குறள் மூலம் நேரிசைவெண்பா நல்லோர் பிறர்குற்ற நாடார் நலந்தெரிந்து கல்லார் பிறர்குற்றங் காண்பரோ-அல்லாத என்போல்வா ரென்னை யிகழ்வரோ வென்கவிக்குப் பின்பாரோ காண்பார் பிழை. ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங் காதலிரு வர்க்குங் கருத்தொருமித்-தாதரவு பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு.
ஒளவைகுறள் முதலாவது : வீட்டுநெறிப்பால் 1.1. பிறப்பினிலைமை ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத் தோதிய நூலின் பயன். 1 பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந் தரமாறிற் றோன்றும் பிறப்பு. 2 ஓசைபரிச முருவஞ் சுவை நாற்றம் ஆசை படுத்து மளறு. 3 தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும் உருவத்தா லாய பயன். 4 நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே உலவையிரண் டொன்று விண். 5 மாயன் பிரம னுருத்திரன் மகேசனோ டாயுஞ் சிவமூர்த்தி யைந்து. 6 மாலய னங்கி யிரவிமதி யுமையோ டேலுந் திகழ்சத்தி யாறு. 7 தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு சுக்கிலந் தாதுக ளேழு. 8 மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. 9 இவையெல்லாங் கூடி யுடம்பாய வொன்றி னவையெல்லா மானது விந்து. 10 1.2. உடம்பின்பயன் உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம் உடம்பினி லுத்தமனைக் காண். 11 உணர்வாவ தெல்லா முடம்பின் பயனே யுணர்க வுணர் வுடையார். 12 ஒருபய னாவ துடம்பின் பயனே தருபயனாஞ் சங்கரனைச் சார். 13 பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந் துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. 14 உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை யுடம்பினா லுன்னியதே யாம். 15 மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு. 16 ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும் நேசத்தா லாய வுடம்பு. 17 உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே அயிர்ப்பின்றி யாதியை நாடு. 18 உடம்பினாற் பெற்ற பயனாவ தெல்லாம் திடம்பட வீசனைத் தேடு. 19 அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா முன்னோனைக் காட்டி விடும். 20 1.3. உள்ளுடம்பினிலைமை கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலாம் உற்றுடம்பா லாய வுணர்வு. 21 வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய உள்ளுடம்பி னாய வொளி. 22 சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம் பென்றுங் கெடாத திது. 23 வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கும் ஒருபயனைக் காட்டு முடம்பு. 24 அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய தொல்லை யுடம்பின் றொடர்பு. 25 நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ் செய்வினைக்கும் வித்தா முடம்பு. 26 உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக் கள்ளவுடம் பாகி விடும். 27 பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற்கோர் வித்தாகு மெய்க்குள்ளா மாய வுடம்பு. 28 வாயுவினா லாய வுடம்பின் பயனே ஆயுவி னெல்லை யது. 29 ஒன்பது வாசலு மொக்க வடைத்தால் அன்பதி லொன்றா மரன். 30 1.4. நாடிதாரணை எழுபத்தீ ராயிர நாடியவற்றுள் முழுபத்து நாடி முதல். 31 நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லாம் உரம்பெறு நாடியொன் றுண்டு. 32 உந்தி முதலா யுறுமுடிகீழ் மேலாய்ப் பந்தித்து நிற்கும் பரிந்து. 33 காலொடு கையி னடுவிடைத் தாமரை நூல்போலு நாடி நுழைந்து. 34 ஆதித்தன் றன்கதிர் போலவந் நாடிகள் பேதித்துத் தாம்பரந்த வாறு. 35 மெய்யெல்லா மாகி நரம்போ டெலும்பிசைந்து பொய்யில்லை நாடிப் புணர்வு. 36 உந்தி முதலாகி யோங்காரத்துட் பொருளாய் நின்றது நாடி நிலை. 37 நாடிக ளூடுபோய்ப் புக்க நலஞ்சுடர்தான் வீடு தருமாம் விரைந்து. 38 நாடிவழக்க மறிந்து செறிந்தடங்கி நீடொளி காண்ப தறிவு. 39 அறிந்தடங்கி நிற்குமந் நாடிக டோறுஞ் செறிந்தடங்கி நிற்குஞ் சிவம். 40 1.5. வாயுதாரணை மூலத்தினிற் றோன்றி முடிவிலிரு நான்காகிக் கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். 41 இடை பிங்கலைக ளிரேசக மாற்றில் அடையு மரனா ரருள். 42 அங்குலியால் மூடி முறையா லிரேசிக்கில் பொங்குமாம் பூரகத்தி னுள். 43 எண்ணிலி யூழி யுடம்பா யிரேசிக்கில் உண்ணிலைமை பெற்ற துணர்வு. 44 மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்ற வாயு உயர்ப்பின்றி யுள்ளே பதி. 45 இரேசிப்பது போலப் பூரித்து நிற்கில் தராசுமுனை நாக்கதுவே யாம். 46 கும்பகத்தி னுள்ளே குறித்தரனைத் தானோக்கில் தும்பிபோ னிற்குந் தொடர்ந்து. 47 இரேசக பூரக கும்பக மாற்றில் தராசுபோ னிற்குந் தலை. 48 வாயுவழக்க மறிந்து செறிந் தடங்கில் ஆயுட் பெருக்க முண்டாம். 49 போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்கும் தாழ்கின்ற வாயு வடக்கு. 50 1.6. அங்கிதாரணை அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கில் பந்தப் பிறப்பறுக்க லாம். 51 உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூறில் கள்ளமல மறுக்க லாம். 52 எரியுந் தழல்போல வுள்ளுற நோக்கில் கரியுங் கனலுருவ மாம். 53 உள்ளங்கி தன்னை யொருங்கக் கொழுவூறில் வெள்ளங்கி தானாம் விரைந்து. 54 உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சில் அந்தி யழலுருவ மாம். 55 ஐயைந்து மாய வகத்து ளெரிநோக்கில் பொய்யைந்தும் போகும் புறம். 56 ஐம்பது மொன்று மழல்போலத் தானோக்கில் உம்பரொளி யாய் விடும். 57 தூண்டுஞ் சுடரைத் துளங்காமற் றானோக்கில் வேண்டுங் குறைமுடிக்க லாம். 58 உள்ளத்தா லங்கி யொருங்கக் கொழுவூறில் மெள்ளத்தான் வீடாம் விரைந்து. 59 ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில் வெள்ளியா மாலை விளக்கு. 60 1.7. அமுததாரணை அண்ணாக்குத் தன்னை யடைத்தங் கமிர் துண்ணில் விண்ணோர்க்கு வேந்தனு மாம். 61 ஈரெண் கலையி னிறைந்த வமிர் துண்ணில் பூரண மாகும் பொலிந்து. 62 ஓங்கார மான கலசத் தமிர் துண்ணில் போங்கால மில்லை புரிந்து. 63 ஆனகலசத் தமிர்தை யறிந் துண்ணில் போனகம் வேண்டாமற் போம். 64 ஊறு மமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில் கூறும் பிறப்பறுக்க லாம். 65 ஞானவொளி விளக்கா னல்லவமிர் துண்ணில் ஆன சிவயோகி யாம். 66 மேலை யமிர்தை விலங்காமற் றானுண்ணில் காலனை வஞ்சிக்க லாம். 67 காலன லூக்கக் கலந்தவமிர் துண்ணில் ஞான மதுவா நயந்து. 68 எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில் தொல்லை முதலொளியே யாம். 69 நிலாமண்டபத்தி னிறைந்த வமிர் துண்ணில் உலாவலா மந்தரத்தின் மேல். 70 1.8. அர்ச்சனை மண்டலங்கண் மூன்று மருவ வுடனிருத்தி அண்டரனை யர்ச்சிக்கு மாறு. 71 ஆசனத்தைக் கட்டி யரன்றன்னை யர்ச்சித்துப் பூசனைசெய் துள்ளே புணர். 72 உள்ளமே பீட முணர்வே சிவலிங்கந் தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு. 73 ஆதாரத் துள்ளே யறிந்து சிவனுருவைப் பேதமற வர்ச்சிக்கு மாறு. 74 பூரித் திருந்து புணர்ந்து சிவனுருவைப் பாரித்தங் கர்ச்சிக்கு மாறு. 75 விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு துளக்கற வர்ச்சிக்கு மாறு. 76 பிண்டத்தி னுள்ளே பேரா திறைவனைக் கண்டுதா னர்ச்சிக்கு மாறு. 77 மந்திரங்க ளெல்லா மயங்காம லுண்ணினைந்து முந்தரனை யர்ச்சிக்கு மாறு. 78 பேராக் கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந் தாராதனை செய்யு மாறு. 79 உள்ளத்தி னுள்ளே யுறப்பார்த்தங் கொண்சுடரை மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. 80 1.9. உள்ளுணர்தல் எண்ணிலி யூழி தவஞ்செய்திங் கீசனை உண்ணிலைமை பெற்ற துணர்வு. 81 பல்லூழி காலம் பயின்றரனை யர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம். 82 எண்ணற் கரிய வருந்தவத்தா லன்றே நண்ணப் படுமுணர்வு தான். 83 முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால் பின்னைப் பெறுமுணர்வு தான். 84 காயக் கிலேச முணர்ந்த பயனன்றே ஓயா வுணர்வு பெறல். 85 பண்டைப் பிறவிப் பயனாந் தவத்தினால் கண்டங் குணர்வு பெறல். 86 பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை ஆராய்ந் துணர்வு பெறின். 87 ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே மோனத்தா லாய வுணர்வு. 88 ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான் நீதியாற் செய்த தவம். 89 காடுமலையுங் கருதித் தவஞ் செய்தால் கூடு முணர்வின் பயன். 90 1.10. பத்தியுடைமை பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில் முத்திக்கு மூல மது. 91 பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவ சிந்தையால். 92 அன்பா லழுது மலறியு மாள்வானை யென்புருகி யுள்ளே நினை. 93 பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து நேசத்தா லீசனைத்தேடு. 94 கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில் உண்ணுமே யீச னொளி. 95 நல்லானைப் பூசித்து நாதனென வுருகில் நில்லாதோ வீச னிலை. 96 அடியார்க் கடியரா யன்புருகித் தம்முள் படியொன்றிப் பார்த்துக் கொளல். 97 ஈசனெனக் கருதி யெல்லா வுயிர்களையும் நேசத்தால் நீநினைந்து கொள். 98 மெய்ம்மயிர் கூர விதிர்ப்புற்று வேர்த்தெழுந்து பொய்ம்மையி லீசனைப் போற்று. 99 செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே அறிந்தரனை யாய்ந்து கொளல். 100 வீட்டுநெறிப்பால் முற்றிற்று 2. திருவருட்பால் 2.1. அருள்பெறுதல் அருளினா லன்றி யகத்தறி வில்லை அருளின் மலமறுக்க லாம். 101 இருளைக் கடிந்தின் றிறைவ னருளால் தெருளுஞ் சிவசிந்தை யாம். 102 வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற தூய்மையா மீச னருள். 103 ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால் அவ்வகத்து ளானந்த மாம். 104 உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய் மன்னு மருள்பெற்றக் கால். 105 எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன் தொல்லை யருள் பெற்றக்கால். 106 சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால் பந்தமாம் பாச மறும். 107 மாசற்ற கொள்கை மதிபோலத் தான்றோன்றும் ஈசனருள் பெற்றக்கால். 108 ஆவாவென் றோதி யருள்பெற்றார்க் கல்லாது தாவாதோ ஞான வொளி. 109 ஒவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித் தாவாத வின்பந் தரும். 110 2.2. நினைப்புறுதல் கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத் திருத்திச் சிவனை நினை. 111 குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து மண்டலங்கள் மேலாகப் பார். 112 ஒர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப் பார்மின் பழம்பொருளே யாம். 113 சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை மிக்க மலத்தை விடு. 114 அறிமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந் துறுமின்க ளும்முளே யோர்ந்து. 115 நிற்றம் நினைந்திரங்கி நின்மலனை யொன்றுவிக்கில் முற்று மவனொளியே யாம். 116 ஓசையுணர்ந் தங்கே யுணர்வைப் பெறும்பரிசால் ஈசன் கருத்தா யிரு. 117 இராப்பக லன்றி யிருசுடர்ச் சிந்திக்கில் பராபரத்தோ டொன்றலு மாம். 118 மிக்க மனத்தால் மிகநினைந்து சிந்திக்கில் ஒக்கச் சிவனுருவ மாம். 119 வேண்டுவார் வேண்டும் வகைதான் விரிந்தெங்குங் காண்டற் கரிதாஞ் சிவம். 120 2.3. தெரிந்துதெளிதல் தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில் கூறிய பல்குணமு மாம். 121 உண்டில்லை யென்னு முணர்வை யறிந்தக்கால் கண்டில்லை யாகுஞ் சிவம். 122 ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம் ஒருவனே பல்குணமு மாம். 123 எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த பல்லோர்க்கு முண்டோ பவம். 124 ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும் ஆயுங்கா லொன்றே சிவம். 125 ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந் தேவான தென்றே தெளி. 126 தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென் செம்மையா லீசன் றிறம். 127 எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவர்கள் நல்லுலக நாத னடி. 128 உலகத்திற் பட்ட வுயிர்க்கெல்லா மீசன் நிலவுபோ னிற்கும் நிறைந்து. 129 உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன் அலகிறந்த வாதியே யாம். 130 2.4. கலைஞானம் சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில் முத்திக்கு மூல மது. 131 அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில் நயனமா முத்திக்கு வீடு. 132 அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந் துஞ்சாதவர் துறக்கு மாறு. 133 ஈசனோ டொன்றி லிசையாப் பொருளில்லை தேசவிளக் கொளியே யாம். 134 தாஞ்செய் வினையெல்லாந் தம்மையற வுணரில் காஞ்சனமே யாகுங் கருத்து. 135 கூடக மான குறியெழுத்தைத் தானறியில் வீடக மாகும் விரைந்து. 136 வீடகமாக விழைந் தொல்லை வேண்டுமேல் கூடகத்திற் சோதியோ டொன்று. 137 பூரித்து நின்ற சிவனைப் புணரவே பாரித்த தாகுங் கருத்து. 138 இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில் பூரிப்ப துள்ளே சிவம். 139 சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம் சந்திரனிற் றோன்று முணர்வு. 140 2.5. உருவொன்றிநிற்றல் எள்ளகத்தே தெண்ணெ யிருந்ததனை யொக்குமே உள்ளகத் தீச னொளி. 141 பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே நூலின்க ணீச னுழைந்து. 142 கரும்பினிற் கட்டியுங் காய்ப்பலி னெய்யும் இரும்புண்ட நீரு மியல்பு. 143 பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கும் வழுத்தினா லீச னிலை. 144 தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி யணுவதுவாய் நிற்கு மது. 145 வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே ஒத்துளேநிற்கு முணர்வு. 146 அச்ச மாங்கார மகத்தடக்கினாற் பின்னை நிச்சயமா மீச னிலை. 147 மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே வீட்டுளே நிற்கு மியல்பு. 148 நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும் அனைத்துயிர்குந் தானா மவன். 149 ஓசையி னுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு வாசமலர் நாற்றம்போல் வந்து. 150 2.6. முக்திகாண்டல் மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம் அனைத்தினு மில்லை யது. 151 வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள் ஆக்கிய நூலினு மில். 152 உருவமொன் றில்லை யுணர்வில்லை யோதும் அருவமுந் தானதுவே யாம். 153 தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி மனத்தகமாய் நிற்கு மது. 154 பெண்ணா ணலியென்னும் பேரொன் றிலதாகி விண்ணாகி நிற்கும் வியப்பு. 155 அனைத்துருவ மாய வறிவை யகலில் தினைத்துணையு மில்லை சிவம். 156 துனிமுகத்துக் காதியாத் துன்னறி வின்றி அணிதா ரிரண்டு விரல். 157 மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல் அயிர்ப்புண்டங் காதி நிலை. 158 தற்பர மான சதாசிவத்தோ டொன்றில் உற்றறி வில்லை யுயிர்க்கு. 159 உறக்க முணர்வு பசிகெடப் பட்டால் பிறக்கவும் வேண்டா பிறப்பு. 160 2.7. உருபாதீதம் கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கு முணர்வு. 161 பிறத்தலொன் றின்றிப் பிறவாமை வேண்டில் அறுத்துருவ மாற்றி யிரு. 162 உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில் கருவேது மில்லை தனக்கு. 163 கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை யறுத்துருவ மாற்றி யிரு. 164 அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால் பினைப்பிறப் பில்லையாம் வீடு. 165 நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால் தனக்கொன்று மில்லை பிறப்பு. 166 குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில் மறித்துப் பிறப்பில்லை வீடு. 167 பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச விகற்ப முணர்வதே வீடு. 168 பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி அறுத்துருவ மாற்றியிரு. 169 ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால் பேசவும் வேண்டா பிறப்பு. 170 2.8. பிறப்பறுதல் தன்னை யறியு மறிவுதனைப் பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு. 171 அறம் பாவமாயு மறிவுதனைக் கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து. 172 சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில் பவநாச மாகும் பரிந்து. 173 உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால் பிறப்பின்றி வீடாம் பரம். 174 நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால் அனைத்துலகும் வீடா மது. 175 உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு திடம்படு மீசன் றிறம். 176 தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால் பின்னைப் பிறப்பில்லை வீடு. 177 மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய் இருளின்றி நிற்கு மிடம். 178 விகாரங் கெடமாற்றி மெய்யுணர்வு கண்டால் அகாரமாங் கண்டீ ரறிவு. 179 சிந்தை யாங்காரஞ் செறிபுல னற்றக்கால் முந்தியே யாகுமாம் வீடு. 180 2.9. தூயவொளிகாண்டல் தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த் தோன்றியக்காற் றூய வொளி. 181 தெளிவாய தேச விளக்கொளியைக் காணில் வெளியாய வீடதுவே யாம். 182 மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில் முன்போல மூலம் புகும். 183 பளிங்கு வலம்புரி பானிரத்த தாகில் துளங்கொளியாந் தூய நெறி. 184 சங்கு நிறம்போற் றவள வொளிகாணில் அங்கையி னெல்லியே யாம். 185 துளங்கிய தூண்டா விளக்கொளி காணில் விளங்கிய வீடாம் விரைந்து. 186 மின்மினி போன்ற விளக்காகத் தான்றோன்றில் அன்னப் பறவையே யாம். 187 உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி அவ்வொளி யாதி யொளி. 188 பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில் பரம்பரமே யாய வொளி. 189 ஆதி யொளியாகி யாள்வானுந் தானாகி ஆதியவ னுருவ மாம். 190 2.10. சதாசிவம் பத்துத் திசையும் பரந்த கடலுலகும் ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். 191 விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல் உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். 192 ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி ஏகமாய் நிற்குஞ் சிவம். 193 வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய் ஆயுமிடந் தானே சிவம். 194 எண்ணிறைந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும் உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். 195 ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும் ஒன்றாகி நிற்குஞ் சிவம். 196 மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்குங் காலமாய் நிற்குஞ் சிவம். 197 மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி விண்ணகமே யாகுஞ் சிவம். 198 தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி ஏத்தவரு மீச னுளன். 199 நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி உற்றெங்கும் நிற்குஞ் சிவம். 200 திருவருட்பால் முற்றிற்று 3. தன்பால் 3.1. குருவழி தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள் அன்பா யிருக்கு மரன். 201 சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில் சிந்தித் திருக்குஞ் சிவம். 202 குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க் கருவமாய் நிற்குஞ் சிவம். 203 தலைப்பட்ட சற்குருவின் சன்னிதியி லல்லால் வலைப்பட்ட மானதுவே யாம். 204 நெறிபட்ட சற்குரு நேர்வழி காட்டில் பிறிவற் றிருக்குஞ் சிவம். 205 நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே எல்லை யில்லாத சிவம். 206 நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந் தனைப் பிரியாது சிவம். 207 ஒன்றி லொன்றாத மனமுடையா ருடல் என்று மொன்றாது சிவம். 208 நாட்டமில்லாத விடம் நாட்ட மறிந்தபின் மீட்டு விடாது சிவம். 209 பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லா அல் அஞ்ச லென்னாது சிவம். 210 3.2. அங்கியிற்பஞ்சு அங்கியிற் பஞ்சுபோ லாகாயத்தே நினையில் சங்கிக்க வேண்டா சிவம். 211 மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின் அப்பால தாகுஞ் சிவம். 212 நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல் அஞ்ச லென்னாது சிவம். 213 பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது கற்றதனா லென்ன பயன். 214 தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின் தம்மை யறிவரோ தான். 215 அசபையறிந் துள்ளே யழலெழ நோக்கில் இசையாது மண்ணிற் பிறப்பு. 216 இமையாத நாட்டத் திருந் துணர்வாருக் கமையாத வானந்த மாம். 217 துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பில்லை வீடு. 218 மதிபோ லுடம்பினை மாசற நோக்கில் விதிபோ யகல விடும். 219 சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம் பாவ நசிக்கும் பரிந்து. 220 3.3. மெய்யகம் மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ்சுடர் நோக்கில் கையகத்தி னெல்லிக் கனி. 221 கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில் உரையற் றிருப்ப துணர்வு. 222 உண்டுபசி தீர்ந்தாற் போலுடம் பெல்லா அங் கண்டுகொள் காதல் மிகும். 223 உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு நரைதிரை யில்லை நமன். 224 தோன்றாத தூயவெளி தோன்றியக்கா லுன்னைத் தோன்றாமற் காப்ப தறிவு. 225 வாக்குமனமு மிறந்த பொருள் காணில் ஆக்கைக் கழிவில்லை யாம். 226 கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால் உன்னகத்தே நின்ற வொளி. 227 ஆனந்த மான வருளை யறிந்தபின் தானந்த மாகு மவர்க்கு. 228 மறவாமற் காணும் வகையுணர் வாருக் கிறவா திருக்கலு மாம். 229 விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன் உண்ணிறைந்து நின்ற வொளி. 230 3.4. கண்ணாடி கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள் உண்ணாடி நின்ற வொளி. 231 அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத் துஞ்சுவ தில்லை யுடம்பு. 232 நாபி யகத்தே நலனுற நோக்கிடில் சாவது மில்லை யுடம்பு. 233 கண்டத் தளவிற் கடிய வொளிகாணில் அண்டத்த ராகு முடம்பு. 234 சந்திர னுள்ளே தழலுற நோக்கினால் அந்தர மாகு முடம்பு. 235 ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில் பார்க்கும் பரமா மவன். 236 வண்ண மில்லாத வடிவை யறிந்தபின் விண்ணவ ராகு முடம்பு. 237 நெற்றிக்கு நேரே நிறைந்தவொளி காணில் முற்று மழியா துடம்பு. 238 மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின் போதக மாகு முடம்பு. 239 சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால் முற்று மழியா துடம்பு. 240 3.5 சூனியகாலமறிதல் நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில் அரவணையா னாகு முடம்பு. 241 உருவந் தழலாக வுள்ளத்தே சென்று புருவத் திடையிருந்து பார். 242 புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில் உருவற்று நிற்கு முடம்பு. 243 அகம்புறம் பேராப் பொருளை யறியில் உகம்பல காட்டு முடம்பு. 244 ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின் ஓவிய மாகு முடம்பு. 245 அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின் துஞ்சுவ தில்லை யுடம்பு. 246 தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினில் மாயாது பின்னை யுடம்பு. 247 தானந்த மின்றித் தழலுற நோக்கிடில் ஆனந்த மாகு முடம்பு. 248 ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில் அழிவின்றி நிற்கு முடம்பு. 249 பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில் முற்று மழியா துடம்பு. 250 3.6. சிவயோகநிலை அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி முடிமிசை யோடி முயல். 251 உண்ணாடி வாயு வதனை யுடனிரப்பி விண்ணோடு மெள்ள விடு. 252 மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக் கொள்ளுமின் கும்பங் குறித்து. 253 இரேசக முப்பத் திரண்டது மாத்திரை பூரகம்பத் தாறு புகும். 254 கும்பக நாலோ டறுபது மாத்திரை தம்பித் திடுவது தான். 255 முன்ன மிரேசி முயலுபின் பூரகம் பின்னது கும்பம் பிடி. 256 ஈரைந் தெழுபத் தீராயிர நாடியுஞ் சேருமின் வாயுச் செயல். 257 வாச லீரைந்து மயங்கிய வாயுவை யீசன்றன் வாசலி லேற்று. 258 தயாவினில் வாயு வலத்தி லியங்கில் தியான சமாதிகள் செய். 259 ஆதியா மூல மறிந்தஞ் செழுத்தினைப் பேதியா தோது பினை. 260 3.7. ஞானநிலை தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந் துற்பன மஞ்சை யுரை. 261 தற்புருட மாமுகமேற் றாரகைதன் மேலே நிற்பது பேரொளி நில். 262 ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே பேதியா தோது பினை. 263 கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில் எழுந்தா ரகையா மிது. 264 மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு. 265 காலுந் தலையு மறிந்து கலந்திடில் சாலவும் நல்லது தான். 266 பொன்னொடு வெள்ளி யிரண்டும் பொருந்திடில் அன்னவன் றாளதுவே யாம். 267 நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை யொன்றுவிக்கி லொன்றே யுள. 268 பேசா வெழுத்துடன் பேசு மெழுத்துறில் ஆசான் பரனந்தி யாம். 269 அழியா வுயிரை யவனுடன் வைக்கில் பழியான தொன்றில்லை பார். 270 3.8. ஞானம்பிரியாமை பிறந்திட மாலிடம் பேரா திருப்பின் இறந்திடம் வன்னி யிடம். 271 சாகா திருந்த தலமே மவுனமது ஏகாந்த மாக விரு. 272 வெளியில் விளைந்த விளவின் கனிதான் ஒளியி லொளியா யுறும். 273 மறவா நினையா மவுனத் திருக்கில் பிறவா ரிறவார் பினை. 274 குருவாம் பரனந்தி கூடல் குறித்தாங் கிருபோது நீங்கா திரு. 275 சுந்தரச் சோதி துலங்கு மிடமது மந்திரச் சக்கரமு மாம். 276 தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது பாராப் பராபரம் பார். 277 ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன் நீரொளி மீது நிலை. 278 அந்தமு மாதியு மில்லா வரும்பொருள் சுந்தர ஞானச் சுடர். 279 இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து பதிவைத்தனன் குரு பார். 280 3.9 மெய்ந்நெறி செல்லல் நிகழல் வருகால மூன்றினையுஞ் சொல்லு மவுனத் தொழில். 281 பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து துஞ்சாது ஞானச் சுடர். 282 இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல நமக்குட் சிவன்செயல் நாடு. 283 குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில் செவித்துப் பெறுவ தெவன். 284 காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம் நாலா நிலையென நாடு. 285 மூல நிலமிசை மூன்றா நிலத்தினில் ஆல மருந்துஞ் சிவம். 286 எழுஞ்சுட ருச்சியின் மேல்மனம் வைக்கத் தொழிலொன் றிலாத சுடர். 287 அடைத்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப் படைத்தவன் தன்னையே பார். 288 அறுபதொ டாறு வருட மிதனை உறுதிய தாக வுணர். 289 அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில் இட்ட மிதனைத் தெளி. 290 3.10. துரியதரிசனம் வன்னிய தெட்டு மதியம் பதினாறு முன்னிய பன்னிரண்டு முள். 291 சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம் பாரு மினிது பயன். 292 மதியொடு வன்னியொன் றாகவே வந்தால் கதிரவ னாமென்று காண். 293 மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில் உதிக்குமாம் பூரணைச் சொல். 294 தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில் சாற்று மமாவாசை தான். 295 வன்னி கதிரவன் கூடிடி லத்தகை பின்னிவை யாகு மெலாம். 296 அமாவாசை பூரணை யாகு மவர்க்குச் சமனா முயிருடம்பு தான். 297 அண்டத்திலு மிந்த வாறென் றறிந்திடு பிண்டத்திலு மதுவே பேசு. 298 ஏறு மதிய மிறங்கி லுறங்கிடும் கூறுமப் பூரணை கொள். 299 உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில் மதிக்கு மமாவாசை யாம். 300 3.11. உயர்ஞானதரிசனம் கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப் பிண்டமு மூழி பிரியா. 301 வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத் தள்ளுமின் கால சரம். 302 செவ்வாய் சனிநா யிறுவல மாகவே கொள்ளிலிவ் வாறிடரு மில். 303 வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம் வளர்பிறை யென்றே மதி. 304 வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு செலுத்து பேராது செயல். 305 இயங்கும் பகல்வல மிராவிடம் வாயு தயங்குறல் நாடிக்குட் டான். 306 அர சறியாம லவன்பே ருரைத்துத் தரைதனை யாண்ட சமன். 307 கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச் செல்லாத தென்ன செயல். 308 திருவருட் பாலைத் தெரிந்து தெளியில் குருவிருப்பா மென்று கொள். 309 கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற நிற்கிற் பரமவை வீடு. 310 முத்திக்கௌவையார்சொல் முந்நூற்றுப்பத்துமுன் சித்தத்தில் வைத்துத் தெளி. ஔவைகுறள் முற்றுப்பெற்றது |
ஒரு நடுப்பகல் மரணம் ஆசிரியர்: சுஜாதாவகைப்பாடு : மர்ம நாவல் விலை: ரூ. 300.00 தள்ளுபடி விலை: ரூ. 280.00 அஞ்சல்: ரூ. 50.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
எம்.எல். ஆசிரியர்: வண்ணநிலவன்வகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 160.00 தள்ளுபடி விலை: ரூ. 145.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|