முதல் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 11 ... 1.101. திருக்கண்ணார்கோயில் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1091 தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப் பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம் நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே. 1.101.1 1092 கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும் வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக் கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே. 1.101.2 1093 பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின் எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர் கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக் கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே. 1.101.3 1094 தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம் மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க் குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார் கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே. 1.101.4 1095 மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச் செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும் கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே. 1.101.5 1096 விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும் கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே. 1.101.6 1097 முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம் பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித் தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர் கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. 1.101.7 1098 பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால் நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே. 1.101.8 1099 செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும் அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான் தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத் தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே. 1.101.9 1100 தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ் சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன் ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர் ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே. 1.101.10 1101 காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன் நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன் பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே. 1.101.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - கண்ணாயிரேசுவரர் தேவி - முருகுவளர்கோதையம்மை
1.102. சீகாழி பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1102 உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங் கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே. 1.102.1 1103 மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக் கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே. 1.102.2 1104 இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக் களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென் றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே. 1.102.3 1105 எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக் கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப் பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே. 1.102.4 1106 மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக் கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக் குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே. 1.102.5 1107 குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே. 1.102.6 * இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.102.7 1108 உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே. 1.102.8 1109 ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக் காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப் பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும் மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே. 1.102.9 1110 மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங் கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித் தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே. 1.102.10 1111 வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக் கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன் படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே. 1.102.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.103. திருக்கழுக்குன்றம் பண் - குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1112 தோடுடையானொரு காதில்தூய குழைதாழ ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும் நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங் காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.1 1113 கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங் காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.2 1114 தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர் வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங் கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.3 1115 துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம் இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக் கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.4 1116 பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.5 1117 வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர் உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங் கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.6 * இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.103.7 1118 ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின் நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப் பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங் காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.8 1119 இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந் தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம் மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக் கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.9 1120 தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ் சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர் காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.10 1121 கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார் புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே. 1.103.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமி - வேதகிரீசுவரர் தேவி - பெண்ணினல்லாளம்மை 1.104. திருப்புகலி பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1122 ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான் ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே. 1.104.1 1123 ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே. 1.104.2 1124 ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன் பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே. 1.104.3 1125 வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங் கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில் அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப் புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே. 1.104.4 1126 சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம் ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன் வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர் பாட இனிதுறையும் புகலிப் பதியாமே. 1.104.5 1127 மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம் அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும் புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே. 1.104.6 1128 மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள் கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ் செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம் அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே. 1.104.7 1129 வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும் நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன் பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள் ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே. 1.104.8 1130 தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம் மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே. 1.104.9 1131 வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும் அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல் வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே. 1.104.10 1132 வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப் போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள் நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில் ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே. 1.104.11 திருச்சிற்றம்பலம் திருப்புகலி என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.105. திருஆரூர் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1133 பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள் சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக் கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே. 1.105.1 1134 சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில் பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம் காலையும் மாலையும்போய்ப் பணிதல் கருமமே. 1.105.2 1135 உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும் வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே. 1.105.6 1136 வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றான் அரையின் ஐந்தலை யாடரவம் அசைத்தான் அணியாரூர்ப் பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம் நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே. 1.105.7 1137 வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரைச் சென்று பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே. 1.105.8 1138 கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில் மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும் அங்கையி னான்அடியே பரவி யவன்மேய ஆரூர் தங்கையினாற் றொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.105.6 1138 நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான் சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண் ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே. 1.105.7 * இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.105.8 1140 வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த நல்லியல் நான்முகத்தோன் தலையின் னறவேற்றான் அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப் புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. 1.105.9 1141 செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன இந்திர ஞாலமொழிந் தின்புற வேண்டுதிரேல் அந்தர மூவெயிலு மரணம் எரியூட்டி ஆரூர்த் தந்திர மாவுடையான் அவனெந் தலைமையனே. 1.105.10 1142 நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச் சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே. 1.105.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வன்மீகநாதர் தேவி - அல்லியங்கோதையம்மை 1.106. திருஊறல் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1143 மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில் தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே. 1.106.1 1144 மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால் மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம் தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம் ஒத்தல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே. 1.106.2 1145 ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங் கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம் வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே. 1.106.3 1146 நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின் மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே. 1.106.4 1147 எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில் கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை உண்டபி ரானமருந் திருவூறலை உள்குதுமே. 1.106.5 * இப்பதிகத்தில் 6,7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 1.106.6 1148 கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில் செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே. 1.106.8 1149 நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில் பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம் ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே. 1.106.9 1150 பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர் என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில் தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே. 1.106.10 1151 கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல் நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே. 1.106.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது. சுவாமி - உமாபதீசுவரர் தேவி - உமையம்மை 1.107. திருக்கொடிமாடச்செங்குன்றூர் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1152 வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக் கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே. 1.107.1 1153 அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம் மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக் குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.107.2 1154 பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக் கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும் நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே. 1.107.3 1155 வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங் காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச் சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே. 1.107.4 1156 பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக் குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில் மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே. 1.107.5 1157 ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே. 1.107.6 1158 நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க் கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே. 1.107.7 1159 மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக் கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.107.8 1160 செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான் கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே. 1.107.9 1161 போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல் ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள் கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற வேதியனைத் தொழநும் வினையான வீடுமே. 1.107.10 1162 அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந் தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன் கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும் நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே. 1.107.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. திருச்செங்கோடு என வழங்குகின்றது. சுவாமி - அர்த்தநாரீசுவரர் தேவி - அர்த்தநாரீசுவரி 1.108. திருப்பாதாளீச்சரம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1163 மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும் அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும் பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.1 1164 நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத் தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான் ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம் பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே. 1.108.2 1165 நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம் போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான் தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப் பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே. 1.108.3 1166 அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல் மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில் செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப் பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே. 1.108.4 1167 பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத் தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப் பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே. 1.108.5 1168 கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும் விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும் பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும் பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.6 1169 விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ் வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான் விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.7 1170 மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால் தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான் கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன் பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.8 1171 தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக் காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார் பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே. 1.108.9 1172 காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே. 1.108.10 1173 பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப் பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன் தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே. 1.108.11 திருச்சிற்றம்பலம் 1.109. திருச்சிரபுரம் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1174 வாருறு வனமுலை மங்கைபங்கன் நீருறு சடைமுடி நிமலனிடங் காருறு கடிபொழில் சூழ்ந்தழகார் சீருறு வளவயற் சிரபுரமே. 1.109.1 1175 அங்கமொ டருமறை யருள்புரிந்தான் திங்களொ டரவணி திகழ்முடியன் மங்கையொ டினிதுறை வளநகரஞ் செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே. 1.109.2 1176 பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித் திரிந்தவர் புரமவை தீயின்வேவ வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத் தெரிந்தவன் வளநகர் சிரபுரமே. 1.109.3 1177 நீறணி மேனியன் நீள்மதியோ டாறணி சடையினன் அணியிழையோர் கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ் சேறணி வளவயல் சிரபுரமே. 1.109.4 1178 அருந்திறல் அவுணர்கள் அரணழியச் சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர் குருந்தொடு கொடிவிடு மாதவிகள் திருந்திய புறவணி சிரபுரமே. 1.109.5 1179 கலையவன் மறையவன் காற்றொடுதீ மலையவன் விண்ணொடு மண்ணுமவன் கொலையவன் கொடிமதில் கூட்டழித்த சிலையவன் வளநகர் சிரபுரமே. 1.109.6 1180 வானமர் மதியொடு மத்தஞ்சூடித் தானவர் புரமெய்த சைவனிடங் கானமர் மடமயில் பெடைபயிலுந் தேனமர் பொழிலணி சிரபுரமே. 1.109.7 1181 மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக் கறுத்தவன் காரரக் கன்முடிதோள் இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன் செறுத்தவன் வளநகர் சிரபுரமே. 1.109.8 1182 வண்ணநன் மலருறை மறையவனுங் கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய் விண்ணுற வோங்கிய விமலனிடம் திண்ணநன் மதிலணி சிரபுரமே. 1.109.9 1183 வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார் கற்றிலர் அறவுரை புறனுரைக்கப் பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச் செற்றவன் வளநகர் சிரபுரமே. 1.109.10 1184 அருமறை ஞானசம் பந்தனந்தண் சிரபுர நகருறை சிவனடியைப் பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார் திருவொடு புகழ்மல்கு தேசினரே. 1.109.11 திருச்சிற்றம்பலம் சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 1.110. திருவிடைமருதூர் பண் - வியாழக்குறிஞ்சி திருச்சிற்றம்பலம் 1185 மருந்தவன் வானவர் தானவர்க்கும் பெருந்தகை பிறவினொ டிறவுமானான் அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ் இருந்தவன் வளநகர் இடைமருதே. 1.110.1 1186 தோற்றவன் கேடவன் துணைமுலையாள் கூற்றவன் கொல்புலித் தோலசைத்த நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல் ஏற்றவன் வளநகர் இடைமருதே. 1.110.2 1187 படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன் நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம் முடைதலை இடுபலி கொண்டுழல்வான் இடைமரு தினிதுறை யெம்மிறையே. 1.110.3 1188 பணைமுலை உமையொரு பங்கனொன்னார் துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக் கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற இணையிலி வளநகர் இடைமருதே. 1.110.4 1189 பொழிலவன் புயலவன் புயலியக்குந் தொழிலவன் துயரவன் துயரகற்றுங் கழலவன் கரியுரி போர்த்துகந்த எழிலவன் வளநகர் இடைமருதே. 1.110.5 1190 நிறையவன் புனலொடு மதியும்வைத்த பொறையவன் புகழவன் புகழநின்ற மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட இறையவன் வளநகர் இடைமருதே. 1.110.6 1191 நனிவளர் மதியொடு நாகம்வைத்த பனிமலர்க் கொன்றையம் படர்சடையன் முனிவரொ டமரர்கள் முறைவணங்க இனிதுறை வளநகர் இடைமருதே. 1.110.7 1192 தருக்கின அரக்கன தாளுந்தோளும் நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன் றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும் எரித்தவன் வளநகர் இடைமருதே. 1.110.8 1193 பெரியவன் பெண்ணினொ டாணுமானான் வரியர வணைமறி கடற்றுயின்ற கரியவன் அலரவன் காண்பரிய எரியவன் வளநகர் இடைமருதே. 1.110.9 1194 சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன புந்தியில் உரையவை பொருள்கொளாதே அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா எந்தைதன் வளநகர் இடைமருதே. 1.110.10 * ஓத்து என்பது வேதம். 1195 இலைமலி பொழிலிடை மருதிறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன பலமிகு தமிழிவை பத்தும்வல்லார் உலகுறு புகழினொ டோ ங்குவரே. 1.110.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - மருதீசர் தேவி - நலமுலைநாயகியம்மை |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |