இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் ... தொடர்ச்சி - 2 ... 3. அரங்கேற்று காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) தெய்வ மால் வரைத் திரு முனி அருள, எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்து, சாபம் நீங்கிய மலைப்பு - அரும் சிறப்பின் வானவர் மகளிர் சிறப்பில் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5 பிறப்பில் குன்றாப் பெரும் தோள் மடந்தை தாது அவிழ் புரி குழல் மாதவி - தன்னை, ஆடலும் பாடலும் அழகும் என்று இக் கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல், ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் - ஆறு ஆண்டில் 10 சூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி - இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து, பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து, பதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும், விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு, 15 ஆடலும், பாடலும், பாணியும், தூக்கும், கூடிய நெறியின் கொளுத்தும் காலை - பிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும், கொண்ட வகை அறிந்து, கூத்து வரு காலை - கூடை செய்த கை வாரத்துக் களைதலும், 20 வாரம் செய்த கை கூடையில் களைதலும், பிண்டி செய்த கை ஆடலில் களைதலும், ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும், குரவையும் வரியும் விரவல செலுத்தி, ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னொடும் - 25 யாழும், குழலும், சீரும், மிடறும், தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து, வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி, தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து 30 தேசிகத் திருவின் ஓசை எல்லாம் ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி, கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும், பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை - வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35 அசையா மரபின் இசையோன் - தானும் - இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறியத் தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி, வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின் நாட்டிய நல் நூல் நன்கு கடைப் பிடித்து, 40 இசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்து, ஆங்கு, அசையா மரபின் அது பட வைத்து, மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து, நாத் தொலைவு இல்லா நன்னூல் புலவனும் - ஆடல், பாடல், இசையே, தமிழே, 45 பண்ணே, பாணி, தூக்கே, முடமே, தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து, கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு, வார நிலத்தை வாங்குபு வாங்கி, வாங்கிய வாரத்து, யாழும், குழலும், 50 கூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி, ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை, சித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும் அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் - 55 சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின் வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு, ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின் ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி, 60 பண் அமை முழவின் கண் எறி அறிந்து, தண்ணுமை முதல்வன் - தன்னொடும் பொருந்தி, வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து - ஆங்கு, இசையோன் பாடிய இசையின் இயற்கை வந்தது வளர்த்து, வருவது ஒற்றி, 65 இன்புற இயக்கி, இசைபட வைத்து, வார நிலத்தைக் கேடு இன்று வளர்த்து, ஆங்கு ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக, வழு இன்று இசைக்கும் குழலோன் - தானும் - ஈர்-ஏழ் தொடுத்த செம் முறைக் கேள்வியின் 70 ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி, வன்மையில் கிடந்த தார பாகமும், மென்மையில் கிடந்த குரலின் பாகமும், மெய்க் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள, கைக்கிளை ஒழிந்த பாகமும், பொற்பு உடைத் 75 தளராத் தாரம் விளரிக்கு ஈத்து, கிளைவழிப் பட்டனள்; ஆங்கே, கிளையும் தன் கிளை அழிவு கண்டு அவள்வயிற் சேர, ஏனை மகளிரும் கிளைவழிச் சேர, மேலது உழைஇளி, கீழது கைக்கிளை 80 வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது இறுதி ஆதி ஆக, ஆங்கு அவை பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது, படுமலை, செவ்வழி, பகர் அரும்பாலை என, குரல் குரலாகத் தற்கிழமை திரிந்த பின், 85 முன்னதன் வகையே முறைமையின் திரிந்து - ஆங்கு, இளி முதலாகிய எதிர்படு கிழமையும், கோடி, விளரி, மேற்செம்பாலை என நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின், இணை நரம்பு உடையன அணைவுறக் கொண்டு - ஆங்கு, 90 யாழ் மேற்பாலை இட முறை மெலிய, குழல்மேல் கோடி வல முறை மெலிய, வலிவும், மெலிவும், சமனும், எல்லாம் பொலியக் கோத்த புலமையோனுடன் - எண்ணிய நூலோர் இயல்பினின் வழா அது, 95 மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு புண்ணிய நெடு வரைப் போகிய நெடுங் கழைக் கண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு, நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக, 100 ஒரு கோல் உயரத்து, உறுப்பினது ஆகி, உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடை நிலம் நாற் கோல் ஆக, ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய, 105 தோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த; பூதரை எழுதி, மேல் நிலை வைத்து; தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து ஆங்கு, ஒரு முக எழினியும், பொரு முக எழினியும், கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து - ஆங்கு; 110 ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து மாலைத் தாமம் வளையுடன் நாற்றி; விருந்து படக் கிடந்த அருந் தொழில் அரங்கத்து - பேர் இசை மன்னர் பெயர் புறத்து எடுத்த சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு, 115 கண் இடை நவ மணி ஒழுக்கி, மண்ணிய நாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி, காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்தன் ஆக என வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல் 120 புண்ணிய நல் நீர் பொற்குடத்து ஏந்தி மண்ணிய பின்னர், மாலை அணிந்து, நலம் தரு நாளால், பொலம் பூண் ஓடை அரசு உவாத் தடக் கையில் பரசினர் கொண்டு, முரசு எழுந்து இயம்ப, பல் இயம் ஆர்ப்ப, 125 அரைசொடு பட்ட ஐம் பெருங்குழுவும் தேர் வலம் செய்து, கவி கைக் கொடுப்ப, ஊர் வலம் செய்து புகுந்து, முன்வைத்து - ஆங்கு - இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின், குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, 130 வலக் கால் முன் மிதித்து ஏறி, அரங்கத்து, வலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி, இந் நெறி வகையால் இடத் தூண் சேர்ந்த தொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும், சீர் இயல் பொலிய, நீர் அல நீங்க, 135 வாரம் இரண்டும் வரிசையில் பாட, பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் - கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம் குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித் தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப் 140 பின் வழி நின்றது முழவே; முழவொடு கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை. ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி, கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆகக் கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி, 145 வந்த முறையின் வழிமுறை வழாமல், அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர், மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து, பாற்பட நின்ற பாலைப்பண் மேல் நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து, 150 ஐந்து மண்டிலத்தால் கூடை போக்கி, வந்த வாரம் வழி மயங்கிய பின்றை, ஆறும் நாலும் அம்முறை போக்கி, கூறிய ஐந்தின் கொள்கை போல, 155 பின்னையும், அம்முறை பேரிய பின்றை, பொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலின், காவல் வேந்தன் இலைப் பூங் கோதை, இயல்பினின் வழாமை, 160 தலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி, விதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒரு முறையாகப் பெற்றனள் - 'அதுவே நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த, வீறு உயர் பசும் பொன் பெறுவது; இம் மாலை, 165 மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு' என, மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து, நகர நம்பியர் திரிதரு மறுகில், பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த - மா மலர் நெடுங் கண் மாதவி மாலை 170 கோவலன் வாங்கிக் கூனி - தன்னொடு மணமனை புக்கு, மாதவி - தன்னொடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி - விடுதல் - அறியா விருப்பினன் ஆயினன் - வடு நீங்கு சிறப்பின் தன் மனை, அகம் மறந்து - என். 175 வெண்பா எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும், பண் நின்ற கூத்துப் பதினொன்றும், மண்ணின்மேல் போக்கினாள் - பூம் புகார்ப் பொற்றொடி மாதவி, தன் வாக்கினால் ஆடரங்கின் வந்து. 4. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) விரி கதிர் பரப்பி, உலகம் முழுது ஆண்ட ஒரு தனித் திகிரி உரவோன் காணேன் அம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும் திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்கொல்?' என, திசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள் 5 முழு நீர் வார, முழு மெயும் பனித்து, திரை நீர் ஆடை இரு நில மடந்தை அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லற் காலை- கறை கெழு குடிகள் கை தலை வைப்ப, அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி, 10 வலம்படு தானை மன்னர் இல்வழிப் புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின், தாழ் துணை துறந்தோர் தனித் துயர் எய்த; காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த; குழல் வளர் முல்லையில் கோவலர் - தம்மொடு 15 மழலைத் தும்பி வாய் வைத்து ஊத; அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம் சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற; எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப, மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென - 20 செரு மாண் தென்னர் குலமுதல் ஆகலின் அந்தி வானத்து, வெண் பிறை தோன்றி, புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி, பான்மையில் திரியாது பாற் கதிர் பரப்பி, 25 மீன் - அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த பல் பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து, செந் துகிர்க் கோவை சென்று ஏந்து அல்குல் அம் துகில் மேகலை அசைந்தன வருந்த 30 நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா - முற்றத்துக் கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு; ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி, கோலம் கொண்ட மாதவி அன்றியும் - குட திசை மருங்கின் வெள் அயிர் - தன்னொடும் 35 குண திசை மருங்கின் கார் அகில் துறந்து; வடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து, தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக; தாமரைக் கொழு முறித்தாதுபடு செழு மலர், காமரு குவளை, கழுநீர் மா மலர், 40 பைந் தளிர்ப் படலை; பரூஉக் காழ் ஆரம்; சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச் சிந்துபு பரிந்த செழும் பூஞ் சேக்கை, மந்த - மாருதத்து மயங்கினர் மலிந்து, ஆங்கு, ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி, 45 காவி அம் கண்ணார் களித் துயில் எய்த - அம் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய, மென் துகில் அல்குல் மேகலை நீங்க, கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள், மங்கல அணியின் பிறிது அணி மகிழாள், 50 கொடுங் குழை துறந்து வடிந்து வீழ் காதினள், திங்கள் வாள் முகம் சிறு வியர்ப் பிரிய, செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் மறப்பப் பவள வாள் நுதல் திலகம் இழப்பத் தவள வாள் நகை கோவலன் இழப்ப, 55 மை இருங் கூந்தல் நெய் அணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் - காதலர்ப் பிரிந்த மாதர் நோதக, ஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி, வேனிற் பள்ளி மேவாது கழிந்து, 60 கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து, மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும் அலர் முலை ஆகத்து அடையாது வருந்தத் தாழிக் குவளையொடு தண் செங்கழுநீர் வீழ் பூஞ் சேக்கை மேவாது கழியத் 65 துணை புணர் அன்னத் தூவியிற் செறித்த இணை அணை மேம்படத் திருந்து துயில் பெறாஅது, உடைப் பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து இடைக் குமிழ் எறிந்து, கடைக் குழை ஓட்டி, கலங்கா உள்ளம் கலங்க, கடை சிவந்து 70 விலங்கி நிமிர் நெடுங் கண் புலம்பு, முத்து உறைப்ப - அன்னம் மெல் நடை - நல் நீர்ப் பொய்கை - ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரைத் தாமரைச் செவ் வாய், தண் அறல் கூந்தல்; பாண் வாய் வண்டு நோதிறம் பாடக் 75 காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப; புள் வாய் முரசமொடு, பொறி மயிர் வாரணத்து முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப; உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி, இரவுத் தலைபெயரும் வைகறைகாறும் - 80 அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான், விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி, மகர வெல் கொடி மைந்தன், திரிதர - நகரம் காவல் நனி சிறந்தது - என். வெண்பா கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய், காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |