http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஊருக்குள் ஒரு புரட்சி

19

     விறகோடு சேர்ந்து மீனாட்சி எரிந்து கொண்டிருந்தாள்.

     மயானக் காக்கைகள், அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தன. பூணிக்குருவிகள் அருகே இருந்த தோட்டத்தில் எள் செடி ஒன்றை வளைத்து, சிதைத்துக் கொண்டிருந்தன. ஒரு சில சமாதிகளில் முளைத்திருந்த எருக்கலைச் செடிகளை, மைனாக் குருவிகள், அலகுகளால் முகர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தன. அருகாமையில் இருந்த கிறிஸ்தவச் சுடுகாட்டில், வெள்ளை நிறத்தில் சிலுவைக் குறிகளுடன் அமைந்த சமாதிகளைப் பார்க்கையில் படுத்துக் கிடக்கும் பசு மாடுகள், தலைகளை நிமிர்த்திப் பார்ப்பது போல் தோன்றியது. அவற்றுள் நடமாடிய எருமை மாடுகள் ஒன்றிரண்டில், காகங்கள் உட்கார்ந்து, 'உன்னிகளைத்' தின்று கொண்டிருந்தன.

     மாண்டு மடிந்தோரின் மரணக் கதைகளை விண்டுரைப்பதுபோல, பனையோலைகளை சலசலக்க வைத்த பேய்க்காற்று ஒரு பழுத்த பனையோலையை வீழ்த்த, அந்த ஓலை சிதையில் பட்டு, தீயோலையாக மாற, சிதைப் புகை அடியில் செந்நிறமகவும், நுனியில் கருமையாகவும் தோன்ற, பனை மரக்காடுகள் வழியாக, ஆகாயத்தைத் துளைக்கப் போவது போல் போனது. பேய்க்காற்றில் விழுந்த தென்னங் குரும்பையை, சிட்டுக்குருவி ஒன்று கொத்திக் கொண்டிருந்தது.

     புல்லுக்கு மானாகவும், மானுக்குப் புலியாகவும், புலிக்கு வேடனாகவும் உருமாறியும், தாக்குவதில் துவக்கமாகவும், தாக்கப்படுவதில் முடிவாகவும் தோன்றும் உருமாற்றம் அல்லாது ஒரு மாற்றமும் இல்லாத மரணம், மவுடீகமாக கோர தாண்டவம் ஆடுவதுபோல், சிதைப்புகை பேய்க் காற்றுக்கு ஏற்றாற்போல், நெளிந்தும், சிதைந்தும் ஒன்று பலவாகவும், பல ஒன்றாகவும், தீ நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு ஆடியது.

     மீனாட்சி எரிந்து சாம்பலானதும், அந்த அஸ்தியை, அருகேயுள்ள ஏரியில் கரைப்பதற்காக, சற்றுத் தொலைவில் இருபது இருபத்தைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் தவிர பெரும்பாலானவர்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டார்கள். ஆண்டியப்பன், குழந்தையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவனைப் போல் தோன்றிய அதன் மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டு, எரியும் சிதையை ஏக்கத்தோடு பார்த்தான்.

     "பெண்டாட்டி செத்த துஷ்டியைக் கூட கேக்கல" என்று சொல்லி, யாரும் இரண்டாவது கல்யாணப் பெண்ணைக் கொடுக்க முன்வராமல் இருந்து விடக்கூடாது என்பதற்காக, அம்மாவுடன் வந்தவன் போல் தோன்றிய மீனாட்சியின் புருஷன் கூட, எதையோ ஒன்றைப் பறிகொடுத்த ஏக்கத்துடன் நின்றான்.

     'நான் போட்ட தாலியக் கூட வித்துத் தின்னுட்டியடா பாவி'ன்னு நாக்கப் பிடுங்கிட்டுச் சாகும்படியாய் கேளுடா என்று அம்மாக்காரி சொன்னதை மனப்பாடம் செய்திருந்த அவனால், இப்போது அதை ஒப்பிக்க முடியவில்லை. ஆண்டியைப் பார்த்து, "அப்போ நான்..." என்றான்.

     மைத்துனனைப் பார்த்து தங்கையின் தாம்பத்ய வாழ்க்கையையும், ஏலாதவனைப் பெற்ற 'வல்லரக்கி' மாமியாரையும் நினைவுக்குக் கொண்டு வந்த ஆண்டியப்பன், பைக்குள் கிடந்த கால்பவுன் தாலியை எடுத்து, மைத்துனனிடம் நீட்டி, "இந்தாரும் இது ஒமக்குத் தேவையா இருக்கும்" என்று சொல்லி நீட்டினான். மைத்துனன், அவன் சொன்னதன் பொருள் புரியாமலே, அந்தப் பொருளை வாங்கிக் கொண்டு, தான் பெற்ற பிள்ளையை அங்கேயே விட்டுவிட்டு, தயங்கித் தயங்கி சிதையைப் பார்த்துக் கொண்டே போய்த் 'தொலைந்தான்.'

     அவனையே பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் இப்போது மௌனத்தைக் கலைத்தது.

     "முந்தாநாள் வீட்டுக்குப் போயிருந்தப்போ அண்ணாச்சின்னு ஆசயோட மீனாட்சி கூப்பிட்டாள். இப்போ? சும்மாவாச் சொன்னான் - 'தூங்கும்போது ஒரு மூச்சு! அது சுழி போட்டு இழுத்தாக் கால் போச்சு' இது தெரியாமல் துள்ளுறோம் துடிக்கிறோம்" என்றார் ஒரு கிழவர்.

     சின்னான், அவருக்குப் பதிலளித்தான்.



ஊருக்குள் ஒரு புரட்சி: என்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10
11  12  13  14  15  16  17  18  19  20  21



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/samuthiram/oorukkulorupuratchi/oop19.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs