பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 7 ...
601 ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை ஒருபொழுது உன்னார் உயிருட் சிவனை ஒருபொழுது உன்னார் சிவனுறை சிந்தையை ஒருபொழுது உன்னார் சந்திரப் *பூவே. 4 * பூவையே
602 மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச் சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே. 5
603 எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருப்பினும் கண் ஆர் அமுதினைக் கண்டு அறிவார் இல்லை உள் நாடி உள்ளே ஒளியுற *நோக்கினால் கண்ணாடி போலக் #கலந்து நின்றானே. 6 * நோக்கிற்; நோக்கிடிற் # கலந்திருந்தானே
604 நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவு இல்லை ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை *தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே. 7 * வேட்டமும்
605 நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித் துயரற நாடியே தூங்க வல்லார்க்குப் பயனிது காயம் பயமில்லை தானே. 8
606 மணி கடல் யானை *வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளை பேரிகை யாழ் தணிந்தெழு நாதங்கள் தாம் இவை பத்தும் பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே. 9 * வளர்குழல்
607 கடலொடு மேகங் களிறொடும் ஓசை அடவெழும் வீணை அண்டர் அண்டத்துச் *சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை திடமறி யோகிக்கு அல்லால் தெரியாதே. 10 * சுடர்மனு; சுடர்மணி
608 ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் இயங்கும் பரிந்து உயிராய் நிற்கும் ஓசை அதன் மணம் போல விடுவது ஓர் ஓசையாம் ஈசன் உணர வல்லார்க்கே. 11
609 நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவிலே நல் யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே. 12
610 உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும் துதிக்கின்ற தேசு உடைத் தூங்கு இருள் நீங்கி அதிக்கின்ற *ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக்கொன்றை ஈசன் கழல் சேரல் ஆமே. 13 * ஐவர் அருள்நாதமோடும்
611 பள்ளி அறையிற் பகலே இருளில்லை கொள்ளி அறையிற் கொளுந்தாமல் காக்கலாம் ஒள்ளிது அறியில் ஓர் ஓசனை நீளிது வெள்ளி அறையில் விடிவு இல்லைத் தானே. 14
612 கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித் தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின் பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே. 15
613 அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம் அவ்வவர் மண்டலம் அவ்வவர்க்கே வரில் அவ்வவர் மண்டலம் ஆயம் மற்றோர்க்கே. 16
614 இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டறை உள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் துளைப் பெரும் பாசந் துருவிடும் ஆகில் இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே. 17
615 முக்குணம் ஊடு அற வாயுவை மூலத்தே சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத் தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க வைக்கும் உயர்நிலை வானவர் கோனே. 18
616 நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே மடலித்த வாணிக்கு இருவிரல் உள்ளே கடலித்து இருந்து கருத வல்லார்கள் சடலத் தலைவனைத் தாம் அறிந்தாரே. 19
617 * அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று செறிவான மாயை சிதைத்து அருளாலே பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலையறிந்தாரே. 20 * அறியா யசந்தென்னு (இப்பாடல் 2471-ம் பாடலாகவும் வந்துள்ளது) 9. சமாதி
618 சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும் சமாதி யமாதியில் தான் எட்டும் சித்தி சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே சமாதி யமாதி தலைப்படும் தானே. 1
619 விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடின் சந்தியில் ஆன சமாதியில் கூடிடும் அந்தம் இலாத அறிவின் அரும்பொருள் சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே. 2
620 மன்மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு மன்மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கில்லை மன்மனத்துள்ளே மகிழ்ந்திருப்பார்க்கு மன்மனத்துள்ளே மனோலயம் ஆமே. 3
621 விண்ட அலர் கூபமும் விஞ்சத்து அடவியும் கண்டு உணர்வாகக் கருதி இருப்பர்கள் செண்டு வெளியில் செழுங்கிரியத்திடை கொண்டு குதிரை குசை செறுத்தாரே. 4
622 மூல நாடி * முகட்டல குச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் மேலை வாசல் வெளியுறக் கண்டபின் காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே. 5 * முக்கடல்
623 மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர் கண்டிட நிற்குங் கருத்து நடுவாக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே. 6
624 பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவைத் தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்குத் தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே. 7
625 உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர் கருவரை பற்றிக் கடைந்து அமுது உண்டார் அருவரை ஏறி அமுது உண்ணமாட்டார் திருவரையா மனம் தீர்ந்து அற்றவாறே. 8
626 நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச் செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை ஆக்கி அருத்தி ஒடுக்கிப் போய்க் கொம்பு ஏறிக் கும்பிட்டுக் கூட்டம் இட்டாரே. 9
627 மூலத்து மேலது முச்சதுரத்தது காலத்திசையில் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே. 10
628 கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் புணர்மதியோடு உற்றுத் தற்பரமாகத் தகும் தண்சமாதியே. 11
629 தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும் வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும் குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும் துலைப்பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே. 12
630 சோதித் தனிச்சுடராய் நின்ற தேவனும் ஆதியும் *உள் நின்ற சீவனும் ஆகுமால் ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும் ஆதி அடி பணிந்து அன்பு உறுவாரே. 13 * முன் நின்ற
631 சமாதி செய்வார்க்குத் தகும்பல யோகம் சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில் சமாதிதான் இல்லை தான் அவன் ஆகில் சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே. 14 10. அட்டாங்க யோகப் பேறு இயமம்
632 போதுஉகந் தேறும் புரிசடையான் அடி யாதுஉகந்தார் அமராபதிக்கே செல்வர் ஏதுஉகந்தான் இவன் என்றருள் செய்திடு மாதுஉகந்து ஆடிடும் மால்விடை யோனே. 1 நியமம்
633 பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ் கற்றிருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு முற்றெழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத் தெற்றுஞ் சிவபதம் சேரலும் ஆமே. 2 ஆதனம்
634 வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த் திருந்து அமராபதிச் செல்வன் இவனெனத் தருந்தண் முழவம் குழலும் இயம்ப இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே. 3 பிராணாயாமம்
635 செம்பொற் சிவகதி சென்றுஎய்துங் காலத்துக் கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர்கொள்ள எம்பொற் தலைவன் இவனாம் எனச்சொல்ல இன்பக் கலவி இருக்கலும் ஆமே. 4 பிரத்தியாகாரம்
636 சேருறு காலந் திசை நின்ற தேவர்கள் ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் காருறு கண்டனை மெய்கண்ட வாறே. 5 தாரணை
637 நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப் பல்வழி எய்தினும் பார்வழியாகுமே. 6 தியானம்
638 தூங்க *வல்லார்க்கும் துணையேழ் புவனமும் வாங்க வல்லார்க்கும் வலிசெய்து #நின்றிடுந் தேங்க $வல்லார்க்கும் திளைக்கும் அமுதமுந் தாங்க வல்லார்க்குந் தன்னிட மாமே. 7 * வல்லார்க்குத் # நின்றிட்டுத் $ வல்லார்க்குத் சமாதி
639 காரிய மான உபாதியைத் தான் கடந்து ஆரிய காரணம் ஏழும் தன் பாலுற ஆரிய காரண மாய தவத்திடைத் தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே. 8 11. அட்டமா சித்தி (இ·து ஒரு பிரதியில் பரகாயம் என்றுள்ளது) பரகாயப் பிரவேசம்
640 பணிந்து எண் திசையும் பரமனை நாடித் துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை அணிந்து எண் திசையினும் அட்டமா சித்தி தணிந்து எண் திசைச்சென்று தாபித்த வாறே. 1
641 பரிசு அறி வானவர் பண்பன் அடியெனத் துரிசு அற நாடியே தூவெளி கண்டேன் அரியது எனக்கு இல்லை அட்டமா சித்தி பெரிது அருள் செய்து பிறப்பு அறுத்தானே. 2
642 குரவன் அருளின் குறிவழி மூலன் பரையின் *மணம் மிகு சங்கட்டம் பார்த்துத் தெரிதரு சாம்பவி கேசரி சேரப் பெரிய சிவகதி பேறு எட்டாம் சித்தியே. 3 * மனமிகு சக்கட்ட மார்த்துத்
643 காய ஆதி பூதம் கலை காலம் மாயையில் ஆயாது அகல அறிவு ஒன்று அனாதியே ஓயாப் பதி அதன் உண்மையைக் கூடினால் வீயாப் பரகாயம் மேவலும் ஆமே. 4
644 இருபதினாயிரத்து எண்ணூறு பேதம் மருவிய கன்மம் மாமந்த யோகம் தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே * அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே. 5 * அருமிரு
645 மதிதனில் ஈராறாய் மன்னும் கலையில் உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டுப் பதியும் ஈராறு ஆண்டு பற்று அறப் பார்க்கின் திதமான ஈராறு சித்திகள் ஆமே. 6
646 நாடும் பிணியாகு நன் சனம் சூழ்ந்தக்கால் நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம் பீடு ஒன்றி நால்வாய் அச் சித்தி பேதத்தின் நீடும் துரம் கேட்டல் நீள் முடிவு ஈராறே. 7
647 ஏழானதில் சண்ட வாயுவின் வேகியாம் தாழா நடைபல யோசனை சார்ந்திடும் சூழான ஓர் எட்டில் தோன்றா நரை திரை தாழான ஒன்பதில்தான் பரகாயமே. 8
648 ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன் * ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி சீர் ஒன்றும் மேல் ஏழ் கீழேழ் புவிச்சென்று # ஏரொன்று வியாபியாய் நிற்றல் ஈராறே. 9 * நேரொன்று # ஓரொன்று
649 தானே அணுவும் சகத்துத் தன் *நொய்ம்மையும் மானாக் #கனமும் பரகாயத் தேகமும் தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும் ஆனாத உண்மையும் $வியாபியும் ஆம் எட்டே. 10 * நோன்மையும் # ககனமும் $ வியாப்பிய
650 தாங்கிய தன்மையும் தான் அணுப் பல்லுயிர் வாங்கிய காலத்தும் மற்று ஓர் குறை இல்லை ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்தும் மிக்கு * கோங்கி வரமுத்தி முந்திய வாறே. 11 * கோங்கிய வாமுத்தி
651 முந்திய முந்நூற்று அறுபது காலமும் வந்தது நாழிகை வான்முதலாயிடச் சிந்தை *செயச் செய மண்முதல் தேர்ந்தறிந் துந்தியில் நின்று உதித்து எழுமாறே. 12 * செய் மண் முதல் தேர்ந்தறி வார்வல முந்தியுள்
652 சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே முத்தம் தெரிந்து உற்ற மோனர் சிவமுத்தர் சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர் சித்தம் பரத்தில் திருநடத்தோரே. 13
653 ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன் ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட ஒத்த உடலும் உயிரும் இருந்ததே. 14
654 இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில் இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய் இருக்கு * முடலில் இருந்தில வாகில் இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே. 15 * முடலீ திருந்தில
655 வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும் வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய் வீங்கிய வாதமுங் கூனு * முடமதாய் வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே. 16 * முடமதாம்
656 கண்ணில் வியாதி உரோகம் தனஞ்செயன் கண்ணில் இவ் ஆணிகள் காசம் அவன் அல்லன் கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால் கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே. 17
657 நாடியின் ஓசை நயனம் இருதயந் தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத் தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்றங் குணர்ந்திருந் *தாரே. 18 * தார்க்களே
658 ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள் ஒன்பது நாடி உடையது ஓர் ஓர் இடம் ஒன்பது நாடி ஒடுங்க வல்லார்கட(கு) ஒன்பது *காட்சி இலை பல வாமே. 19 * வாசல் உலைநலமாமே
659 ஓங்கிய அங்கிக்கீழ் ஒண் சுழுனைச் செல்ல வாங்கி இரவி மதி வழி ஓடிடத் தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட ஆங்கு அது சொன்னோம் *அருவழி யோர்க்கே. 20 * அறிவுடை
660 தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல் துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால் விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே. 21
661 ஓடிச்சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர் நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர் தேடிச் சென்று அங்கே தேனை முகந்து உண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. 22
662 கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது மட்டிட்ட *கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் #கட்டிட்டு நின்று களங்கனி ஊடுபோய்ப் பொட்டு இட்டு நின்று பூரணம் ஆனதே. 23 * கண்ணியர் # தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
663 பூரண சத்தி எழு மூன்று அறை ஆக ஏர் அணி கன்னியர் எழு நூற்றஞ்சு ஆக்கினார் நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும் காரணம் ஆகிக் கலந்து விரிந்ததே. 24
664 விரிந்து குவிந்து விளைந்த இம் மங்கை கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கின் பரந்து குவிந்தது பார்முதல் பூதம் இரைந்து எழு வாயு இடத்தினில் * ஒடுங்கே. 25 * ஓங்கே
665 இடையொடு பிங்கலை என்னும் இரண்டு மடைபடு வாயுவும் மாறியே நிற்கும் தடை அவை * யாறேழுந் தண் சுடர் உள்ளே மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே. 26 * யாறெழுந்
666 ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் மடங்கி அடங்கிடும் வாயு அதனுள் மடங்கி மடங்கிடும் மன் உயிருள்ளே நடங்கொண்ட *கூத்தனும் நாடுகின்றானே. 27 * கூத்தனை நாடுகின் றேனே
667 நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி உடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே. 28
668 அணுமாதி சித்திகள் ஆனவை கூறில் அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை அணுகாத வேகார் பரகாய மேவல் *அணுவத் தனையெங்குந் #தானாத லென்றெட்டே. 29 * அணுமைத் # தானாக
669 எட்டாகிய சித்தி யோரெட்டி யோகத்தாற் கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும் ஒட்டா நடுநாடி மூலத்தன் நல்பானு விட்டான் மதியுண்ணவும் வரும் மேலதே. 30
670 சித்திகள் எட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற் புத்திகளானவை எல்லாம் புலப்படுஞ் சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை சத்தி அருள்தரத் தானுளவாகுமே. 31 அணிமா
671 எட்டு இவை தன்னோடு எழிற்பரம் கைகூடப் பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால் இட்டம் அது உள்ளே *இறுக்கல் பரகாட்சி எட்டு வரப்பும் இடம்தான் நின்று எட்டுமே. 32 * இருக்கல்
672 மந்தர மேறு மதிபானுவை மாற்றிக் கந்தாய்க் குழியில் கசடு அற வல்லார்க்குத் தந்து இன்றி நற்*கா மியலோகம் சார்வாகும் அந்த உலகம் அணிமாதி ஆமே. 33 * காய மிய
673 முடிந்திட்டு வைத்து முயங்கில் ஓராண்டில் அணிந்த அணிமா கைதானாம் இவனும் தணிந்த அப்பஞ்சினும் தான் நொய்யது ஆகி மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே. 34 லகிமா
674 ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன் போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச் சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடில் மாய்கின்றது ஐயாண்டில் மாலகு வாகுமே. 35
675 மாலகு ஆகிய மாயனைக் கண்டபின் தான் ஒளி ஆகித் தழைத்து அங்கு இருந்திடும் பால் ஒளி ஆகிப் பரந்து எங்கு நின்றது மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே. 36 மகிமா
676 மெய்ப்பொருள் சொல்லிய மெல்லியலாளுடன் தற்பொருள் ஆகிய தத்துவம் கூடிடக் கைப்பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டின் மைப்பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே. 37
677 ஆகின்ற கால் ஒளியாவது கண்டபின் போகின்ற காலங்கள் போவதும் இல்லையாம் மேனின்ற காலம் வெளியுற *நின்றன #தானின்ற காலங்கள் தன்வழி ஆகுமே. 38 * நின்றபின் # தாழ்கின்ற
678 தன்வழியாகத் தழைத்திடு ஞானமும் தன்வழி *யாகத் தழைத்திடும் வையகம் தன்வழியாகத் தழைத்த பொருளெல்லாம் தன்வழி தன்னருள் ஆகி நின்றானே. 39 * மீதாகத் பிராத்தி
679 நின்றன தத்துவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் * படையவை எல்லாம் கொண்டவை ஓராண்டு கூட இருந்திடில் விண்டதுவே நல்ல பிராத்தியது ஆகுமே. 40 * படையானவையெலாங் கரிமா
680 ஆகின்ற மின் ஒளி ஆவது கண்டபின் பாகின்ற பூவில் பரப்பு அவை காணலாம் *மேகின்ற காலம் வெளியுற நின்றது போகின்ற காலங்கள் போவதும் இல்லையே. 41 * மேனின்ற
681 போவதொன் றில்லை வருவது தானில்லை சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை தாமத மில்லை தமரகத் தின்னொளி யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே. 42
682 அறிந்த பராசத்தி உள்ளே அமரில் பறிந்தது பூதப் படை அவை எல்லாம் குவிந்தவை ஓர் ஆண்டு கூட இருக்கில் *விரிந்தது பரகாய மேவலும் ஆமே. 43 * விரிந்த பிராகாமியம்
683 ஆன விளக்கொளி யாவது அறிகிலர் மூல விளக்கொளி முன்னே உடையவர் கான விளக்கொளி கண்டு கொள்வார்கட்கு மேலை விளக்கொளி வீடு எளிதாம் நின்றே. 44 ஈசத்துவம்
684 நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூதப் படையவை எல்லாங் கொண்டவை ஓராண்டு கூடி இருந்திடில் பண்டையவ் வீசன் தத்துவம் ஆகுமே. 45
685 ஆகின்ற சந்திரன் * தன் ஒளி யாயவன் ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும் ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில் ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே. 46 * தண்ணளி
686 தானே படைத்திட வல்லவன் ஆயிடும் தானே அளித்திட வல்லவன் ஆயிடும் தானே சங்காரத் தலைவனும் ஆயிடும் தானே இவன் என்னும் தன்மையன் ஆமே. 47
687 தன்மைய தாகத் தழைத்த கலையினுள் பன்மைய தாகப் பரந்த ஐம்பூதத்தை வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின் மென்மையது ஆகிய மெய்ப்பொருள் காணுமே. 48 வசித்துவம்
688 மெய்ப்பொருளாக விளைந்தது வேதெனின் நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம் கைப்பொருளாகக் கலந்த உயிர்க்கு எல்லாம் தற்பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே. 49
689 தன்மைய தாகத் தழைத்த பகலவன் மென்மையது ஆகிய மெய்ப்பொருள் கண்டிடின் பொன்மைய தாகப் புலன்களும் போயிட நன்மைய தாகிய நற்கொடி காணுமே. 50
690 நற்கொடி ஆகிய நாயகி தன்னுடன் அக்கொடி யாகம் அறிந்திடில் ஓர் ஆண்டு பொற்கொடி ஆகிய புவனங்கள் போய்வரும் கற்கொடி ஆகிய காமுகன் ஆமே. 51
691 காமரு தத்துவ மானது வந்த பின் பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும் மாமரு *உன்னிடை மெய்த்திடு மானன் ஆய் நா மருவும் ஒளி நாயகம் ஆனதே. 52 * வுன்னிடம் எய்திடு
692 நாயகம் ஆகிய நல்லொளி கண்டபின் தாயகம் ஆகத் தழைத்து அங்கு இருந்திடும் போய் அகம் ஆன புவனங்கள் கண்டபின் பேய் அகம் ஆகிய பேரொளி காணுமே. 53
693 பேரொளி ஆகிய பெரிய அவ் *வேட்டையும் பார் ஒளியாகப் பதைப்பு அறக் கண்டவன் தார் ஒளியாகத் தரணி முழுதும் ஆம் ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே. 54 * வெட்டையும்
694 காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லின் கால் அது அக்கொடி நாயகி தன்னுடன் கால் அது ஐஞ்ஞூற்று ஒருபத்து மூன்றையும் கால் அது *வேண்டிக் கொண்ட இவ்வாறே. 55 * பெண்மண்டிக்
695 ஆறு அது வாகும் அமிர்தத் தலையினுள் ஆறு அது ஆயிரம் முந்நூற்றொடு ஐஞ்சு உள ஆறு அது ஆயிரம் ஆகும் மருவழி ஆறு அது ஆக வளர்ப்பது இரண்டே. 56
696 இரண்டினின் மேலே சதாசிவ நாயகி இரண்டு அது கால்கொண்டு எழுவகை சொல்லில் இரண்டு அது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்த் திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே. 57
697 அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம் அஞ்சு அது காலம் எடுத்துளும் ஒன்றே. 58
698 ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி ஒன்று அது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில் ஒன்று அது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம் ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே. 59
699 முன் எழும் அக்கலை நாயகி தன்னுடன் முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின் முன்னுறும் *ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சுமாய் முன்னுறு வாயு முடிவகை ஆமே. 60 * ஐம்பதொ டொன்றுடன்
700 ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன் ஆய்வரு வாயு அளப்பு அது சொல்லிடில் ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பதொடு ஒன்பது மாய்வரு வாயு வளப்புள் இருந்ததே. 61 |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
கால் முளைத்த கதைகள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2019 பக்கங்கள்: 95 எடை: 150 கிராம் வகைப்பாடு : குழந்தைகள் ISBN: 978-93-87484-35-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|