இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 3 ... 2.21. திருக்கழிப்பாலை பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 219 புனலா டியபுன் சடையாய் அரணம் அனலா கவிழித் தவனே அழகார் கனலா டலினாய் கழிப்பா லையுளாய் உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. 2.21.1 220 துணையா கவொர்தூ வளமா தினையும் இணையா கவுகந் தவனே இறைவா கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய் இணையார் கழலேத் தவிடர் கெடுமே. 2.21.2 221 நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின் முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய் கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் அடியார்க் கடையா அவலம் மவையே. 2.21.3 222 எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ வளிகா யமென வெளிமன் னியதூ ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க் களியாய் கழிப்பா லையமர்ந் தவனே. 2.21.4 223 நடநண் ணியொர்நா கமசைத் தவனே விடநண் ணியதூ மிடறா விகிர்தா கடல்நண் ணுகழிப் பதிகா வலனே உடன்நண் ணிவணங் குவனுன் னடியே. 2.21.5 224 பிறையார் சடையாய் பெரியாய் பெரியம் மறையார் தருவாய் மையினா யுலகிற் கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய் இறையார் கழலேத் தவிடர் கெடுமே. 2.21.6 225 முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங் கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய் எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க் கதிரும் வினையா யினஆ சறுமே. 2.21.7 226 எரியார் கணையால் எயிலெய் தவனே விரியார் தருவீழ் சடையாய் இரவிற் கரிகா டலினாய் கழிப்பா லையுளாய் உரிதா கிவணங் குவனுன் னடியே. 2.21.8 227 நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக் கனலா னவனே கழிப்பா லையுளாய் உனவார் கழலே தொழுதுன் னுமவர்க் கிலதாம் வினைதான் எயிலெய் தவனே. 2.21.9 228 தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந் துவர்கொண் டனநுண் துகிலா டையரும் அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும் உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே. 2.21.10 229 கழியார் பதிகா வலனைப் புகலிப் பழியா மறைஞா னசம்பந் தனசொல் வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார் கெழியார் இமையோ ரொடுகே டிலரே. 2.21.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பால்வண்ணநாதர் தேவி - வேதநாயகியம்மை
2.22. திருக்குடவாயில் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 230 திகழுந் திருமா லொடுநான் முகனும் புகழும் பெருமான் அடியார் புகல மகிழும் பெருமான் குடவா யில்மன்னி நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.1 231 ஓடுந் நதியும் மதியோ டுரகம் சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல் கூடுங் குழகன் குடவா யில்தனில் நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.2 232 கலையான் மறையான் கனலேந் துகையான் மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான் கொலையார் சிலையான் குடவா யில்தனில் நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.3 233 சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா நலமென் முலையாள் நகைசெய் யநடங் குலவுங் குழகன் குடவா யில்தனில் நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.4 234 என்றன் உளமே வியிருந் தபிரான் கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக் குன்றன் குழகன் குடவா யில்தனில் நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.5 235 அலைசேர் புனலன் னனலன் னமலன் தலைசேர் பலியன் சதுரன் விதிருங் கொலைசேர் படையன் குடவா யில்தனில் நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.6 236 அறையார் கழலன் னமலன் னியலிற் பறையாழ் முழவும் மறைபா டநடங் குறையா அழகன் குடவா யில்தனில் நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22.7 237 வரையார் திரள்தோள் அரக்கன் மடிய வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான் வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும் வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 2.22.8 238 பொன்னொப் பவனும் புயலொப் பவனுந் தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான் கொன்னற் படையான் குடவா யில்தனில் மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே. 2.22.9 239 வெயிலின் நிலையார் விரிபோர் வையினார் பயிலும் முரையே பகர்பா விகள்பாற் குயிலன் குழகன் குடவா யில்தனில் உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே. 2.22.10 240 கடுவாய் மலிநீர் குடவா யில்தனில் நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை தடமார் புகலித் தமிழார் விரகன் வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே. 2.22.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - கோணேசுவரர் தேவி - பெரியநாயகியம்மை 2.23. திருவானைக்கா பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 241 மழையார் மிடறா மழுவா ளுடையாய் உழையார் கரவா உமையாள் கணவா விழவா ரும்வெணா வலின்மே வியவெம் அழகா எனும்ஆ யிழையாள் அவளே. 2.23.1 242 கொலையார் கரியின் னுரிமூ டியனே மலையார் சிலையா வளைவித் தவனே விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் நிலையா அருளாய் எனும்நே ரிழையே. 2.23.2 243 காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய் பாலோ டுநெய்யா டியபால் வணனே வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய் ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே. 2.23.3 244 சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய் உறநெற் றிவிழித் தவெம்உத் தமனே விறல்மிக் ககரிக் கருள்செய் தவனே அறமிக் கதுவென் னுமெனா யிழையே. 2.23.4 245 செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் அங்கட் கருணை பெரிதா யவனே வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய் அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. 2.23.5 246 குன்றே யமர்வாய் கொலையார் புலியின் தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய் வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே நின்றா யருளாய் எனும்நே ரிழையே. 2.23.6 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.23.7 247 மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள் தொலையவ் விரலூன் றியதூ மழுவா விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே. 2.23.8 248 திருவார் தருநா ரணன்நான் முகனும் மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம் அரவா எனும்ஆ யிழையா ளவளே. 2.23.9 249 புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள் ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார் மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய் அத்தா அருளாய் எனும்ஆ யிழையே. 2.23.10 250 வெண்நா வலமர்ந் துறைவே தியனை கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன் பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார் விண்ணோ ரவரேத் தவிரும் புவரே. 2.23.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சம்புகேசுவரர். தேவி - அகிலாண்டநாயகியம்மை 2.24. திருநாகேச்சரம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 251 பொன்னேர் தருமே னியனே புரியும் மின்னேர் சடையாய் விரைகா விரியின் நன்னீர் வயல்நா கேச்சர நகரின் மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே. 2.24.1 252 சிறவார் புரமூன் றெரியச் சிலையில் உறவார் கணையுய்த் தவனே உயரும் நறவார் பொழில்நா கேச்சர நகருள் அறவா எனவல் வினையா சறுமே. 2.24.2 253 கல்லால் நிழல்மே யவனே கரும்பின் வில்லான் எழில்வே வவிழித் தவனே நல்லார் தொழுநா கேச்சர நகரில் செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே. 2.24.3 254 நகுவான் மதியோ டரவும் புனலும் தகுவார் சடையின் முடியாய் தளவம் நகுவார் பொழில்நா கேச்சர நகருள் பகவா எனவல் வினைபற் றறுமே. 2.24.4 255 கலைமான் மறியுங் கனலும் மழுவும் நிலையா கியகை யினனே நிகழும் நலமா கியநா கேச்சர நகருள் தலைவா எனவல் வினைதான் அறுமே. 2.24.5 256 குரையார் கழலா டநடங் குலவி வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே நரையார் விடையே றுநாகேச் சரத்தெம் அரைசே எனநீங் கும்அருந் துயரே. 2.24.6 257 முடையார் தருவெண் டலைகொண் டுலகில் கடையார் பலிகொண் டுழல்கா ரணனே நடையார் தருநா கேச்சர நகருள் சடையா எனவல் வினைதான் அறுமே. 2.24.7 258 ஓயா தஅரக் கன்ஒடிந் தலற நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே வாயா ரவழுத் தவர்நா கேச்சரத் தாயே எனவல் வினைதான் அறுமே. 2.24.8 259 நெடியா னொடுநான் முகன்நே டலுறச் சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே நடுமா வயல்நா கேச்சர நகரே இடமா வுறைவா யெனஇன் புறுமே. 2.24.9 260 மலம்பா வியகை யொடுமண் டையதுண் கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில் நலம்பாவியநா கேச்சர நகருள் சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே. 2.24.10 261 கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன் தலமார் தருசெந் தமிழின் விரகன் நலமார் தருநா கேச்சரத் தரனைச் சொலன்மா லைகள்சொல் லநிலா வினையே. 2.24.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - செண்பகாரணியேசுவரர் தேவி - குன்றமுலைநாயகியம்மை 2.25. திருப்புகலி பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 262 உகலி யாழ்கட லோங்கு பாருளீர் அகலி யாவினை யல்லல் போயறும் இகலி யார்புர மெய்த வன்னுறை புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 2.25.1 263 பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக் கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப் புண்ணி யன்னுறை யும்பு கலியை நண்ணு மின்னல மான வேண்டிலே. 2.25.2 264 வீசு மின்புரை காதன் மேதகு பாச வல்வினை தீர்த்த பண்பினன் பூசு நீற்றினன் பூம்பு கலியைப் பேசு மின்பெரி தின்ப மாகவே. 2.25.3 265 கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன் படிகொள் பாரிடம் பேசும் பான்மையன் பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள் அடிகளை யடைந் தன்பு செய்யுமே. 2.25.4 266 பாதத் தாரொலி பல்சி லம்பினன் ஓதத் தார்விட முண்ட வன்படைப் பூதத் தான்புக லிந்ந கர்தொழ ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே. 2.25.5 267 மறையி னான்ஒலி மல்கு வீணையன் நிறையி னார்நிமிர் புன்ச டையனெம் பொறையி னானுறை யும்பு கலியை நிறையி னாற்றொழ நேச மாகுமே. 2.25.6 268 கரவி டைமனத் தாரைக் காண்கிலான் இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை பொருவி டைஉயர்த் தான்பு கலியைப் பரவி டப்பயில் பாவம் பாறுமே. 2.25.7 269 அருப்பி னார்முலை மங்கை பங்கினன் விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும் பொருப்பி னான்பொழி லார்பு கலியூர் இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே. 2.25.8 270 மாலும் நான்முகன் றானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலு மேனியன் பூம்பு கலியுள் பால தாடிய பண்ப னல்லனே. 2.25.9 271 நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல் ஒன்ற தாகவை யாவு ணர்வினுள் நின்ற வன்னிக ழும்பு கலியைச் சென்று கைதொழச் செல்வ மாகுமே. 2.25.10 272 புல்ல மேறிதன் பூம்பு கலியை நல்ல ஞானசம் பந்தன் நாவினாற் சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க் கில்லை யாம்வினை இருநி லத்துளே. 2.25.11 திருச்சிற்றம்பலம் திருப்புகலி என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 2.26. திருநெல்வாயில் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 273 புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய மடையி னார்மணி நீர்நெல் வாயிலார் நடையி னால்விரற் கோவ ணந்நயந் துடையி னாரெம துச்சி யாரே. 2.26.1 274 வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந் தாங்கி னார்தலை யாய தன்மையர் நீங்கு நீரநெல் வாயி லார்தொழ ஓங்கி னாரெம துச்சி யாரே. 2.26.2 275 நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ இச்சை யாலுறை வாரெம் மீசனார் கச்சை யாவதோர் பாம்பி னார்கவின் இச்சை யாரெம துச்சி யாரே. 2.26.3 276 மறையி னார்மழு வாளி னார்மல்கு பிறையி னார்பிறை யோடி லங்கிய நிறையி னாரநெல் வாயிலார் தொழும் இறைவ னாரெம துச்சி யாரே. 2.26.4 277 விருத்த னாகிவெண் ணீறு பூசிய கருத்த னார்கன லாட்டு கந்தவர் நிருத்த னாரநெல் வாயில் மேவிய ஒருத்த னாரெம துச்சி யாரே. 2.26.5 278 காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு பேரி னார்பிறை யோடி லங்கிய நீரி னாரநெல் வாயிலார் தொழும் ஏரி னாரெம துச்சி யாரே. 2.26.6 279 ஆதி யாரந்த மாயி னார்வினை கோதி யார்மதில் கூட்ட ழித்தவர் நீதி யாரநெல் வாயி லார்மறை ஓதி யாரெம துச்சி யாரே. 2.26.7 280 பற்றி னான்அரக் கன்க யிலையை ஒற்றி னாரொரு கால்வி ரலுற நெற்றி யாரநெல் வாயி லார்தொழும் பெற்றி யாரெம துச்சி யாரே. 2.26.8 281 நாடி னார்மணி வண்ணன் நான்முகன் கூடி னார்குறு காத கொள்கையர் நீடி னாரநெல் வாயி லார்தலை ஓடி னாரெம துச்சி யாரே. 2.26.9 282 குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல் பண்ட மாகவை யாத பண்பினர் விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை உண்ட கண்டரெம் உச்சி யாரே. 2.26.10 283 நெண்ப யங்குநெல் வாயி லீசனைச் சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை பண்ப யன்கொளப் பாட வல்லவர் விண்ப யன்கொளும் வேட்கை யாளரே. 2.26.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமி - அரத்துறைநாதர் தேவி - ஆனந்தநாயகியம்மை 2.27 திரு இந்திரநீலப்பருப்பதம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 284 குலவு பாரிடம் போற்ற வீற்றிருந் திலகு மான்மழு வேந்தும் அங்கையன் நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத் துலவி னான்அடி யுள்க நல்குமே. 2.27.1 285 குறைவி லார்மதி சூடி யாடவண் டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர் இறைவன் இந்திர நீலப் பர்ப்பதத் துறைவி னான்றனை யோதி உய்ம்மினே. 2.27.2 286 என்பொன் என்மணி யென்ன ஏத்துவார் நம்பன் நான்மறை பாடு நாவினான் இன்பன் இந்திர நீலப் பர்ப்பதத் தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே. 2.27.3 287 நாச மாம்வினை நன்மை தான்வருந் தேச மார்புக ழாய செம்மையெம் ஈசன் இந்திர நீலப் பர்ப்பதங் கூசி வாழ்த்துதுங் குணம தாகவே. 2.27.4 288 மருவு மான்மட மாதொர் பாகமாய்ப் பரவு வார்வினை தீர்த்த பண்பினான் இரவன் இந்திர நீலப் பர்ப்பதத் தருவி சூடிடும் அடிகள் வண்ணமே. 2.27.5 289 வெண்ணி லாமதி சூடும் வேணியன் எண்ணி லார்மதி லெய்த வில்லினன் அண்ணல் இந்திர நீலப் பர்ப்பதத் துண்ணி லாவுறும் ஒருவன் நல்லனே. 2.27.6 290 கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர் பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர் அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம் உடைய வாண ருகந்த கொள்கையே. 2.27.7 291 எடுத்த வல்லரக் கன்க ரம்புயம் அடர்த்த தோர்விர லான வனையாட் படுத்தன் இந்திர நீலப் பர்ப்பதம் முடித்த லம்முற முயலும் இன்பமே. 2.27.8 292 பூவி னானொடு மாலும் போற்றுறுந் தேவன் இந்திர நீலப் பர்ப்பதம் பாவி யாதெழு வாரைத் தம்வினை கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே. 2.27.9 293 கட்டர் குண்டமண் தேரர் சீரிலர் விட்டர் இந்திர நீலப் பர்ப்பதம் எட்ட னைநினை யாத தென்கொலோ சிட்ட தாயுறை யாதி சீர்களே. 2.27.10 294 கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான் இந்தி ரன்தொழு நீலப் பர்பதத் தந்த மில்லியை யேத்து ஞானசம் பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே. 2.27.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் வடதேசத்திலுள்ளது. சுவாமி - நீலாசலநாதர் தேவி - நீலாம்பிகையம்மை 28 திருக்கருவூரானிலை பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 295 தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ் சுண்ட லாருயி ராய தன்மையர் கண்ட னார்கரு வூரு ளானிலை அண்ட னாரரு ளீயும் அன்பரே. 2.28.1 296 நீதி யார்நினைந் தாய நான்மறை ஓதி யாரொடுங் கூட லார்குழைக் காதி னார்கரு வூரு ளானிலை ஆதி யாரடி யார்தம் அன்பரே. 2.28.2 297 விண்ணு லாமதி சூடி வேதமே பண்ணு ளார்பர மாய பண்பினர் கண்ணு ளார்கரு வூரு ளானிலை அண்ண லாரடி யார்க்கு நல்லரே. 2.28.3 298 முடியர் மும்மத யானை யீருரி பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர் கடியு ளார்கரு வூரு ளானிலை அடிகள் யாவையு மாய ஈசரே. 2.28.4 299 பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர் மங்கை யர்மணி நீல கண்டர்வான் கங்கை யர்கரு வூரு ளானிலை அங்கை யாடர வத்தெம் மண்ணலே. 2.28.5 300 தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் மேவர் மும்மதி லெய்த வில்லியர் காவ லர்கரு வூரு ளானிலை மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. 2.28.6 301 பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப் பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர் கண்ணி னார்கரு வூரு ளானிலை நண்ணி னார்நமை யாளும் நாதரே. 2.28.7 302 கடுத்த வாளரக் கன்க யிலையை எடுத்த வன்றலை தோளுந் தாளினால் அடர்த்த வன்கரு வூரு ளானிலை கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. 2.28.8 303 உழுது மாநிலத் தேன மாகிமால் தொழுது மாமல ரோனுங் காண்கிலார் கழுதி னான்கரு வூரு ளானிலை முழுது மாகிய மூர்த்தி பாதமே. 2.28.9 304 புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப் பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப் பத்தர் சேர்கரு வூரு ளானிலை அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே. 2.28.10 305 கந்த மார்பொழிற் காழி ஞானசம் பந்தன் சேர்கரு வூரு ளானிலை எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர் சிந்தை யிற்றுய ராய தீர்வரே. 2.28.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. சுவாமி - பசுபதீசுவரர் தேவி - கிருபாநாயகியம்மை 2.29 திருப்புகலி - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 306 முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும் பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந் துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ் சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே. 2.29.1 307 வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப் பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர் புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத் தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே. 2.29.2 308 பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர் பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத் தேவண விழாவளர் திருப்புகலி யாமே. 2.29.3 309 மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக் கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர் செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித் தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே. 2.29.4 310 முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப் பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில் புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச் செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே. 2.29.5 311 வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர் கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத் தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே. 2.29.6 312 நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர் பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச் செல்வமறை யோருறை திருப்புகலி யாமே. 2.29.7 313 பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால் அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர் நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச் செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே. 2.29.8 314 கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல் ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும் நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித் தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே. 2.29.9 315 கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர் பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ் செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே. 2.29.10 316 செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல் அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப் பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 2.29.11 திருச்சிற்றம்பலம் திருப்புகலி என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி 2.30 திருப்புறம்பயம் - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 317 மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க் கறம்பய னுரைத்தனை புரம்பய மமர்ந்தோய். 2.30.1 318 விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளந் தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன் எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம் பொருத்துதல் கருத்தினை புறம்பய மமர்ந்தோய். 2.30.2 319 விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும் பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம் புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய். 2.30.3 320 வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்கத் துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு புளங்கொள விளங்கினை புரம்பய மமர்ந்தோய். 2.30.4 321 பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங் கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை விரும்பினை புறம்பய மமர்ந்தஇறை யோனே. 2.30.5 322 அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும் நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப் புனற்படு கிடைக்கையை புறம்பய மமர்ந்தோய். 2.30.6 323 மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம் அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர் திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும் புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய். 2.30.7 324 இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி வலங்கொள எழுந்தவ னலங்கவின வஞ்சு புலங்களை விலங்கினை புறம்பய மமர்ந்தோய். 2.30.8 325 வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லிக் கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார் தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப் புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய். 2.30.9 326 விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும் படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம் அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே. 2.30.10 327 கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தந் தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன் சுரும்பவிழ் புறம்பய மமர்ந்த தமிழ்வல்லார் பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே. 2.30.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சாட்சிவரதநாதர் தேவி - கரும்பன்னசொல்லம்மை |
வந்தியத்தேவன் வாள் ஆசிரியர்: விக்கிரமன்வகைப்பாடு : வரலாற்று புதினம் விலை: ரூ. 240.00 தள்ளுபடி விலை: ரூ. 220.00 அஞ்சல்: ரூ. 50.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
மலர் மஞ்சம் ஆசிரியர்: தி. ஜானகிராமன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 650.00 தள்ளுபடி விலை: ரூ. 590.00 அஞ்சல்: ரூ. 0.00 |
|