மையொன் றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே. 3
1430 சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ் சத்தும் அசத்துந் தணந்த பராபரை உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே. 4
1431 சத்தும் அசுத்துந் தணந்தவர் தானாகிச் சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய் முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார் சித்தியு மங்கே சிறந்துள தானே. 5
1432 தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற மன்னைப் பதிபசு பாசத்தை * மாசற்ற முன்னைப் பழமல # முன்கட்டை வீட்டினை உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே. 6 * மாசற # மூழ்கட்டை; மூலத் தைவிட்டு
1433 பூரணம் தன்னிலே வைத்தற்ற * வப்போதே மாரண மந்த மதித்தானந் தத்தோடு நேரென ஈராறு நீதி நெடும் போகங் காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே. 7 * வப்போதம்
1434 மாறாத ஞான மதிப்பற மாயோகந் தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப் பேறான பாவனை பேணி நெறிநிற்றல் கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே. 8
1435 வேதாந்தங் கண்டோர் பிரமமித் தியாதரர் நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள் வேதாந்த * மல்லாத சித்தாந்தங் கண்டுளோர் சாதா ரணமன்ன சைவர் உபாயமே. 9 * மில்லாத
1436 விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள் கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள் எண்ணினைச் சென்றணு காம லெணப்படும் அண்ணலைச் சென்றணு காபசு பாசமே. 10
1437 ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகார நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே. 11 4. கடுஞ் சுத்த சைவம்
1438 வேடம் கடந்து விகிர்தன்றன் பால்மேனி ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப் பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச் சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே. 1
1439 உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து மடலான மாமாயை மற்றுள்ள நீவப் படலான கேவல பாசந் துடைத்துத் திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே. 2
1440 சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்திவித் * தாமூலம் அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற் சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே. 3 * தார்மூலம்; தாமூலன்
1441 நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே தானென்று நானென் றிரண்டிலாத் * தற்பதந் தானென்று நானென்ற தத்துவ நல்கலால் தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே. 4 * தற்பரந்
1442 சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால் ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும் மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும் பாற்பர சாயுச்சிய மாகும் பதியே. 5 5. சரியை
1443 நேர்ந்திடு * மூல சரியை நெறியிதென் றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத் தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே. 1 * மூலன்
1444 உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே. 2
1445 நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. 3
1446 பத்தர் சரிதை படுவோர் கிரியையோர் அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர் சுத்த வியமாதி சாதகர் தூயோகர் சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே. 4
1447 சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ * னாயினோர் சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே. 5 * னாயற்றோர்
1448 கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை அரிய சிவனுரு அமரும் அரூபந் தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை உரியன நேயத் துயர்பூசை யாமே. 6
1449 சரியாதி நான்குந் தருஞான நான்கும் விரிவான வேதாந்த சித்தாந்த மாறும் பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே. 7
1450 சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும் அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே. 8 6. கிரியை
1451 பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண் டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க் கொத்துத் திருவடி நீழல் சரணெனத் தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. 1
1452 கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. 2 (இப்பாடல் 1848-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1453 கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின் ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும் வானக்கன் றாகிய வானவர் கைதொழு மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே. 3
1454 இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம் அதுபணி செய்கின் றவளொரு கூறன் இதுபணி மானுடர் செய்பணி யீசன் பதிபணி செய்வது பத்திமை காணே. 4
1455 பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச் சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில் உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற் சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே. 5
1456 அன்பின் உருகுவ நாளும் பணிசெய்வன் செம்பொன்செய் மேனி கமலத் திருவடி முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள் என்பினுட் சோதி இலங்குகின் றானே. 6 7. யோகம்
1457 நெறிவழி யேசென்று * நேர்மையுள் ஒன்றித் தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச் சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக் குறியறி வாளர்க்குக் கூடலு மாமே. 1 * நேர்மையின்
1458 ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லால் ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான் ஆழி அமரும் அரியயன் என்றுளார் ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே. 2 (இப்பாடல் 1846-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1459 பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல * உணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுதறி யாமே. 3 * உணரவல் லார்கட்கு
1460 உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச் சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால் முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 4 (இப்பாடல் 2622-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1461 எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும் பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன் வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே. 5
1462 விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும் விரும்பிநின் றேசெயின் * மெய்யுரை யாகும் விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும் விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே. 6 * மெய்யுணர்வாகும்
1463 பேணிற் பிறவா உலகருள் செய்திடுங் காணில் தனது கலவியு ளேநிற்கும் நாணில் நகர நெறிக்கே வழிசெயும் ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே. 7
1464 ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர் எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் அத்த னிவனென்றே அன்புறு வார்களே. 8
1465 யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர் ஆகத் தருகிரி யாதி சரியையாந் தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள் ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே. 9
1466 யோகச் சமயமே யோகம் பலவுன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகமாம் யோகநிர் வாணமே யுற்ற பரோதயம் யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே. 10 8. ஞானம்
1467 ஞானத்தின் மிக்க * அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே. 1 * தவநெறி
1468 சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம் உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ் சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ் சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. 2
1469 தன்பால் உலகுந் தனக்கரு காவதும் அன்பா லெனக்கரு ளாவது மாவன என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே. 3
1470 இருக்குஞ் சேம இடம்பிரமமாகும் வருக்கஞ் சராசர மாகும் உலகந் தருக்கிய ஆசார மெல்லாந் தருமே * திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே. 4 * திருக்கமில்
1471 அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன் குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா நெறியறி வார்க்கிது * நீர்த்தொனி யாமே. 5 * நீர்த்தோணி யாமே
1472 ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள் ஏனம் விளைந்தெதி ரேகாண் வழிதோறுங் கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே. 6
1473 ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந் தானிக் குலத்தோர் சரியை கிரியையே. 7
1474 ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல் ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே. 8
1475 நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன் புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன் கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன் திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. 9
1476 ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல் ஞான விசேடமே * நாடு பரோதய ஞானநிர் வாணமே # நன்றறி வானருள் $ ஞானாபி டேகமே நற்குறு பாதமே. 10 * நண்ணும் பரோதயம் # நற்சிவோ கம்பாவம் $ ஞானபி டேகமே 9. சன்மார்க்கம்
1477 சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத் தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க் கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே. 1
1478 சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே. 2 (இப்பாடல் 1567-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1479 தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத் தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே. 3
1480 தெளிவறி யாதார் சிவனை யறியார் தெளிவறி யாதார் * சீவனு மாகார் தெளிவறி யாதார் சிவமாக மாட்டார் தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. 4 * சிவனு
1481 தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந் தாவை னாயுறலானசன் மார்க்கமே. 5
1482 சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ் சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ் சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம் எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ. 6
1483 சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார் சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே. 7
1484 சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப் பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால் நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே. 8
1485 அன்னிய பாசமும் ஆகுங் கருமமும் முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும் பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந் தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே. 9
1486 பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப் கசியாத நெஞ்சங் கசியக் கசிவித் * தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற் றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே. 10 * சுசியாத
1487 மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர் மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே. 11 10. சகமார்க்கம்
1488 சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது மனமார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் துன்மார்க்க ஞானத் துறதியு மாமே. 1
1489 மருவுந் துவாதச மார்க்கமில் லாதார் குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடாம் வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும் உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே. 2
1490 யோகச் சமாதியின் உள்ளே யகலிடம் யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே. 3
1491 யோகமும் போகமும் யோகியர்க் காகுமால் யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர் போகம் புவியிற் புருடார்த்த சித்திய தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே. 4
1492 ஆதார சோதனை யானாடி சுத்திகள் மேதாதி யீரெண் * கலாந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி சாதா ரணங்கெட லாஞ்ச மார்க்கமே. 5 * கலந்தது (இப்பாடல் 1707-ம் பாடலாகவும் வந்துள்ளது)
1493 பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை அணங்கி யெறிவ னயிர்மன வாளாற் கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன் வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே. 6
1494 வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும் வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும் உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப் பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே. 7 11. சற்புத்திர மார்க்கம்
1495 மேவிய சற்புத்திர * மார்க்க மெய்த்தொழில் தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில் ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத் தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே. 1 * மார்க்கமே தொழில்
1496 பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட் டன்னமும் * நீசுத்தி செய்தன்மர் # றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே. 2 * நீர்சுத்தி செய்தலும் # மாசற்ற
1497 அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும் மறுகா நரையன்னந் தாமரை நீலங் குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ் சிறுகால் * அறநெறி சேரகி லாரே. 3 * அரனெறி
1498 அருங்கரை யாவது அவ்வடி நீழற் பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம் ஒருங்கரை யாயுல கேழினொத் தானே. 4
1499 உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின் பயந்தும் பிறவிப் பயனது வாகும் பயந்து பிரிக்கிலப் பான்மையு னாமே. 5
1500 நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத் துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ் சென்று வெளிப்படுந் தேவர் பிரானே. 6 |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
கிரிவலம் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: மே 2016 பக்கங்கள்: 128 எடை: 120 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-93-85118-68-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: திருவண்ணாமலை... நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் தலம். இங்கே கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடு. ஏன் இங்கே கிரிவலம் செய்ய வேண்டும்? மற்ற தலங்களில் கருவறையில் உருவமாக இறைவன் இருப்பார்; இங்கே இந்த மலையே சிவன் வடிவாகக் கருதப்படுகிறது. ஆலயத்தை வலம் வருவது போல இங்கே மலையை வலம் வருவது புண்ணியம் தருகிறது. * கிரிவலம் செல்லும் பலருக்கு அதன் வழிமுறைகளும் மகத்துவமும் புரிவதில்லை. * கிரிவலத்தின் ஆன்மிக விளக்கம் என்ன? * கிரிவலத்தை எங்கே ஆரம்பிக்க வேண்டும்? * எந்தெந்த நாட்கள் கிரிவலம் செய்ய உகந்தவை? * கிரிவலம் வரும்போது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? * கிரிவலப் பாதையில் இருக்கும் அஷ்டலிங்க ஆலயங்களின் மகத்துவம் என்ன? * தரிசிக்க வேண்டிய இதர முக்கிய ஆலயங்கள், யோகிகள் மற்றும் துறவிகளின் ஆசிரமங்கள்... சகலமும் சொல்லும் பரவச ஆன்மிக வழிகாட்டி இது! நேரடியாக வாங்க : +91-94440-86888
|