http://www.chennailibrary.com


ஒன்பதாம் திருமுறை

திருவிசைப்பா

... தொடர்ச்சி ...

தனதன்நல் தோழா! சங்கரா! சூல
      பாணியே! தாணுவே! சிவனே!
கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே!
      கண்கள்மூன் றுடையதோர் கரும்பே!
அனகனே! குமர விநாயக சனக!
      அம்பலத்து அமரசே கரனே!
உன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
      தொண்டனேன் நுகருமா நுகரே. 7

திறம்பிய பிறவிச் சிவதெய்வ நெறிக்கே
      திகைக்கின்றேன் தனைத்திகை யாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
      நிகழ்வித்த நிகரிலா மணியே!
அறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய்
      ஆலின்கீழ் இருந்தஅம்பலவா!
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண்டாயைத்
      தொண்டனேன் புணருமா புணரே. 8

தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்
      தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண்டு உருள ஒண்திருப் புருவம்
      நெறித்தரு ளியவுருத் திரனே!
அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட
      ஆடப்பொன் னம்பலத்து ஆடும்
சொக்கனே! எவர்க்கும் தொடர்வரி யாயைத்
      தொண்டனேன் தொடருமா தொடரே. 9

மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு
      அருள்புரி வள்ளலே! மருளார்
இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்
      ஏறிய ஏறுசே வகனே!
அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்
      அடர்த்தபொன் னம்பலத் தரசே!
விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே! உன்னைத்
      தொண்டனேன் விரும்புமா விரும்பே. 10

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது
      அயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்டு ஓர்வரி யாயை
      மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
      சிறுமையில் பொறுக்கும்அம்பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே! உன்னைத்
      தொண்டனேன் நினையுமா நினையே. 11

2. கோயில் - உயர்கொடியாடை
பண் - பஞ்சமம்
பாதாதி கேசம்

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
      ஓமதூ மப்படலத்தின்
பெயர்நெடு மாடத்து அகிற்புகைப் படலம்
      பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
      நிறைந்தசிற் றம்பலக் கூத்தா!
மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
      வடிகள்என் மனத்துவைத் தருளே. 1

கருவளர் மேகந் தகடுதோய் மகுடக்
      கனகமா ளிகைகலந் தெங்கும்
பெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சால்
      எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம்
      திரண்டசிற் றம்பலக் கூத்தா!
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
      உன்னடிக் கீழதுஎன் னுயிரே. 2

வரம்பிரி வாளை மிளர்மிடுக் கமலம்
      கரும்பொடு மாந்துமே திகள்சேர்
பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப்
      பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்த்
சிரம்புணர் முடிவா னவர்அடி முறையால்
      இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா!
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
      நினைந்துநின்று ஒழிந்ததென் நெஞ்சே. 3




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/saiva/thiruvisaippa2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.