http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஊருக்குள் ஒரு புரட்சி

2

     கிட்டத்தட்ட அந்த ஓலை வீட்டின் உயரத்திற்கு காண்டாமிருகத்தின் கம்பீரத்தோடு, காட்டு யானையின் வாளிப்போடு, பச்சை வண்ண மேனியில் பால்வண்ணப் புள்ளிகள், அங்குமிங்குமாக அள்ளித் தெளித்த கோலப் புள்ளிகள் போல் காட்சியளிக்கத் தோன்றிய அந்த ஜெர்ஸி கலப்பினப் பசுவையும், சற்றுத் தொலைவில் ராட்சதக் கருவண்டு போல் காட்சியளிக்கும் அந்தக் கன்றையும் ஆண்டியப்பன் கண்கொட்டாது பார்த்தான்.

     கூட்டுறவுச் சங்கத்தின் மூலம், வெட்னரி டாக்டரின் ஆமோதிப்பில், பெங்களூர்ல் இருந்து வாங்கி வரப்பட்ட அந்த மாடு, தொலைவில் கட்டப்பட்டிருக்கும் தன் கன்றை நக்குவதற்குத் திமிறி, அது முடியாமல் போகவே கட்டிக் கொண்ட கயிற்றை, நாக்கால் தடவியது. பின்பு வாய் வலித்ததாலோ, என்னவோ தான் பிணைக்கப்பட்டிருக்கும் வாதமடக்கி மரத்தை முட்டியது.

     ஆண்டியப்பனுக்கு, மனம் கேட்கவில்லை. கை கால்களை உதறிக்கொண்டே எழுந்து கன்றை அவிழ்த்து, மாட்டின் நாக்குப் படும் இடத்தில் கட்டிவிட்டு, மாட்டை ஒரு கையாலும் கன்றை ஒரு கையாலும் தடவிக் கொடுத்தான். அந்தச் சமயத்தில் இளமையிலேயே, 'பதவி ஆசை' பிடித்து சிவலோகம் போய்ச் சேர்ந்த தன் அன்னையையும் வீட்டுக்குள் கைக்குழந்தையுடன் மார்பில் ஏற்பட்ட கட்டிகளால் அழாமல் அழுதுகொண்டிருக்கும் தங்கை மீனாட்சியையும் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு தடவை தங்கையைப் பார்த்து, அவளுள் அம்மாவையும் பார்க்க வேண்டும் என்று நினைத்தவனாய் வீட்டுக்குள் போனான்.

     சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓலைப் பெட்டியில் இருந்த புண்ணாக்கை எடுத்துக்கொண்டு வந்து, விளிம்பு உடைந்த மண்பானையில் அதை நீரிட்டுக் கலக்கி, மாட்டின் முன்னால் வைத்தான். அந்த சீமைப்பசு சாப்பிடுவதைப் பார்த்து தான், தனக்குப் பிடித்தமான கோழிக்கறியை சாப்பிட்டுவிட்ட திருப்தியில், தன்னையறியாமலேயே, வாயைத் துடைத்த போது, தங்கம்மா அங்கே வந்து நின்றாள்.

     அவளை, ஆண்டியப்பன் கவனிக்கவில்லை என்பதை அவள் கவனிக்கவில்லை. அத்தை மகன், தன்னை அலட்சியப்படுத்துகிறான் என்பது போல், சிறிது கோபப்பட்டது போல், தன் வீட்டுக்குத் திரும்பப் போகப் போவது போல், லேசாகத் திரும்பினாள். அப்படியும், அவன் பார்க்காததால், இப்போது அவள் செருமினாள். தலை நிமிர்ந்த ஆண்டியப்பனைப் பார்த்து "மாடு வந்துட்டு... இனும ஒமக்கு கண்ணு தெரியுமா?" என்றாள் - தன் கண்களை மாட்டின் மீதும், மச்சான் மீதும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே.

     சுத்தி செய்யப்படாத வைரம்போல், நாட்டுக்கட்டை மேனியில், பருவம் 'சன்மைக்கா போல்' பளபளக்க, நூல் புடவையிலும் நூதனமாக விளங்கிய மாமன் மகளிடம், ஆண்டியப்பன் சிரித்துக் கொண்டே பேசினானா அல்லது பேசிக்கொண்டே சிரித்தானா என்பது, விவாதத்துக்குரியது. பேசினான், சிரித்தான். சிரித்தான், பேசினான்.

     "என்ன சொன்ன?"

     "மாடு வந்துட்டு... இனும, மவராசனுக்குக் கண்ணு தெரியுமா?"

     "நீ வந்தத சொல்லுதியா?"

     "என்னைப் பார்த்தா ஒமக்கு மாடு மாதிரி தெரியுதா?"

     "ஆமாம். நீ எனக்கு என்னைக்குமே காராம்மணிப்பசு. காமதேனுப் பெரும் பசு. இந்த மாட்டுக்கு இந்தப் புண்ணாக்கு எப்படியோ, அப்படி நீ எனக்கு."

     "சரியான புண்ணாக்கு மாடன். இந்த மாட்ட வசக்க முடிஞ்சது. எங்கம்மாவ மட்டும் முடியல."

     "முடியற காரியமா! புலிய வசக்குற சர்க்கஸ்காரனால கூட ஒம்மாவ வசக்க முடியாதே! பாவம்! எங்க மாமனே ஒம்மாக்கிட்ட குட்டுப்பட்டு குட்டுப்பட்டு கூனாப் போயிட்டாரே! ஒம்மா... சரியான..."

     "இதுக்குமேலே எங்கம்மாவ பேசுனா... எனக்குக் கெட்ட கோபம் வரும்."



ஊருக்குள் ஒரு புரட்சி: என்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10
11  12  13  14  15  16  17  18  19  20  21



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/samuthiram/oorukkulorupuratchi/oop2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs