பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 2 ... 8. குரு மட வரலாறு
101. வந்த மடம் ஏழும் மன்னுஞ் சன்மார்க்கத்தின் முந்தி உதிக்கின்ற மூலன் *மடவரை தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம் #சுந்தர ஆகமச் சொல் மொழிந்தானே. 1 * வடவரை # சுந்தரன்
102. கலந்தருள் காலாங்கர் தம்பால கோரர் நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர் புலங்கொள் பரமானந்தர் போக தேவர் நிலந்திகழ் மூவர் நிராமயத் தோரே. 2 9. மும்மூர்த்திகளின் முறைமை
(திரிமூர்த்திகளின் சேட்ட கனிட்ட முறைமை)
103. அளவில் இளமையும் அந்தமும் ஈறும் அளவியல் காலமும் *நாலும் உணரில் தளர்விலன் சங்கரன் தன்னடியார் சொல் அளவில் பெருமை அரி அயற்காமே. 1 * நாளும்
104. ஆதிப் பிரானும் அணி மணிவண்ணனும் ஆதிக் கமலத்து அலர்மிசையானும் சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார் பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே. 2
105. ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார் தூசு பிடித்தவர் *தூர் அறிந்தார்களே. 3 * தூதறிந்
106. சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த அவை முதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும் அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே. 4 (இப்பாடல் 990-ம் பாடலாகவும் வந்துள்ளது)
107. பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில் அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை நயனங்கள் மூன்று உடை நந்தி தமராம் வயனம் பெறுவீர் அவ் வானவ ராலே. 5
108. ஓலக்கம் சூழ்ந்த உலப்பு இலி தேவர்கள் பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே. 6
109. வானவர் என்றும் மனிதர் இவர் என்றும் தேன் அமர் கொன்றைச் சிவனருள் அல்லது தான் அமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்று இல்லை ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே. 7
110. சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று பேதித் *தவரைப் பிதற்றுகின்றாரே. 8 * தவனைப்
111. பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறம் ஆகி வரத்தினுள் மாயவனாய் அயனாகித் தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக் கரத்தினுள் நின்று கழிவு செய்தானே. 9
112. தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான் கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற தான் ஒரு கூறு சலமயன் ஆமே. 10 பாயிரம் முற்றிற்று
முதல் தந்திரம்
(காரணாகமத்தின் சாரம் என்பர்) 1. உபதேசம்
113. விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு தண் நின்ற தாளைத் *தலைக்காவல் முன்வைத்து உண்ணின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக் கண் நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே. 1 * தலைகாவல் மேல்வைத்து
114. களிம்பு அறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி களிம்பு அறுத்தான் அருள் கண்விழிப்பித்துக் களிம்பு அணுகாத கதிரொளி காட்டிப் பளிங்கில் பவளம் பதித்தான் பதியே. 2
115. பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அனாதி பதியினைச் சென்று அணுகா பசு பாசம் பதி அணுகின் பசு *பாச நில்லாவே. 3 * பாசம் நிலாவே
116. வேயின் எழும் கனல் போலே இம் மெய்யெனும் கோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயா என்னும் தோயம் அதாய் எழும் சூரியனாமே. 4
117. சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் சூரியன் தோற்ற முன் அற்ற மலங்களே. 5
118. மலங்களைந் தாமென மாற்றி அருளித் தலங்களைந் தானற் சதாசிவமான புலங்களைந் தானப் பொதுவினுள் நந்தி நலங்களைந் தானுள் நயந்தான் அறிந்தே. 6
119. அறிவு ஐம்புலனுடனே நான்றது ஆகி நெறி அறியாது உற்ற நீர்ஆழம் போல அறிவு அறிவுள்ளே அழிந்தது போலக் குறி அறிவிப்பான் குருபரன் ஆமே. 7
120. ஆமேவு பால் நீர் *பிரிக்கின்ற அன்னம்போல் தாமே தனிமன்றில் தன்னந்தனி நித்தம் தீமேவு பல்கரணங்களுள் உற்றன தாமேழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே. 8 * பிறிக்கின்ற
121. வித்தைக் கெடுத்து வியாக்கிரத்தே மிகச் சுத்தத் துரியம் பிறந்து துடக்கற ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே. 9
122. சிவயோகமாவது சித்து அசித்து என்று தவயோகத்து உள்புக்குத் தன் ஒளி தானாய் அவயோகம் சாராது அவன்பதி போக நவயோக நந்தி நமக்களித் தானே. 10
123. அளித்தான் உலகெங்கும் தான் ஆன உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள் அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே. 11
124. வெளியில் *வெளிபோய் விரவிய வாறும் அளியில் #அளிபோய் அடங்கிய வாறும் ஒளியில் $ஒளிபோய் ஒடுங்கிய வாறும் தெளியும் அவரே சிவ @சித்தர் தாமே. 12 * வெளியாய் # அளியாய் $ ஒளியாய் @ சித்த ராமே
125. சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர முத்தர்தம் முத்தி முதல் முப்பத் தாறே. 13
126. முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்குச் செப்ப அரிய சிவம் கண்டு தான் தெளிந்து அப்பரிசாக அமர்ந்திருந்தாரே. 14
127. இருந்தார் சிவமாகி எங்குந் தாம் ஆகி இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்து அங்கு இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே. 15
128. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதுஞ் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பர் கண்டார் அச் சுருதிக்கண் தூக்கமே. 16
129. தூங்கிக் கண்டார் சிவ லோகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் சிவ போகமும் தம் உள்ளே தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே. 17
130. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை அவ்வாறு அருள் செய்வன் ஆதி அரன் தானும் ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும் செவ்வானில் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம். 18
131. மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய் மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றினுள் ஆடுந் திருக்கூத்தைப் பேணித் தொழுதென்ன பேறு பெற்றாரே. 19
132. பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே. 20
133. பெருமை சிறுமை அறிந்து எம் பிரான் போல் அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர் ஒருமையுள் ஆமைபோல் உள் ஐந்து அடக்கி இருமையும் கேட்டிருந்தார் புரை அற்றே. 21
134. புரை அற்ற பாலினுள் நெய் கலந்தாற்போல் திரை அற்ற *சிந்தைநல் ஆரியன் செப்பும் உரையற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால் கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே. 22 * சிந்தையுள் சிவனவன் செப்பும்
135. சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான் சாரில் சித்துக்குச் சித்து அன்றி சேர்விடம் வேறு உண்டோ சுத்த வெளியில் சுடரில் சுடர்சேரும் அத்தம் இது குறித்து ஆண்டுகொள் அப்பிலே. 23
136. அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பு எனப் பேர்ப் பெற்று உருச்செய்த அவ்வுரு அப்பினில் கூடிய அது ஒன்றாகுமாறு போல் செப்பின் இச்சீவன் சிவத்துள் அடங்குமே. 24
137. அடங்கு பேர் அண்டத்து அணு அண்டம் சென்று அங்கு இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறு உண்டோ கடந்தொறும் நின்ற *உயிர் கரை காணில் திடம்பெற நின்றான் திருவடி தானே. 25 * உயிர்கரிகாணும்
138. திருவடியே சிவமாவது தேரில் திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில் திருவடியே செல்கதி அது செப்பில் திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே. 26
139. தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே. 27
140. தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும் தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும் தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும் தானே தனித்து எம்பிரான்தனைச் சந்தித்தே. 28
141. சந்திப்பது நந்தி தன்திருத் தாளிணை சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி வந்திப்பது நந்தி நாமம்என் வாய்மையால் புந்திக்குள் நிற்பது நந்திபொற் பாதமே. 29
142. போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப் போதம் தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார் நாதன் நடத்தால் நயனங் களிகூர வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே. 30 2. யாக்கை நிலையாமை
143. மண் ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென்று இருந்தது தீவினைச் சேர்ந்தது விண்ணின்று நீர் விழின் மீண்டு மண் ஆனாற் போல் எண் இன்றி மாந்தர் இறக்கின்ற வாறே. 1
144. பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழி நடவாதே. 2
145. ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேர் இட்டுச் சூரை அங்காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே. 3
146. காலும் இரண்டு முகட்டு அலகு ஒன்று உள பாலுள் பருங்கழி முப்பத்திரண்டு உள மேல் உள கூரை பிரியும் பிரிந்தால்முன் போல் உயிர் மீளப் புக அறியாதே. 4
147. சீக்கை விளைந்தது செய்வினை மூட்டு இற்ற ஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது மூக்கினில் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க் *காக்கைக்குப் பலி காட்டியவாறே. 5 * காக்கைப் பலியிட்டுக் கைகொட்டு மாறே
148. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார் இடப்பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே. 6
149. மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான் மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் சென்று அத்தா என்னத் திரிந்திலன் தானே. 7
150. வாசந்தி பேசி மணம் புணர்ந்து அப்பதி நேசந் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை ஆசந்தி மேல் வைத்து அமைய அமுதிட்டுப் பாசம் தீச்சுட்டுப் பலி அட்டினார்களே. 8
151. கைவிட்டு நாடிக் கருத்து அழிந்து அச்சு அற நெய் அட்டிச் சோறு உண்ணும் ஐவரும் போயினார் மை இட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே மெய் விட்டுப் போக விடைகொள்ளு மாறே. 9
152. பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டு அற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்பு உறு காலந் துரிசு வர மேன்மேல் அன்புடையார்கள் அழுத அகன்றார்களே. 10
153 நாட்டுக்கு நாயகன் நம் ஊர்த் தலைமகன் காட்டுச் சிவிகை ஒன்று ஏறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே. 11
154. முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் செப்ப மதிள் உடைக் *கோயிலுள் வாழ்பவர் செப்ப மதிள் உடைக் #கோயில் சிதைந்த பின் ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் $தார்களே. 12 * கோட்டையுள் # கோட்டை $ தாரே
155. மதுவூர் குழலியும் மாடும் மனையும் இதுவூர் ஒழிய *இதணம் அது ஏறிப் பொதுவூர் புறஞ் சுடுகாடு அது நோக்கி மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே. 13 * விமானம்
156. வைச்சு அகல் உற்றது கண்டு மனிதர்கள் அச்சு அகலாது என நாடும் அரும்பொருள் பிச்சு அதுவாய்ப் பின் தொடர்வுறும் மற்று அவர் எச்சு அகலா நின்று இளைக்கின்ற வாறே. 14
157. ஆர்த்து எழு சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின் வேர்த்தலைப் போக்கி விறகு இட்டு எரி மூட்டி நீர்த்தலை மூழ்குவர் நீதி இலோரே. 15
158. வளத்து இடை முற்றத்து ஓர் மாநிலம் முற்றும் குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான் குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர் உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே. 16
159. ஐந்து தலைப்பறி ஆறு சடை உள சந்து அவை முப்பது சார்வு பதினெட்டுப் பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து வெந்து கிடந்தது மேல் அறியோமே. 17
160. அத்திப் பழமும் அறைக்கீரை நல் வித்தும் *கொத்தி உலைப்பெய்து கூழ் அட்டு வைத்தனர் அத்திப் #பழத்தை அறைக்கீரை வித்து உண்ணக் $கத்தி எடுத்தவர் காடு புக்காரே. 18 * கொத்திக் குடறிக் கூட்டில் அடைத்தது # பழத்தின் அமுதம் அறிந்தபின் $ கத்திக்கொண் டைவரும் காடுறைந்தாரே
161. மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை காலும் இரண்டு முகட்டு அலகு ஒன்று உண்டு ஓலையால் மேய்ந்தவர் ஊடு வரியாமை வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் *தளிகையே. 19 * தளியே
162. கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை ஆடும் இலையமும் அற்றது அறுதலும் பாடுகின்றார் சிலர் பண்ணில் அழுதிட்டுத் தேடிய தீயினில் தீயவைத்தார்களே. 20
163. முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் இட்டது தான் இல்லை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழுபதில் *கேடு அறியீரே. 21 * கேட்டறி
164. இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான் முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சு இருள் ஆவது அறியா உலகம் படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே. 22
165. மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த உடலும் உயிரும் உருவம் தொழாமல் இடர் படர்ந்து ஏழாம் நரகில் கிடப்பர் குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. 23
166. குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு இடையும் அக்காலம் இருந்தது நடுவே புடையும் மனிதனார் போகும் அப்போதே அடையும் இடம் வலம் ஆருயிராமே. 24
167. காக்கை கவரில் என் கண்டார் பழிக்கில் என் பால் துளி பெய்யில் என் பல்லோர் பழிச்சில் என் தோற்பையுள் நின்று தொழில் அறச் செய்து ஊட்டும் கூத்தன் புறப்பட்டுப் போன இக்கூட்டையே. 25 3. செல்வம் நிலையாமை
168. அருளும் அரசனும் ஆனையும் தேரும் பொருளும் பிறர் கொள்ளப் போவதன் முன்னம் தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரில் மருளும் பினை அவன் மாதவம் அன்றே. 1
169. இயக்கு உறு திங்கள் இருள்பிழப்பு ஒக்கும் துயக்கு உறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா மயக்கு அற நாடுமின் வானவர் கோனைப் பெயல் கொண்டல் போலப் பெருஞ் *செல்வம் ஆமே. 2 * செலவாமே
170. தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள் உன் உயிர் போம் உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காண் ஒளி கண்டு கொள்ளீரே. 3
171. ஈட்டிய தேன்பூ மணம் கண்டு இரதமும் கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பு இடை வைத்திடும் ஓட்டித் துரந்திட்டு அது வலியார் கொளக் காட்டிக் கொடுத்து அது கைவிட்ட வாறே. 4
172. தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தைக் கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே. 5
173. மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர் வீடுபேறு ஆகச் சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே. 6
174. வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந் தாரும் அளவு ஏது எமக்கு என்பர் ஒண்பொருள் மேவும் அதனை விரிவு செய்வார்கட்குக் கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே. 7
175. வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இல்லை பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது நாட்டிய தாய் தமர் வந்து வணங்கிப் பின் காட்டிக் கொடுத்து அவர் கைவிட்ட வாறே. 8
176. உடம்பொடு உயிரிடை விட்டு ஓடும் போது அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும் விடும்பரிசாய் நின்ற மெய்ந் நமன் தூதர் சுடும் பரிசத்தையுஞ் சூழகி லாரே. 9 4. இளமை நிலையாமை
177. கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே விழக் கண்டும் தேறார் விழி இலா மாந்தர் குழக்கன்று மூத்து எருதாய்ச் சில நாளில் விழக் கண்டும் தேறார் வியன் உலகோரே. 1
178. ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப் பூண்டுகொண்டு ஆரும் புகுந்து அறிவார் இல்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் தூண்டு விளக்கின் சுடர் அறியாரே. 2
179. தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடைமுறை ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்து அற்ற கங்கைப் படர்சடை நந்தியை ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே. 3
180. விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல் அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக் கரும்பொத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தேனே. 4
181. பாலன் இளையன் விருத்தன் என நின்ற காலம் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி மேலும் கிடந்து விரும்புவன் *யானே. 5 * நானே
182. காலை ஏழுந்தவர் நித்தலும் நித்தலும் மாலை படுவதும் வாணாள் கழிவதும் *சாலும் அவ் ஈசன் சலவியன் ஆகிலும் ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே. 6 * சாலவு மீசன் சருவிய
183. பரு ஊசி ஐந்தும் ஓர் பையினுள் வாழும் பரு ஊசி ஐந்தும் பறக்கும் விருகம் பரு ஊசி ஐந்தும் *பனித்தலைப் பட்டால் #பரு ஊசிப் பையும் பறக்கின்ற வாறே. 7 * பணித்தலைப்; பணி தலைப் # பருவூசி யைந்தும்
184. கண்ணதும் காய்கதிரோனும் உலகினை உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் விண் உறுவாரையும் வினை உறு வாரையும் எண் உறும் முப்பதில் ஈர்ந்தொழிந்தாரே. 8
185. ஒன்றிய ஈரெண் கலையும் உடன் உற நின்றது கண்டு நினைக்கிலர் *நீசர்கள் கன்றிய காலன் கருக்குழி வைத்தபின் சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே. 9 * நீதர்கள் (இப்பாடல் 863-ம் பாடலாகவும் வந்துள்ளது)
186. எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் எய்திய நாளில் எறிவது அறியாமல் எய்திய நாளில் *இருந்து கண்டேனே. 10 * இரந்துகண் 5. உயிர் நிலையாமை
187. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார் அழைக்கின்ற போது அறியார் அவர் தாமே. 1
188. ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. 2
189. மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள அத்துள்ளே வாழும் அரசனும் அஞ்சு உள்ள அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன் மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 3
190. வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடும் நந்தியை வேங்கடம் என்றே விரகு அறியாதவர் தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே. 4
191. சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன் அன்று உணர் வால் அளக்கின்றது அறிகிலர் நின்று உணரார் இந் நிலத்தின் மனிதர்கள் பொன்று உணர்வாரிற் புணர்க்கின்ற மாயமே. 5
192. மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை பீறும் அதனைப் பெரிது உணர்ந்தார் இல்லை கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவது ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே. 6
193. துடுப்பிடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்சு எரி கொள்ளி அடுத்து எரி யாமல் கொடுமின் அரிசி விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே. 7
194. இன்பு உறு வண்டு இங்கு இனமலர் மேற்போய் உண்பது வாசம் அதுபோல் உயிர்நிலை இன்புற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே. 8
195. ஆம் விதி நாடி அறம் செய்மின் அந்நிலம் போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின் நாம்விதி வேண்டும் அது என் சொலின் மானிடர் ஆம்விதி பெற்ற அருமை வல்லார்க்கே. 9
196. அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின் வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வன்மின் செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போது ஒரு தவ்விக் கொடு உண்மின் தலைப்பட்ட போதே. 10 6. கொல்லாமை
197. பற்று ஆய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நல் தார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் உற்று ஆரும் ஆவி அமர்ந்து இடம் உச்சியே. 1
198. கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லிடிக் காரர் *வலிக்கயிற் றாற்கட்டிச் செல்லிடு நில் என்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே. 2 * வரிக்கயிற் 7. புலால் மறுத்தல்
199. பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன் தன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி முறித்து வைப்பாரே. 1
200. கொலையே களவு கள் காமம் பொய்கூறல் மலைவான பாதகமாம் அவை நீக்கித் தலையாம் சிவனடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே. 2 |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 136 எடை: 150 கிராம் வகைப்பாடு : கட்டுரை ISBN: 978-93-8673-763-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 190.00 தள்ளுபடி விலை: ரூ. 175.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நம் சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகளை நல்ல நகைச்சுவையுணர்வுடன் விமர்சிக்கும் கட்டுரைகள் இவை. அதுமட்டுமன்றி, ஆழ்ந்த சங்க இலக்கிய மற்றும் பழந்தமிழிலக்கிய வாசிப்புள்ள தோழர் சோ.முத்துமாணிக்கம், இன்றைய நிகழ்வுகளை அன்றைய இலக்கிய வரிகளுடன் இணைத்துப் பேசும் பாங்கு சுவைமிக்கது. நல்ல மொழி வளத்துடனும் சமூக அக்கறையுடனும் நகைச்சுவை உணர்வுடனும் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகளை வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள். - ச. தமிழ்ச்செல்வன் தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளிவந்து பலருடைய பாராட்டுகளைப் பெற்ற சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|