http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஊருக்குள் ஒரு புரட்சி

21

     பழைய ஊர்ச் சாவடிக் கட்டடத்திற்கு அருகே உள்ள புதிய கட்டடத்திற்கு முன்னால் கூட்டம் போய் நின்றது. கூட்டுறவுச் சங்கக் கட்டடம் அது. சத்தத்தைக் கேட்டு உள்ளே தூங்கிக் கொண்டிருந்த கூட்டுறவுத் தலைவர், தற்செயலாகக் கதவைத் திறந்தார். ஏதோ கிறிஸ்தவர்கள் பாடிக்கொண்டு போவதாக நினைத்த தலைவர், ஆண்டியப்பனைப் பார்த்துவிட்டு, அந்தப் பயத்திலேயே அவனை அடுத்து நிற்பவர்களைப் பார்க்க விரும்பாமல், கதவைச் சாத்தப் போனார். கதவின் ஒரு பகுதியை மூடிவிட்டு, இன்னொரு பகுதியை மூடப்போன போது, பிச்சாண்டி அவரையும் அந்தக் கதவையும் ஒருசேர இழுத்தான். "விட்டுடுப்பா - வாரேன்" என்று தலைவர் கத்த, பிச்சாண்டியின் இரும்புப் பிடி, வெண்ணெய்ப் பிடியாக, தலைவர் வெளியே வந்து இரண்டு கைகளையும் தூக்கி தலைக்கு மேல் கொண்டு போய் வைத்துக் கொண்டு, "நீங்க என்ன சொன்னாலும் கேக்கேன்! எல்லாப் பயலுமாச் சேர்ந்து என்னையும் மோசம் பண்ணிட்டானுவ. நீங்க என்ன செய்தாலும், எனக்குச் சந்தோஷந்தான்" என்றார் அழுதுகொண்டே. சின்னான் அதட்டினான்:

     "இப்போ அழுவுறீர்! அப்போ இந்த ஆண்டி அழுதான்! அவன் தங்கச்சி அழமுடியாத இடத்துக்குப் போயிட்டா! ஒரு வார்த்த பரமசிவத்த தட்டிக் கேட்டீரா? அநியாயத்த தட்டிக் கேக்காதவன் முதுகயும் தட்டிப் பார்க்கிற காலம் வந்துகிட்டு இருக்குய்யா... கூட்டுறவ... குடும்ப உறவா ஆக்கின ஒம்ம இப்போ என்ன செய்யப் போறோம் தெரியுமா?"

     "சபையில நான் தோப்புக்கரணம் வேணுமுன்னாலும் போடுறேன்! என்ன சொன்னாலும் செய்யுறேன்! நானே ஒங்ககிட்டே வரப்போற சமயத்துல நீங்க என்கிட்ட வந்திருக்கிங்க."

     "யோவ், இது சபை - கூட்டுறவுச் சங்கமில்ல. இந்தத் தளுக்குப் பேச்சில்லாம் வேண்டாம்."

     "என்ன செய்யணும் சொல்லுங்க."

     "சரி பேரேட்ட எடும். எத்தன பேரு வீட்ல - எத்தன பேரு பேர்ல - எத்தன மாடு இருக்கு. விவசாயக் கருவி இருக்குன்னுச் சொல்லணும். பேரேட்ட எடுத்துக்கிட்டு வாரும். உம் சீக்கிரம்."

     கூட்டு(றவு)த் தலைவர், பைண்ட் செய்த ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தார். ஆண்டியப்பன் அதட்டினான்:

     "கதவப் பூட்டிட்டு வாரும்வே! இல்லன்னா குமார் பய சங்கத்த கொள்ளையடிச்சிட்டு பழிய எங்க மேல போடுவான்."

     சின்னானுக்கு திடீரென்று ஒரு யோசனை.

     "கேஷ் புக்கை கொண்டு வாரும்."

     தலைவர் உள்ளே போய், கேஷ் புக்கைக் கொண்டு வந்தார். அதன் அட்டை பழைய காலணா நாணயம் போல் மங்கியிருந்தது. சின்னான் அவரது கைகளிலேயே அந்த நோட்டு இருக்கும்படி பிரித்துக்கொண்டு, "கேஷ் பாலன்ஸ் ஆயிரம் ரூபாய் பதினைஞ்சி காசு இருக்கணும். இருக்கா?" என்றான்.

     "அது வந்து..."

     "நாங்க திருட்டுக் கூட்டம் இல்லய்யா... பணத்தத் தொடமாட்டோம். பேலன்ஸ் பணம் இருக்கான்னு செக் பண்றதுக்காகத்தான் கேட்டேன்!"

     "அது வந்து... ஒரு அவசரமுன்னு மாசானம் ராத்திரி ஐந்நூறு கேட்டான்."

     "மீதி ஐந்நூறு ரூபாய் பதினைஞ்சி காசு?"

     "குமார் அவசரமுன்னு..."



ஊருக்குள் ஒரு புரட்சி: என்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10
11  12  13  14  15  16  17  18  19  20  21



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/samuthiram/oorukkulorupuratchi/oop21.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs