http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




ஒயிலாய் நடந்தது...

     மாரிமுத்து நாடாரும், உலகம்மையும் மடையின் கற்சுவர் வழியாக, மெள்ள நடந்தார்கள். ஓடையை அவர்கள் என்ன, யாராலும் தாண்ட முடியாது. பாசி படிந்த சுவரை அடி மேல் அடி வைத்துக் கடந்த போது, சின்னப் பையன்கள் குளத்து மதகுகளில் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள். குறிஞ்சிப்பூ போல பல்லாண்டுகளுக்குப் பின்னர் குளத்து வெள்ளம், குட்டாம்பட்டியில் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிப்பாட்டியிருக்க வேண்டும். ஊரே அங்கு நின்றது. ஓடைக்குத் தென் பகுதியில் இருந்த சேரியில் முட்டளவிற்கு நீர் புகுந்து விட்டதால், சேரிப் பையன்கள், அதையே குளமாக நினைத்துக் கொண்டு விளையாடினார்கள்.

     ஊரின் மேற்கு முனையில் இருந்த 'பிள்ளைமார் குடி' வழியாக இருவரும் நடந்தார்கள். காவல் கடவுள் போல முருகன் கோவில் கம்பீரமாக நின்றது. தோரணமலையில் இருக்கும் பாலமுருகனைத் தரிசிப்பதற்காக வந்த அகஸ்தியர் மலையேற முடியாமல், பிள்ளைமார் தெருப்பக்கம் உள்ள மடத்தில் தங்கியதாகவும், தோரணமலை முருகன் மனமிரங்கி, தந்தையின் நண்பரைப் பார்க்க இந்த இடத்தில் எழுந்தருளினான் என்பதும் ஐதீகம். 'இந்த எடத்தத் தாண்டி முருகன் ஆசாரிக் குடிக்குள்ளேயோ, நாடார் குடிக்குள்ளேயோ போகல' என்பது பிள்ளைமார்கள் வாதம். இந்த வாதம் முன்பு பகிரங்கமாகவும், இப்போது ரகசியமாகவும் நடந்து வருகிறது.

     ஆலயமணி அடித்தது. ஊர்க்கணக்குப் பிள்ளை சிவசண்முகம், காதைப் பிடித்துக் கொண்டு 'ஓம் சரவணபவ, ஓம் சரவணபவ' என்று சொல்லிக் கொண்டிருந்தவர், "வாரும் நாடாரே, வாரும் நாடாரே" என்றார். நாடார், அவசர அவசரமாகக் கையை மேல் நோக்கி எடுத்துவிட்டு, நழுவப் பார்த்தார். உலகம்மை அந்தத் தெய்வச் சிலையையே உற்றுப் பார்த்தாள். உதிரமாடசாமியை உணர்ச்சி பூர்வமாகக் கும்பிட்டுப் பழகியவள், இப்போது முருகன் சிலையை அறிவு பூர்வமாகக் கும்பிட்டாள்.

     நழுவப் போன நாடாரை பிள்ளை விடவில்லை.

     "நாம் சொள்ளமாடன் வயல குளம் அழிச்சிட்டு, தாசில்தார் நாளைக்கு வாராரு. நீரும் சொல்லி நஷ்ட ஈடு கேக்கணும்."

     "செஞ்சா போச்சி, வரட்டுமா?"

     "அப்புறம், ஒம்ம பெரிய்யா மவன் நான் ரெண்டு மூட்ட நெல்லும் நாலு கோழியும் சொள்ளமாடங்கிட்ட கேட்டதா பொரளிய கிளப்பி இருக்கார். நல்லா இல்ல."

     "நம்ம கிராம முனிசிப்பா? நான் கண்டிக்கிறேன். வரட்டுமா?"

     "அப்புறம், ஒம்ம சின்னய்யா மகங்கிட்ட சொல்லி, என் மவளுக்கு பாலசேவிகா வேல வாங்கிக் கொடுக்கணும். பீ.டி.ஓவப் பார்த்தேன். பஞ்சாயத்துத் தலைவர் சொன்னா சரிங்றார்."

     "சொல்றேன், வரட்டுமா?"

     "அப்புறம்..."

     "அப்புறம் இருக்கட்டும் பிள்ளைவாள். சட்டாம்பட்டி சங்கர நாடார் குடும்பம் எப்படி? ஒரு பையன் இருக்கானாம்."

     "அந்த ஊர்ல அவன் எம்.ஏ. படிச்சவனாம். நல்ல பையன்னு கேள்வி. என்ன விஷயம்? அப்புறம் ஒம்ம கொழுந்தியா மவன்கிட்ட சொல்லும். வார லட்டர சீக்கிரமா கொடுக்க மாட்டேங்கறான்."

     "சங்கர நாடார் குடும்பம் எப்படி?"

     "கஷ்டப்பட்ட குடும்பம். ஒரு காலத்துல... பனை ஏறுனாங்களாம்."

     "பனையேறிப் பய குடும்பமா?"

     "ஒரு காலத்துல."

     "இப்ப இல்லியே?"

     "இல்ல."

     "அப்படின்னா சரிதான்."

     "என்ன விஷயம்?"

     "நாளக்கி சாவகாசமா சொல்றேன், வரட்டுமா?"

     "செய்யும். அப்புறம்..."






இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/samuthiram/orukottukkuveliyae/okv2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs