இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் ... தொடர்ச்சி - 4 ... 2.31. திருக்கருப்பறியலூர் - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 328 சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள் மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக் கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.1 329 வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும் விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால் கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.2 330 வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப் போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங் காதவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.3 331 மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன் உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத் தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால் கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.4 332 ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங் கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.5 333 விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன் பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான் எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங் கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.6 334 ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர் சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத் தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக் காதின னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.7 335 வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற் கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள் காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.8 336 பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல் கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 2.31.9 337 அற்றமறை யாவமண ராதமிலி புத்தர் சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக் குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில் கற்றென இருப்பது கருப்பறிய லூரே. 2.31.10 338 நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன் கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப் பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே. 2.31.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - குற்றம்பொறுத்தநாதர் தேவி - கோல்வளையம்மை 2.32. திருவையாறு - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 339 திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர் உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார் மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே. 2.32.1 340 கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர் இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ் சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே. 2.32.2 341 கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில் கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக் கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர் வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே. 2.32.3 342 நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன் றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த் தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே. 2.32.4 343 வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக் கன்றிவரு கோபமிகு காளிகத மோவ நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால் மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே. 2.32.5 344 பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப் பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக் கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே. 2.32.6 345 துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப் பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர் மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே. 2.32.7 346 இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர் அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத் துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர் வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே. 2.32.8 347 பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப் பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங் கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார் வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே. 2.32.9 348 பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர் சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம் நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால் மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. 2.32.10 349 வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள் ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப் பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார் நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே. 2.32.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - செம்பொன்சோதீசுரர் தேவி - அறம்வளர்த்தநாயகியம்மை 2.33. திருநள்ளாறு - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 350 ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர் கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை நாடுமலி வாசமது வீசியநள் ளாறே. 2.33.1 351 விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல் பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள் நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே. 2.33.2 352 விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத் துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர் வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே. 2.33.3 353 கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச் செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப் புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே. 2.33.4 354 நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார் வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர் அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே. 2.33.5 355 பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங் காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங் கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர் நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே. 2.33.6 356 நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும் ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே. 2.33.7 357 கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும் அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே. 2.33.8 358 உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம் பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர் வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும் நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே. 2.33.9 359 சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும் பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர் மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச் சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே. 2.33.10 360 ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும் நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல் பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே. 2.33.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று. சுவாமி - தெர்ப்பாரணியர் தேவி - போகமார்த்தபூண்முலையம்மை 2.34. திருப்பழுவூர் - திருவிராகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 361 முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன் அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர் மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப் பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே. 2.34.1 362 கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல் ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர் மாடமலி சூளிகையி லேறிமட வார்கள் பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே. 2.34.2 363 வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர் வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர் பாலென மிழற்றிநட மாடுபழு வூரே. 2.34.3 364 எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே. 2.34.4 365 சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும் நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர் வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன் பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே. 2.34.5 366 மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர் பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப் பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே. 2.34.6 367 மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர் அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார் பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே. 2.34.7 368 உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன் றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர் குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே. 2.34.8 369 நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர் ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள் மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே. 2.34.9 370 மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர் முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர் மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம் பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே. 2.34.10 371 அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும் பந்தமலி கின்றபழு வூரரனை யாரச் சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 2.34.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வடவனநாதர் தேவி - அருந்தவநாயகியம்மை 2.35. திருக்குரங்காடுதுறை பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 372 பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி அரவச் சடையந் தணன்மேய அழகார் குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே. 2.35.1 373 விண்டார் புரமூன்று மெரித்த விமலன் இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங் கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே. 2.35.2 374 நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும் இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங் குறைவில் லவனூர் குரங்காடு துறையே. 2.35.3 375 விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித் தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப் பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன் கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே. 2.35.4 376 நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன் ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர் கூறான்நகர் போல்குரங் காடு துறையே. 2.35.5 377 நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தைத் துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில் குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே. 2.35.6 378 பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும் அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங் குழகன் னகர்போல் குரங்காடு துறையே. 2.35.7 379 வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க நிரையார் விரலால் நெரித்திட் டவனூராங் கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல் குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே. 2.35.8 380 நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப் படியா கியபண் டங்கனின் றெரியாடி செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின் கொடியான் நகர்போல் குரங்காடு துறையே. 2.35.9 381 துவரா டையர்வே டமலாச் சமண்கையர் கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம் நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக் குவையார் கரைசேர் குரங்காடு துறையே. 2.35.10 382 நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன் கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல் சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே. 2.35.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - குலைவணங்குநாதர் தேவி - அழகுசடைமுடியம்மை 2.36. திருஇரும்பூளை - வினாவுரை பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 383 சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர் வாரார் முலைமங்கை யொடும் முடனாகி ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே. 2.36.1 384 தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர் குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே. 2.36.2 385 அன்பா லடிகை தொழுவீ ரறியீரே மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே. 2.36.3 386 நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர் கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன் உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே. 2.36.4 387 சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர் நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே. 2.36.5 388 தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர் சேடார் குழற்சே யிழையோ டுடனாகி ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் காடார் கடுவே டுவனான கருத்தே. 2.36.6 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 2.36.7 389 ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர் பருக்கை மதவேழ முரித்துமை யோடும் இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே. 2.36.8 390 துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர் கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே. 2.36.9 391 துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர் பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே. 2.36.10 392 எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன் செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார் பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே. 2.36.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - காசியாரண்ணியேசுவரர் தேவி - ஏலவார்குழலம்மை 2.37. திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம் பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 393 சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. 2.37.1 394 சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும் வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா மங்கை உமைபா கமுமா கவிதென்கொல் கங்கை சடைமே லடைவித்த கருத்தே. 2.37.2 395 குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல் மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல் அரவம் மதியோ டடைவித்த லழகே. 2.37.3 396 படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம் மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா உடலம் முமைபங்க மதாகியு மென்கொல் கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே. 2.37.4 397 வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல் கானார் கடுவே டுவனான கருத்தே. 2.37.5 398 பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல் தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே. 2.37.6 399 வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ் சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல் காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே. 2.37.7 400 கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல் வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே. 2.37.8 401 கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந் தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல் வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே. 2.37.9 402 வேதம் பலவோமம் வியந்தடி போற்ற ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய் ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல் ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. 2.37.10 403 காழிந் நகரான் கலைஞான சம்பந்தன் வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார் வாழி யுலகோர் தொழவான் அடைவாரே. 2.37.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - வேதாரணியேசுவரர் தேவி - யாழைப்பழித்தமொழியம்மை 2.38. திருச்சாய்க்காடு பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 404 நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச் சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில் மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே. 2.38.1 405 பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும் வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில் கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித் தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே. 2.38.2 406 நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில் ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே. 2.38.3 407 வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார் புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித் தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே. 2.38.4 408 ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில் மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந் தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே. 2.38.5 409 துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில் அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில் வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ் சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே. 2.38.6 410 வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர் ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில் மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத் தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே. 2.38.7 411 இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில் மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந் தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே. 2.38.8 412 மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில் சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே. 2.38.9 413 ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும் ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில் வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே. 2.38.10 414 ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும் ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய் வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே. 2.38.11 திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - சாயாவனேசுவரர் தேவி - குயிலுநன்மொழியம்மை 2.39. திருக்ஷேத்திரக்கோவை பண் - இந்தளம் திருச்சிற்றம்பலம் 415 ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம் வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார் நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங் குருகா வையூர் நாரையூர் நீடுகானப் பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும் பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே. 2.39.1 416 அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங் கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம் பயில்கற் குடிகா ளத்திவாட் போக்கியும் பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான் பரங்குன் றம்பருப் பதம்பேணி நின்றே எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக் கடல் நீந் தலாங் காரணமே. 2.39.2 417 அட்டா னமென் றோதியநா லிரண்டும் அழகன் னுறைகா வனைத்துந் துறைகள் எட்டாந் திருமூர்த் தியின்கா டொன்பதுங் குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும் மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன் மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ் சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய் அரும்பா வங்களா யினதேய்ந் தறவே. 2.39.3 418 அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி பூசியா றணிவான் அமர்காட்டுப் பள்ளி சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி திருநனி பள்ளி சீர்மகேந் திரத்துப் பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான் விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால் உறைப்பா லடிபோற்றக் கொடுத்த பள்ளி உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே. 2.39.4 419 ஆறை வடமா கறலம்பர் ஐயா றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர் சேறை துலைபுக லூரக லாதிவை காதலித் தானவன் சேர்பதியே. 2.39.5 இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின. 420 மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும் மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும் இனவஞ் சொலிலா இடைமா மருதும் இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங் கனமஞ் சினமால் விடையான் விரும்புங் கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர் தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின் தவமாம் மலமா யினதா னருமே. 2.39.6 421 மாட்டூர் மடப்பாச் சிலாச்சி ராமம் முண்டீச் சரம்வாத வூர்வார ணாசி காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங் கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங் கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் **** 2.39.7 இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின. 422 **** **** குலாவு திங்கட் சடையான் குளிரும் பரிதி நியமம் போற்றூ ரடியார் வழிபா டொழியாத் தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங் காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள் நெரித்தா னுறைகோயில் **** **** ** லென் றென்றுநீ கருதே. 2.39.8 இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின. 423 நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல் நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு நற்குன்றம் வலம்புரம் நாகேச் சுரம்நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் கற்குன்ற மொன்றேந் திமழை தடுத்த கடல்வண் ணனுமா மலரோனுங் காணாச் சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங் குடமூக் கென்றுசொல் லிக்குலா வுமினே. 2.39.9 424 குத்தங் குடிவே திகுடி புனல்சூழ் குருந்தங் குடிதே வன்குடி மருவும் அத்தங் குடிதண் டிருவண் குடியும் அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த நித்தன் நிமலன் உமையோ டுங்கூட நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப் புத்தர் புறங்கூ றியபுன் சமணர் நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே. 2.39.10 425 அம்மா னையருந் தவமாகி நின்ற அமரர் பெருமான் பதியான வுன்னிக் கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக் கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று விம்மா வெருவா விரும்பும் மடியார் விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே. 2.39.11 திருச்சிற்றம்பலம் இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர், வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம், நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி, மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித் தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும். 2.40. திருப்பிரமபுரம் பண் - சீகாமரம் திருச்சிற்றம்பலம் 426 எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார் தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங் கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன் வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே. 2.40.1 427 தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக் காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான் ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே. 2.40.2 428 நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல் அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும் பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே. 2.40.3 429 சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங் கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந் தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே. 2.40.4 430 கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான் விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே. 2.40.5 431 எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக் கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ் சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே. 2.40.6 432 சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன் அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால் நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே. 2.40.7 433 எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள் நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான் உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத் தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே. 2.40.8 434 கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய் அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான் தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே. 2.40.9 435 உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான் முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன் பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ் சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே. 2.40.10 436 தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக் கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார் பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே. 2.40.11 திருச்சிற்றம்பலம் திருப்பிரமபுரமென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமி - பிரமபுரீசர் தேவி - திருநிலைநாயகி |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |