http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




பாடை விரிந்திட...

     உயிரையே பணயமாக வைத்த ஒருவனுக்கு வாழைப்பழம் கொடுத்ததால் புதிய விரோதம் முளைத்து, அது பழைய விரோதத்துடன் சேர்ந்து கொண்டதைப் புரிந்து கொண்ட உலகம்மைக்கு ஒன்றும் ஓடவில்லை. தெருக்களில் அவளிடம் பேசாவிட்டாலும், சிநேகித பாவத்துடன் சிரித்துக் கொண்டு போகும் சிலர் கூட, இப்போது அவளைப் பார்த்ததும், பல்லைக் கடித்துக் கொண்டு போவதைப் பார்த்துத் திடுக்கிட்டாள். ஒற்றையடிப் பாதைக்கு அசிங்கம் மேலும் பயங்கரமாகியது. இதுவரை வெள்ளைச்சாமியும், ராமசாமியுந்தான் அவள் போகும் போது கீழ்த்தரமாகப் பாடுவார்கள், ஆடுவார்கள். இப்போதோ, பாதிப்பேர் 'காலிகளாகவும்', அடுத்த மீதிப் பேர் நல்லவர்களாகவும் இருந்த இதர பிள்ளையாண்டான்களும், 'முழுக்காலிகள் போல்' அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஆபாசமாகப் பேசுவது, நன்றாக அளவுக்கு அதிகமாகக் கேட்டது. அந்தப் பிள்ளையாண்டான்களின் அய்யாமார்களில் சிலரும் இந்தக் கோரஸில் சேர்ந்து கொண்டார்கள்.

     உலகம்மை, 'அருணாசலத்திற்கு ஏன் 'வாழைப்பழம்' கொடுத்தோம்?' என்று கூட நினைத்துக் கொண்டாள். பிறகு, அப்படி நினைப்பது நன்றி கெட்டத்தனமாகவும் அவளுக்குத் தெரிந்தது.

     'அய்யா கோட்டுக்குள்ள நிக்கையில ஏன்னு கேக்கல. நடந்த விஷயத்துல பாதியக் கூட போலீஸ்ல சொல்லல. அய்யாவ ஏட்டு இழுத்துக்கிட்டுப் போகையில ஒருவன் கூட நியாயம் பேசல. ஏன்னு கேட்டவள அபராதம் குடுன்னு சொல்லும் போது, ஊர்சனமே ஒண்ணாயிட்டு... ஓடோட விரட்டுறானுக. ஒருவனுக்குக்கூட நியாயம் தெரியல... தெரிஞ்சவனும் ஒதுங்கிப் போறான். இவங்களுக்குப் பயந்துகிட்டு எதுக்காவ இருக்கணும்? அப்பப்போ வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போற அருணாசலத்தவிட இவனுக எந்த விதத்துல உசத்தி?'

     உலகம்மை, தன் செயலை நியாயப்படுத்திக் கொண்டாலும், எந்த வித விரோதத்திற்கும் காரணமில்லாத, அவளைப் போன்ற ஏழை எளியவர்கள் கூட, அவளைப் பயங்கர எதிரியாகக் கருதுவதைத்தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்வதற்காக அவள் சிந்தித்த போது தலை வலித்தது தான் மிச்சம்.

     ஆண்டாண்டுக் காலமாக, வறுமைக் குப்பையில் நெளியும் புழுக்களாக மாறிப் போன ஏழை எளியவர்கள், தற்காப்பு உணர்வும், தன்னம்பிக்கையும் இல்லாமல் தாழ்வு மனப்பான்மையில் ஊறிப்போய் விடுவார்கள் என்பதும், அவர்கள் வெளிமனம் அந்த பிரத்யட்ச நிலையை ஒப்புக் கொள்ள மறுக்கும். இப்படி அடிமனதில் அடிவாங்கிப் பழகிப் போன அவர்கள், வலுவான மனிதர்களோடு, தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு, தங்களையும் வலுவான மனிதர்களாகக் காட்டிக் கொள்வார்கள். மனோதத்துவ ரீதியில் சொல்லப் போனால் அடிமை மனோபாவத்திற்கு 'காம்பென்ஸேஷன்' தேடிக் கொள்ளும் 'எஜமானத்துவ' வகையில் பெரிய இடத்தாரோடு ஒட்டிக் கொண்டு தங்களையும், பெரியவர்களாகக் காட்டிக் கொள்வார்கள். இந்த மனோ நுணுக்கம் உலகம்மைக்குத் தெரிய நியாயமில்லை. இதை அறியாமலேயே, 'வெங்கனுக்கு வீம்பு அதிகம்' என்ற பழமொழியின் உள்ளர்த்தம், பலரைப் போல் அவளுக்கும் தெரியாது.

     தொட்டிலிலேயே 'ஆனைக்கட்டிப் போரடிச்சார் உங்களய்யா. கைகட்டி வாய் புதைத்துக் காசினியார் நிற்கையிலே கப்பலுலே வந்திறங்கும் கண்மணியே, தாலேலோ' என்ற பாடலைக் கேட்டு, அதற்கேற்ப, 'சீமைத்துரை', 'வெள்ளைத்துரை', 'பாண்டியராஜன்', 'ராசாக்கண்ணு' என்று பெற்றோர்களால் பெயர்கள் வைக்கப்பட்டு, அவர்கள் சொன்னபடி நடக்காமல், எதிர்மறையில் நடந்தாலுங் கூட ஒவ்வொருவனும் தன்னைச் சக்கரவர்த்தியாக - தன்னையறியாமலே அங்கீகரித்துக் கொண்டு, அப்படிச் 'சக்கரவர்த்தி' மாதிரி இருப்பவர்களோடு ஒட்டிக் கொள்வார்கள் என்பதும், இந்த அடிப்படை மனோபாவத்தை உலுக்கித் தள்ளும் வகையில் இலக்கியங்களும், செயல்களும் துவக்கப்படாதது வரை, நிலைமை இப்படியேதான் இருக்கும் என்பதும், 'உயர்ந்தோர் மாட்டே உலகு' என்ற அந்த உலகிற்கே இதைச் சரியாகக் கணிக்கத் தெரியாத போது, உலகம்மைக்கு தெரிய வேண்டிய நியாயமில்லை. என்றாலும், அவள் உள்ளுணர்வு, 'பட்டிதொட்டி பதினாறிலும்' ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்பதை மட்டும் உணர்த்திக் கொண்டிருந்தது.

     இதோடு இன்னொரு வேலையும் அவளுக்கு. வீட்டில் பட்டைச் சாராயம் வைக்கப்படுகிறதா என்று அவள் கண்காணிப்பு வேறு செய்ய வேண்டியிருந்தது. தள்ளாமையில் தள்ளாடும் அவள் அய்யாவும், அவள் இல்லாதபோது விழிப்போடு இருக்க வேண்டும் என்ற நிலை. இந்தச் சமயத்தில், லோகுவின் எண்ணமும், உள்ளத்தில் எட்டிப் பார்ப்பதை அறிந்து, அவள் தன்னைத்தானே நொந்து, தனக்குள்ளேயே எரிச்சல் பட்டுக் கொண்டாள். என்றாலும், அவள் ஒன்றை மட்டும் விடவில்லை.

     நம்பிக்கை! நம்பிக்கை!






இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/samuthiram/orukottukkuveliyae/okv19.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs