http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்



1

     சென்னை, தியாகராயநகரில் உள்ள ஒய்யாரமான வீடுகளுக்கு இடையே, ‘மேக்கப்’ போட்ட கிழவி போலவும், ‘மேக்கப்’ இல்லாத இளம் பெண்களிலும் ‘நாட்டுக்கட்டை’ இளம் பெண் போல், ஒரு வீடு காட்சியளித்தது.

     பழைய கொத்தனாரும், புதிய என்ஜினீயரும், கலந்து ஆலோசித்துக் கட்டியது போல் தோன்றிய அந்த வீடு, பழமையாக இல்லாமலும், புதுமையாகப் போகாமலும், பார்ப்பதற்கு அழகாக இல்லையென்றாலும், பழகுவதற்கு சுவையாகவே இருந்தது.

     மேல் மாடியில், மாதச் சம்பளக் குடும்பங்கள் இரண்டு ‘குடித்தனம்’ புரிந்தன.

     கீழே, வீட்டின் உரிமையாளர் சொக்கலிங்கம், குடும்ப சகிதமாகக் குடியிருந்தார்.

     ‘மொசாயிக்’ போட்ட தரை. மின் விசிறிகள் சுழலும் அறைகள். ‘டன்லப்’ பில்லோ கொண்ட ஒரு கட்டில், டி.வி.செட்டு. அதே சமயம், பழையன கழிக்கப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில், இடையிடையே, கோணி மூட்டைகளும், பூனைக்குட்டிகளும், தகர டப்பாக்களும், ‘டிரம்’களும் தான்தோன்றித்தனமாகக் கிடந்தன.

     மல்லிகா தனது அறையில் இருந்து நெட்டி முறித்து, வெளியே வந்து, வராண்டாவில் போட்டிருந்த ஊஞ்சல் பலகையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கல்லூரிப் புத்தகத்தையோ அல்லது அந்தப் பாட நூலுக்குள் மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருக்கக்கூடிய காதல் புத்தகத்தையோ, படிக்கத் தொடங்கினாள். பிறகு ‘போரடித்தவள்’ போல், ஒரு காலை எடுத்து தரையில் ஊன்றி, விரல்களால் அழுத்தி, ஊஞ்சல் பலகையை ஆட்டிக் கொண்டாள். அந்த ‘ஆடல்’ சுகத்தில் ஆனந்தப்பட்டவள், உள்ளே ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு, முகத்தைத் திருப்பி லேசாக நிமிர்த்தி, மெல்லச் சிரித்துக் கொண்டாள்.

     உள்ளே, குளியலறையில் அவள் அம்மாக்காரி பார்வதி யானை குளிப்பது மாதிரி, டிரம் நிறைய இருந்த தண்ணீரை, ‘டப்’பால் மொண்டு மொண்டு, தலையில் பாதி, அந்த டிரம்மில் பாதியாக ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும்! இல்லையானால் டிரம்மும், அந்த இரும்பு டப்பும் மோதி, அப்படியொரு பயங்கரமான சத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. பிறகு எருமை மாடு சேற்றில் புரள்வது போல ஒரு சத்தங்கேட்டது. ஒரு வேளை சோப்புத் தேய்க்கிறாளோ என்னவோ...

     ‘இந்த அம்மாவுக்கு ஷவர் டேப்பைத் திறந்து ஜம்முன்னு குளிக்கத் தெரியலையே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, “நீ இன்னும் டிரஸ் பண்ணலியாம்மா” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

     கசங்கிய வேட்டியோடும், புழுங்கிய சட்டையோடும் சொக்கலிங்கம் நின்று கொண்டு இருந்தார்.

     நல்ல சிவப்பான நிறம். மனிதருக்கு வயது ஐம்பதுக்கு அருகே வந்தாலும், இன்னும் மைனர் மாதிரியே இருந்தார். கழுத்தில், ஏழு பவுன் சங்கிலி போட்டு இருந்தார். சிலர், அந்த சங்கிலியை அவர் மனைவி, அவருக்குக் கட்டிய தாலி என்று கிண்டலாக அல்ல, மெய்யாகவே சொல்வார்கள். கையில் தங்கச் சங்கிலியால் பிணிக்கப்பட்ட ஒரு பாடாதி கடிகாரம். ‘டை’ அடிக்கத் தேவையில்லாத கருமையான முடி. மொத்தத்தில் சொல்லப் போனால், ஆசாமி அழகாகவே இருப்பார்.

     அரவை மில்லில் இருந்து நேராக வந்த அவர், மல்லிகாவை பெருமிதமாகப் பார்த்துக் கொண்டு நின்றார். அவர் கண் முன்னேயே, அவர் கண்ணுக்குத் தெரியாமலே எப்படி வளர்ந்து விட்டாள்! எவ்வளவு கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறாள்! ஏதோ, இன்னும் இந்த இருபது வயதிலும், அவரைப் பொறுத்த அளவில், அவள் ஐந்து வயது சிறுமி போலவே தோன்றுகிறாள்.

     மல்லிகாவை பாசம் பொங்கப் பார்த்த சொக்கலிங்கம் திடீரென்று, ‘டப்பும்’ டிரம்மும் மோதிய சத்தம் காதைக் குத்த, “நான் சொன்னது... உன் காதுல விழலியாம்மா” என்றார்.

     “என்னப்பா சொன்னீங்க?”

     “இந்தாபாரு... ஒண்ணு ‘என்ன அப்பா’ன்னு பிரித்துச் சொல்லு... இல்லேன்னா என்ன சொன்னீங்கன்னு மொட்டையாக் கேளு... நீ என்னப்பா என்னப்பான்னு சொல்றதைக் கேட்டால், நீ எனக்கு பாட்டி மாதிரியும் தோணுது... நீ டிரஸ் பண்ணலியாம்மா?...”



வளர்ப்பு மகள் : 1  2  3  4



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/samuthiram/valarppumagal/valarppumagal.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs