![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 8 ...
701 இருநிதி ஆகிய எந்தை இடத்து இருநிதி வாயு இயங்கு நெறியில் இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய் இருநிதி வாயு இயங்கும் எழுத்தே. 62
702 எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால் எழுகின்ற வாயு இடம் அது சொல்லில் எழுநூற்று இருபத்தொன்பான் அது நாலாய் எழுந்துடன் அங்கி இருந்தது இவ்வாறே. 63
703 ஆறு அது கால்கொண்டு இரதம் விளைத்திடும் ஏழு அது கால்கொண்டு இரட்டி இறக்கிட எட்டு அது கால்கொண்டு இடவகை *ஒத்தபின் ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. 64 * ஏற்றபின்
704 சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில் சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச் சந்தியிலே கண்டு தான் ஆம் சகமுகத்து உந்திச் சமாதி உடை ஒளி யோகியே. 65
705 அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல் வணங்குற்ற கல்வி மா ஞான மிகுத்தல் *சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல் நுணங்கற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே. 66 * சிணங்குற்ற வாயர் சித்திதாங் கேட்டல்
706 மரணஞ் *சரைவிடல் வண்பர காயம் இரணஞ்சேர் பூமி இறந்தோர்க் களித்தல் அரணன் #திருவுற வாதன் மூவேழாங் $கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே. 67 * சிறைவிடல் # திருவுரு $ கரணுறு
707 ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகர் அறிவாரே. 68
708 மூல முதல் வேதா மாலரன் முன்னிற்கக் கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம் பாலித்த சத்தி பரைபரன் பாதமே. 69
709 ஆதார யோகத்து அதிதேவொடும் சென்று மீதான தற்பரை மேவும் பரனொடு மேதாதி ஈரெண் கலை செல்ல மீது ஒளி ஓதா அசிந்தம் இது ஆனந்த யோகமே. 70
710 மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடித் துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள் விதி அது செய்கின்ற மெய்யடியார்க்குப் பதி அது காட்டும் பரமன் நின்றானே. 71
711 கட்ட வல்லார்கள் *கரந்து எங்கும் தான் ஆவர் மட்டு அவிழ் தாமரையுள்ளே மணம் செய்து பொட்டு எழக் குத்திப் பொறி எழத் தண்டு இட்டு #நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே. 72 * கலந்தெங்குந் # நட்டிடு 12. கலை நிலை
712 காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக் காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற் காதல் வழிசெய்து கங்கை வழி தருங் காதல் வழிசெய்து காக்கலு மாமே. 1
713 காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும் காக்கலும் ஆகும் கலை பதினாறையும் காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும் காக்கலும் ஆகும் கருத்துற நில்லே. 2
714 நிலைபெற நின்றது நேர்தரு வாயு சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக் கலைவழி நின்ற கலப்பை அறியில் * அலைவற வாகும் வழியிது வாமே. 3 * மலைவறி
715 புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ் சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன் விடையொன்றில் ஏறியே வீற்றிருந்தானே. 4
716 இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத் தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே. 5
717 சாதகமான அத்தன்மையை நோக்கியே மாதவமான வழிபாடு செய்திடும் போதகமாகப் புகலுறப் பாய்ச்சினால் வேதகமாக விளைந்து கிடக்குமே. 6
718 கிடந்தது தானே கிளர்பயன் மூன்று நடந்தது தானேஉள் நாடி உள்நோக்கிப் படர்ந்தது தானே பங்கயம் ஆகத் தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே. 7
719 தானே எழுந்த அத்தத்துவ நாயகி ஊனே வழிசெய்து எம் உள்ளே இருந்திடும் வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திடத் தேனே பருகிச் சிவாலயம் ஆகுமே. 8
720 திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகிலர் ஆரும் அழியும் படியை அறிந்தபின் நந்தி திகழ்கின்ற வாயுவைச் சேர்தலும் ஆமே. 9
721 சோதனை தன்னில் துரிசு அறிக் காணலாம் நாதனும் நாயகி தன்னிற் பிரியும் நாள் * சாதனம் ஆகும் குருவை வழிபட்டு மாதனமாக மதித்துக் கொள்ளீரே. 10 * சாதக மாகுங் குருவழி பட்டு
722 ஈர் ஆறு கால் கொண்டு எழுந்த புரவியைப் பேராமல் கட்டிப் பெரிது உண்ண வல்லிரேல் நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்தாண்டும் பேராது காயம் பிரான் நந்தி ஆணையே. 11
723 ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும் நாசியில் மூன்றும் நாவில் இரண்டும் தேசியும் தேசனும் தன்னிற் பிரியும் நாள் மாசு அறு சோதி வகுத்து வைத்தானே. 12 13. காயசித்தி உபாயம்
724 உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. 1
725 உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. 2
726 * சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங் கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே. 3 * சுழித்துக்
727 அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில் வஞ்சக வாத மறுமத்தி யானத்திற் செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே. 4
728 மூன்று மடக்கு உடைப் பாம்பு இரண்டு எட்டு உள ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம் * நான்ற இம் முட்டை இரண்டையும் கட்டியிட்டு ஊன்றியிருக்க உடம்பு அழியாதே. 5 * நான்றவிழ்
729 நூறும் அறுபதும் ஆறும் வலம் வர நூறும் அறுபதும் ஆறும் இடம் வர நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபதும் ஆறும் புகுவரே. 6
730 சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால் மத்தியானத்திலே * வாத்தியங் கேட்கலாம் தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படும் சத்தியம் #சொன்னோம் சதாநந்தி ஆணையே. 7 * வாக்கியங் # சொன்னேன்
731 திறத்திறம் விந்து திகழும் அகாரம் உறப்பெறவே நினைந்து ஓதும் சகாரம் மறிப்பது மந்திரம் மன்னிய நாதம் அறப்பெற யோகிக்கு அறநெறி ஆமே. 8
732 உந்திச் சுழியி * னுடனேர் பிராணனைச் சிந்தித் தெழுப்பிச் சிவமந திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித் தெழுப்பச் சிவனவ நாமே. 9 * உடனே
733 மாறா மலக்குதந் தன்மே லிருவிரற் கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின் ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசங் கொண்டது காணுமே. 10
734 நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி ஆணையே. 11
735 அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங் கறுத்த கபாலியு மாமே. 12
736 பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில் வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார் கண்டிச் சிக்குநற் காயமு மாமே. 13
737 சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி அழலும் இரத்ததுள் அங்கியுள் ஈசன் கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே. 14
738 நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந் தான்கண்ட * வாயுச் சரீர முழுதொடும் ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக மான்கன்று நின்று வளர்கின்ற வாறே. 15 * வாயுவுய் சரீர
739 ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற * நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப் பாகு படுத்திப் பல்கோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரத் தன்னால் ஒடுங்கே. 16 * நீர்க்கொள நெல்லின் 14. கால சக்கரம்
740 மதிவட்ட மாக வரையைந்து நாடி இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற் பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே. 1
741 உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங் கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும் பற்றிய பத்தும் பலவகை நாழிகை * அற்ற தறியா தழிகின்ற வாறே. 2 * அற்றறியா
742 அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங் கழிகின்ற காலறு பத்திரண் டென்ப தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே. 3
743 திருந்து தினமத் தினத்தி னொடுநின் றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி வருந்துத லின்றி மனைபுக லாமே. 4
744 மனைபுகு வீரும் மகத்திடை நீராடி எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால் தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு வினையறி யாறு விளங்கிய நாலே. 5
745 நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து பாலங் கடந்தது பத்துப் பதினைந்து கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண் டாலங் கடந்ததொன் றாரறி வாரே. 6
746 ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந் தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு வேறு பதியங்க ணாள்விதித் தானே. 7
747 விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத் தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின் பதித்தறி * பத்தெட்டும் பாரா திகணால் உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே. 8 * பத்தெட்டுப்
748 முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில் இறையிறை யார்க்கும் இருக்க அரிது மறையது காரண மற்றொன்று மில்லை பறையறை யாது பணிந்து முடியே. 9
749 முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர் இட்ஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு கடிந்தனன் மூளக் கதுவவல் லார்க்கு நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே. 10
750 நண்ணு சிறுவிர னாணாக மூன்றுக்கும் பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ் சென்னியின் மூன்றுக்குன்ய் சேரவே * நின்றிடும் உன்னி # யுணர்ந்திடும் ஓவியந் தானே. 11 * நின்றிடில் # அணைந்திடும்
751 ஓவிய மான வுணர்வை அறிமின்கள் பாவிக ளித்தின் பயனறி வாரில்லை தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே. 12
752 தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு மண்டல மூன்று * மகிழ்ந்துடல் ஒத்திடுங் கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே. 13 * மகிழ்ந்துடன்
753 பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ அணங்குட னாதித்த னாறு விரியின் வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே. 14
754 சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான் தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற் கழல்கண்ட போம்வழி காணவல் லார்க்குக் குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே. 15
755 கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர் சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள் பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில் ஆத்தனு மாகி யலர்ந்திரு மொன்றே. 16
756 ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ் சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற் குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே. 17
757 கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப் பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற் சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே. 18
758 சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர் காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள் சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர் மூத்துடன் * கோடி யுகமது வாமே. 19 * கூடி
759 உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று அகங்கோடி * கண்டு ளயலறக் காண்பர்கள் சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங் குகங்கோடி கண்டல் குயருறு வாரே. 20 * கண்டு ளயர்வறக்
760 உயருறு வாருல கத்தொடுங் கூடிப் பயனுறு வார்பலர் தாமறி யாமற் செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற் கயலுறு கண்ணியைக் காணகி லாரே. 21
761 காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள் நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள் காணகி லாதார் கழிந்த பொருளெலாங் காணகி லாமற் கழிகின்ற வாறே. 22
762 கழிகின்ற அப்பொருள் காணகி லாதார் கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங் கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற் கழியாத அப்பொருள் காணலு மாமே. 23
763 கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந் திண்ணென் றிருக்குஞ் சிவகதி * யாநிற்கும் நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே. 24 * யாய்நிற்கும்
764 நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர் தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது கூடவல் லார்கட்குக் கூறலு மாமே. 25
765 கூறும் பொருளி தகார வுகாரங்கள் தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக் கூறு மகாரங் குழல்வழி யோடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே. 26
766 அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக் கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவனிவ வாகுமே. 27
767 அவனிவ நாகும் பரிசறி வாரில்லை அவனிவ நாகும் பரிசது கேள்நீ அவனிவ நோசை ஒளியினுள் ஒன்றிடும் அவனிவன் வட்டம தாகிநின் றானே. 28
768 வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர் ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக் கட்டி இருப்பிடங் காணலு மாகுமே. 29
769 காணலு மாகும் பிரமன் அரியென்று காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக் காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங் காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே. 30 15. ஆயுள் பரிட்சை
770 வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தம மிக்கிடில் ஓராறு திங்களா மத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில் நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே. 1
771 ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை * யிறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை யுணர்ந்த உணர்விது வாமே. 2 * பிறந்தவர்
772 ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் நாமே உறைகின்ற நன்மை யளித்திடும் பூமேல் உறைகின்ற போதகம் வந்திடுந் தாமே யுலகில் தலைவனு மாமே. 3
773 தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை தலைவ னிடம்வல மாயிடில் தையல் தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில் தலைவ நிடம்வலந் தன்வழி நூறே. 4
774 ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந் தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில் ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந் தேறியே நின்று தெளியிவ் வகையே. 5
775 இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில் அவ்வகை * ஐம்பதே யென்ன அறியலாஞ் செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின் முவ்வகை யாமது முப்பத்து மூன்றே. 6 * யையொன்பதே; யொன்பதே; யன்பதே
776 மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடிற் * எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும் ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற் பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே. 7 * எண்முன் றினாலும்
777 பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில் ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப் போக்கலு மாகும் புகலற ஒன்றெனில் தேக்கலு மாகுந் திருந்திய பத்தே. 8
778 ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற் பாயிரு நாலும் பகையற நின்றிடும் தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில் ஆயுரு வாறென் றளக்கலு மாமே. 9
779 அளக்கும் வகைநாலும் அவ்வழியே * ஓடில் விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும் துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில் களக்க மறமூன்றிற் காணலு மாமே. 10 * ஓடிடில்
780 காணலு மாகுங் கருதிய பத்தோடிற் காணலு மாகுங் கலந்த இரண்டையும் காணலு மாகுங் * கலப்பற மூவைந்தேற் காணலு மாகுங் கருத்துற ஒன்றே. 11 * கலப்புற மூவைந்தேழ்
781 கருதும் இருபதிற் * காண ஆறாகும் கருதிய # ஐயைந்திற் காண்பது மூன்றாம் கருதும் இருப துடனாறு காணிற் கருதும் இரண்டெனக் காட்டலு மாமே. 12 * ஈராறாகும் # ஐந்திற்
782 காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில் காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக் காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற் காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே. 13
783 ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும் பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும் வாரஞ்செய் கின்ற * வகையாறஞ் சாமாகில் ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே. 14 * வகையான்ய் சமாதியில்
784 ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற் கன்றிய நாலுங் கருத்துற மூன்றாகுஞ் சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின் மன்றியல் பாகு மனையில் இரண்டே. 15
785 மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ் சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி வினையற வோங்கி வெளிச்செய்து நின்றால் தனையுற நின்ற தலைவனு மாமே. 16
786 ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள் ஆரு மறியார் அறிவறிந் தேனே. 17
787 அறிவது வாயுவொ டைந்தறி வாய அறிவா வதுதான் உலகுயி ரத்தின் பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடிற் செறிவது நின்று திகழு மதுவே. 18
788 அதுவரு ளும்மரு ளான துலகம் பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளு மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி இதுவருள் செய்யும் இறையவ னாமே. 19
789 பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி குறிப்பது கூடிய கோலக் குரம்பைப் பழப்பதி யாவது பற்றறும் பாசம் அழப்படி செய்வார்க் ககலு மதியே. 20 16. வாரசரம்
790 வௌளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந் தௌளிய தேய்பிறை தான்வல மாமே. 1
791 வௌளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றுந் தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில் ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே. 2
792 செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும் இவ்வா றறிகின்ற யோகி இறைவனே ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட் டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே. 3
793 மாறி வருமிரு பான்மதி வெய்யவன் ஏறி இழியுந் இடைபிங் கலையிடை ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரந் தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே. 4
794 உதித்து வலத்திடம் போகின்ற போது * அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும் உதித்தது வேமிக வோடிடு மாகில் உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே. 5 * அதிற்கஞ்சி; அதிற்றுஞ்சி
795 நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி இடுகின்ற வாறுசென் றின்பணி சேர முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே. 6
796 ஆயும் பொருளும் அணிமலர் மேலது வாயு விதமும் பதினா றுளவலி போய மனத்தைப் பொருகின்ற வாதாரம் ஆயவு நாளு * முகுர்த்தமு மாமே. 7 * முகுத்தமு 17. வாரசூலம்
797 வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால் நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும் பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள் நேரொத்த வௌளி குடக்காக நிற்குமே. 1
798 தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில் துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின் மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே. 2 18. கேசரி யோகம்
799 கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே. 1
800 வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற் கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி * விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை # நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே. 2 * விண்ணாற்றைத் தேக்கிக் # நிரப்பிட்டு |