http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




ஊர் வயல் நட்டு...

     ஊர்க்குளம் பெருகிவிட்டது.

     எப்பேர்ப்பட்ட மழையிலும், தலைகீழாக நின்றால் கழுத்துவரை நிற்கும் நீரைக் கொண்ட குளம், இப்போது தலைகீழாக மாறிவிட்டது. ஆண்டுக்கணக்கில் வற்றிப் போயிருந்த அந்த மலட்டுக் குளம், இப்போது கர்ப்பிணிப் பெண் போல் தளதளத்தது. அரைக்கோள வடிவத்தில் அமைந்த அதன் கரையில் நின்று பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர் நிரம்பிய நிலப்பரப்புகளில் 'தொழி வேலையும்', ஆங்காங்கே நடவு வேலையும், உழவு வேலையும் நடப்பது தெரியும். வெள்ளை வெளேரென்று இருந்த நீர்ப்பகுதியையும், அதன் இடையிடையே இருந்த நாற்றுக்களையும் பார்த்தால், வெள்ளைத் தாளின் சில இடங்களில் பச்சை மையில், ஒரு சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருப்பது போல் தோன்றும். கோணைத் தென்னை மரங்கள், அந்த வாக்கியங்களுக்குக் கேள்விக் குறிகள் போலவும், கிணறுகளை ஒட்டியிருந்த 'சரல்கள்' முற்றுப் புள்ளிகள் போலவும் காட்சியளித்தன.

     குளம் பெருகியதை நம்ப முடியாதவர்கள் போல், ஊர்க்காரர்கள், நீருக்குள் கைகளை விட்டுப் பார்த்துக் கொண்டார்கள். சொல்லப் போனால், அது குளமுமல்ல; ஏரியுமல்ல. 'இரண்டுங் கெட்டான்' மைதானம் அது. மைதானம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. குட்டாம்பட்டியில் ஜனித்த ஒவ்வொருவரும், அறுபதாண்டுகள் வாழ்ந்தால், அந்தக் குளம் நிரம்புவதை இரண்டு மூன்று தடவை பார்க்கலாம். இப்போது பத்துப் பதினைந்து வயதில் இருக்கும் சிறுவர்கள் குளப்பெருக்கத்தை இப்போதுதான் பார்க்கிறார்கள். சிறு வயதில் பார்த்ததுபோல் தோன்றிய நீர்ப்பெருக்கை வாலிபர்களால் நினைவு படுத்திக் கொள்ள முடிந்தது.

     வயற்பரப்பின் சில இடங்களில், எள் விதைத்திருந்தார்கள். அப்படி விதைத்ததால், அந்தப் பக்கமாக வரும் கணக்கப் பிள்ளைக்கு அடிக்கடி இளநீர் பறித்துக் கொடுப்பதும் உண்டு. அங்கே வரும்போதெல்லாம் பிள்ளைக்கு நீர்த்தாகம் எடுப்பதும் உண்டு. இப்போது பெருகிவிட்ட நீரில், 'ஆழ்ந்து போன நிலங்களையும்' எள்ளையும் சுட்டிக்காட்டி, இவர்கள் வாயிலும் வயிற்றுலும் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்த அளவில் 'எள் விழ இடமில்லை' என்ற பழமொழி உண்மையாகிவிட்டது. அரசாங்கத்திடம் சொல்லி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு 'நிவாரணம்' அளிப்பதாக, கணக்குப்பிள்ளை வாக்களித்திருக்கிறாராம். அவருக்கு இதற்காக ஓசியில் நாற்றும், தலா ஒரு மூட்டை நெல்லும் கொடுத்து, 'பதில் நிவாரணம்' அளிப்பதாக 'பாதிக்கப்பட்டவர்கள்' வாக்களித்திருக்கிறார்களாம். எவர், எதை முதலில் கொடுப்பது என்ற பிரச்சினையில், விவகாரம் தொங்குவதாகக் கணக்குபிள்ளைக்கு வேண்டாத கிராம முன்சீப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

     சில ஆசாமிகள் குளக்கரையையே ஒரு கை பார்த்தவர்கள். குளத்தை ஒட்டி நிலம் வைத்திருந்த அவர்கள், குளக்கரையில் பாதியைக் குடைந்து நிலமெடுத்தார்கள். ஏற்கனவே ஒடுங்கிப் போயிருந்த குளக்கரை மேலும் ஒல்லியாகி, நீர் கசிந்து கொண்டிருக்கிறது. நீரழுத்தத்தால், தங்கள் வயல் பக்கமுள்ள கரை உடைந்து வெள்ளம் புகுந்துவிட்டால், வெள்ளாமை வீணாகிவிடுமே என்று இப்போதுதான் ஞானோதயம் வந்தவர்கள் போலவும், அதே சமயம், வயலான கரைப் பகுதியை 'நெம்ப' மனமில்லா 'மாயை'யிலும் சிக்கித் தவிக்கிறார்கள். 'கர ஒடயாதுடா... கவலப்படாத' என்று அவர்களுக்கு சில சகுனி மாமாக்கள் ஆலோசனை சொன்னார்கள். கரை உடையாவிட்டால் "பாத்தியா... நான் சொன்னது மாதிரி உடையல" என்று சொல்லலாம். அப்படியே உடைந்தாலும் - குடி முழுகிவிடாது - ஆலோசனை வாதிகளின் குடி.

     குளத்தை 'ஒரு கை பார்த்தவர்கள்', குளக்கரையையே 'இரு கை பார்த்தவர்களோடு' இன்னொரு ரக ஆசாமிகளும், கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வரப்பு வெட்டித் திலகங்கள். மடைக்கால்வாயை வெட்டி, தத்தம் வயல்களுக்கு 'குட்டி வயல்' சேர்த்தவர்கள். இப்போது மடை நீர் வாய்க்கால் இல்லாத வயலுக்குள் பாய்ந்து, கிட்டத்தட்ட குட்டிக் குளம் மாதிரி பெருகிவிட்டது. வயலுக்குக் குட்டி சேர்த்தவர்கள், குளமும் குட்டி சேர்ப்பதைப் பார்த்து, என்ன பண்ணலாம் என்று தத்தம் தலைகளைக் குட்டிக் கொண்டார்கள்.

     லேசாக உடைந்த முட்டையிலிருந்து, வெள்ளைக்கரு கசிவது போல், குளத்தின் 'மடை' வழியாக நீர் கசிந்து கொண்டிருந்தது. இன்னும் நாலு 'பிடி' பெருகிய பிறகுதான், மதகைத் திறப்பது என்று ஊர்க்காரர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் குளத்து நீரை நம்பி, அதற்குக் கிழக்கேயுள்ள கொண்டலப்பேரி குளம் 'வயிறு காய்ந்து' கிடந்தது. கொண்டலப்பேரிக்காரர்கள், மதகைத் திறந்து விடும்படி, குட்டாம்பட்டிக்காரர்களை கெஞ்சிப் பார்த்தார்கள். பயனில்லை. இப்போது மிஞ்சிப் பார்க்கலாமா என்று நினைக்கிறார்கள். ஊரை ஒட்டி, குளத்துக் கரையின் வடமுனையில் இருக்கும் இந்த மடைக்குச் சற்றுக் கீழே ஒரு ஓடை துவங்குகிறது. இந்த ஓடை வழியாகத்தான் கொண்டலப்பேரிக்கு நீர் போக வேண்டும்.






இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/samuthiram/orukottukkuveliyae/okv1.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs