இரட்டைமணிமாலை நூல்கள்

     வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய இருவகைப் பாக்கள் மாறி மாறி அடுத்தடுத்து வரும்படி அந்தாதித் தொடையோடு 20 பாடல்களைக் கொண்டதாய்ப் பாடப்படுவது இரட்டைமணிமாலை. தமிழ் மொழியில் தோன்றிய முதல் இரட்டைமணிமாலை காரைக்கால் அம்மையாரால் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாடப்பட்டது. மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்டது.