http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




1

... தொடர்ச்சி ...

     மல்லிகா சிரித்துக் கொண்டே சொன்னாள் “நீங்களும் பண்ணவில்லையா? ‘அம்மா’ன்னு பிரித்துச் சொல்லுங்க... இல்லன்னா...”

     “சரி, போகட்டும்... உங்கம்மா குளித்து... நீ குளித்து... நான் குளித்து, புறப்படு முன்னால... அங்கே கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை கூட பிறந்துடும்! நாம் குழந்தையோட காதுகுத்து விசேஷத்துக்குத்தான் போக முடியும். இன்னுமா குளிக்கிறாள்...? குளித்து முடித்துவிட்டு ஏதோ பால்கணக்கு போடுறாள்னு நினைக்கேன்...”

     மல்லிகா சிரித்துக் கொண்டே ஏதோ சொல்லப் போனபோது, பார்வதி கொண்டையை ஒரு வெள்ளைத் துண்டால் கட்டிக் கொண்டு, மார்புக்கு மேலே சேலையை சுற்றிக் கொண்டு, வெளியே வந்தாள். கணவனைக் கண்டுகொள்ளாமலே, “மல்லி... நீ போய் குளிம்மா” என்றாள்.

     “நான் அப்புறமா குளிக்கேன்.”

     “கல்யாணத்துக்கு நேரமாகுது.”

     “நான் வரலை... தலை வலிக்குது.”

     சொக்கலிங்கம் பதறினார்: “உனக்கு வயசு வளர்ந்த அளவுக்கு மூளை ஏன் வளரல...? சொந்த அக்காவோட கல்யாணம். நீ வராட்டால் நல்லா இருக்குமா... நாலு பேரு என்ன நினைப்பாங்க...”

     பார்வதி அவளைப் பெருமையோடு பார்த்துக் கொண்டே, “நீயும் வரணும்மா... இல்லன்னா... நாங்கள் தான் ஒன்னை தடுத்துட்டோமுன்னு சொல்வாங்க... உம்... சீக்கிரம்...” என்றாள்.

     “முதல்ல அப்பா குளிக்கட்டும்.”

     “உங்க அப்பா குளிக்கறதும், குளிக்காததும் நேரத்தைப் பொறுத்து இருக்கு. நேரம் ஆயிட்டுதுன்னா, அவரு வழக்கமா வர்றது மாதிரி குளிக்காமலே வந்துடுவார். அப்படியே குளிச்சாலும், பழையபடி அரவை மிஷின்ல புரளத்தான் போவாரு...”

     “நான் மிஷின்ல புரளாட்டா நீ தங்க நகையில புரள முடியாதுடி! பார்த்துப் பேசு... பிடிச்சாலும் பிடிச்சேன் புளியமரமாப் பிடிச்சேன்னு சொன்னவள், நீதான். மறந்துடாதே.”

     “நான் மறக்கல... புளியமரம் குளிக்காது - மழையில தான் நனையும்!”

     “போய் உடம்புல பட்டுச்சேலையை சுத்துடி...”

     மல்லிகா சிரித்துக் கொண்டே, குளியலறைக்குள் போனாள். பார்வதி, உள்ளே போய், ஒரு நாட்டுப் புடவையை எடுத்து, சொக்கலிங்கத்திடம் தவறிப் போய் “மல்லிகாகிட்டே கொடுங்க” என்று சொல்லப் போனதற்காகச் சிரித்துக் கொண்டே, குளியலறைக்குப் போய் கதவின் இடுக்கில் அந்தப் புடவையை முன்பாதி உள்ளேயும், பின் பாதி வெளியேயுமாய் தொங்கப் போட்டுவிட்டு, தான் அலங்காரம் செய்து கொள்ள அறைக்குள் போனாள்.



வளர்ப்பு மகள் : 1  2  3  4



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/samuthiram/valarppumagal/valarppumagala.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs